![]() |
|
கருணாநிதியும் குள்ளநரித்தனமும். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: கருணாநிதியும் குள்ளநரித்தனமும். (/showthread.php?tid=2493) |
கருணாநிதியும் குள்ளநரித்தனமும். - தூயவன் - 11-12-2005 தன் அரசியல் வாழ்வுக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் அரசியல்வாதிகள். அதிலும் தமிழ்நாட்டு அரசியல் என்பது விசித்திரமானது. மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அவர்களுக்கு எல்லாம் செய்வது போல காட்டி ஏமாற்றும் திறமையை புகழாமல் இருக்கமுடியாது. அவ்வகை அரசியல்வாதிகளில் ஒருவர் தான் கருணாநிதி. அண்ணாத்துரை மறைவுக்கு பின் தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட இவர் இன்று வரை அப்பதவியில் ஒட்டியிருக்க முடிகின்றது என்றால் அவரின் குள்ளநரித்தனமான அரசியல் தான் காரணமாக இருக்கும். இன்று கருணாநிதியின் கரகரத்த குரல் உங்களுக்கு பரிட்சயமாக இருக்ககூடும். ஆனால் உண்மையில் இதன் மூலகர்த்தா எவர் என்று நோக்கினால் அது அண்ணாத்துரை தான். அண்ணாத்துரை மறையும் வரைக்கும் கருணாநிதி சாதாரணகுரலில் தான் பேசிவந்தார். அண்ணாத்துரை மறைந்த பின் அவரின் திடீரென்று அண்ணாத்துரை போல குரலை மாற்றிக் கொண்டார். காரணம் என்னவென்றால் அண்ணாத்துரைக்கு இருந்த அந்த பெரும் மக்கள்ஆதரவை கைப்பற்றிக் கொள்ளுவதற்கே. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் குரல் கூட கரகரப்பாக தான் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்க. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சுவாரிசமான விடயம் ஒன்றைச் சொல்லுவார்கள். ரயில் மறிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ரயில் வரும்போது குறுக்கே தண்டவாளத்தில் படுப்பது தான் திட்டம். அப்போது கண்ணதாசனும் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தார். ரயிலுக்கு முன் கண்ணதாசன் படுத்துவிட்டார். கருணாநிதி கொஞ்ச து}ரம் தள்ளித் தான் படுத்தாராம். ஏனென்றால் தற்செயலாக ரயில் கண்ணதாசனுக்கு மேல் ஏறிவிட்டால் தான் தப்பி ஓடிவிடலாம் என்று தான். தனது தலைவர் பதவிக்கு போட்டியாக எவர் வந்தாலும் உடனே அவர் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு நீக்கும் தந்திரபாயத்தை கைகொள்வதில் மன்னர். இருந்தாலும் எம்ஜிஆர் விடயத்தில் இவரது கணக்குப் பொய்த்து விட்டது. பணவிவகாரத்தை காட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார். ஆனால் அவர் கண்முன்னாகவே அதிமுக எனப்படும் அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகம் வளர்ந்தது. எம்ஜிஆர் மீது மக்கள் கொண்ட பற்று கருணாநிதியை முடக்கி விட்டது. ஆனாலும் அக்குள்ளநரி விடவில்லை. எம்ஜிஆர் கெட்டப்புக்கு மாறினார். எம்ஜிஆரைப் போல கறுப்புக் கண்ணாடி, சால்வை போடவெளிக்கிட்டார். சால்லை போடுவதற்கு மருத்துவக்காரணம் சொல்லிக் கொண்டார். அப்போதைய ஈழவிடுதலைப் போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களிடம் பரவிய ஆதரவை கவரும் விதமாக நடக்கமுயன்றார். இதனால் முதலில் ரெலோவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இதேவேளை எம்ஜிஆரும் இலங்கை விடயத்தில் கொண்ட அக்கறை காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பைக் கொண்டார். இதனால் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் கூடி ஆராய்வதற்காக என்று சொல்லி எல்லா இயக்கங்களையும் தம் பக்கம் இழுக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதை உணர்ந்த விடுதலைப்புலிகள் எம்ஜிஆருடன் இணைந்தே நின்றனர். கருணாநிதியின் நாடகம் தோற்றுப் போனது. எம்ஜிஆர் மருத்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது தேர்தல் நடந்தது. எம்ஜிஆரின் ஆதரவும் தனக்கே என்று வெட்கம் கெட்ட நிலையில் சொல்லிப் போட்டியிட்டார். ஆனாலும் எம்ஜிஆர் வென்றார். இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விரட்டப்பட்டபோது வரவேற்கப் போகமாட்டேன் என்றது கூட அரசியல் நாடகமே. அப்போது இந்திய ஆக்கரமிப்பு படைகள் அட்டூழியம் செய்கின்றனர் என்று தமிழ்நாட்டில் எழுந்த எதிர்பு ஆதரவை தம்வசம் இழுக்கும் நாடகமே. அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". அன்பழகன் முதல் பாலு வரை யாரும் ஒரு அளவுக்கு மேல் போகமல் தான் பார்த்துக் கொள்கின்றார். ஜெயலலிதா தலமைச்செயலகம் கட்டும் விடயத்தில் தடையாக இருந்ததாக பெரிதாகப் பேசப்பட்ட பாலு இப்போது அமத்தி வாசிக்கப்படுகின்றார். இப்போது கூட சன்ரீவியில் வைகோ பற்றி செய்தி வருவது என்பது அபுூர்வம். ஈழத்தமிழருக்கு அனுதாபம் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் எம் மக்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டனர். நடுச்சாமத்தில் சோதனை என்று வீடுமுழுவதும் கிளறிக் கொட்டினர். இதில் ஒன்று என்னவென்றால் ஜெயலலிதா இப்படி ஏதும் செய்தது இல்லை என்பது குறித்தாகவேண்டும். தமிழ்பற்றை பற்றி பெருமையாகப் பேசும் கருணாநிதியின் பேரக்குழந்தைகள் எம் மொழியில் படிக்கின்றனர் என்பது உலகம் அறிந்த கதை. சன்ரீவி என்ற பெயரே இவரது தமிழ்பற்றை அடையாளப்படுத்தும். நாஸ்தீகவாதம் பேசும் கருணாநிதியின் மனைவிகளில் ஒருவரான தயாளுஅம்மாளைப் பார்த்தீர்கள் என்றால் நேற்றியை மூடும் அளவுக்கு பொட்டுபோட்டிருப்பார். இது தான் அவரது கொள்கை. ஆனால் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தல் வேண்டும். ஒரு காலத்தில் திருப்பதிக்கு போனதாகச் சொல்லி நடிகர்திலகம் சிவாஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அரசியல்வாதிகளின் வாழ்வு என்பது என்னதான் மேடையில் பேசினாலும் கடைசியில் தங்களின் பையை நிரப்பி கொள்வதில் தான் இருக்கும். அவர்கள் பேசும்மேடைப் பேச்சை வைத்து நம்புவது போல தவறு ஏதும் இல்லை. இன்று தமிழ்நாட்டின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் கருணாநிதி. சென்னை என்பது முன்பு இப்போதைய ஆந்திரா, கர்னடகா, கேரளாவுக்கும் தலைநகராக இருந்ததால் இன்று பல மொழி மக்கள் கூடிவாழும் பிரதேசமாக உள்ளது. அங்கே முழுமையான தமிழ்பற்றோ அல்லது இனப்பற்றோ இருக்கும் என்று கருதுவது மடைத்தனம். ஏதோ தமிழ்நாட்டின் தலைநகரம் என்றவகையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழருக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. தேவையும் இல்லை இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மீது பற்றில்லை என்று அர்த்தமில்லை. உண்மையான தமிழ்மக்கள் இன்றும் எம்மை நேசித்துக்கொண்டிருக்கின்றனர். நெடுமாறன் முதல் அடிமட்ட தமிழன் வரை எம்முடனேயே இருக்கின்றனர். அப்படியே மதுரை, திருநெல்வேலிப்பக்கம் போய் தேசியத்தலைவரையோ அல்லது ஈழத்துமக்களையோ குறை கூறிப்பாருங்கள். "எலேய்" என்று அரிவாளுடன் வெட்டவந்துவிடுவார்கள். ஏனென்றால் அங்கிருப்பது புூர்வீகத் தமிழர்கள். நம் இரத்த சொந்தங்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்மக்களின் தலைவனாக இருப்பது தேசியத் தலைவர் அவர்களே. அவர்களின் இப்பாச உணர்வுகள் தான் எம்மை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்ன. அவர்கள் சென்னை போன்ற நகர்புறம் இல்லதால் அவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை - Birundan - 11-13-2005 தூயவன் நல்ல ஒரு கட்டுரை வாழ்த்துக்கள், வேறு எங்காவது வெட்டி ஒட்டுவதை விட இப்படி நாமே எழுதுவது நம் எழுத்துத்திறமையை வழர்க்கும் என்பது என் எண்ணம் அத்தோடு ஆதாரங்களையும் காட்டும்போது அக்கட்டுரை நிலைத்து நிற்கும் என்பது எனது துனிபு. - aathipan - 11-13-2005 நன்றி தூயவன்.... சன்டிவி என பெயர்வைத்ததற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதே போல பிள்ளைக்கு ஸ்டாலின் எனப்பெயர் வைத்ததற்கும் ஏதோ காரணம் சொல்லுவார். அதைபற்ற்p ஏதும் தெரியுமா.. - தூயவன் - 11-13-2005 Birundan Wrote:தூயவன் நல்ல ஒரு கட்டுரை வாழ்த்துக்கள், வேறு எங்காவது வெட்டி ஒட்டுவதை விட இப்படி நாமே எழுதுவது நம் எழுத்துத்திறமையை வழர்க்கும் என்பது என் எண்ணம் அத்தோடு ஆதாரங்களையும் காட்டும்போது அக்கட்டுரை நிலைத்து நிற்கும் என்பது எனது துனிபு. உண்மை தான். ஆனாலும் என்னால் ஆதாரங்களை திரட்டுவதற்கு நேரம் போதுவதில்லை. ஆனாலும் எழுதப்படுபவையின் உண்மைத் தன்மை பற்றி கருத்தில் கொள்கின்றேன். - Vasampu - 11-13-2005 <b>நன்றி து}யவன் உங்கள் கருத்துக்களுக்கு ஆனாலும் என்ன நோக்கத்திற்காக இதனை எழுதியுள்ளீர்கள் என்பது புரியவில்லை ஆனாலும் உண்மைக்கு மாறாக நிறைய எழுதியுள்ளீர்கள். கருணாநிதியின் குரல் ஆரம்பகாலத்திலிருந்தே கரகரப்பானதுதான் அவர் திரைக்கதையமைத்த அனைத்துத் திரைப்படங்களிலும் ஆரம்பத்திலேயே அவரது குரலிலேயே கதைச்சுருக்கம் வழங்கப்படும். நிங்கள் வேண்டுமாயின் அவர் திரைக்கதையமைத்த திரைப்படங்களைப் பார்க்கலாம். அதே போல கருணாநிதி அவர்கள் முதலமைச்சராகவிருந்தபோதுதான் தமிழகத்தில் அகதியாகவிருந்த எமது மக்கள் உயர்கல்வி கற்க வழியமைத்தார். ஆனால் ஜெயலலிதா வந்தவுடன் இதனைத் தடுத்து நிறுத்தினார். அத்துடன் அகதிகளுக்கு கொடுத்த உதவிகளைக் குறைத்து அவர்களை தானாகவே நாடு திரும்பும் நிலைக்கு மாற்றினார். அத்துடன் உதவிகள் கிடைக்காத அகதிப் பெண்கள் பலர் பணத்திற்காக விபச்சாரி ஆனார்கள். அவர்கள் சீரளிக்கப்பட்டு மறுநாள் மீட்கப்பட்ட செய்திகள் பல செய்திகளில் வந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லை. இன்றுவரை அதிகப்படியான அநியாயங்களை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செய்துவரும் ஜெயலலிதாவிற்கு நன்றாகத்தான் வக்காலத்து வாங்குகின்றீர்கள். புூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதுபோல் நீங்கள் கருத்தெழுதுகின்றீர்கள். இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு கருணாநிதி அவர்கள் ஆற்றிய பங்கையும் நீங்கள் கொச்சைப் படுத்தியது உங்கள் சந்தர்ப்ப வாதத்தையே காட்டுகின்றது. வை.கோ வின் வெளியேற்றம் கருணாநிதியின் சதியென்றால் பின் வை.கோ எவ்வாறு கருணாநிதியுடன் சேருவார். அப்படிப் பார்த்தால் வை.கோவும் சந்தர்ப்பவாதியே. சுயலாப நோக்கம் என்பது எல்லா இடத்திலும் ஏன் நமது போராட்ட வரலாறிலேயே நிறைய உண்டு. கருத்துக்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதும் கருத்துக்களில் உண்மைக்குப் புறிம்பான விடயங்களை எழுதினால் எதிர்காலத்தில் உண்மையாக எழுதும் கருத்துக்கள் கூட சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படும்.</b> - தூயவன் - 11-13-2005 வணக்கம் வசம்பு இங்கே நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஜெயலலிதாவும் சரி. கருணாநிதியும் சரி சுயநலவாதிகள் தான். நான் இதை எழுதக் காரணம். கருணாநிதி ஏதோ ஈழத்தமிழருக்காக செய்தவர் என்றும் எம் மீது பாசம் கொண்டவர் என்றும் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் தவறு, அவர் முழுமையான பச்சோந்தி. தன் பையை நிரப்புவதில் தான் குறியாக உள்ளார் என்பதை காட்டத் தான். எம்ஜிஆர் தான் ஈழமக்களுக்காக அதிகம் செய்தாரே தவிர கருணாநிதி ஒன்றும் எங்களுக்காக செய்யவில்லை. பாடசாலை அனுமதி கூட அப்படித்தான். இலங்கையில் மாற்று இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடை செய்தபோது அவ் இயக்கங்களில் இருந்த பெண்களை இந்தியாவில் வைத்து அவ்வியக்கங்கள் கூத்தடித்ததை அங்கு சென்று கேட்டால் தெரியும். இன்று கூட கருணாநிதியுடன் கூட நின்ற இயக்கங்களால் தான் தமிழ்நாட்டில் ஈழதமிழருக்கு அவப்பெயர். ஜெயலலிதாவை உதாரணம் காட்டியது ஏன் என்றால் எமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஜெயலலிதாவே அப்படி செய்யாத போது இந்தக் குள்ளநரி செய்வதை காட்டுவதற்காத் தான் ஒழிய ஜெயலலிதாவை பாராட்டவேண்டிய தேவை இல்லை. வைகோ சேர்வதற்கான காரணம் விடுவோம். ஆனாலும் சேர்ந்து நின்றபோது கூட தன் கொள்கைகளை வெளிப்படையாக சொல்லும் துணிவு அவருக்கு மட்டும் தான் உண்டு. எப்பவாது கருணாநிதியால் ஒரு கருத்தை தெளிவாகச் சொல்ல முடியுமா? எக் கருத்தானாலும் மதில் மேல் புூனையாகத் தான் சொல்லுவார். தவறி அடுத்தநாள் கண்டணம் வந்துவிட்டால் உடனே சொல்லவில்லை என்று மறுப்பறிக்கை விடும் துணிவு யாருக்கு வரும். கரகரத்த குரல் இல்லை என்பது என்னால் நிருபிக்கமுடியும். கருணாநிதியின் இயற்கையான குரல் கரகரப்பு இல்லை என்று. இது உண்மை. விரைவில் சொல்கின்றேன். - Netfriend - 11-13-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) 8) :mrgreen: (உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. ) - Netfriend - 11-13-2005 ஆதாரங்களையும் காட்டும்போது அக்கட்டுரை நிலைத்து நிற்கும் என்பது எனது துனிபு.............. கருத்துக்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதும் கருத்துக்களில் உண்மைக்குப் புறிம்பான விடயங்களை எழுதினால் எதிர்காலத்தில் உண்மையாக எழுதும் கருத்துக்கள் கூட சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படும்........... :|
- Vasampu - 11-13-2005 து}யவன் தி மு க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அண்ணா கருணாநிதி போன்றோர் திரைப்படங்களுக்கு கதை வசனம் அமைக்கத் தொடங்கிவிட்டனர்.. முதலில் அண்ணாத்துரை அவர்கள் தான் வேலைக்காரி ஓரிரவு போன்ற பங்களுக்குத் திரைக்கதை அமைத்தார். ஆனாலும் கருணாநிதி அவர்கள் பராசக்தி படத்திற்கு கதை வசனம் அமைத்தது தமிழ்த்திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது. பலரும் அண்ணாத்தரையின் வசனத்தை விட கருணாநிதியின் வசனத்தைப் பாராட்டினார்கள். அது பின்னாளில் சரியென நிரூபிக்கவும் பட்டது. இந்நிலையில் அண்ணாத்துரைபோல் குரலை மாற்ற வெண்டிய அவசியம் கருணாநிக்கு ஏன் ஏற்படும் என எதிi;பார்க்கின்றீர்கள்?? நீங்கள் விரும்பினால் கருணாநிதியின் பழைய படங்களை எடுத்துப் பாருங்கள். உங்கள் ஆதாரத்தையும் தாருங்கள். எந்த ஆதாரத்தைப் போடலாமென நீங்கள் சிந்திப்பதும் புரிகின்றது. - Rasikai - 11-13-2005 வம்பண்ணா என்ன ஆச்சு?? திருப்பி ஒரே கருத்தை போட்டு இருக்கிறீங்கள்.?? - Vasampu - 11-13-2005 சீ சீ நான் எப்பவும் ஸ்ரெடி இரசிகை. <b>வடிவாய்ப் பாருங்க</b> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 11-14-2005 Vasampu Wrote:சீ சீ நான் எப்பவும் ஸ்ரெடி இரசிகை. <b>வடிவாய்ப் பாருங்க</b> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதில யாருக்கு ம__பு? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 11-15-2005 Birundan Wrote:Vasampu Wrote:சீ சீ நான் எப்பவும் ஸ்ரெடி இரசிகை. <b>வடிவாய்ப் பாருங்க</b> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களுக்கு தான் பிருந்தன் அண்ணா :wink: வடிவா பாருங்க ரசிகை அக்கா கேட்ட பிறகுதான் வ(ச)ம்பண்ணா திருத்தம் செய்திருக்கார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sri - 11-16-2005 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய கருணாநிதி இன்று இந்தி நூல் ஒன்றை வெளிடுகிறார். வேடிக்கையான விசயம் தான். - Vasampu - 11-16-2005 சிறி இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படிப் புரியும் என்ன புத்தகத்தை எங்கே வெளியிடுகின்றார். இதனை எந்த இணையத் தளத்தில் பார்த்தீர்கள் என எழுதினால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமல்லவா?? - sri - 11-17-2005 quote="Vasampu"] சிறி இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படிப் புரியும் என்ன புத்தகத்தை எங்கே வெளியிடுகின்றார். இதனை எந்த இணையத் தளத்தில் பார்த்தீர்கள் என எழுதினால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமல்லவா??[/quote] நாளைய இந்திய பத்திரிகைகளை பார்க்கவும் - Vasampu - 11-18-2005 சிறி நீங்கள் சொன்னது போல் சில இந்திய பத்திரிகைகளை நானும் பார்த்தேன். ஆனால் நீங்கள் சொன்ன கருணாநிதியின் விடயத்தைக் காணவில்லை. சிலவேளை உங்களுக்கு மட்டும் ஒரு பத்திரிகை அச்சிட்டுள்ளார்களா??? ஒரு விடயத்தை எழுதும்போது அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டியது செய்தியைத் தருபவரது கடமை. ஆனால் நீங்கள் எப்படி அந்தச் செய்தியை அறிந்தீர்கள் என்பதைச் சொல்லாமல் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். எனியாவது சரியான பதிலைத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். - அருவி - 11-18-2005 ஜெயலலிதா - மஹிந்த என்றால் கருணாநிதி - ரணில் - அருவி - 11-18-2005 Quote:அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். Quote:வை.கோ வின் வெளியேற்றம் கருணாநிதியின் சதியென்றால் பின் வை.கோ எவ்வாறு கருணாநிதியுடன் சேருவார். இதனை நாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்நாட்டில அனைவரும் சொல்கிறார்கள். குறிப்பாக தி.மு.க வுள்ளே பலர் வெளிப்படையாகப் பேசும் நிலையில் இது உள்ளது. தி.மு.க வினில் உள்ள பொறுப்புகள் தன் குடும்பத்தவர்களைச் சார்ந்தவர்களிடம் போய்ச்சேருமாறு பார்த்துக்கொள்பவதில் இவர் கில்லாடியாச்சே. - தூயவன் - 11-19-2005 வணக்கம் வசம்பு 67ம் ஆண்டுக்கு முற்பட்ட மேடைப்பேச்சுக்களில் கருணாநிதியின் உண்மையான குரலை அடையாளம் காணமுடியும். மேலும் மேம்பால ஊழலில் ஸ்ராலின் மாட்டுப்படக்கூடாது என்பதற்காக தன் உற்ற நண்பனாக இருந்த ரமேஸ், அவரது மனைவி, கைக்குழந்தையை நஞ்சு வைத்துக் கொன்றதை எப்படி நினைக்கின்றீர்? இது எல்லாம் அரசியல் வாழ்க்கையில் சகஜம் தான். ஆனால் இங்கே நான் சொல்வது ஈழத்தமிழருக்காக கருணாநிதி விட்ட கண்ணீர் என்பது நீலிக்கண்ணீர் மட்டுமே. எவ்வித அனுதபத்தாலும் இல்லை என்பது தான். |