Yarl Forum
மாவீரர் புகழ் பாடுவோம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மாவீரர் புகழ் பாடுவோம் (/showthread.php?tid=2502)



மாவீரர் புகழ் பாடுவோம் - supramani - 11-12-2005

காலத்தால் அழியாத மாவீர்களின் நினைவுகளை நினைவு கூறும் இம் மாதத்தில் அவர்களைப் போற்றி பாடப்பட்ட பாடல்களை நினைவு கூறுவோம்.

** மாவீர் யாரோ என்றார்....

** ஓ... வீரனே.. எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும்


உங்களிடம் ஏதும் பாடல்கள் இருப்பின் இணையுங்கள்.

உங்கள் சுப்பிரமணி


- Mathan - 11-12-2005

பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி. ஓ வீரனை பாடலை நீண்ட காலத்துக்கு பின்பு கேட்டேன்.


Re: மாவீரர் புகழ் பாடுவோம் - supramani - 11-12-2005

**மாவீர் புகழ்பாடுவோம்...............

**கல்லறையில் விளக்கேற்றிப்பணிகின்றோம்.........

**ஒ..மரணித்தவீரனே...

**நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்....

**விண்வரு மேகங்கள் பாடும்.......


Re: மாவீரர் புகழ் பாடுவோம் - தூயவன் - 11-12-2005

ம்ம்.... நல்லாயிருக்கு பழைய பாடல்கள் கிடைத்தால் களத்தில இணையுங்கோ


- Rasikai - 11-12-2005

பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி சுப்பிரமணி


- iruvizhi - 11-12-2005

மாவீரர் பண்களை இங்கே இணைத்தமைக்கு எமது நன்றிகள். நண்பர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் இவை என்பதால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றிகள்.


- sri - 11-27-2005

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதலெம் கைகளை வைத்தோரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

ஊயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


- selvanNL - 11-27-2005

சிறி மிகவும் அருமையான செயல்,, நன்றி நன்றி நன்றி...Idea

இங்கே என்னொமொன்றையும் குறிப்பிடவேண்டும், இனையத்தளங்களில் தமிழீழப்பாடல்களை தரவேற்றம் செய்வதில் தவறில்லை, அதை பிறர் தரவிறக்கம் செய்ய முடியாதவாறு இனைத்தால் வேண்டும். Idea


- ப்ரியசகி - 11-27-2005

மாவீரத் பாடல்களை நீண்ட நாட்களுக்குப்பின் கேட்க இணைத்தவர்களுக்கு நன்றி..

<b>எனக்கு அந்த ஹரிஹரன் பாடிய...
மண்ணில் விளைந்த முத்துக்களே..மரணம் ஏதடா...</b>

அந்த பாடலை தந்து உதவுவீர்களா?:roll:
நன்றி