![]() |
|
பெண்களால் அழியும் ஆண்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: பெண்களால் அழியும் ஆண்கள்...! (/showthread.php?tid=4740) |
- aswini2005 - 03-17-2005 தூயா Wrote:அப்படி இருந்தால் பாரதி ஆண் அடிமையை ஒழிக்க பாடி இருப்பார் [அவரும் இருந்திருப்பரோ தெரியவில்லை] பாரதி ஊருக்குப்பெண்விடுதலை பாடிய போது பாரதியின் வீட்டில் செல்லம்மா அடிமையாகத்தானே இருந்தாள் இது தெரயுமோ ? - aswini2005 - 03-17-2005 Vasampu Wrote:பாரதியை அடித்துக் கொன்றதே ஒரு பெண் யானை தெரியுமோ ???செல்லம்மாவுக்கும் மகள்மாருக்கும் செய்த அநியாயத்தை அந்த யானை கண்டிருக்குப்போலிருக்கு. ஊருக்கு விடுதலை கேட்கும் பாரதியெ உன் வீட்டுக்குள் அடிமைகள் இருப்பதை அறியாயோ என்றுதான் யானை அடித்திருக்கும் :!: Re: பெண்களால் அழியும் ஆண்கள்...! - kirubans - 03-17-2005 kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன. பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Xஉம் சேர்ந்தால் சிசு பெண்ணாகவும், பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Yஉம் சேர்ந்தால் சிசு ஆணாகவும் உருவாகும். ஆகவே ஆண், பெண்ணைத் தீர்மானிப்பது ஆண்தான். இங்கும் ஆண்தான் தீர்மானிக்கிறான். <img src='http://img85.exs.cx/img85/589/xdiagram11wd.gif' border='0' alt='user posted image'> - kirubans - 03-18-2005 பாரதி சமூகவிடுதலைக்கும் பெண்விடுதலைக்கும் தனது கவிதைகளையும் எழுத்தையும்தான் ஆயுதமாகப் பாவித்தார். மனைவியையும் பிள்ளைகளையும் அடிமையாக வைத்திருக்கவில்லை, விரும்பினால் பொறுப்பற்ற தகப்பனாராக இருந்தார் என்று சொல்லுங்கள். மேலும் குடும்பத்தை விட நாடு முக்கியம் என்ற கொள்கையில் இருந்தார். நாங்கள் அந்தக்கொள்கையைக் கைக்கொள்ளாததால்தான் புலத்திலிருந்தவாறு கருத்தாடிக் கொண்டிருக்கிறோம். எனினும் கல்கத்தாவில் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரை ஞானகுருவாக ஏற்றபிறகுதான், அவருக்குப் பெண்விடுதலையில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. செல்லம்மா சராசரிப் பெண்ணாக, சமூகத்துக்கு கட்டுப்பட்டு, அடங்கி வாழத்தான் விரும்பினார். - Eswar - 03-18-2005 பாரதி பெண்ணை அடிமைப் படுத்தினார் என்று சொன்னா கெட்ட கொபம் வரும் எனக்கு. பாரதி சகல முறையிலும் செல்லம்மாவை சேர்த்து நடத்த விரும்பினார். ஆனால் கட்டுப்பாடாக வளர்ந்த செல்லம்மாவால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பல உதாரணங்கள் இதற்குச் சொல்லலாம். ஆனாலும் செல்லம்மா பாரதியை விடச்சிறந்த குடும்ப நிர்வாகியாக விளங்கியிருக்கிறார். எவரொருவர் வீட்டை நன்றாகக் கவனிக்கிறாரோ(சிறந்த ஒரு தகப்பன் பிள்ளைக்கு உதவி தேவைப்படும் போது பக்கத்தில் நிற்பவர்) அவரால் ஊருக்கோ உலகத்திற்கோ பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. இதையே மாறியும் போட்டுப் பாருங்கோ. இது உலக நியதி. இதற்கு பாரதியோ நம்ம தலைவரோ விதிவிலக்கல்ல. Re: பெண்களால் அழியும் ஆண்கள்...! - KULAKADDAN - 03-18-2005 kirubans Wrote:kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன. குருவியின் கருத்தில் விளக்க குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் காட்டியதில் காவியாக மாறும் பெண்ணை கருத்தில் எடுங்கள் தந்தை சுகதேகியாக இருந்தாலும் காவி பெண்ணின் நிறமூர்த்தத்திலிருந்து மகனுக்கு கடத்தப்பட முடியுமல்லவா. நீங்கள் போட்ட வரைபட மாதிரியை நாமும் சிந்தித்தொம் <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் இறப்பை ஏற்படுத்தும் பரம்பரை அலகை 1X கொணட ஆண் </span>வாழமுடியாது தந்தையாக முடியாது. ஆனால் பெண்ணால் முடியும். பெரும்பாலும் இவ்வாறான நோய் காரணிகள் ஆண் குழந்தைக்கு வரும் பொது குழந்தை அதிக நாள் வாழ சாத்தியம் இல்லையாதலால் குருவியின் கூற்று சரியே..... - kirubans - 03-18-2005 முதல் இந்த கருத்துத் தலைப்பே பிழையானது. BBC செய்தியை திரித்து தங்களுக்கு வசதியாக பெண் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. இது கேட்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்று கதைவிடுவது போன்றது. அடுத்து நான் இணைத்த படத்தைப் பற்றியது முட்டாள்தனமான கருத்து. படத்தை இணத்தது எவ்வாறு ஆண் பெண் குழந்தை தீர்மானிக்கப்படுகின்றது என்பதை விளக்க. ஆணின் விந்துவில் உள்ள Y நிறமூர்த்தமே சிசுவின் பால் என்னவென்பதைப் தீர்மானிக்கின்றது. பெண் இரு X நிறமூர்த்தங்களைக் கொண்டிருப்பதால் பெண்ணால் தீர்மானிக்கப்படுவதில்லை. மேலும் படத்திலுள்ளபடி நோய் பாதிப்பு ஏற்படுத்தும் X' ஆணிலிருந்துதான் உருவாஅந்து. இதைப்போல நோய் பாதிப்பு ஏற்படுதக்கூடிய Y' இருக்குமானால் அது ஆண்கள் மூலம்தான் பரம்பரைக்குக் கடத்தப்படும். பாதிப்புள்ள நிறமூர்த்தம் யாரிடமிருந்து வந்தாலும் அது 50%தான் கடத்தப்படும். - tamilini - 03-18-2005 Quote:முதல் இந்த கருத்துத் தலைப்பே பிழையானது. BBC செய்தியை திரித்து தங்களுக்கு வசதியாக பெண் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
- KULAKADDAN - 03-18-2005 உங்களுக்கு புரியலைன்னா அதற்கு நாம பாத்திரவாழி இல்லீங்க. குருவி ஏன் தலைப்பு அவ்வாறு பொட்டது என்பது நமக்கு தெரியாது. நாம் சொன்னதை உங்களுக்கு புரியமுடியலை.....அந்தளவே........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-18-2005 கிருபன்... மனிதனில் பால் துணிவில் இலிங்க நிறமூர்த்தச் சோடிகள் பக்கேற்கின்றன...! வெறுமனவே ஒரு X உம் ஒரு Y யும் பாலைத் தீர்மானிக்க முடியாது...! XX அல்லது XY இரு கூட்டு நிலையே பாலைத் தீர்மானிக்கின்றன...! வெறும் Y நிறமூர்த்தம் இருந்தால் அது மட்டும் ஆண் பாலைத்தீர்மானிக்காது...கூடவே ஒரு X நிறமூர்த்தம் அவசியம்....ஆண்கள் அந்த X நிறமூர்த்ததைப் பெண்களிடம் இருந்துதான் பெற வேண்டும்....! அதில் தான் பல நோய்களுக்கான ஜீன்கள் காவப்படுகின்றன...குறிப்பாக நோய்க்காவிப் பெண்களிடம் இருந்து வரும் வளமற்ற X மூலம்...! ஆண்களிடம் இருந்து பெண்ணுக்கு ஒரு X நிறமூர்த்தம் போகிறதென்றால்...அது முன்னர் வாங்கினதைத் திருப்பிக் கொடுப்பது போலத்தான்....! ஆனால் அங்கு ஆண்கள் தங்களை தியாக செய்து (அநேகம் சந்தர்ப்பங்களில் நோய்க்காவி X நிறமூர்த்தம் கொண்ட ஆண்கள் இறந்துவிடுவதால்) பெண்கள் வளமான ஆண்களிடம் இருந்து வளமான X நிறமூர்த்ததையே பெறுவர்...! ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kirubans - 03-18-2005 உங்கள் குருட்டுத்தனமான விஞ்ஞான விளக்கங்களுக்கு நன்றி. பிழை என்று தெரிந்தால் ஏற்கும் பக்குவம் வேண்டும், அதைவிடுத்து குதர்க்கம் பேசுவது நன்றல்ல. உங்கள் கருத்துக்களுக்கு எங்கு ஆதாரங்களைக் கண்டுபிடித்தீர்கள்? நான் GCSE புத்தகத்திற்கு மேல் போகவில்லை. இந்த விதண்டாவாதங்களில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். - kuruvikal - 03-18-2005 Human genetics அல்லது Genetics நூல்கள் தாராளமாக இருக்கின்றன...அங்கு சென்று பாருங்கள்... 46 XX Normal Female 0.511* 46 XY Normal Male 0.489* 45 XO Turner's Syndrome Female 1/5,000 47 XXY Klinefelter's Syndrome Male 1/700 Y நிறமூர்த்தம் ஆண் பால் துணிவுக்கு அவசியம்...அதேபோல் X நிறமூர்த்தம் பெண் பால் துணிவிற்கு அவசியம்...! ஆனால் (நாம் கதைக்கும்) சாதாரண வளமான ஆணை உருவாக்க XY எனும் இரு கூட்டு நிலை அவசியம்...! சொல்வதை விளங்கிக் கொண்ட பின் நீங்கள் சொல்வதுதான் சரி என்று சரிவரச் சொல்லுங்கள்...! ஏற்றுக் கொள்ளலாம்..! மற்றவர்களை குறைத்து மதிப்பிட காட்டும் அவசரத்தை விட்டு சொல்லப்படும் விடயத்தைக் கூர்ந்து கவனியுங்கள்...! :wink:
Re: பெண்களால் அழியும் ஆண்கள்...! - kuruvikal - 03-18-2005 kirubans Wrote:kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன. நீங்கள் சொன்னதில் சிவப்பில் உள்ளது தவறான கருத்து...முட்டை ஒரு மடியமானது ஒரு X நிறமூர்த்தம் மட்டுமே காணப்படும்...! அது வளமானதாகவோ இல்ல வளமற்றதாகவோ இருக்கலாம்...! நீலத்தில் உள்ளத்தையே நாம் சொன்னோம் பெண்ணே ஆணுக்கான X நிற மூர்த்தத்தை வழங்குகிறாள்....! இதற்கு மேல் விரிவாக நாம் சொல்ல முனையவில்லை..நீங்க எங்கேயோ போட்டியள்....! பால் துணிவு வரை....! :wink:
Re: பெண்களால் அழியும் ஆண்கள்...! - kirubans - 03-18-2005 [quote=kuruvikal]பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன அவசரத்தில் எழுதியதால் இது பிழையாக வந்து விட்டது. பெண்ணிடம் X X நிறமூர்த்தங்கள் உள்ளன என்று வாசிக்கவும். மற்றும்படி உங்கள் தலைப்பு பிழையானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. வேண்டுமென்றால் இயற்கையை குறைகூறுங்கள். - kuruvikal - 03-18-2005 கிருபன் தலைப்பை ஆண் பெண் ஆதிக்கக் கோணத்தில் பார்க்காமல்...சாதாரண எண்ணத்தில் பாருங்கள் தப்புத் தெரியாது...! மற்றும் படி தலைப்பை மாற்ற விரும்பினால் மட்டுறுத்தினர்கள் மாற்றிக் கொள்ளட்டும்...நாங்கள் தலைப்பை மாற்ற மாட்டோம்..எங்கள் பார்வைக்கு அது சரியே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-18-2005 பிரச்சனைக்கு காரணம் எங்கையோ இருக்க.. தேவையில்லாமல் பெண்களை இழுத்து இப்படி சொல்வது சரியாய் தெரிகிறதாம்.. நகைச்சுவை தான். :| - kuruvikal - 03-18-2005 tamilini Wrote:பிரச்சனைக்கு காரணம் எங்கையோ இருக்க.. தேவையில்லாமல் பெண்களை இழுத்து இப்படி சொல்வது சரியாய் தெரிகிறதாம்.. நகைச்சுவை தான். :| பிரச்சனை பெண்களால வரேக்க அப்படித்தானே சொல்ல வேணும்... உண்மையைச் சொன்னா அதுக்கேன் கோவிக்கிறீங்க...! :wink:
- aswini2005 - 03-18-2005 kuruvikal Wrote:ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo& ஏன் குருவியண்ணா இயற்கை மீது வழக்குத் தொடருங்கோவன் ? பிரச்சனை முடியும். விஞ்ஞானம் விஞ்ஞானமென்று மானுச ஞானத்தை இழந்து போறீங்கள் ? அண்ணா கோவிக்காதையுங்கோ உங்களை உப்பிடி அழ வைத்த அந்த தேவதை யார் ? முடிந்தால் சொல்லுங்கோ அவவிடமே உங்களுக்கான மருத்துவத்தைப் பெற்றுத்தர களஉறுப்பினர் என்ற வகையில் முயன்று பார்க்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 03-18-2005 kuruvikal Wrote:கிருபன் தலைப்பை ஆண் பெண் ஆதிக்கக் கோணத்தில் பார்க்காமல்...சாதாரண எண்ணத்தில் பாருங்கள் தப்புத் தெரியாது...! மற்றும் படி தலைப்பை மாற்ற விரும்பினால் மட்டுறுத்தினர்கள் மாற்றிக் கொள்ளட்டும்...நாங்கள் தலைப்பை மாற்ற மாட்டோம்..எங்கள் பார்வைக்கு அது சரியே...! <!--emo& உங்கள் கருத்தில் ஆண் பெண் பேதம் ஆதிக்கம் இல்லாமல் எங்கே கருத்து உள்ளதென்று சொல்லுங்கள் முதலில். அதன்பின்னர் யோசிக்கலாம். நீங்கள் எல்லா கருத்திலும் பெண் பேதம் பார்த்தே கருத்து எழுதுகிறீர்கள். அப்படியிருக்க எப்படி உங்கள் கருத்தை சாதாரணமாக எடுக்கலாம் ?
- aswini2005 - 03-18-2005 kirubans Wrote:உங்கள் குருட்டுத்தனமான விஞ்ஞான விளக்கங்களுக்கு நன்றி.குருவியண்ணாவின் குணமே குருட்டு விஞ்ஞான விளக்கத்தை நிறுவுதல். அதையெப்படி மாற்ற முடியும். :?: :?: |