![]() |
|
சொல்லு தலைவா!எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சொல்லு தலைவா!எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா? (/showthread.php?tid=790) |
சொல்லு தலைவா!எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா? - Thaya Jibbrahn - 02-19-2006 சொல்லு தலைவா ! எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா நில்லு தமிழா! நீ பக்கம் நிற்க அண்ணன் படை வெல்லும் அல்லவா! (சொல்லு) கண்ணில் தெரியுதெங்கள் தேசம் - நாளை கையில் வந்து சேருமல்லவா! வையம் போற்றுமொரு நாடு - நாளை எங்களது ஈழம் அல்லவா! (சொல்லு) பாவம் கொஞ்சம் பாரு! ஓடச் சொல்லிக் கேளு!! ஓடாப்பகை நாமழித்து வீடனுப்பலாம் ஈழமண்ணை மீட்டெடுத்து நாடமைக்கலாம். வன்னி மண்ணைப் பாரு - மண்ணை தொட்டு நெற்றி பூசு வீரம் வாழும் மண்ணு என்று வாழ்த்துப்பாடலாம் வீழ்ந்த வீரர் காலடியில் பூக்கள் தூவலாம். அணைகட்ட உழைத்திட்ட அணிலாய் - நம் அண்ணனின் அணியிலே செல்வோம். பகையென்று வருகின்ற எவர்க்கும் - நம் மண்ணிலே புதைகுழி அமைப்போம் பொன்னாடு நம்நாடு - அதுவே பகைவன் சுடுகாடு ஏய் வெற்றினு சொல்லு ஏய் வெற்றினு சொல்லு - நாம் வானில் கொடி நட்டு வரலாம். (வேறு) வடக்கு கிழக்கு திசைகள் வேறு ஈழ தேசம் ஒன்று மண்ணை மீட்க வீழ்ந்த வீரர் கனவுப் பண் பாடு மாண்ட வீரர் கனவு மீட்க எழுந்து போராடு பகையென்று சொல்லு - வெறும் தூசு என்றே வெல்லு தும்முகின்ற நேரத்திலே நாம் துரத்தலாம் அண்ணன் சொல்லும் வழியிலே கொன்றொழிக்கலாம். போடு ஆட்டம் போடு - நீ வெல்லும் நேரம் ஆடு ஆண்ட எங்கள் வீரம் கொண்டு மீண்டும் ஆளலாம் அண்ணன் ஏற்றும் கொடியிலே துன்பம் தீர்க்கலாம். தேசத்தின் வேருக்கு நீராய் - நம் உழைப்பினை அள்ளிக் கொடுப்போம். - சீறிடும் மக்கள் படைக்கே - நாம் மாண்புடன் வணக்கம் வைப்போம் பொன்னாடு நம்நாடு - அதுவே பகைவன் சுடுகாடு ஏய் வெற்றினு சொல்லு ஏய் வெற்றினு சொல்லு - நாம் ஆழகக்கடல் வென்று வரலாம். சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்விற்காக இசையமைப்பாளரின் விருப்பத்தேர்வில் திரையிசைப்பாடல் ஒன்றின் மெட்டிற்கு எழுதப்பட்டது. - வியாசன் - 02-19-2006 அருமையாக இருக்கின்றது.. கவிதைக்கு வாழ்த்துக்கள் - DV THAMILAN - 02-19-2006 நல்லா இருக்கு .......வாழ்த்துக்கள்.. - kuruvikal - 02-19-2006 காலத்துக்கு ஏற்ப உணர்ச்சியூட்டும் வரிகளுடன்..நீண்ட நாட்களின் பின் உங்கள் கவி...! வாழ்த்துக்கள்..! தொடர்ந்து தாருங்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 02-20-2006 அழகான கவிதை வாழ்த்துக்கள் - iniyaval - 02-20-2006 கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் - நர்மதா - 02-20-2006 காலத்தின் தேவையை உணர்த்தும் கவி மிகவும் அருமை - Sujeenthan - 02-21-2006 கவிதை மிகவும் நன்றாக உள்ளது. கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழனின் மனதில் சுடராயும் எதிரியின் மனதில் சூரியனாயும் எரியும். தொடர்ந்து உங்கள் கவிதைகளை தாருங்கள். - வர்ணன் - 02-21-2006 சகோதரா தயா - எழுச்சியை தூண்டும் வரிகள் - அற்புதமாய் இருக்கு!- ஆனாலும் - பாடலுக்கு எழுதப்பட்டதென்றால்- ஒவ்வொரு பந்தியிலும் வரிகளின் எண்ணிக்கை கூடி குறைகிறதே - என்றும்- அது-இசையின்-போக்கை மாற்றாதா - என்று யோசிச்சன் -! குற்றம் கண்டு பிடிப்பதாய் நினைத்திடாதீங்க- விசயம் தெரியாம கேக்கிறன் -! 8) தொடருங்கள் - உங்க தாயக காதலை - கவி வடிவில் -! 8) - இளைஞன் - 02-21-2006 நல்ல வரிகள் தயா. ஏற்கனவே உள்ள ஒரு பாடலின் இசைக்கேற்ப எழுதப்பட்டதென்றாலும், உணர்வெழுச்சிப் பாடல் வரிகளாக அமைந்துள்ளன. தொடர்க. - கறுப்பன் - 02-22-2006 அருமையாக இருக்கின்றது.. கவிதைக்கு வாழ்த்துக்கள் - சந்தியா - 02-22-2006 வாழ்த்துக்கள் உங்கள் கவிகள் அருமை |