01-02-2006, 04:29 PM
பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை.
அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறியா சிங்கள மக்களைக் கொன்று குவித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையும் இணைந்து சிங்கள சிப்பாய்கள் ஆயிரக் கணக்கில் இறப்பதற்கு வழி அமைத்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்இ ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதிலும் கொல்லப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் குறித்து இந்தத் தலைவர்கள் ஒரு கணமாவது சிந்தித்தார்களா? அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால் ஆயுத இறக்கு மதி எனக்கூறி கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று பெரிய தனவந்தர்களாகியிருக்க முடிந்திருக்குமா? சந்திரிகா தற்போது பிரிட்டனில் மாளிகை ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? சந்திரிகாவுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது?!!
அவ்வாறானவர்களின் வசதிக்காக அவர்களின் கட்டளைகளை ஏற்று நீங்கள் மடிவதில் எதுவித பயனும் இல்லை. முல்லைத்தீவு முகாமில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களைக்கூட அரசு பொறுப்பேற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?
முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு முகாம்களுக்கும் மற்றும் ஜெயசிகுறுஇ அக்கினிச் சுவாலை நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளை வழங்கிய இராணுவ அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்று தங்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற சிப்பாய் கள் குறித்தும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் எதையுமே அவர்கள் செய்யவில்லை. நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டமான வாழ்க்கை குறித்து நாங்கள் நன்கு அறிவோம். ஏன் நீங்கள் மாத்திரம் இவ்வாறு கஷ்டமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்?
உங்களது தாயகத்தை பெறுவதற்கா நாங்கள் போராடுகிறோம்? தமிழீழம் எமது தாயகம். உங்களது தாயகம் சிறிலங்கா. உங்களது நாட்டைக் காக்க நீங்கள் விரும்பினால் தென்பகுதிக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களது கல்லறைகளை நாங்கள் கட்டுவோம். எமது தாயகத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி தற்போது ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இந்த மக்கள் ஒன்று திரண்டு படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டால் படையினரின் மரணம் உறுதி. உங்கள் மீது நாங்கள் அனுதாபப்படுகிறோம். உங்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நாங்கள் கவலையடைகின்றோம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்யத் தயாராய் இருக்கிறோம்.
விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களின் உரிமை. நீங்கள் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு உங்கள் முகாம்களுக்கு வராமல் விடுங்கள். இல்லாவிடின் எங்களிடம் சரணடையுங்கள். எல்.ரீ.ரீ.ஈ யினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு நீங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல எங்களால் வசதிக ளைச் செய்துதர முடியும். இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் பயமோ அச்சமோ இன்றி வாழ்கின்றனர். ஒரு கணம் சிந்தியுங்கள்!
சிங்களத் தலைவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக எங்களது புத்திஜீவிகளையும் ஏதுமறியா மக்களையும் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழ் மகன் அரசினால் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பத்துச் சிப்பாய்கள் கொல்லப்படுவர். பழிவாங்கல்களுக்கு பலியாவது நீங்களே. இதைத் தடுப்பது கடினமாகும்.
எனவே எமது வேண்டுகோளை ஏற்று பெறுமதியான உயிரைப் பற்றிச் சிந்தித்து நல்ல தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள்இ சிங்கள அரசியல் தலைவர்களினதும் இராணுவக் கட்டளை அதிகாரிகளினதும் கட்டளைகளை கணக்கில் எடுக்காது நாங்கள் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். இதை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் குடும்பத்தினரும் திருப்தியடைவார்கள் என்பது உறுதி.
""எமது இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உங்கள் பெறுமதி மிக்க உயிரைக் காப்பாற்றுங்கள்''
நன்றி.
இப்படிக்கு
பொங்கி எழும் மக்கள் படை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சூரியன்
"பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை.
அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறியா சிங்கள மக்களைக் கொன்று குவித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையும் இணைந்து சிங்கள சிப்பாய்கள் ஆயிரக் கணக்கில் இறப்பதற்கு வழி அமைத்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்இ ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதிலும் கொல்லப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் குறித்து இந்தத் தலைவர்கள் ஒரு கணமாவது சிந்தித்தார்களா? அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால் ஆயுத இறக்கு மதி எனக்கூறி கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று பெரிய தனவந்தர்களாகியிருக்க முடிந்திருக்குமா? சந்திரிகா தற்போது பிரிட்டனில் மாளிகை ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? சந்திரிகாவுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது?!!
அவ்வாறானவர்களின் வசதிக்காக அவர்களின் கட்டளைகளை ஏற்று நீங்கள் மடிவதில் எதுவித பயனும் இல்லை. முல்லைத்தீவு முகாமில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களைக்கூட அரசு பொறுப்பேற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?
முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு முகாம்களுக்கும் மற்றும் ஜெயசிகுறுஇ அக்கினிச் சுவாலை நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளை வழங்கிய இராணுவ அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்று தங்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற சிப்பாய் கள் குறித்தும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் எதையுமே அவர்கள் செய்யவில்லை. நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டமான வாழ்க்கை குறித்து நாங்கள் நன்கு அறிவோம். ஏன் நீங்கள் மாத்திரம் இவ்வாறு கஷ்டமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்?
உங்களது தாயகத்தை பெறுவதற்கா நாங்கள் போராடுகிறோம்? தமிழீழம் எமது தாயகம். உங்களது தாயகம் சிறிலங்கா. உங்களது நாட்டைக் காக்க நீங்கள் விரும்பினால் தென்பகுதிக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களது கல்லறைகளை நாங்கள் கட்டுவோம். எமது தாயகத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி தற்போது ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இந்த மக்கள் ஒன்று திரண்டு படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டால் படையினரின் மரணம் உறுதி. உங்கள் மீது நாங்கள் அனுதாபப்படுகிறோம். உங்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நாங்கள் கவலையடைகின்றோம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்யத் தயாராய் இருக்கிறோம்.
விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களின் உரிமை. நீங்கள் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு உங்கள் முகாம்களுக்கு வராமல் விடுங்கள். இல்லாவிடின் எங்களிடம் சரணடையுங்கள். எல்.ரீ.ரீ.ஈ யினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு நீங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல எங்களால் வசதிக ளைச் செய்துதர முடியும். இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் பயமோ அச்சமோ இன்றி வாழ்கின்றனர். ஒரு கணம் சிந்தியுங்கள்!
சிங்களத் தலைவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக எங்களது புத்திஜீவிகளையும் ஏதுமறியா மக்களையும் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழ் மகன் அரசினால் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பத்துச் சிப்பாய்கள் கொல்லப்படுவர். பழிவாங்கல்களுக்கு பலியாவது நீங்களே. இதைத் தடுப்பது கடினமாகும்.
எனவே எமது வேண்டுகோளை ஏற்று பெறுமதியான உயிரைப் பற்றிச் சிந்தித்து நல்ல தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள்இ சிங்கள அரசியல் தலைவர்களினதும் இராணுவக் கட்டளை அதிகாரிகளினதும் கட்டளைகளை கணக்கில் எடுக்காது நாங்கள் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். இதை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் குடும்பத்தினரும் திருப்தியடைவார்கள் என்பது உறுதி.
""எமது இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உங்கள் பெறுமதி மிக்க உயிரைக் காப்பாற்றுங்கள்''
நன்றி.
இப்படிக்கு
பொங்கி எழும் மக்கள் படை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சூரியன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->