Yarl Forum
அப்பாவையும் பழக்குங்கள்...* - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: அப்பாவையும் பழக்குங்கள்...* (/showthread.php?tid=2865)

Pages: 1 2


அப்பாவையும் பழக்குங்கள்...* - SUNDHAL - 10-18-2005

குழந்தை வளர்ப்பு என்பது அம்மாக்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பெரும்பாலான ஆண்களது கருத்து. இதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம், ஆம்பிளைங்களுக்கு என்ன தொpயப் போகுது என்று பெண்களும் குழந்தை வளர்ப்பு தொடர்பான எல்லா விஷயங்களையும் தன் தலை மேலேயே இழுத்துப் போட்டுக் கொள்வதுண்டு. குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா இருவாpன் பங்கும் மிக முக்கியம் என்கிறhர்கள் மருத்துவர்கள். அது தான் குழந்தையின் சீரான மன வளர்ச்சிக்கும் உதவும் என்பது அவர்களது கருத்து. குழந்தை வளர்ப்பில் உங்கள் கணவரைக் கீழ்க்கண்ட விஷயங்களில் ஈடுபடுத்துங்கள்.

பிரசவத்திற்கு முன்பிலிருந்தே கர்ப்ப காலம் என்பது பெண்களை மனத் தளவிலும், உடலளவிலும் எப்படிப் பொpதும் பாதிக்கும், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன என்பது பற்றிய புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள்.

பிரசவம் நெருங்கும் கடைசி நாட்களில் கூடிய வரையில் உங்கள் கணவர் உங்கள் அருகாமையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தை பிறந்ததும் அதன் கழுத்து நிற்கும் வரை தூக்கவே பயப்படும் ஆண்கள் பலர். அதைத் தவிர்த்து, அவர்களையும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் பழக்குங்கள்.

உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் கணவாpன் உதவி உங்களுக்குப் பெருமளவில் எல்லா விஷயங்களிலும் தேவைப்படும். எனவே குழந்தையை சுத்தம் செய்வது, அதற்கு மருந்து கொடுப்பது, தூங்க வைப்பது, விளையாட்டுக் காட்டுவது என எல்லாவற்றையும் பற்றி ஆரம்பத்திலிருந்தே உங்கள் கணவருக்குப் பயிற்சி கொடுங்கள்.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அருகாமையைக் குழந்தை இழக்கும்போது, அதை ஈடுகட்ட உங்கள் கணவருக்குத் தொpந்திருக்க வேண்டும்.

தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தையைக் கவனிப்பதில் அம்மா, அப்பா இருவருமே சம அளவு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.

சில குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு அப்பாவிடம் கூடப் போகத் தயங்கும். சிறிது நேரத்திற்கு மேல் இருக்க முடியாமல் அழும். இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் அப்பாவின் அருகாமையையும் அதற்கு ஆரம்பத்திலிருந்தே பழக்குவது நல்லது.

குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய சொட்டு மருந்து விவரங்கள், போடப்பட வேண்டிய தடுப் பூசிகள், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாட்கள் போன்றவற்றை நினைவுப்படுத்தும் பொறுப்பை உங்கள் கணவாpடம் ஒப்படைக்கலாம்.

வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைக்குத் தேவையானதை வாங்கித் தருவதோடு தன் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம் அப்பாக்கள் மனதில் வளரக் கூடாது.

வெளியே செல்லும் போது குழந்தையை உங்கள் கணவர் தூக்கிச் செல்லவும் அனுமதியுங்கள். உங்களின் துணை இல்லாமல் குழந்தை யாhpடமும் இருக்காது என்ற பழக்கத்தை வளர விடாதீர்கள்.
Thanks:Karan............


- ப்ரியசகி - 10-18-2005

Quote:வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள்

பழக்கப்படுத்தித்தான் தெரிஞ்சுக்கணுமோ...hehe :evil:


- kuruvikal - 10-18-2005

இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- கீதா - 10-18-2005

நன்றி சுண்டல் அண்ணா ? அது சரி உங்களுக்கு வாற மனைவியோ பிறக்கிற குழந்தையோ குடுத்து வைத்தவர்கள் (ஏன் என்றால் நீங்கள் ஒரு குறையும் இல்லாமல் பார்ப்பிங்கள் )ke ke ke ke ke <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-18-2005

ப்ரியசகி Wrote:
Quote:வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள்

பழக்கப்படுத்தித்தான் தெரிஞ்சுக்கணுமோ...hehe :evil:



நீங்கள் சொல்லுகின்றதும் சரிஅக்கா :wink:

சில அப்பாக்களுக்கு புரியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சில அப்பாக்களுக்கு புரியாது :evil:


- இளைஞன் - 10-18-2005

ப்ரியசகி Wrote:
Quote:வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள்

பழக்கப்படுத்தித்தான் தெரிஞ்சுக்கணுமோ...hehe :evil:

அப்படியில்லை பிரியசகி. ஆண்டாண்டு காலமாக ஆண்களென்றால் இப்படித்தான் - பெண்களென்றால் இப்படித்தான் - என்று பழகிப்போய் விட்டார்கள். எனவே அந்தப் பழக்கத்துள் இருந்து மீளவேண்டுமென்றால் - அது கொஞ்சம் கடினமான விடயந்தான் - ஆனாலும், உண்மைகளை உணர்ந்து தாமாகவே செய்வதற்கான இயல்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.


- Rasikai - 10-18-2005

இளைஞன் Wrote:அப்படியில்லை பிரியசகி. ஆண்டாண்டு காலமாக ஆண்களென்றால் இப்படித்தான் - பெண்களென்றால் இப்படித்தான் - என்று பழகிப்போய் விட்டார்கள். எனவே அந்தப் பழக்கத்துள் இருந்து மீளவேண்டுமென்றால் - அது கொஞ்சம் கடினமான விடயந்தான் - ஆனாலும், உண்மைகளை உணர்ந்து தாமாகவே செய்வதற்கான இயல்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.

அடடா அப்படீங்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 10-18-2005

அப்படித்தான். இரசிகையென்றால் இப்படித்தான் - பிரியசகி என்றால் இப்படித்தான் என்று நமக்கு நாமே ஒரு "இமேஜை" உருவாக்கிக் கொண்டு - அதனின்று வெளிவர கஸ்ரப்படுகிறோம் தானே - அதேபோலத்தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- inthirajith - 10-18-2005

முதலில் மனைவியின் மனதில் அன்பால் இடம் பிடித்தால் அவள் கஸ்டத்திலும் பங்கு கொள்ளும் மனது வரும்
"எங்கே அந்த வெண்ணிலா " ? மனைவியின் மாதாந்திர கஸ்டம் புரியாத கணவர்களா ? மங்கையின் தாய்மையை மதிப்பார்கள்?


- Vasampu - 10-18-2005

சுண்டல் !

உள்ளதைச் சொல்லும் வீட்டிலே திருமண முன்னெடுப்புகள் நடக்கின்றனவா??. இல்லை உமது தேடலெல்லாம் ஒரு திணுசாயிருக்கின்றது. எப்படியிருந்தாலும் எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
:roll: :?:


- SUNDHAL - 10-19-2005

jothika Wrote:நன்றி சுண்டல் அண்ணா ? அது சரி உங்களுக்கு வாற மனைவியோ பிறக்கிற குழந்தையோ குடுத்து வைத்தவர்கள் (ஏன் என்றால் நீங்கள் ஒரு குறையும் இல்லாமல் பார்ப்பிங்கள் )ke ke ke ke ke <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


:oops: :oops: :oops: :oops: :oops: Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 10-19-2005

Vasampu Wrote:சுண்டல் !

உள்ளதைச் சொல்லும் வீட்டிலே திருமண முன்னெடுப்புகள் நடக்கின்றனவா??. இல்லை உமது தேடலெல்லாம் ஒரு திணுசாயிருக்கின்றது. எப்படியிருந்தாலும் எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
:roll: :?:


ஆஆஆஆஆ யாழ்களத்தில இருக்கிற உங்கள மாதிரி ஆக்களுக்கு எடுத்து போட்டா..என்ன வம்பில மாட்டிரிங்களே..வம்பண்னா..


- MUGATHTHAR - 10-19-2005

எனக்கு இந்த பிரச்சனை வரேலை ஏனெண்டால் குழந்தை 5 மாதத்திலேயே பொண்ணம்மாவை கண்டவுடனை புூச்சாண்டி வருகுது எண்டு என்னை வந்து கட்டிப் பிடிச்சிடும் நான் போற இடமெல்லாம் கூட்டிப் போறனான் இதாலை குழந்தை பாக்கிற பொறுப்பு என்னட்டையே வந்திட்டுது


- தூயவன் - 10-19-2005

MUGATHTHAR Wrote:எனக்கு இந்த பிரச்சனை வரேலை ஏனெண்டால் குழந்தை 5 மாதத்திலேயே பொண்ணம்மாவை கண்டவுடனை புூச்சாண்டி வருகுது எண்டு என்னை வந்து கட்டிப் பிடிச்சிடும் நான் போற இடமெல்லாம் கூட்டிப் போறனான் இதாலை குழந்தை பாக்கிற பொறுப்பு என்னட்டையே வந்திட்டுது

குழந்தை சொல்றது இருக்கட்டும். நீங்கள் என்ன சொல்றனியள்?


- RaMa - 10-19-2005

தகவலுக்கு நன்றி சுண்டல்


- aswini2005 - 10-19-2005

kuruvikal Wrote:இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உடன்கட்டை வழக்கத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வாருங்கள்.


- stalin - 10-19-2005

அஸ்வினி....உடன் கட்டை ஏறுறது ஆண் செத்தால் பெண் மட்டுமா.....பெண் செத்தால் ஆணும் ஏறவேணும் தானே.....பறவையிசம் எப்படியென்று தெரியாது....


- kuruvikal - 10-19-2005

aswini2005 Wrote:[quote=kuruvikal]இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உடன்கட்டை வழக்கத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வாருங்கள்.

நீங்கள் அமுல்படுத்துறீங்களோ..இல்லை புரட்சி என்று விட்டு விட்டு பத்துத் திருமணம் முடிக்கிறியளோ...அதைப் பற்றி அந்தப் பறவைகளுக்கு கவலையில்லை..! அதுகளுக்கு அது நெறி..அதன் வழியில் அவை வாழ்கின்றன..! அவற்றிற்குள் புரட்சி என்று கூவவும் யாருமில்லை...விடுதலை என்று வேசமும் இல்லை...! அதைத்தான் சுட்டிக்காட்டினோம்...! அவற்றிற்கு என்று இயற்கை விதித்தபடி அவை வாழ்கின்றன...போலும்..! அதில் நீங்களேன் குறுக்கிடுகிறீர்கள்..! நீங்க விரும்பினா உடன் கட்டை ஏறுங்க...இல்ல உள்ளதைக் கட்டைக்கு அனுப்பிட்டு இன்னொன்றைக் கட்டுங்க..யார் வேணாம் எண்டார்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- aswini2005 - 10-19-2005

stalin Wrote:அஸ்வினி....உடன் கட்டை ஏறுறது ஆண் செத்தால் பெண் மட்டுமா.....பெண் செத்தால் ஆணும் ஏறவேணும் தானே.....பறவையிசம் எப்படியென்று தெரியாது....


பறவையிசத்துக்கு மானுசம் என்னெண்டு தெரியேல்ல. அதுதான் பறவையினத்தையே பாழாக்கீனம் சில குறுவிப்பறவைகள் Idea


- aswini2005 - 10-19-2005

இயற்கை விதிச்சது என்று சொல்லிச் சொல்லியே இயல்பையே மறந்து மரம் மரக்கிழையென்று கனவு காண்போருக்கு இயற்கையின் விதியின் விளக்கம் புரியாது. யாரும் புரட்சி செய்யவோ புதிதாய் எதையுமே திணிக்கவும் இங்கில்லை. ஆனால் தனது கருத்தை எல்லோரும் கேட்டே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து மற்றோர் கருத்தைச் சிதைப்பதில் குறியாயிருக்கும் குறுவிப்பறவைக்கு புரியாத வார்த்தைகளைச் சொல்லியே பழிசுமத்துவது பழகிப்போன பறவையிசம்.