Yarl Forum
பழமொழிக்கான விளக்கம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: பழமொழிக்கான விளக்கம். (/showthread.php?tid=800)

Pages: 1 2 3


- நர்மதா - 02-21-2006

எனது அம்மம்மாவின் காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தால் அவர்களை வருத்தக்காரர் என சொல்லி திருமணம் செய்ய மறுப்பார்களாம் (அம்மம்மா கூறியது எதற்கும் ஒருக்கால் உங்கள் பெற்றேரிடமு கோளுங்கள்)
அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா


- கறுப்பன் - 02-23-2006

பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.

உண்மை அர்த்தம்: பகையாளன் குடியை உறவாடி[அவனிடம் உனக்குள்ள பகையை] கெடு.

[எங்கேயோ கேட்டது]


- sathiri - 02-23-2006

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு பழமொழியா?? எப்பவிலை இருந்து


- கறுப்பன் - 02-23-2006

அடடா...நர்மதா தப்பா சொல்லிட்டாங்க...
அது திருக்குறள் இல்ல.....!!!


- Mathan - 02-27-2006

Quote:வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு

இப்படி வலைப்பதிவில் சந்திரவதனா அக்கா எழுதியிருக்கார் :?


- ப்ரியசகி - 02-27-2006

Quote:பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.

இதை நான் இப்படி தான் நினைத்தேன்

பகையாளன்..குடியை..அதாவது எதிரியின் வாழ்க்கையை..உறவாடி..வஞ்சமாக உறவாடி..கெடு என்பதை குறிக்கின்றது என்று..

:roll: :roll: இது தவறா?

அதேபோல்..உண்டி சுருங்குதல்..உணவை சுருக்குதலே உண்மை..அது முன்னைய காலத்திலிருந்து இருப்பது..நானும் சந்திர வதனாக்காவின் வலைப்பதிவில் பார்த்தேன். உண்டி சாப்பாடு என்று பொருள் படும் பட்சத்தில்...
உண்டி சுருங்குதல்..சாப்பாடு செய்யும் நேரத்தை சுருக்குதல் என்று எப்படி வரும்? அப்ப்படி என்றால்..உண்டி செய்யும் நேரத்தை என்றல்லவா வர வேண்டும்.. :roll: :roll:


- கறுப்பன் - 02-27-2006

Quote:அதேபோல்..உண்டி சுருங்குதல்..உணவை சுருக்குதலே உண்மை..அது முன்னைய காலத்திலிருந்து இருப்பது..நானும் சந்திர வதனாக்காவின் வலைப்பதிவில் பார்த்தேன். உண்டி சாப்பாடு என்று பொருள் படும் பட்சத்தில்...
உண்டி சுருங்குதல்..சாப்பாடு செய்யும் நேரத்தை சுருக்குதல் என்று எப்படி வரும்? அப்ப்படி என்றால்..உண்டி செய்யும் நேரத்தை என்றல்லவா வர வேண்டும்..

சாபஷ். சரியான கேள்வி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/quote]


- Sujeenthan - 02-28-2006

உணவின் அளவை குறைத்தால் அதைச் செய்யும் நேரமும் குறையும் தானே.


- கறுப்பன் - 02-28-2006

அப்படிங்கிறீங்க.....

எப்டி???
10 முட்டை அவிய 10 நிமிசம் எண்டா...1 முட்டை அவிய 1 நிமிஷம் அப்டியா???


- Mathan - 02-28-2006

ப்ரியசகி Wrote:
Quote:பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.

இதை நான் இப்படி தான் நினைத்தேன்

பகையாளன்..குடியை..அதாவது எதிரியின் வாழ்க்கையை..உறவாடி..வஞ்சமாக உறவாடி..கெடு என்பதை குறிக்கின்றது என்று..

:roll: :roll: இது தவறா?

உறவாடி எதிரியின் வாழ்க்கையை கெடுக்கும்படி முன்னோர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். பழமொழிகள் பெரும்பாலும் நல்வழிப்படுத்தும் நோக்கத்துடனேயே சொல்லப்பட்டிருக்கின்றன.


- நர்மதா - 02-28-2006

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)


- ப்ரியசகி - 02-28-2006

நர்மதா Wrote:ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

இப்போது கூட எல்லா பழமொழிகளும் திரிபடைந்திருக்கின்றனவே.. :roll: :roll:


- ThamilMahan - 02-28-2006

Quote:ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

ô⺸¢ ¦º¡øÅÐ ºÃ¢. þó¾ôÀƦÁ¡Æ¢Â¢ý ¯ñ¨ÁÂ¡É ÅÊÅõ:

"¬Â¢Ãõ §Å¨Ãì¸ñ¼Åý «¨Ã ¨Åò¾¢Âý" ±ýÀ¾¡Ìõ.

«¾¡ÅÐ «ì¸¡Äò¾¢ø ¬Ô÷§Å¾ ¨Åò¾¢Âõ ¿¢¨Ä¦ÀüÈ¢Õó¾Ð. ¬Ô÷§Åò¾¢§Ä ãÄ¢¨¸ §Å÷¸û ÁÕó¾¡ì¸òÐìÌ Á¢¸ Ó츢ÂÁ¡É¨Å. þôÀÊÂ¡É §Å÷¸Ç¢ø ¬Â¢Ãõ Å¢¾Á¡ÉÅü¨Èô ÀüȢ¡ÅÐ ¦¾Ã¢ó¾Å¨Éò¾¡ý '«¨Ã ¨Åò¾¢Âý' ±ýÚ «¨Æì¸ôÀ¼ì ÜÊÂÅý ±ýÀ¨¾ þó¾ôÀƦÁ¡Æ¢ þÂõÒ¸¢ýÈÐ.


- நர்மதா - 02-28-2006

நன்றி தமிழமகன்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பது வழக்கத்தில் உள்ள பழமொழி இப்படில்லாம் பயமுறுத்தினா யார்கிட்டதான் வைத்தியம் பாக்குறது?
இதன் உண்மையான வடிவம் இதுதான்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்".


- நர்மதா - 02-28-2006

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)


- KULAKADDAN - 02-28-2006

நர்மதா Wrote:மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

ஆறு ஓடும் போது அரிக்கப்படும் மணல் ஏதும் தடங்கல் ஏற்படும் போது தேங்கி ஆற்றில் சில இடங்களில் திட்டு போல தோன்றும் . உண்மையில் அது உறுதியற்ற குவியல்/குதிர் . அதை நம்பி, அதாவது ஆற்றின் இடையே திட்டுக்கள் இருக்கிறது என அதை நம்பி காலை வைக்க முடியாது அது ஒருவரை தங்கும் தன்மையற்றது. அதில் நம்பி காலை வைத்தால் அவர் ஆற்றுடன் அடித்துசெல்லப்பட கூடிய சாத்தியம் உண்டு. அதையே அவ்வாறு

மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே என்பர்.


- நர்மதா - 02-28-2006

நன்றி குளக்காட்டான்

"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள். இது பாறை போல் காட்சியளித்தாலும் அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.


- நர்மதா - 02-28-2006

"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி" என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)


- Sujeenthan - 03-01-2006

நான் அப்படிச் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் 5 கறி வைக்கிறதுக்கு பதிலா 1 கறி வைச்சால் நேரம் குறையும் தானே. நீங்கள் ஏதோ குழம்பி போய் இருக்கிறீங்க என்று நினைக்கிறன். போய் 2 முட்டை அடிச்சு குடியுங்கோ.

இந்த பழமொழியை சரியா கடைப்பிடிக்கிறது யார் என்றால் அது கனடா நாட்டுப்பெண்கள் தான் ஏனென்றால் அவர்கள் சமைக்கிறதே இல்லையே
Quote:அப்படிங்கிறீங்க.....

எப்டி???
10 முட்டை அவிய 10 நிமிசம் எண்டா...1 முட்டை அவிய 1 நிமிஷம் அப்டியா???



- கறுப்பன் - 03-01-2006

Sujeenthan Wrote:நான் அப்படிச் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் 5 கறி வைக்கிறதுக்கு பதிலா 1 கறி வைச்சால் நேரம் குறையும் தானே. நீங்கள் ஏதோ குழம்பி போய் இருக்கிறீங்க என்று நினைக்கிறன். போய் 2 முட்டை அடிச்சு குடியுங்கோ.

இந்த பழமொழியை சரியா கடைப்பிடிக்கிறது யார் என்றால் அது கனடா நாட்டுப்பெண்கள் தான் ஏனென்றால் அவர்கள் சமைக்கிறதே இல்லையே
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->