Yarl Forum
கடவுள் நம்பிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- Thiyaham - 08-27-2004

முட்டையில் மயிர் பிடுங்குவதையும் விதண்டா வாதங்களையும் விட்டு, தயவுசெய்து பக்குவப்பட்ட, முதிர்ச்சியான கேள்விகளுடன் அணுகுங்கள்


- இளைஞன் - 08-27-2004

<img src='http://www.yarl.com/forum/files/periyar.jpg' border='0' alt='user posted image'>


- sOliyAn - 08-27-2004

படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்றுக்கும் உரியவர் கடவுள்! இவை யாவுமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தனவென்றால், அந்த நம்பிக்கைதான் கடவுள்.
கடவுளை விமர்சிப்பதானது அவரவர் தங்களது நம்பிக்கையை விமர்சிப்பது போன்றது.
நெருப்பு சுடும் எனத் தெரிய அனுபவம் தேவை. அதேபோல கடவுளை உணரவும் அனுபவம் தேவை.
கடவுளை அறிய முயன்று அதற்கான தேடல்களில் இறங்கியவன் கடவுளை மறுதலித்ததாக சான்றுகள் இல்லை. அதேபோல, ஒரு விடயத்தில் குற்றங்கூறத் தொடங்கியவன் தனது பிழையை உணர்ந்ததாகவும் சான்று இல்லை. ஏனெனில் குற்றத்தை ஏற்பவன் மகானாகிவிடுவான்.


- இளைஞன் - 08-27-2004

இருக்கிறதைத் தானே விமர்சிக்க முடியும்!
இல்லாததை எப்படி விமர்ச்சிக்க முடியும்?
இல்லாததை இருக்கென்று சொன்னவனையும்,
இல்லாததை இருக்கென்று சொல்பவனையும்,
இல்லாததை இருக்கென்று நம்புபவனையும் தான்
இருக்கிற(இருந்த)வர் விமர்சித்தார்!


- Thiyaham - 08-27-2004

கடவுளை நம்பும் உங்களுக்கும்
கடவுளை நம்பும்பாத எனக்கும்
என்ன வித்தியாசம்...........?


- sOliyAn - 08-27-2004

கடவுள் இருக்கெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்,
கடவுள் இல்லையெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்!
ஆகவே--
இருக்கிறதாலதான் கதைக்கிறார்கள்!
இல்லாததைப்பற்றி கதைக்க பைத்தியமா, என்ன?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 08-27-2004

தியாகம் நீங்கள் யாரிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது! ஆனால், உங்கட கேள்விக்கு நான் ஒரு பதில் சொல்லுறன்!

கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன வேறுபாடு என்பதை விட

கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன ஒருமைப்பாடு என்றால் பதில் சொல்வேன்!

இரண்டுபேரும் கடவுள் பற்றி நினைக்கினம்!
இரண்டுபேரும் கடவுள் பற்றி கதைக்கினம்!


பி.கு.: சோழியான் = முந்திரிக்கொட்டை


- இளைஞன் - 08-27-2004

சோழியான் அண்ணா,

கடவுள் இருக்கெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்,
கடவுள் இல்லையெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்!

மொத்தத்தில் "கடவுள்" என்பதை "பொருள்" என்கிற வரையறைக்குள் உள்ளடக்குவதை ஒத்துக்கொள்ளுறீங்கள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 08-27-2004

ஒத்துக் கொள்ளுகிறேன்! எல்லாத்துக்குமே பொருள் வேணும்தானே?!
மனையிலே பொருள் வேண்டும் - அமையும்
மனைவியிலே பொருள் வேண்டும் - அவள்
அன்பிலே பொருள் வேண்டும் - மொத்தத்தில்
வாழ்விலே பொருள் வேண்டும்!! :wink:


- இளைஞன் - 08-27-2004

பொருள்:
ஐம்புலன்கள் வழியாக அறியப்படுவது
புறவயமாக இருப்பது

கருத்து:
ஐம்புலன்களின் வழியாக அறியப்படுவதல்ல
புறவயமானது அல்ல
--> மனத்தைச் (மூளை) சார்ந்திருப்பது
--> புற உலகின் பிரதிபலிப்பால் மனத்தால் தோற்றுவிக்கப்படுவது

கடவுள் கருத்தா? பொருளா?


- sOliyAn - 08-27-2004

தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 08-27-2004

மனதிலும் இருப்பார், மலத்திலும் இருப்பாரா?


- sOliyAn - 08-27-2004

எருவாகவும் இருப்பார்! ஏராகவும் இருப்பார்!


- இளைஞன் - 08-27-2004

எதிரி கையில் ஆயுதமாகவும்,
குருதி நீரின் நாற்றமாகவுமா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 08-27-2004

எதிரி கை ஆயுதப் பயத்திலும் குருதி நீரின் கோர மணத்திலும்
உதவி என்று உளமெலாம் துஞ்சும் உருவமற்ற ஆண்டவன் தானே!

ஐந்து மகவும் ஒவ்வொரு விதமாய் போகும் பாதை
நன்மையும் பயக்கும் தீமையும் கக்கும் கோலத்தையே
பெற்றவர் வளர்ப்பெனக் காரணம்கக்கல் காத்திரமான செயலோ?
மக்களின் போக்கும் போரும் வெறியும் ஆண்டவன் செயலெனல் தகுமோ?!


- இளைஞன் - 08-27-2004

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றதார்?
எருவாகவும் இருப்பார், ஏராகவும் இருப்பார் என்றதார்?
நல்லது மட்டும் கடவுள் செயல்?
கெட்டெதெல்லாம் யார் செயல்?
கடவுளுக்கே எதிரியா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 08-27-2004

sOliyAn Wrote:சிலநாட்களுள் சாத்தான் புகுந்துவிட்டாரா?!

அடடா கடவுளே இல்லை என்கிறேன். இதில் சாத்தான் வேறு இருக்குதென்று நம்பச் சொல்கிறீர்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 08-27-2004

நீங்கள் யாரின்ர பக்கம்?
கடவுளா? சாத்தானா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 08-27-2004

Quote:தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றதார்?
எருவாகவும் இருப்பார், ஏராகவும் இருப்பார் என்றதார்?
நல்லது மட்டும் கடவுள் செயல்?
கெட்டெதெல்லாம் யார் செயல்?
கடவுளுக்கே எதிரியா?

அது சில வேளை சோழியான் அண்ணை சொன்னது போல சாத்தானாக இருக்கலாம் யார் கண்டது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 08-27-2004

சில நாட்களில்தானே?! அதற்குள் என்ன மாற்றமோ?