Yarl Forum
ஜேர்மனி செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Danklas - 09-05-2005

ஜேர்மனிய புதுதமிழர்கள் இப்படியான கூட்டங்களுக்கு எல்லாம் வரமாட்டார்கள்.. கோயில் தேர், திருமணவீடு, எண்டல் வருவார்கள்.. இப்ப அவர்களின் குறிக்கோள் என்ன தெரியுமா, பிள்ளைகளுக்கு 18,19 வயதிலேயே நல்ல காட், வீடு, பணம் உள்ள பையனா கட்டிகொடுத்துட்டு தாங்கள் நிம்மதியா வாழுவம், மற்றயவர்களை பற்றிய கவலை எதுக்கு எண்டு வாழுகிறார்கள்.. :evil: :evil:


- vasisutha - 09-05-2005

புது தமிழர் என்றால் என்ன டன் அண்ணா? :roll:


- Annachi - 09-05-2005

vasisutha Wrote:புது தமிழர் என்றால் என்ன டன் அண்ணா? :roll:

<b>அதுவா மைடியர் லிட்டில் போய் அதாவது நம்மளை போல நக்....ற கூட்டம் யார் எப்படி போனால் என்ன என்று வாழுற கூட்டம் இப்ப பாரும் நம்மட தலை அன்ட் சங்...கரி கருங்குரங்கு கூடவே நான் நாங்கள் தொடர்ந்து நக்.....ம் அதப்போலத்தான் இதுவும் நமக்கு வேண்டியது எல்லாம் .......

தலை எனக்கு ஆப்கான் நசினாலிட்டி வரப்போகுது</b>


- Mathan - 09-17-2005

ஜெர்மனியத் தேர்தலில் உச்சக்கட்டப் பிரச்சாரம்

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40807000/jpg/_40807382_merkel-ap203i.jpg' border='0' alt='user posted image'>
<b>ஜெர்மனியின் முதல் பெண் சான்சல்லராக வர நினைக்கும் பழமைவாத தலைவர் ஏஞ்சலா மெர்கெல்</b>

ஜெர்மனியில் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெர்லினில் பெரிய பேரணிகள் பல நடந்துள்ளன.

ஆனால் போட்டி மிகமிக உக்கிரமாக இருப்பதால் வழமைக்கு மாறாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரையில் பிரச்சாரத்தை தொடரப்போவதாக கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஜெர்மனியின் முதல் பெண் சான்சல்லராக வர நினைக்கும் பழமைவாத தலைவர் ஏஞ்சலா மெர்கெல், ஒரு மிகப் பெரிய சர்க்கஸ் கொட்டகையில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.

இந்த கொட்டகையில் வழக்கமாக இசை நிகழ்ச்சிகளும் விழாக்களும்தான் நடக்கும்.

இவரது கிருத்துவ ஜனநாயகக் கட்சிதான் தேர்தலில் மிகப் பெரிய கட்சியாக வரும் என்று கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனாலும் தற்போதைய சான்சல்லர் கெர்ஹார்ட் ஷ்ரோடரின் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியும் ஆதரவை அதிகமாக்கி போட்டியில் இருகட்சிகள் இடையிலான இடைவெளியை குறைத்து வருகிறது.

BBC Tamil


- Mathan - 09-17-2005

ஜேர்மனியில் வசிக்கும் கள உறவுகள் தேர்தல் குறித்த செய்திகளை தமிழில் தாருங்களேன்.


- AJeevan - 09-18-2005

ஜெர்மனியில் பொதுத்தேர்தல்; ஷ்ரோடர் மெர்கெல் இடையே கடும் போட்டி
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40813000/jpg/_40813616_composite203i.jpg' border='0' alt='user posted image'>
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் நாட்டின் 6 கோடி 20 லட்சம் வாக்காளர்கள் ஒரு புதிய அரசைத் தேர்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.

தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆளும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சி கூட்டணி பிராந்திய மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் வரிசையாக தோல்வி அடையவே சால்சல்லர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் இயல்பாக தேர்தல் வருவதற்கு ஓராண்டு முன்பாகவே இந்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஷ்ரோடருக்கு போட்டியாளராக இருப்பது ஜெர்மனியின் முதல் பெண் சான்சலராகப்போகிறவர் என்று பத்திரிகைகள் எழுதிவரும் - கிருத்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவி அங்கெலா மெர்கெல்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஷ்ரோடரின் சோஷலிஸ ஜனநாயகக்கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பசுமைக் கட்சியுடன் ஜெர்மனியில் கூட்டாட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டால்தான் தாங்கள் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் பலன்களை நாடு அனுபவிக்க முடியும் என்று ஷ்ரோடர் பிரச்சாரத்தின்போது வாதிட்டிருந்தார்.

ஆனால் ஜெர்மனியில் தற்போது 50 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளித்து கட்டுப்படுத்த தங்களால்தான் முடியும், ஜெர்மனியில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வருவதற்கான தருணம் இது என்று அங்கெலா மெர்கெல் கூறியிருந்தார்.

மெர்கெல் தலைமையிலான கிருத்துவ ஜனநாயகக் கட்சி தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் காட்டியிருந்தாலும், தனியாக ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற இக்கூட்டணி திணறும் என்றே தெரிகிறது.
-BBC tamil


- Mathan - 09-19-2005

[size=14]<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40783000/jpg/_40783472_smilingap203b.jpg' border='0' alt='user posted image'>
<b>அங்கெலா மெர்கெல் (Angela Merkel)</b>

ஜேர்மானிய தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கெலா மெர்கெல் ஐ தலைவியாக கொண்ட ஜேர்மனியின் பழமைவாத கிருத்துவ ஜனநாயகக் கட்சி - Christian Democratic Union (CDU) மூன்று ஆசனங்களால் முதலிடத்தில் வந்துள்ளார், இந்த ஆசனங்களுக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளமையால், ஜேர்மனியில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியுள்ளது.

அங்கெலா மெர்கெல் மற்றும் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) வெளியிட்டுள்ள கருத்துக்களின் படி இருவரும் ஆட்சியமைக்க முயற்சிப்பது தெளிவாகியுள்ளது. இந்த போட்டியில் அங்கெலா வென்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் அவர் ஜேர்மனியின் முதல் பெண் சான்சிலராக (chancellor) வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40815000/jpg/_40815528_schroeder_apportbody.jpg' border='0' alt='user posted image'>
<b>கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder)</b>

தேர்தல் வெற்றியை அங்கெலா உரிமை கோரிவரும் நிலையில், எதிர்தரப்பு ஷ்ரோடர் அவர்களோ வாக்காளர்கள் நாட்டை வழிநடத்துவதற்கான ஆணையை அங்கெலாவுக்கு வழங்க மறுத்துவிட்டார்கள் என வாதிட்டு வருகின்றார். இந்த குழப்பமான அரசியல் நிலைமையில் சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடிக்கலாம். இந்நிலையில் ஜேர்மானிய பாராளுமன்றத்தினால் முன்று தடவைக்குள் சான்சிலரை தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், ஜனாதிபதி Horst Koehler அவர்களால் சிறிய பெரும்பான்மையுடன் உள்ள கட்சியை மைனாரிட்டி அரசமைக்க அழைக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதான் தற்போதைய ஜேர்மானிய நிலவரம், இனி யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த செய்திகள் BBC, CNN மற்றும் AP நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டவை.

ஜேர்மனியில் வசிக்கும் கள உறவுகள் இந்த தேர்தல் குறித்து தமக்கு தெரிந்த தகவல்களை அறிய தாருங்களேன். அங்கு எதிர்பார்க்கப்படுவது போல அரசியல் தலைமை மாற்றம் ற்பட்டால் அது அங்குள்ள தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அரசியில் தஞ்சம் குறித்த நிலைமைகளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்.


- AJeevan - 09-19-2005

<span style='font-size:22pt;line-height:100%'><b>ஜெர்மனி பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை இல்லை</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050919141111050919_schroeder203credito.jpg' border='0' alt='user posted image'>
ஜெர்மனியில் நடந்த பொதுத்தேர்தலில் உறுதியான முடிவுகள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் உரிமை தமக்கே உண்டு என இரு முக்கிய கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

செயல்படக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுவருவதாக அவை கூறியிருக்கின்றன.

இந்த தேர்தல்கள் கடந்த ஆண்டு நடந்திருந்தால், சமூக ஜனநாயகக் கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கும். வேலையின்மையை ஐம்பது லட்சம் என்ற அளவிலிருந்து குறைக்க அவர்கள் செய்த ஒப்பீட்டளவில், மெலிதான தொழிலாளர் சீர்திருத்தங்கள் வாரந்தோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பிராந்தியத் தேர்தல்களில் தொடர்ச்சியான பல தோல்விகளுக்கு வழிவகுத்தன.

ஆனால், ஏன்ஜெலா மெர்க்கல் முன்வைத்த , வேட் எனப்படும் பெறுமதி கூட்டப்பட்ட வரியின் மீது, அளவு குறிப்பிடப்படாத வரி உயர்வு உள்பட பல கூடுதல் தீவிரமான திட்டங்கள் , வாக்காளர்களை மேலும் கலவரமடைய செய்துவிட்டது போல் தோன்றுகிறது.

தற்போதுள்ள யாரலும் புரிந்துகொள்ள முடியாத வரி அமைப்புக்கு பதிலாக, ஒரே நிலையிலான வரி அமைப்பு தேவை என்று அவரது ஆலோசகர், பௌல் கிர்ஷோட் முன்வைத்த யோசனையை சமூக ஜனநாயகவாதிகள் பிடித்துக்கொண்டு இது பணக்காரர்களுக்கு லாபமளிக்கும், ஏழைகளைப் பாதிக்கும் என்று கூறினர்.

ஒரு பெண் நாட்டிற்கு தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றி சில பழமைவாதிகளின் மத்தியில் வெளிப்படையான வெறுப்பு காணப்பட்டது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும், ஒரு குழந்தை பெறாத, பௌதிகப் பேராசிரியர் ஒரு உணர்ச்சிகளற்ற எதைப்பற்றியும் கவலைப்படாத சான்சலராகத்தான் இருக்க முடியும் என்று, ஷ்ரோடர் சூசகமாகக் கூறிக்கொண்டிருந்ததைப் பற்றி கட்சியின் விசுவாசிகளால் மறுத்து எதிர்ப்பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

தற்போதைய நிலையில் யார் ஆட்சியமைக்கப் போகிறார் என்பதை அடுத்த சில வாரங்களில் நடக்கும் அரசியல் பேரங்கள்தான் முடிவுசெய்யும்.</span>
-BBC tamil


- sri - 09-20-2005

ஜெர்மனியர்களுக்கெ ஒரு குளப்பமான தேர்தல் முடிவாக உள்ளது.(இதை பல ஜெர்மனியரிடம் இன்று கேட்டேன்)
இங்கு வாழ் எம்மவர் பலர் தமக்கு தற்போது அரசில் உள்ளவர்களால் தான் ஜெர்மன் பிராஜாவுரிமை கிடைத்ததாகவும் அதனால் அவர்களுக்கு வாக்களித்ததாக கூறினார்கள்.


- sinnakuddy - 09-21-2005

http://www.dwworld.de/election05


- AJeevan - 10-10-2005

[size=15]<b>ஜெர்மனியில் அங்கெலா மெர்க்கல் சான்சல்லர் ஆவதற்கான அரசியல் இணக்கம் தோன்றியுள்ளது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40891000/jpg/_40891180_merkelafp203i.jpg' border='0' alt='user posted image'>
அங்கெலா மெர்க்கெல்

ஜெர்மனியின் முதலாவது பெண் சான்சல்லராக (ஜனாதிபதியாக) பழமைவாத தலைவி தலைவி அங்கெலா மெர்கெல் பதவியேற்கக்கூடிய வகையில் கூட்டணி ஒன்றை உருவாக்க ஜெர்மனியின் இரு பெரிய கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளன.

அங்கெலா அம்மையாரின் கிருத்துவ ஜனநாயகக் கட்சிக்கும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை பற்றிய செய்தியை அங்கெலா மெர்க்கெல் அவர்களே அளித்தார்.

மூன்று வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தலில் உறுதியான பெரும்பான்மை எவருக்கும் கிடைக்காமல் போனது தொடக்கம் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது

BBC tamil


- sakthy - 10-11-2005

ஜெர்மனியில் எம் நாட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாக அறிந்தேன்.உண்மையா ? யாரவது விபரமாக சொல்லுங்களேன்


- sri - 10-11-2005

ஜேர்மனியில் அல்ல இத்தாலியில் அச்சம்பவம் நடைபெற்றது


- shanmuhi - 10-15-2005

21 வயது பல்கலைக்கழக தமிழ் மாணவர் கடந்த 7 ம் திகதி koln ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


- inthirajith - 10-15-2005

அடபாவமே சாகமுதல் என்ன வேதனையை யார் கொடுத்தார்களோ?அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்


ஜேர்மனியில் சம்பவம் - MUGATHTHAR - 10-23-2005

<b>கழுத்தை நெரித்து மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொல்ல முயன்ற இலங்கை தமிழர்</b>

ஜேர்மனியில் தனது மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொலை செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சில்லாலை மேற்கைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரைக் கொலை செய்ததுடன் மகனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வறுத்தலைவிளானைச் சேர்ந்த இ.செல்வகுமார் என்பவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.

எனினும் அங்கு மனைவியை அடிக்கடி தாக்கவே தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. தாங்கள் கல்விகற்கச் சென்ற இடங்களில் இது பற்றி பிள்ளைகள் கூறவே அவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதையடுத்து செல்வகுமாரைக் கைது செய்த பொலிஸார் அவரை சிறையிலடைக்கவேஇ மனைவி பொலிஸாரிடம் பேசி 15 நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்தார்.

சிறையிலிருந்து வந்த நான்காம் நாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) செல்வகுமார் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டு ஹோலிலுள்ள செற்ரியில் கிடத்திவிட்டார். இவ்வேளையில்இ பாடசாலையிலிருந்து வந்த கடைசி மகன் (15 வயது) தாய் உயிரிழந்துவிட்டதை அறிந்த போது அங்கு வந்த தந்தை அந்தச் சிறுவனையும் மடக்கிப் பிடித்துஇ கொலை செய்யும் நோக்கில் கழுத்தை நெரித்துள்ளார்.

சிறுவன் மயக்கமடையவேஇ அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஏனைய இரு பிள்ளைகளின் வருகைக்காக காத்திருந்துள்ளார். இங்கு நடந்தவற்றை அவதானித்த அயல் வீட்டுக்காரர்இ இதுபற்றி அறிவிக்கவே அங்கு வந்த பொலிஸார் செல்வகுமாரை கைது செய்ததுடன் ஆபத்தான நிலையிலிருந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு ஜேர்மனைவிட்டுத் தப்பிச் செல்வதே இவரது நோக்கமாயிருந்தது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவருக்கு உடந்தையாயிருந்த யாழ்ப்பாணத்தவரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தினக்குரல்


- Birundan - 10-23-2005

கொடுமைடா சாமி.


- Mathan - 10-23-2005

ஹூம் வேதனையான செய்தி. மனைவி குழந்தைகளையும் கொல்ல துணிந்திருக்கிறாரே. இனி அந்த குழந்தைகளில் எதிர்காலம் எப்படி இருக்க போகின்றதோ தெரியவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- yarlpaadi - 10-23-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry என்ன அப்பா இவர் :evil:


- வியாசன் - 10-23-2005

தமிழ்ச் சமுதாயம் ஒன்றும் குறைந்ததில்லை என்பதை நிரூபித்துவிட்டார் :oops: :oops: :oops: :oops: