![]() |
|
அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் (/showthread.php?tid=6878) |
- Mathivathanan - 07-27-2004 வேறை..? - tamilini - 07-27-2004 தாத்தா வேறையை தவிர வாயில ஒன்டும் வரவில்லையே...........????ஃ - Mathivathanan - 07-27-2004 இஞ்சை பிறந்து இஞ்சை படிச்சு இஞ்சை வேலைசெய்யிற செய்யப்போற பிள்ளையள் தமிழிலை யோசிக்கவேணுமாம்.. தமிழிலை யோசிச்சு பிறகு அந்தந்த நாட்டு மொழிக்கு அதை மொழிபெயர்ப்புச் செய்து செய்யிறதை செய்யவேணுமாம்.. அட அங்கைதான் இருக்க விடேல்லை... நின்மதியா படிக்க விடேல்லை.. தமிழ்.. தமிழ்.. எண்டு உள்ளதையும் கெடுத்தாங்கனெண்டு இஞ்சை வந்தால்.. இஞ்சையும் பிள்ளையளை இருக்க விடாங்கள்போலையிருக்கு.. - tamilini - 07-27-2004 உங்களை மாதிரி சிங்கள பிரியர்கள் இதையெல்லாம் கவலைப்ட தேவையில்லை.. யாராவது தமிழனாக வாழ விரும்புபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கட்டும்... விடுங்கள்....! - Mathivathanan - 07-27-2004 விசரர் பைத்தியங்கள்தான் படிக்கிற மொழியை விட்டு சிந்திக்கிறதுக்கு இன்னுமொரு மொழி தேடுங்கள்.. பள்ளிக்கூடம் ஆங்கிலத்திலாயிருக்கும்போது சிந்திக்கிறதும் ஆங்கிலத்தில்த்தான் வரும்.. உங்களுக்கு சிங்களம் தெரிஞ்சிருக்கிறபடியால் என்னையும்சிங்களப்பிரியன்.. சிங்களம் தெரிஞ்சவன் என்டு நினைக்கிறமாதிரியெண்டு சொல்ல வாறன்.. விளங்குதோ..? - tamilini - 07-27-2004 தாத்தா உங்கள் தமிழ்பற்று தான் சில சில களங்களில் தெரியுதே.....! தாத்தா மொனவதா மொக்கத்த மாதிரி ஒரு சில வார்த்தைகள் தான் எமக்கு சிங்களத்தில் தெரிந்தவை.....! உங்களுக்கு அது கூட தெரியாது என்ன தாத்தா? - Mathivathanan - 07-27-2004 சரி சரி இதுவே ஆரம்பமாயிருக்கட்டும்.. முதல் உதுகளுக்கு என்ன தமிழ் என்டு சொல்லுங்கோ.. - sayanthan - 07-28-2004 தயவு செய்து மதிவதன ஐயா.. ப்ளீஸ்.... அல்லது வில் யூ ப்ளீஸ் சட்டப்...? - sayanthan - 07-28-2004 யாரையும் மொழி மாற்றி சிந்திக்க சொல்லி நான் நான் கூற வரவில்லை.. அது எவராலும் முடியாத விடயம். என்னுடைய கேள்வி இது தான்... எதிர் காலத்தில் புலத்தில் தமிழின் நிலை என்ன? இப்போது உள்ளது போலவே இருக்குமா? இல்லையா? - Mathivathanan - 07-28-2004 sayanthan Wrote:தயவு செய்து மதிவதன ஐயா.. ப்ளீஸ்.... அல்லது வில் யூ ப்ளீஸ் சட்டப்...?தம்பி பரவாயில்லை.. தமிழிலை படிச்சிருக்கிறார்.. தமிழிலை சிந்திச்சு இங்கிலிப்பீசிலை எழுதுறார்.. - AJeevan - 07-28-2004 <span style='font-size:30pt;line-height:100%'><b>நான் எழுதினதை காணல்லையப்பா? யாரப்பா என் கருத்தை கவர்ந்த கள்ள(வ)ன்? or என் கருவை யார் கலைச்சது?</b> </span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) - vasisutha - 07-28-2004 :?: :!: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-28-2004 <b>அஜீவன் அண்ணா உங்களுக்கே தெரியாமல் யார் கலைத்திருப்பார்கள்?</b> :roll: hock:
- sayanthan - 07-30-2004 இந்த கட்டுரையில் சில உண்மைகள் கிடைக்கக் கூடும்.. நன்றி:சந்திரலேகா இ அவுஸ்ரேலியா-(மூலம்: புத்துயிர்ப்பு) .....................பிறநாடுகளில்இ உதாரணமாக அவுஸ்திரேலியாவில் பிறந்து வளருகின்ற தமிழ் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேசுவது கஷ்டமான காரியமில்லை. ஆங்கிலேயப் பிள்ளைகளோடு பாடசாலைகளில் அதிக நேரம் பழகுவதால் தாங்கள் வேற்று இனத்தவர் என்பதை அவர்களில் பலர் மறந்து அவர்களைப் போலவே தம்மையும் எண்ணி நடந்து கொள்¸¢È¡ர்கள். அதனால் தமிழை வீட்டில் பேசுவது அவர்களுக்கு விருப்பமான விஷயமாக இø¨Ä. எனவே பெற்றோர் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளி츢ȡர்கள். நாளடைவில் அவர்களது நா ஆங்கில மொழி பேசுவதற்கு முற்றாகப் பழகிவிடவே பின்னர் வயது வந்த பின்னர் தமிழைப் பேச விரும்பினும் அதனைத் தமிழரைப் போல உச்சரிக்க முடியாது போவதுடன் புதிய ஒரு மொழியை ஆரம்பத்தில் இருந்து படிப்பது போல அதனைப் படிக்க நேரிடு¸¢ÈÐ. எந்த மொழியையாயினும் அதிகம் பயன்படுத்தாதுவிடின் அதை விரைவில் மறந்து போக வாய்ப்புள்ளது. எனவே முதல் மொழியாகிய தாய் மொழியிலேயே ஆரம்பத்திலிருந்து பேசி வராது விடின் பின்னர் மிகவும் மனம் வருந்த நேரிடும். அண்மையில் சிட்னியில் தமிழ் இளைய சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குப் போக நேர்ந்த போது ஒன்றை மனவருத்தத்துடன் அவதானிக்க முடிந்தது. அங்கு உணவு வேளையின் போது எவரும் தமிழில் உரையாடவில்லை. அது குறித்து நான் எமது நண்பரின் 16 வயது மகளுடன் கதைத்தபோது அவ கூறிய விஷயம் எனக்கு வியப்பளித்தது. யாராவது தமிழில் கதைத்தால் மற்றவர்கள் அவர் இப்போதுதான் கப்பலால் இறங்கியவர் என்று கேலி செய்வார்களாம். அதனால் யாரும் தமிழில் பேச விரும்புவதில்லையாம். தமிழ் பேசும் அந்தப் பெண் கூறிய இன்னொரு விஷயம் பலர் தமது மொழி பற்றி எவ்வளவு அறியாமையுடன் இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்தியது. தான் இன்னொருவருடன் தமிழில் கதைப்பதை அவதானித்த தனது அவுஸ்திரேலிய ஆங்கில சினேகிதி தனக்குக் கூறியதாவது ஆகா எவ்வளவு அற்புதம்இ உங்களுக்கு இரு மொழிகள் தெரிந்திருக்கிறது. எனக்கு ஒரு மொழிதான் தெரியும். ஆங்கிலத்துடன் உங்கள் தாய் மொழியையும் நீங்கள் அறிந்திருப்பது உங்களுக்கு எவ்வளவு பலத்தை அளிக்கிறது தெரியுமா? தாய் மொழி அறிவு பிள்ளைகளின் பல்வேறு விதமான வளர்ச்சிகளுக்கும் அவர்களது உளவியல் நிலைக்கும் பலமாக அமையும் என்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியை அறிந்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். நாம் எமது மொழியை இழப்பதால் எவ்வெவற்றை இழக்கப் போகிறோம் என்பதை சற்று நினைத்துப் பார்ப்பது பயனுள்ளது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் இது பற்றிப் பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை எழுதியவர்கள் தமிழர் அல்லர்இ ஆங்கிலேயர்கள். உங்கள் தாய் மொழியை இழந்து விடாதீர்கள் அதனால் நீங்கள் நாளடைவில் உங்கள் பண்பாட்டையே இழந்துவிடுவீர்கள் பின்னர் நீங்கள் யார் என்பதையே அறியாத நிலையில் இருண்ட வாழ்வு வாழ நேரிடும்இ என்று அவர்கள் இக் கட்டுரைகளில் எச்சரித்துள்ளனர். இவை தம் நாடுகளில் வாழ வந்த பல்வேறு இனத்தவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். அவர்கள் எதிர்பார்ப்பது வேறுபாடுகளின் மத்தியில் ஏற்படும் ஒருமைப்பாட்டையே. அதாவது அவுஸ்திரேலியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலிய பிரஜைகள் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் ஒவ்வொரு இனமும் ஏனையவரைப் பாதிக்காத முறையில் தத்தமது பண்பாடுகளுடன் தத்தமக்குரிய தனித்துவத்துடன் வாழவேண்டும் என்பதே. அப்போதுதான் ஒர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முடியும். தங்கள் பண்பாட்டினை இழந்து வேற்று இனத்துக்குரிய உடலுடன் தாம் வாழும் நாட்டின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் தனித்துவமற்ற மனிதர்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே தமிழர்களாகிய நாம் எமது சுய அடையாளத்தை உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம். சுய அடையாளம் என்றால் என்ன? நான் யார்? என்ற கேள்விக்கு ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி திடமான பதில் சொல்ல முடியுமென்றால் அவர் யார் என்ற அடையாளம் அவருக்குப் புரிந்திருக்கிறது எனலாம். இங்கே நான் யார் என்பது ஆத்மிக ரீதியில் விடை காண்பதற்குரிய கேள்வியல்ல. சமுக அடிப்படையில் பதில் தேடுவதற்கான ஒரு வினா. நாம் யார்? இக் கேள்விக்கு நாம் இலங்கைத் தமிழர் என்று பதிலளிக்கும் போது எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நாம் தமிழராகி விடுவோமா? அல்லது தமிழகராதி தமிழர் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூறுவது போல தமிழ் மொழியைப் பேசுவதால் நாம் தமிழராகிறோமா? அப்படியானால் தமிழை நன்றாகப் பேசும் ஒருவர் முற்றாக வேற்றுப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பாரானால் அவர் தமிழரா? அல்லது தமிழ் கலாச்சாரத்தை முற்றாகக் கடைப்பிடிக்கும் ஒருவர் தமிழ் மொழியை அறியாதிருந்தால் அவரைத் தமிழர் எனலாமா? தமிழரது அடையாளம் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால்தான் வெளிநாட்டில் வாழும் எமக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சொந்த நாட்டில் நாம் எமது இனத்தவரோடு கூடி வாழும் போது நான் யார்? என்ற கேள்வியை ஆத்மிக அடிப்படையில் எழுப்புவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதே தவிர சமுக ரீதியாகத் அதை எழுப்புவதற்கான தேவை ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு ஒரு நாட்டில் வேறு மொழி பேசி நமது கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட கலாச்சாரம் உடையவர்களோடு கூடி வாழ நேரும்போது நாம் யார்? எமது பண்பாடு என்ன? என்று அறியவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உலக நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும் போது ஆள்பவரால் ஆளப்படுகிற இனத்துக்கு ஆபத்து வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆளப்படுகிற இனத்தவர் மத்தியில் தமது மொழிஇ பண்பாடுஇ வரலாறுஇ மதம் பற்றிய விழிப்புணர்வும் அபிமானமும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆனால் ஓர் இனம் வேறு ஒரு நாட்டில் வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது இவ்வாறான விழிப்புணர்வைப் பெறுவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக உணர வேண்டிய தேவை ஏற்படாமையே. ஆயினும் பல சந்ததிகளாக ஓர் இனம் வெளிநாடுகளில் வாழும் போது ஏதோ ஒரு கட்டத்தில் இனவெறியால் பாதிக்கப்படலாம். அப்போது அவர்கள் தாம் யார் என்பதை உணராதிருப்பின் அவர்களால் அப்பாதிப்பிலிருந்து மீள முடியாது போகும். தாம் ஆங்கிலேயரைப் போல ஆங்கிலம் பேசினாலும்இ அவர்களைப் போலவே வாழ்ந்தாலும் அவர்கள் தமது இனத்தவராக இவர்களைக் கொள்ளவில்லை என்ற உண்மையும் அப்போதுதான் புலனாகும். அத்துடன் தாம் வேரற்ற மரங்களாக வாழ்கின்ற அவலநிலையும் புரியும். இது வெளிநாடுகளில் தமது பண்பாட்டை மறந்து வாழ்கின்ற எந்த இனத்துக்கும் நேரக் கூடிய நிலைமையாகும். எனவே எமது சந்ததியினருக்கு அந்த நிலை வராது தடுப்பதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். மொழி பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்குவதால் அதனை இழக்கும் போது பண்பாட்டையும் அதனால் சுய அடையாளத்தையும் இழக்க நேரிடுகிறது. இது ஒரு மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரிய இழப்பு என்பதைப் பலர் இப்போது புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர். ஒருவர் நாற்பது வயதை அடையும் போது அவருக்குத் தனது தாய் மொழிஇ பண்பாடு ஆகியவற்றில் பற்று ஏற்படுகிறது என்றும் அப்போது அது பற்றிய அறிவின்றியிருப்பின் அவற்றைத் தமக்குப் புகட்டாத பெற்றோரின் மேலேயே அவர் வருத்தம் கொள்வார் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இங்கு வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் எதற்கு என்று கூறும் பல பெற்றோர்களை நான் சந்தித்திருக்கிறேன். படிப்பதற்கும் வேலை செய்வதற்குமே மொழி தேவைஇ அதற்கு தமிழ் உதவாது என்பதால் அது தேவையில்லை என்பது அவர்களது வாதம். அவர்கள் தூரநோக்கு அற்றவர்கள் என்பது சொல்லாமலே புரியும். இரண்டு மூன்று சந்ததிகளுக்குப் பின்னர் இங்கு வாழ்ப்போகிறவர்களைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கை என்பது படிப்பும் வேலையும் மட்டுமல்ல. நாம் நாமாக இருக்க வேண்டும். அது வாழ்வில் மிக முக்கியமான விஷயம். நாம் நாமாக இருப்பது நமக்கு ஆத்ம பலமளிக்கும் விஷயம். அதற்கு எமக்குத் தாய் மொழி அறிவும்இ தமிழர் வரலாறு பற்றிய அறிவும் அவசியமாகிறது. நாம் எப்படிப்பட்ட இனத்திலிருந்து வந்திருக்கிறோம்இ எமது மூதாதையர் எத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்இ எத்தகைய கஷ்டங்களை மனோபலத்துடன் கடந்து வந்துள்ளனர்இ எத்தகைய உயரிய பெறுமதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பன போன்ற விஷயங்கள் எமக்குப் பெருமிதமளிக்கும்இ எம்மை உத்வேகப்படுத்தும். நாம் இவ்வாறான வல்லமையுள்ள இனத்தில் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணம் எமது இருப்புக்கு அர்த்தம் வழங்கும். அத்துடன் நாம் ஒரு தொடர்ச்சியின் பகுதியாக இருக்கிறோம் என்பது எமக்கு மனோபலமும் ஆத்மதிருப்தியும் அளிக்கும். இல்லாவிடின் வேரற்றவர்களாக அநாதைகளாக நாம் உணர்வதை எம்மால் தவிர்க்க இயலாது போகும். பண்பாடு என்றால் என்ன என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. சுருக்கமாகக் கூறுவதானால் அது ஒரு வாழும் முறை. நாம் உண்பதுஇ உடுப்பதுஇ பேசுவதுஇ நமது பெறுமதிகள்இ நாம் நடக்கும் முறைஇ எண்ணும் விதம் என்று பல்வேறு விஷயங்கள் அதனுள் அடங்கும். அவை அனைத்தும் காலத்தின் போக்கிற்கேற்பவும்இ நாம் வாழும் நாட்டின் பண்பாட்டிற்கேற்பவும் மாறும். அவ்வாறு மாறுவதே ஆரோக்கியமானதும் கூட. ஆனால் அதன் உயிர்நாடி அல்லது ஆத்மா ஒரு போதும் மாறாதுஇ மாறவும் கூடாது. ஆடை மாறலாம் ஆனால் காலம் காலமாக எமது இனத்தால் பேணப்பட்டு வந்த பெறுமதிகளை நாம் மாறவிடலாகாது. நாம் இலங்கைத் தமிழர் என்று சொல்கிறோம் என்றால் அதற்கு உயிர்நாடியாக உள்ள பண்புகளை நாம் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். எமது உயர் பண்புகளை மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்கள் மதிக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் நாம் நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதே நேரம் எமது பண்பாட்டில் கால மாற்றத்திற்கு ஒவ்வாதன அல்லது வேண்டத்தகாதன இருப்பின் அவற்றைக் களைவதும் ஏனைய பண்பாடுகளில் உள்ள நல்லனவற்றை ஏற்பதும் ஆரோக்கிமான வளர்ச்சிக்கு உதவும். எனவே தாய் மொழியும் எமது பண்பாடும்இ இன வரலாறும் நாம் நாமாக இருப்பதற்குப் பெரிதும் உதவுவன. எமது எதிர்காலச் சந்ததி தமது சுய அடையாளத்தைப் பேணுவதற்கும்இ தாம் தமிழர் என்று துணிவுடனும் நம்பிக்கையுடனும் தலை நிமிர்ந்து சொல்வதற்கும் வாழ்வதற்கும் ஏற்ற வழிவகைகளைச் செய்வது எம் அனைவரின் தார்மிகப் பொறுப்பாகும். - Mathivathanan - 07-30-2004 [b]<span style='font-size:21pt;line-height:100%'>நீங்கள் சொல்லுவதைப்போல ஆகா அற்புதம் உங்களுக்கு இரண்டுமொழிதெரியும் எனக்கு ஒரு மொழிதான் தெரியும் என்று போற்றத்தக்கதாக.. அன்னிய மொழி படிக்கவேகூடாது என்ற வக்கிரமான எண்ணத்தை விடுத்து நம்நாட்டு அடுத்த மெழியான சிங்கள மொழியை ஆங்கில மொழியை படித்திருந்தால் படிக்க விட்டிருந்தால் இப்படிப் புலம்பவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதோ என்னவோ.. </span> - Eelavan - 07-30-2004 உண்மைதான் மதி ஐயா நாங்களும் சிங்கள மொழி படிச்சு அவனும் எங்களை தமிழ் படிக்க விட்டு தானும் படிச்சிருந்தால் பாவம் புலம்புவதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கமற் போயிருக்கும் - shanmuhi - 07-30-2004 Quote:உண்மைதான் மதி ஐயா நாங்களும் சிங்கள மொழி படிச்சு அவனும் எங்களை தமிழ் படிக்க விட்டு தானும் படிச்சிருந்தால் பாவம் புலம்புவதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கமற் போயிருக்கும் சரியாச் சொல்லியிருக்கிறீர்கள் . - Mathivathanan - 07-30-2004 இவங்கள் தமிழ்ப் பாட்டை கேக்காதை.. தமிழ்ப்படம் பார்க்காதை தமிழ்ப்புத்தகம் படிக்காதை..யெண்டு தடைச்சட்டம் கொண்டுவந்த மேதாவியளல்லே.. அதுதான் இப்ப சிங்களவன் தமிழ் பற்றி விளப்பமா விளாசிறாங்கள்.. இவங்களும் இவங்கடை தமிழ்ப் புலம்பலும்.. - Eelavan - 07-30-2004 குத்துதோ - Mathivathanan - 07-30-2004 தமிழ்ப்பாட்டுக்கேக்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்.. தமிழ் விடியோ பார்க்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்.. தாங்கள் தமிழுக்குப்போட்ட தடைச்சட்டத்தை மறந்துபோனாங்கள்.. உதைக் காரணமாச்சொல்லி அழுத சனம் எவ்வளவு.. வேறைநாட்டு மொழியிலை கதைக்குதுகளாம்.. இப்ப புலம்புறாங்கள்.. ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்.. எண்டு எழுதின கருத்துக்கு இன்னமும் பதில் இல்லை.. தங்கடை சரித்திரமே தெரியாத தமிழ் பண்டிதர்மார் தமிழாம்.. பார்ப்பனியம் எண்டு இருந்த தமிழையே இல்லாமலாக்கின பெருமை இவங்களுக்குத்தான்.. சைவமும் தமிழுமாயிருத்த தமிழை.. சைவத்தை கொச்சைப்படுத்தப்போய் கொச்சைத் தமிழாக்கி வைச்சிருக்கிறாங்கள்.. சிவா சிவா என்று வாசித்த தமிழ் இன்று வாசி வாசி என்று ஆகியது என்று புலம்புறாங்கள்.. |