Yarl Forum
உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!! (/showthread.php?tid=2215)

Pages: 1 2


- RaMa - 12-04-2005

suddykgirl Wrote:
RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)


நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு ம்ம்ம் ஆனால் உண்மையிலை அவர்கள் சந்தோசமாக இல்லையே அவர்கள் வெளி உலகிற்கு சந்தோசமாக இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள்

சந்தோசமாய் இருக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் பணத்திற்கு தான் அவர்கள் அடிமை...அன்பிற்கு ஏங்குவார்களோ தெரியாது... ஆனால் பணத்துடன் தான் வாழ ஆசைபடுவார்கள். இது நான் கண்டவர்களில் இருந்து தான் எழுதுகின்றேன்... ஆகவே தப்பாய் நினைக்காதையுங்கோ.


- siluku - 12-04-2005

RaMa Wrote:
siluku Wrote:
MUGATHTHAR Wrote:
RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)
என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி


முகத்தார் தாத்தா உங்களுக்கு நினைப்புத் தான்,உங்களப் பற்றி நீங்களே செர்டிபிகேற் குடுத்துக் கொண்டு .உங்களப் பற்றி பொன்னம்மா அக்கா அல்லோ சொல்ல வேணும்.

ரமா அக்கா உங்கள சந்திச்சு என்னத்தக் கதைக்கிறது?பொல்லூண்டி எப்படி விளாம நடக்கிறது எண்டோ?

ஏன் சிலுக்கு உங்களுக்கு அது ஒன்றை பற்றித்தான் கதைக்க தெரியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



வேறென்ன அக்கா முகத்தார் தாத்தாவுக்கு தலயில மயிரக் காணன்,இவரோடா நான் வேற என்னத்தக் கதைக்கிறது.
இந்த தள்ளாத வயசிலேயும் மனுசனுக்கு வக்கணைக்குக் குறச்சலில்ல.

நாங்கள் யங் கேர்ல்ஸ் எங்களுக்கு கதைக்க ஆயிரம் இருக்கும்.அது சரி அக்கா கனடாவில என்ன எல்லாப் பெடியளும் காசெண்டு அலயிறாங்களோ?
பெட்டயளும் அப்படித் தானே அக்கா.புலத்தில நாங்கள் கோயிலுக்கு அசின் உடுத்தமாதிரி சாறியும், நகையும் கட்ட வேணும் எண்டா காசு வேணும் தானே அக்கா.இல்லாட்டி யாரு திரும்பிப் பாப்பினம்.இப்ப காரெண்டா சும்மா ஓட்டக் காரில போகேலுமே?

இவர் கிரி வச்சிருகிறது ஒரு ஓட்டக் கார் அது குளிரில சில நேரம் நிண்டிரும் ,எங்கேயும் பார்டியளுக்குப் போனால் பருசுகேடு.அதால நான் ஒரு இடமும் வெளிக்கிடுறேல்ல.பிறகு அங்க ஆள் ஆளுக்கு விதம் விதமா உடுத்திக் கொன்டு வருவினம், நான் என்னன்டு போட்டி போடேலும்?எல்லாத்துக்கும் காசு வேணுமல்லோ?இங்க சிலது போட்டியில கடன் எடுத்து செலவழிச்சு மாயிதுகள்.பேசாம புத்தர் மாதிரி எல்லாத்தையும் துறந்தாத் தான் பாசம் எண்டு தண்ணியக் குடிச்சு ,வீட்டுக்க பேசாம நித்திரை கொண்டு வாழலாம்.என்னக்கா நான் சொல்லுறது சரியோ?


Re: உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!! - siluku - 12-04-2005

tamilini Wrote:நமக்கு அன்பு தான்க வேணும். பணத்தை சம்பாரிச்சிட்டுப்போகலாம். அன்பு செலுத்தி அதரவாய் நாலு பேர் இருந்தா மனசுக்கு எத்தனை மகிழ்ச்சி. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அம்மா,அப்பாவின்ட பாதுகாப்பிலேயும், உழைப்பிலேயும் இருந்து கொண்டு இப்படி ஈசியா எழுதலாமக்கா,ஆனா சொந்தக் காலில நிண்டு உழச்சாத் தான் தெரியும் காசின்ட அருமை.அதாலா வாற பிரச்சினயளால எத்தனை பாச உறவுகள் ,குடும்பங்கள் பிரின்சிருக்கு? எல்லாம் பட்டால் தான் தெரியும் அக்கா.


- sinnakuddy - 12-04-2005

கொட்டப்பெட்டி காலியாய் இருந்தா கொய்யாரத்திலை முடிஞ்சு போடுவினம்...றொமான்டிக் காதல் ஆக கூட ஒருவருசம் தான் மூளையிலை இராசயன மாற்றம் இருக்குமாம்


இத்தாலி விஞ்ஞானிகள் அண்மையிலை சொல்லியிருங்கங்கள்....... சில்லறையில்லாட்டி ஒண்டுமே நடக்காது

அருள் இல்லாதவருக்கு அவ்வுலகமில்லையாம்

பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகமில்லையாம்


- suddykgirl - 12-10-2005

quote="MUGATHTHAR"]
suddykgirl Wrote:என்ன தாத்தா நீங்களே உங்களைப்பற்றி சொல்லலாமோ

நானும் பாக்கிறன் ஒருசனமும் கண்டுக்க மாட்டன் என்குதுகள் சரி எங்களுக்கு நாமே ஒரு விலாசத்தைத் தேடுவம் எண்டு பாத்தன் பிள்ளை குறைநினைக்காதைங்கோ..........[/quote]

பிந்தி பதில் கருத்து எழுதுவதற்க்கு மன்னிக்கவும் பாடசாலை விடுமுறை வருவதனால் கொஞ்சம் பாடசாலை வேலைகள் அதிகமானதால் பதில் எழுத முடியவில்லை.

அப்புறம் தாத்தா கவலைப்படாதைங்கோ பாட்டி உங்களை கவனிப்பா


Re: உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!! - suddykgirl - 12-10-2005

tamilini Wrote:
suddykgirl Wrote:இந்தக் கணனியுகத்தில் மனித வாழ்க்கையும் மாறி அதே வேளை அவர்களுடைய குணங்களும் வேறுபட்டே காணப்படுகின்றன

அதே போல சில பேர் அன்புக்கு அடிமை ஆனால்

சில பேர் பணத்துக்கு அடிமை


சரி என்னுடைய கருத்து 100மூ அன்புக்குத்தான்

உங்கள் கருத்து எதற்கு அன்புக்கா? பணத்துக்கா?

நமக்கு அன்பு தான்க வேணும். பணத்தை சம்பாரிச்சிட்டுப்போகலாம். அன்பு செலுத்தி அதரவாய் நாலு பேர் இருந்தா மனசுக்கு எத்தனை மகிழ்ச்சி. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழினி அக்கா உங்கள் கருத்துக்கு நன்றி எனது கருத்தும அதுவே.


- suddykgirl - 12-10-2005

RaMa Wrote:
suddykgirl Wrote:
RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)


நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு ம்ம்ம் ஆனால் உண்மையிலை அவர்கள் சந்தோசமாக இல்லையே அவர்கள் வெளி உலகிற்கு சந்தோசமாக இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள்

சந்தோசமாய் இருக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் பணத்திற்கு தான் அவர்கள் அடிமை...அன்பிற்கு ஏங்குவார்களோ தெரியாது... ஆனால் பணத்துடன் தான் வாழ ஆசைபடுவார்கள். இது நான் கண்டவர்களில் இருந்து தான் எழுதுகின்றேன்... ஆகவே தப்பாய் நினைக்காதையுங்கோ.


றமா அக்கா உங்கள் கருத்துக்கு நன்றிகள் ஆம் பலபேர் அப்படி அதில் ஒரு சிலர் எதிர் மாறு அவர்கள் பாசத்துக்காக துடிக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய தற்போதைய நிலையில் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை இது நான் சந்தித்த ஒருவர்

நான் உங்கள் கருத்தை தப்பென்று சொல்ல வில்லை ஏனெனில் ஒவ்வொருவரும் வேறு வேறு கருத்துக் கொண்டவர்கள்