Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்
#1
செவ்வாய் 10-01-2006 13:17 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்]

<b>நாலாம் கட்ட ஈழப்போர் திணிக்கப்படுமானால் தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்: கேணல் பானு </b>

எமது படைக்கட்டமைப்பு வலுவாக இருக்கின்றது. கடற்படை, கரும்புலி என்பதை விட நாலாங்கட்டப் போர் திணிக்கப்படுமானால் நமது விமானப்படையும் தாக்குதலை மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு குறிப்பிட்டார். ஈரளக்குளம் மக்களுக்கான கிராமியப் படைப்பயிற்சி; தொடர்பான ஆரம்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்:-

சிறிலங்கா அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் அந்த யுத்தத்தில் எவரும் பார்வையாளராக இருக்கக் கூடாது அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டும்.

சமாதானத்தை இழுதடித்துக் கொண்டு எமது படைப்பலத்தை நலிவடையச் செய்வதே சிறிலங்கா அரசின் நோக்கமாகும். சிறிலங்கா அரசு எதனையும் எமக்கு தரப்போவதில்லை. நாம் அடித்துத்தான் பெற வேண்டும். அவ்வாறு அடித்துப் பெற்ற நிலம் தான் எம்மிடம் உள்ளது.

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விடுதலைப் போராட்டத்திற்குப் பலமாக இருப்பவர்கள் நீங்கள் தான். அதன் அடிப்படையில் இன்றைய அரசியல் சூழலை உங்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.

இந்தச் சமாதான காலத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளை நாம் இழந்திருக்கின்றோம். ஆயினும் எமது தலைவர் பொறுத்து பொறுமையின் விளி;ம்பில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளை தாக்கினால் புலிகள் பொறுத்துக் கொள்வார்கள் தமிழ் மக்களை தாக்கினால் தான் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை செய்யும் அதேவேளை புலிகளே யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என சர்வதேச சமூகத்திற்கு காட்டும் வகையில் சூழ்ச்சிகளைச் செய்து எம்மை யுத்தத்திற்கு இழுத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட கட்டளைத் தளபதி பானு அவர்கள்,

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச சமாதானத்தை ஆரம்பிப்போம் எனக் கூறிக்கொண்டு மறுமுனையில் சிறிலங்கா படைபலத்தை விருத்தி செய்து வருகின்றார்.

எமது போராட்டம் ஆயுத பலமின்றிய காலத்தில் உறுதியாக நின்று வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று மட்டக்களப்பில் மட்டும் 25000 பேருக்கு ஆயுதம் வாங்கக் கூடிய வகையில் வளர்ச்சி அடைந்து விருட்சமாக நிற்கும் இந்தக் காலத்தில் மக்கள் போராட்டமாக உருவெடுத்து நிற்கின்ற ஒரு சூழலில் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தங்களது அளப்பெரிய சேவைகளை செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000 இராணுவத்தினர் மட்டுமே உள்ளனர். ஆனால் ஐந்து லட்சம் மக்கள் உள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்று திரண்டால் ஒரிரு நாளில் எதிரிகளை விரட்டி அடித்து எமது மண்ணை மீட்க முடியும். அந்தளவிற்கு எமது இலக்கினை நிறை வேற்றக் கூடிய சிறந்த தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வானம்பாடி செய்தி எடுக்கப்பட்ட இடத்தை
குறிப்பிட்டு எழுதுங்கள்..

நன்றி.
Reply
#3
சங்கதியிலிருக்கின்றது.....
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)