Yarl Forum
உன்னை நான் பார்க்கும் போது........ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: உன்னை நான் பார்க்கும் போது........ (/showthread.php?tid=8019)

Pages: 1 2 3 4 5


- Kanani - 10-13-2003

சத்தியமாக சொல்லுறன் நான் கீறிட்ட இடம் மட்டும்தான் நிரப்பினன்....மற்றும்படி இவையள் இப்பிடி நினைப்பினம் என்று கனவிலும் நினைக்க ஏலாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அதால சண்முகி உண்மையாகவே அப்படி நினைத்து எழுதியிருந்தால் பரிசு அவவுக்குத்தான்!!!

பரிசு விடயத்தில குருவியண்ணையின் கருத்துத்தான் எனதும் இருந்தாலும் அது பரிசு பெறுபவரின் தனிப்பட்ட விருப்பம்

Quote:அத்துடன் ஒரு பெண் என்ன நினைப்பாள் என கணிப்பிட்டுள்ளாரே?! ஆகா.. பரிசு அவருக்குத்தான்..

(கணனி.. போட்டி என்றதும் பெண்கள் பக்கம் சாய்கிறீர்களா? )

இது லொள்ளு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 10-13-2003

Quote:இது குருவிகளின் ஜோசனை....பரிசுக்குத் தெரிவாகியவர் கடிகாரத்தைப் பெற விரும்பின் பெறலாம்...இன்றேல் கடிகாரத்துக்கு நிகரான தொகையை யாழ் களத்தின் விருத்திக்காக மோகன் அண்ணாவிடம் கொடுக்க விரும்புவதும் எதிர்காலத்தில் யாழ் களத்தில் இப்படியான சிந்தனையால் புதிய சிந்தனையை பிரசவிக்கும் போட்டிகள் களை கட்ட வழிசமைப்பதுடன் களப் பொறுப்பாளருக்கும் தமிழுக்கும் எமது பொருளியல் ஆதரவை வழங்கிய மன நிறைவு கிடைக்குமல்லவா...?!
எது எப்படியோ இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் பரிசைப் பெறுபவரும் வழங்குபவரும் மட்டுமே...இது எமது ஜோசனை மட்டுமே...இது எவரதும் தனிப்பட்ட முடிவை பாதிக்கக் கூடாது என்பதும் எமது அவா...!
Idea


- yarl - 10-13-2003

இதில் போட்டி வைத்தவர் நீங்கள்.கண்ணனின் கருத்தையும் செவிமடுக்கவேண்டும்.ஏனெனில் அவரையும் நீங்கள் நம்பிக்கையாளராக சேர்த்துள்ளீர்கள்.எனினும் முடிவெடுக்கும் முழுச்சுதந்திரமும் உங்களுக்குத்தான்.எனவே எந்த முடிவையும் கள உறவுகள் மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொள்வர் என நினைக்கிறேன்

இப்படியான நிகழ்வுகள் பெரிய சில வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக எதிர்காலத்தில் அமையும் என எதிர்பார்க்கிறேன்.


- yarlmohan - 10-13-2003

இவ்வாறான ஒரு போட்டியை வைத்து கள அங்கத்துவர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அஜுவன். ஆனால் இங்கு மிகச் சொற்பமானவர்களே இப்போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய ஒரு விடயம். மேலும் யாழ் குறிப்பிட்டபடி நீங்கள் தான் இங்கு இறுதி முடிவினை எடுக்க வேண்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- AJeevan - 10-13-2003

AJeevan Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>இந்த புதுமை விருந்தில் நகைச்சுவையுடன் கலந்து கொண்ட அனைத்து யாழ் அன்பு உள்ளங்களுக்கும் முதற் கண் வாழ்த்துகள்.</span>

<span style='font-size:22pt;line-height:100%'>வெற்றி என்பதல்ல பெரிது. நாம் எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறோம். அதுதான் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சி தருவது.</span>

<span style='color:green'>தோல்விதான் அடுத்த வெற்றிக்கு அத்திவாரம்...........


AJeevan Wrote:[size=16]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>

என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.

இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?

என்று கேட்டிருந்தேன்.

<b>விடை:-</b>

[b]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ <span style='color:green'>நிற்கும்
இதுவரை என்ன

[size=15]1</span>
Kanani Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
2
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi

3
sOliyAn Wrote:நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?

<span style='font-size:25pt;line-height:100%'>இவர்கள் மிக மிக அருகில் வரக்கூடிய விடைகளைத் தந்திருக்கிறார்கள்.</span>


இறுதி முடிவாக மூவருக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்.

இங்கே விட்டுக் கொடுப்புகளோ பின் வாங்கல்களோ வேண்டாம். திறமைக்கும்,தகுதிக்கும் முதலிடம் கொடுத்து பழகுவோம். அதை ஏனையவர்களும் ஏற்றுக் கொள்ளப் பழகுவோம்.

<span style='color:red'>அன்று தாய் மண்ணை விட்டுக் கொடுத்த நிலை போல இனி எதிலும், எங்கும், நமக்குப் பின் என்றுமே, அது தொடர் கதையாகவே கூடாது.

நமது வெற்றி, நமது உழைப்பு , நமது திறமை , நமது முயற்சி, நமது வாய்மை , நமக்கு கிடைக்க வேண்டும்.அதில் உறுதியாக இருங்கள்.

கிடைக்கும் பரிசை (கிடைக்கும் சுதந்திரத்தை) யாருக்கும் தர்மம் செய்யக் கூடாது. இதில் உறுதி வேண்டும்.

நீங்கள் தர்மம் செய்ய அல்லது வேறு ஏதாவது உதவி செய்ய விரும்பின் அதை நேரடியாக உங்கள் உழைப்பில் கொடுங்கள்.

எனவே எனது கணிப்பில் இப்பரிசுக்கு தேர்வாகும் விடை</span> :
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !

shanmuhi

என்பதாகும்.

<span style='font-size:25pt;line-height:100%'>எனவே சண்முகிக்கு <img src='http://rose.virtualflowers.com/img/products/lg/1113.jpg' border='0' alt='user posted image'>எமது வாழ்த்துகளும் பரிசும் உரித்தாகுகிறது.</span>

[quote=Dr.Ambethkar]
[size=15]மந்தைகளாக இராதீர்கள்.வேங்கைகளாக இருங்கள். மந்தைகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளையல்ல.
-டாக்டர் அம்பேத்கார்

அன்புடன்
அஜீவன்


- yarl - 10-13-2003

அடுத்த போட்டி எப்போது?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Kanani - 10-13-2003

நன்றி அஜீவன் அண்ணை
கலகலப்பாக மகிழ்ச்சியாக நடந்து முடிந்தது

அடுத்தபோட்டியும் இதே மாதிரி கவிதைதானா இல்லாவிட்டால் ஏதும் புதிதாகவா?


- Paranee - 10-14-2003

வாழ்த்துக்கள் சண்முகி

அஜீவன் அண்ணாவின் மனதார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த போட்டி எப்போது ? ஆவலுடன். . . .


- AJeevan - 10-14-2003

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
அடுத்த போட்டி வெகு விரைவில் முன் வைக்கப்படும்.

அன்புடன்
அஜீவன்


- shanmuhi - 10-14-2003

பரிசுக்கு உரியவளாக தேர்ந்தெடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் தெரிவித்த பரணி க்கும் நன்றி.
எப்படியும் சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். பரிசுப்பொருள் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. ஒரு தேடுதலுக்காக....
இளையர்களது கருத்து என்று குறிப்பட்டபோது....
அவனது பாதணிகளை பார்ப்பதற்காக அவள் மண்ணைப் பார்த்திருப்பாள் என்றுதான் எழுத இருந்தேன். (ஓருவரின் பாதணிகளைக் கொண்டே அவரின் குணத்தை முதலில் அறிந்து கொள்ள முடியும்)
ஆனால்........கீறிட்ட இடம் தந்த போது அதை மாற்றிக் கொண்டேன்.
அதை எழுதிமுடிப்பதற்கு சற்று இலகுவாக இருந்தது.
இப்படி ஓர் ஊக்குவிப்பைத் தந்த அஜீவனுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் விலாசத்தை கூடிய விரைவில் தங்கள் இமெயில் முகவரிக்கு எழுதி அனுப்புவேன்.
அடுத்த போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் இது மாதிரியான போட்டிகள் முன்வைக்க படவேண்டும்.
தனிஒருவர் என்ற அடிப்படையில் இல்லாமல் பகிர்தல் என்ற அடிப்படையில் களத்தினை மேம்படுத்துவோம்.
நன்றி.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- kuruvikal - 10-14-2003

Quote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !


பரிசு பெற்ற பெண்ணிற்கு வாழ்த்துக்கள்....ஆனால் ஒரு போதும் பெண்ணை நேசிப்பதற்காக மண்ணை நேசிக்க வேண்டும் என்பதல்ல...மண் தாய்க்கு ஒப்பானது அது என்றும் நேசிக்கப்பட வேண்டியது...இடையில் வரும் பெண்ணை நேசிப்பதற்கு அதை இசைவாக்க முடியாது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- AJeevan - 10-14-2003

kuruvikal Wrote:[quote=AJeevan]<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஒரு விவாதம் நடந்தது. அதில் பல கவிஞர்கள் தங்கள் வாதங்களை வைத்து ஒரு மாலை முழுவதும் கதையளந்தார்கள்.

விவாதம் முடிந்து வெளியே வந்த கவிஞர்களிடம் ஒரு சில இளவட்டங்கள் அதற்கான கருத்தே வேறு, நீங்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல,கவிஞர்களிடமோ ஓருவித ஏளனப் புன்னகை.

<span style='font-size:23pt;line-height:100%'>அவர்களில் ஒருவன் :
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நிற்கும் இந்த மண்ணுக்கு
இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதையே

அவன் அவள் முகத்தைப் பார்க்கும் போது அவன் காலடி பட்ட நிலத்தையும் , அவன் மேலே பார்க்கும் போது அவன் முகத்தையும், பார்த்து கேள்வியாக மனதுக்குள் நினைக்கிறாள் என்றான்.
அவர்களால் பேச முடியவில்லை.பல மணி நேர விவாதகளத்துக்கு குறள் போன்ற பதில் அது.</span>

<span style='font-size:23pt;line-height:100%'>அன்றைய கால கட்டங்களில் ஒரு பெண்ணை மணமுடிப்பதற்கு ஒருவன் வீரனாக இருக்க வேண்டுமாம். எனவே ஆண்கள் தன் வீரத்தை காட்டுவதற்காக காடுகளுக்கு சென்று புலி போன்ற மிருகங்களை வேட்டையாடி அதன் பற்களை கொண்டு வந்து பெண்களின் கழுத்தில் மாலையாக அணிவிப்பார்களாம். அது தனது கணவன் எப்படியான பலசாலி என்பதைக் காட்டுமாம்.</span>

இப்படியான ஒரு பண்டைய கதையை கேட்டிருந்த எனக்கு அப்போது அக் கதைதான் என் நினைவுக்கு வந்தது.

அன்புடன்
அஜீவன்


- AJeevan - 10-16-2003

அன்புடன் சண்முகிக்கு,

உங்கள் முகவரி கிடைத்தது,நன்றி.
உங்களது பரிசு கூடிய விரைவில் வந்து சேரும்.
பங்குபற்றி வெற்றி பெற்றதில் உங்களைப் போல நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்களுக்கு ஆண் கடிகாரமா? பெண் கடிகாரமா? தேவை என்பதை அறிவியுங்கள்.

நன்றி!

மீண்டும் வாழ்த்துகள்.................

பணிவன்புடன்
AJeevan


- shanmuhi - 10-16-2003

வணக்கம் அஜீவன்,

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல........
[b]எனக்கு தேவை பெண் கடிகாரம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- AJeevan - 10-16-2003

shanmuhi Wrote:வணக்கம் அஜீவன்,

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல........
[b]எனக்கு தேவை பெண் கடிகாரம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
நான் ஏற்கனவே உங்களுக்கு மெயில் அனுப்பினேன்.பதில் கிடைக்காமையினால்தான் களத்தில் எழுதினேன்.விரைவில் உங்கள் பரிசு வந்து சேரும்.

AJeevan


ஒஸாமா 'புஷ்' ஆகாது - AJeevan - 10-17-2003

<img src='http://www.vikatan.com/av/2003/oct/19102003/p43a.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>''எதுக்காக உங்க பட்டாசுக் கடைக்கு
'ஒஸாமா பட்டாசுக்கடை'னு பேர் வெச்சிருக்கீங்க?''</span>

<span style='font-size:23pt;line-height:100%'>''எந்த வெடியுமே 'புஷ்' ஆகாது, அதான்!'' </span>

நன்றி:விகடன்


- shanmuhi - 11-24-2003

சரியான விடை எழுதியதற்காக....
அஜீவன் அனுப்பிய மணிக்கூடு கிடைத்தது. நன்றிகள் பல.........
ஆஹா... கறுப்பு நிறத்தில் அமைந்த மணிக்கூடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக..... அமைந்திருந்தது.

<b>அஜீவனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்</b>.


- Ilango - 11-24-2003

என்ன கப்பலிலா அனுப்பினார். இவ்வளவு நாள் சென்றுள்ளது.


- AJeevan - 11-24-2003

Ilango Wrote:என்ன கப்பலிலா அனுப்பினார். இவ்வளவு நாள் சென்றுள்ளது.
[Image: Image1.gif]
பதிவுத் தபாலில் , மெதுவாக ஆமை வேகத்தில்தான்.
முயலை வென்றது ஆமையல்லவா?
தாமதத்திற்கு வருத்தங்கள்.
மகிழ்ச்சியாக இருப்போம்.[Image: orang_ulu_kid_%2520laugh.jpg]


- AJeevan - 11-24-2003

[quote=shanmuhi]சரியான விடை எழுதியதற்காக....
அஜீவன் அனுப்பிய மணிக்கூடு கிடைத்தது. நன்றிகள் பல.........
ஆஹா... கறுப்பு நிறத்தில் அமைந்த மணிக்கூடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக..... அமைந்திருந்தது.

<b>அஜீவனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்</b>.

தங்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.உங்கள் மகிழ்ச்சி கண்டு களிப்புறுகிறேன்.