01-22-2006, 08:14 PM
திருகோணமலை மாவட்டத்தின் அரச சார்பற்ற திணைக்கள மேலாளர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் திருகோணமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
எனவே கீழ்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தமிழ் பேசும் மக்களை அன்பு கலந்த எச்சரிக்கையுடன் வேண்டுகின்றோம்.
சகல அரச தனியார் அலுவலகங்கள் கடைகள் யாவும் மாலை 5.00 மணிக்கு முன்னதாக மூடப்பட்டு வீடுகளுக்கு திரும்பக் கூடியதாக உங்கள் கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
பொய்வதந்திகள் பரப்புவோரும் தேவையற்ற விதத்தில் பதட்ட நிலையை உருவாக்குவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கதவடைப்பு போராட்டம் மற்றும் இறுக்கமான போராட்டம் ஏற்படும் போது பொருட்களை பதுக்குவதும் மற்றும் பன்மடங்கு கூட்டிவிற்பதும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
கசிப்பு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் விபச்சாரம், நீலப்படம் போன்றவற்றில் சம்பந்தப்படும் விற்பவர்கள் வாங்குபவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது மண் எமது மக்கள் எமது தேசியம் என்ற எண்ணப்பாடின்றி சிறீலங்கா அரசிற்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விருந்துபசாரங்களிலும் பொது வைபவங்களிலும் சிறீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகளுடன் கொஞ்சிக் குலாவி மது அருந்துவோரும் பின்னர் தமிழ் மக்களுக்கு சேவை செய்வோர் போல் காட்டிக் கொள்ளும் பலரைப்பற்றி எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த வண்ணமே உள்ளது. இச் செயலில் ஈடுபடும் எந்த தமிழ் மகனும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்கள் எக்காரணத்தாலும் காலை 6.00 மணிக்கு முன்னும் மாலை 6.00 மணிக்கு பின்னும் நடத்தப்படக்கூடாது. இதனை மீறுவோர் மீது தனியார் கல்வி நிறுவனம் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதிகளில் கூட்டமாக நிற்பதும் குடித்து கும்மாளம் போடுவதும் இரவு நேர கேளிக்கைகளில் ஈடுபடுவதும் பெண்களை நையாண்டி செய்வதும் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத குற்றமாக உரியவர்கள கருதுகிறார்கள். எனவே இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோருகின்றோம்.
இவற்றை மீறி நடப்பவர் மீது 01.02.2006ல் இருந்து எவ்வித ஈவிரக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
தமிழரின் தாகம் பண்பாடு மிக்க தமிழீழத் தாயகம்.
பொங்கியெழும் மக்கள் எழுச்சிப் படையணி
திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
எனவே கீழ்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தமிழ் பேசும் மக்களை அன்பு கலந்த எச்சரிக்கையுடன் வேண்டுகின்றோம்.
சகல அரச தனியார் அலுவலகங்கள் கடைகள் யாவும் மாலை 5.00 மணிக்கு முன்னதாக மூடப்பட்டு வீடுகளுக்கு திரும்பக் கூடியதாக உங்கள் கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
பொய்வதந்திகள் பரப்புவோரும் தேவையற்ற விதத்தில் பதட்ட நிலையை உருவாக்குவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கதவடைப்பு போராட்டம் மற்றும் இறுக்கமான போராட்டம் ஏற்படும் போது பொருட்களை பதுக்குவதும் மற்றும் பன்மடங்கு கூட்டிவிற்பதும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
கசிப்பு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் விபச்சாரம், நீலப்படம் போன்றவற்றில் சம்பந்தப்படும் விற்பவர்கள் வாங்குபவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது மண் எமது மக்கள் எமது தேசியம் என்ற எண்ணப்பாடின்றி சிறீலங்கா அரசிற்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விருந்துபசாரங்களிலும் பொது வைபவங்களிலும் சிறீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகளுடன் கொஞ்சிக் குலாவி மது அருந்துவோரும் பின்னர் தமிழ் மக்களுக்கு சேவை செய்வோர் போல் காட்டிக் கொள்ளும் பலரைப்பற்றி எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த வண்ணமே உள்ளது. இச் செயலில் ஈடுபடும் எந்த தமிழ் மகனும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்கள் எக்காரணத்தாலும் காலை 6.00 மணிக்கு முன்னும் மாலை 6.00 மணிக்கு பின்னும் நடத்தப்படக்கூடாது. இதனை மீறுவோர் மீது தனியார் கல்வி நிறுவனம் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதிகளில் கூட்டமாக நிற்பதும் குடித்து கும்மாளம் போடுவதும் இரவு நேர கேளிக்கைகளில் ஈடுபடுவதும் பெண்களை நையாண்டி செய்வதும் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத குற்றமாக உரியவர்கள கருதுகிறார்கள். எனவே இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோருகின்றோம்.
இவற்றை மீறி நடப்பவர் மீது 01.02.2006ல் இருந்து எவ்வித ஈவிரக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
தமிழரின் தாகம் பண்பாடு மிக்க தமிழீழத் தாயகம்.
பொங்கியெழும் மக்கள் எழுச்சிப் படையணி
Freedom is never given. It has to be fought for and won. . .
. , !''
<img src='http://img.photobucket.com/albums/v624/Sanjee05/Signature4.gif' border='0' alt='user posted image'>
. , !''
<img src='http://img.photobucket.com/albums/v624/Sanjee05/Signature4.gif' border='0' alt='user posted image'>

