12-13-2005, 02:41 PM
தென்ஆப்பிரிக்க நிறவெறி அரசு கருப்பின மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு உலகறிந்த சான்று "நெல்சன் ரோலிலாலா மண்டேலா'. சட்டம் படித்திருந்தும் தன் வாழ்நாளில் 27 ஆண்டுகளை தனிமைச் சிறையில் கழித்த மண்டேலா வெள்ளை நிறவெறிக்கு ஒரு சோற்றுப் பதம்.
தென்ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தெம்பு ஓசா இனத்தில் பிறந்தவர் (ஜூலை 18, 1918) ரோலிலாலா மண்டேலா. "நெல்சன்' என்பது அவர் சார்ந்த மதப்பிரிவின் ஆசிரியர் இட்ட பெயராகும். தென்ஆப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டமும், விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக் கழகத்தில் சட்டமும் படித்த மண்டேலா, மாணவப் பருவத்திலேயே வெள்ளை நிறவெறிக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டார். 1942-ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, ஆலிவர் தம்பு உள்ளிட்ட தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளில் கட்சியின் இளைஞர் அணியை உருவாக்கினார்.
1948-ல் ஆட்சிக்கு வந்த தேசியக் கட்சி நிறவெறிக் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தது. இதன் பின்னர் மண்டேலாவும், ஆலிவர் தம்புவும் இணைந்து பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சட்ட உதவிகளை செய்து வந்தனர்.
அமைதி வழியில் போராடிய மண்டேலா உள்ளிட்ட 150 பேர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் (1956). 5 ஆண்டுகள் வழக்கு நடைபெற்ற பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 1960-ல் நடைபெற்ற கருப்பினத்தவருக்கு எதிரான ஷார்ப்வில்லி படுகொலைகள், தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் நிறவெறிக்கு எதிராக போராடிய குழுக்கள் தடைசெய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் மண்டேலாவும், அவரது கூட்டாளிகளும் ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தனர்.
1961-ல் எம்கே (உம்கோண்டோ வி சிஸ்வா) என சுருக்கமாக அழைக்கப்பட்ட தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் பிரிவுக்கு தலைவரானார் மண்டேலா. இது மண்டேலா கூட்டாக நிறுவிய அமைப்பாகும். இந்த ஆயுதந்தாங்கிய எழுச்சி நிறவெறிக்கு முடிவுகட்டவில்லை எனில் கெரில்லா முறை போருக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்று எம்கே-வுக்கு தேவையான நிதியை திரட்டியதுடன், ராணுவப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார்.
நெல்சன் மண்டேலா: கைதும், விடுதலையும்
17 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மண்டேலா ஜோகன்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார் (1962). சட்டவிரோதமாக வெளிநாடு சென்றதாகவும், தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டேலா சிறையில் இருந்தபோது கட்சியின் முக்கியமான தலைவர்கள் ரிவோனியாவில் கைது செய்யப்பட்டனர். மண்டேலாவும் ரிவோனியா கொண்டுவரப்பட்டு அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டது. இவற்றோடு பிற நாடுகள் தென்ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்க உதவியதாகவும் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டடு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது (12 ஜூன், 1964).
அடுத்த 26 ஆண்டுகள், உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக எழுந்த குரல்கள் மண்டேலாவை விடுதலை செய் என ஒலித்தன. தென்ஆப்பிரிக்க நிறவெறி அரசைப் பொருத்தவரை இந்த எதிர்ப்புகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.
1980-களில் எம்கே நிறவெறி அரசுக்கு எதிராக கெரில்லா சண்டையில் ஈடுபட்டது. ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சிறையிலிருந்து விடுவிப்பதாக மண்டேலாவுக்கு ஆசை காட்டியது தென்ஆப்பிரிக்க அரசு (1985). மண்டேலா இதற்கு மசிந்து கொடுக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. சர்வதேச ஆதரவு மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இடைவிடாத போராட்டங்களால் வேறுவழியின்றி மண்டேலாவை விடுதலை செய்தது எஃப்.டபிள்யூ. டி கிளார்க் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அரசு (பிப்ரவரி 11, 1990).
சிறையிலிருந்து விடுதலையான அன்று, "ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இன்னும் நிலவுகிறது. இதைத் தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என அறிவித்தார் மண்டேலா. சிறை வாசம் அவரது மனஉறுதியை குலைத்து விடவில்லை என்பதோடு நிறவெறியின் பிடி அதுவரை தளரவில்லை என்பதையும் இது காட்டியது.
இதன் பின்னர் 1994-ல் தென்ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான மண்டேலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த மண்டேலா நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது (1990).
Thanks
inamani..
தென்ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தெம்பு ஓசா இனத்தில் பிறந்தவர் (ஜூலை 18, 1918) ரோலிலாலா மண்டேலா. "நெல்சன்' என்பது அவர் சார்ந்த மதப்பிரிவின் ஆசிரியர் இட்ட பெயராகும். தென்ஆப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டமும், விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக் கழகத்தில் சட்டமும் படித்த மண்டேலா, மாணவப் பருவத்திலேயே வெள்ளை நிறவெறிக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டார். 1942-ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, ஆலிவர் தம்பு உள்ளிட்ட தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளில் கட்சியின் இளைஞர் அணியை உருவாக்கினார்.
1948-ல் ஆட்சிக்கு வந்த தேசியக் கட்சி நிறவெறிக் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தது. இதன் பின்னர் மண்டேலாவும், ஆலிவர் தம்புவும் இணைந்து பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சட்ட உதவிகளை செய்து வந்தனர்.
அமைதி வழியில் போராடிய மண்டேலா உள்ளிட்ட 150 பேர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் (1956). 5 ஆண்டுகள் வழக்கு நடைபெற்ற பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 1960-ல் நடைபெற்ற கருப்பினத்தவருக்கு எதிரான ஷார்ப்வில்லி படுகொலைகள், தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் நிறவெறிக்கு எதிராக போராடிய குழுக்கள் தடைசெய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் மண்டேலாவும், அவரது கூட்டாளிகளும் ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தனர்.
1961-ல் எம்கே (உம்கோண்டோ வி சிஸ்வா) என சுருக்கமாக அழைக்கப்பட்ட தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் பிரிவுக்கு தலைவரானார் மண்டேலா. இது மண்டேலா கூட்டாக நிறுவிய அமைப்பாகும். இந்த ஆயுதந்தாங்கிய எழுச்சி நிறவெறிக்கு முடிவுகட்டவில்லை எனில் கெரில்லா முறை போருக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்று எம்கே-வுக்கு தேவையான நிதியை திரட்டியதுடன், ராணுவப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார்.
நெல்சன் மண்டேலா: கைதும், விடுதலையும்
17 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மண்டேலா ஜோகன்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார் (1962). சட்டவிரோதமாக வெளிநாடு சென்றதாகவும், தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டேலா சிறையில் இருந்தபோது கட்சியின் முக்கியமான தலைவர்கள் ரிவோனியாவில் கைது செய்யப்பட்டனர். மண்டேலாவும் ரிவோனியா கொண்டுவரப்பட்டு அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டது. இவற்றோடு பிற நாடுகள் தென்ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்க உதவியதாகவும் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டடு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது (12 ஜூன், 1964).
அடுத்த 26 ஆண்டுகள், உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக எழுந்த குரல்கள் மண்டேலாவை விடுதலை செய் என ஒலித்தன. தென்ஆப்பிரிக்க நிறவெறி அரசைப் பொருத்தவரை இந்த எதிர்ப்புகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.
1980-களில் எம்கே நிறவெறி அரசுக்கு எதிராக கெரில்லா சண்டையில் ஈடுபட்டது. ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சிறையிலிருந்து விடுவிப்பதாக மண்டேலாவுக்கு ஆசை காட்டியது தென்ஆப்பிரிக்க அரசு (1985). மண்டேலா இதற்கு மசிந்து கொடுக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. சர்வதேச ஆதரவு மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இடைவிடாத போராட்டங்களால் வேறுவழியின்றி மண்டேலாவை விடுதலை செய்தது எஃப்.டபிள்யூ. டி கிளார்க் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அரசு (பிப்ரவரி 11, 1990).
சிறையிலிருந்து விடுதலையான அன்று, "ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இன்னும் நிலவுகிறது. இதைத் தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என அறிவித்தார் மண்டேலா. சிறை வாசம் அவரது மனஉறுதியை குலைத்து விடவில்லை என்பதோடு நிறவெறியின் பிடி அதுவரை தளரவில்லை என்பதையும் இது காட்டியது.
இதன் பின்னர் 1994-ல் தென்ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான மண்டேலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த மண்டேலா நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது (1990).
Thanks
inamani..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

