Yarl Forum
சனத்தொகைப் பெருக்கமும், இஸ்லாமியர்களும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சனத்தொகைப் பெருக்கமும், இஸ்லாமியர்களும் (/showthread.php?tid=3106)



சனத்தொகைப் பெருக்கமும், இஸ்லாமியர்களும் - cannon - 09-29-2005

<b>உலகில் சனத்தொகையில் விரைவாக பரவிவரும் மதமாக இஸ்லாம் உள்ளதாகக் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன!.</b>

..... விரைவாகப் பெருகிவரும் மதம் ........... அப்படியாயின் ஏனைய மதத்திலுள்ளவர்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்களா???? அப்படிப் பாரிய மதமாற்றங்கள் உலகில் எங்கேயாவது நிகழ்ந்துள்ளனவா??? இல்லை!!!! அப்படியாயின் இப்பெருகிவரும் இஸ்லாத்திற்க்கான அடிப்படைக் காரணம் என்ன????????????

கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்!! அதில் கூறிய சில கருத்துக்கள் ...."1958ம் ஆண்டளவில் மொத்தத் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையுமே, முஸ்லீங்களின் சனத்தொகை 20,000 ஆகத்தானிருந்தது. ஆனால் இன்றோ 1,25,000 ஆக, திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மை இனமாக மாறியுள்ளது!!! இம்மாற்றம் குடியேற்றங்களினால் ஏற்பட்டதல்ல!! முற்று முழுதாக பிறப்பு விகிதத்தினாலேயே ஏற்பட்டது!"...

..... இன்னுமொரு புள்ளி விகிதம்... "இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களின் சனத்தொகையை முஸ்லீங்கள் 25 வருடத்தில் தாண்டுவார்கள் என்றும், சிங்களவர்களின் சனத்தொகையை 100 வருடங்களில் தாண்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது"....

இது ஒரு அச்சமூட்டும் செய்திகள்! இன்று யுத்தம்/பொருளாதாரம் எனப் பலபல காரணங்களினால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்ததினால், வடக்கு/கிழக்கு சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இச்சனத்தொகை இன விகித மாற்றமானது தமிழர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும். அதேவேலை இனப்பரம்பலில் புவியியல் ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வந்து பாதுகாப்பு ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, தாயகம் துண்டிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கூட ஏற்படலாம்!

இஸ்ரேலில் பலஸ்தீனர்களின் இனப் பெருக்கத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளை கட்டுப்படுத்த, தொடர்ந்துவரும் இஸ்ரேலிய அரசுகள் உலகலாவிய அளவில் யூதமக்கள் வந்து இஸ்ரேலில் குடியேறுவதற்காக பாரிய சலுகைகள், நிதியுதவிகள், .. போன்றன அளிக்கப்பட்டு யூதமக்களின் சனத்தொகையை இஸ்ரேலில் பல மடங்குகளாக அதிகரிக்கப்பட்டது, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

இவற்றை எதிர்கால தமிழீழ அரசு எவ்வாறு கையாளப் போகிறது?


- ஜெயதேவன் - 09-29-2005

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Thiyaham - 09-29-2005

ஒரு குடும்பத்தில் 13 அல்லது 14 பிள்ளைகள் இருந்தால் பெருகாமல் என்ன செய்யும்.
சான்று: வானொலி நிகழ்சிகளில் பங்குபற்றும் முஸ்லிம் நேயர்கள் தங்களை அறிமுகப்படுத்தல்


- ¦ÀâÂôÒ - 09-30-2005

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- best_net - 10-05-2005

அனைவர்கவனத்திற்கும்.....மதங்களை இந்தக்களத்தில் கிண்டல் செய்யாதீர்கள்..என பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்..


- Netfriend - 10-05-2005

ஆளமாக தூரத்து சிந்தனையுடன் ஆராயப்படவேண்டிய விடயம் ஆனால்.... காலம் கனியவில்லையோ.... :? Idea


- narathar - 10-05-2005

மேற்குறிப்பிட ஆராச்சி தேவயற்றது,இசுலாமியச் சகோதரரும் தமிழீழ குடிமக்களே.சனத்தொகைப் பெருக்கமும் வளங்களும் ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினயே தவிர ,மதப் பிரச்சினை அல்ல.தமிழீழக் குடி மக்கள் சைவராக,கிருத்தவராக,இசுலாமியராக ,பொவுத்தராக இருக்கலாம்,அதற்கான் அடிப்படை உருமைகள் பாதுகாக்கப் பட்டு இருக்கும்.தமிழீழ அரசு மதச் சார்பற்றது.மேலும் எத்தனை குழந்தைகள் பெறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம் ஆகவே இது தேவயற்ற ஒரு தலைப்பு.எமக்கு இன்று தேவை ஒருமைப் பாடும்,மத நல்லிணக்கமுமே தவிர , பிரிவினைகள் அல்ல.

பொங்கு தமிழ் நிகழ்வில் இசுலாமியச் சகோதரர்கள்.

<img src='http://img195.imageshack.us/img195/7008/pongu093020457284353ec.jpg' border='0' alt='user posted image'>


- Netfriend - 10-05-2005

நான் முஸ்லீம் சகோதரர்கள் நிலைபார்த்து எழுதவில்லை....
சனத்தொகைப் பெருக்கமும் வளங்களும் ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினயே இந்த நோக்கத்திற்காகவே ஆளமாக தூரத்து சிந்தனையுடன் ஆராயப்படவேண்டும்


- best_net - 10-05-2005

அன்பின்
தாங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.நல்ல விளக்கத்தை கூறியமைக்கு நன்றிகள்." எமக்கு இன்று தேவை ஒருமைப் பாடும்--மத நல்லிணக்கமுமே தவிர இ பிரிவினைகள் அல்ல. ..இதை அனைவரும் புரிந்து நடந்தால் பிரச்சினையே இல்லை.


- best_net - 10-05-2005

பெரியப்பு சொன்னது போன்ற கிண்டல்கள் தமிழ் பேசும் இசுலாமிய சகோதர்களை நோவினை செய்யும் அல்லவா..,ஒரு முறை பேச முனட இருமுறை யோசி என்டு சும்மாவா சொன்னார்கள்????


- vasanthan - 10-05-2005

முதலில் அவர்களுடைய திருமணமுறையினை மாற்ற வேண்டும்(ஏழு திருமணம் செய்வது, விதவைகளை திருமணம் செய்தால் அது அரை திருமணம்) மாற்றினால் தான் சனத்தொகை பரம்பலை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்.


- best_net - 10-05-2005

அண்ணா வசந்தன்...வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் பேசினால் சரி வருமா?...7 திருமணம் இசுலாத்தில் இல்லை.ஒருவன் செய்தான் என்பதற்காக எல்லோரையும் குறை கூறலாமா??... திருமணமாகாதவன் ஒரு விதவைக்கு வாழ்வளிக்கும் வகையில் அவளைத்திருமணம் செய்வதில் என்ன தப்பு?...


- இராவணன் - 10-05-2005

narathar Wrote:மேற்குறிப்பிட ஆராச்சி தேவயற்றது,இசுலாமியச் சகோதரரும் தமிழீழ குடிமக்களே.சனத்தொகைப் பெருக்கமும் வளங்களும் ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினயே தவிர ,மதப் பிரச்சினை அல்ல.தமிழீழக் குடி மக்கள் சைவராக,கிருத்தவராக,இசுலாமியராக ,பொவுத்தராக இருக்கலாம்,அதற்கான் அடிப்படை உருமைகள் பாதுகாக்கப் பட்டு இருக்கும்.தமிழீழ அரசு மதச் சார்பற்றது.மேலும் எத்தனை குழந்தைகள் பெறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம் ஆகவே இது தேவயற்ற ஒரு தலைப்பு.எமக்கு இன்று தேவை ஒருமைப் பாடும்,மத நல்லிணக்கமுமே தவிர , பிரிவினைகள் அல்ல.

இதுதான் யாழ் நிர்வாகத்தின் கருத்தும்..
முஸ்லிம் மக்களும் தமிழீழ மக்கள்தான். இப்பகுதியில்
வைக்கப்படும் கருத்துக்கள் அவர்களை புண்படுத்தும் படியாக
உள்ளபடியால் இப்பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது.