Yarl Forum
தமிழீழக்காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தமிழீழக்காதல் (/showthread.php?tid=2157)

Pages: 1 2 3 4 5 6 7


- Saanakyan - 12-10-2005

þó¾ ¸¨¾Â¢ý ¨ÁÂì¸Õ ¸¡¾§Ä ¾Å¢Ã ®Æô§À¡Ã¡ð¼õ «øÄ. ¬¨¸Â¡ø, ÁüÈÅ÷¸û ¦º¡øÄ¢ô ÒâóЦ¸¡ûÇ ÓÊ¡¾Å÷, ¸¡¾Ä¢ ¦º¡øÄ¢ò¾¡ý ÒâóÐ ¦¸¡ñ¼¡÷ ±ýÀÐ ²üÚ즸¡ûÇì Üʧ¾.


- MUGATHTHAR - 12-10-2005

ஜீவனின் கருத்துத்தான் என்னுடையதும் இந்திய இராணுவம் செய்த அட்டுழியங்களை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டு மக்களை நாங்கள் எமது போராட்டத்துக்கு எதிரானவர்கள் எண்டு எண்ண இயலாது சிலருக்கு சரியான விளக்கமில்லாமல் சும்மா பத்திரிகை செய்திகளை பாத்து எமது போராட்டத்தை எடை போடுகிறார்கள் இந்த விடத்தில் தமிழ் நாட்டு உறவுகள் களத்தில் வரும் போது எம்மால் இயலுமானவரை இவர்களுக்கு புரிய வைக்க முற்படவேணும் சும்மா இந்திய இராணுவம் செய்ததுகளை வைத்து அவர்களுடன் கருத்து மோதுவதில் எதுவுமில்லை ஆரம்பக்காலங்களில் எமது போராளிகளுக்கு உதவி செய்தவர்கள் ஈழத்து மக்களை விட தமிழ் நாட்டு உறவுகளே என்பதை நாம் மறக்க கூடாது ஜீவன் சொன்னது போல இங்கு நாம் சேர்க்கும் தமிழ் ஈழ சம்மந்தமான நிதிகளுக்கு தேடி வந்த வந்து உதவி செய்யும் தமிழ் நாட்டு உறவுகளை எனது சொந்த உறவாகத்தான் பார்க்கிறேன்


- Saanakyan - 12-10-2005

«Å÷¸ÙìÌ §À¡Ã¡ð¼õ ºõÀó¾Á¡É ¸ÕòÐì¸¨Ç ±ÎòÐ ¦º¡øÅÐ §ÅÚ Å¢¼Âõ. ¬É¡Öõ ´Õ ¸¡¾ø ¸¨¾¨Â ÒâóЦ¸¡ûžüÌõ Å¢Á÷º¢ôÀ¾üÌõ þùÅÇ× àÃõ «Ãº¢Âø À¢ýÒÄí¸¨Ç ¬Ã¡öÅÐ §¾¨Å¡ ±ýÀ§¾ ±ÉìÌ ºó§¾¸Á¡¸ ¾¡ý þÕ츢ÈÐ.


- அருவி - 12-10-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--> தமிழ் ஈழ சம்மந்தமான நிதிகளுக்கு தேடி வந்த வந்து உதவி செய்யும்  தமிழ் நாட்டு உறவுகளை எனது சொந்த உறவாகத்தான் பார்க்கிறேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சுனாமி காலத்தின் போது கனடாவில் மாணவர்கள் நிதிசேகரித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் $100 கொடுத்தார், இவ்வளவிற்கும் அவரது சொந்த ஊரிலயும் சுனாமி தன் கைவரிசையைக் காட்டியிருந்தது, அப்பொழுது அவரிடம் கேட்டோம் ஏன் உங்களின் ஊரிற்கு அனுப்பவில்லையா என்று, அதற்கு அவர் சொன்னார் எங்களிற்கு அதப் பாக்கிறத்திற்கு ஒரு அரசாங்கம் இருக்கு ஆனால் இலங்கையில உங்களிற்கு உதவி செய்யும் அரசில்ல அதனால் உங்களிடம் இதைத்தருகிறேன் என்றார்.


- Eelavan - 12-10-2005

இதற்கு தமிழீழக் காதல் என்று எதற்காக பெயர் வைத்தார் என்பது மட்டுமே மோகன் தாஸிடம் கேட்க விரும்பும் கேள்வி.

மற்றும்படி கதையில் சொல்லப்படுபவை யதார்த்தத்தில் நடப்பவை அதற்கு காரண காரியம் ஆராய்வதில் பலனில்லை.

ஈழத்தமிழரை புனிதராகாவோ அசிங்கமாகவோ காட்டாமல் யதார்த்தமான வாழ்வியலூடாக அணுக முயன்றிருப்பதற்குப் பாராட்டுக்கள்


- AJeevan - 12-10-2005

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஈழத்து பையன் என்பது சிரிப்புக்குரிய விடயமாக இருப்பதிலும், ஈழத்து விடுதலைப் போராட்டம் சிரிப்புக்குரிய விடயமாக விளிப்பதைத் தான் நாம் கவனத்தில் கொள்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாத் தன்மையையே கண்டு கொள்கின்றோம்.  
இங்கே தமிழினியும் சரி, பிறரும் சரி சுட்டிக்காட்டும் விடயம் அதுவே. இது கதையின் கதாபாத்திரத்தை, அல்லது அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களால் ஆசிரியர் எப்படியான உணர்வலைகளைக் கொண்டிருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தூயவன் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது.
இருந்தாலும் உங்களிடம் சில கேள்வி...........?
இதுவும் நீங்கள் உங்கள் தாயகத்தை விட்டு வெளியில் இருந்தால் மட்டுமே.
இதற்கெல்லாம் நாம் கோபப்பட வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
ஒரு விடயத்தை சரியாக புரிந்து கொள்ளாத போது அல்லது தமது அடிமனதில் இருக்கும் ஒரு கருத்துக்கு எதிரான ஒன்றை கேட்கும் போது கோபம் உருவாவது இயல்பு.
சற்று நிதானமாக யோசித்தால் மட்டும் போதும் தூயவன்.

[quote] :?: நீங்கள் எந்த நாட்டில் தற்போது இருக்கிறீர்கள்?

:?: நீங்கள் இருக்கும் நாட்டுக்கு வரும் போது உங்கள் மனோ நிலை
அதாவது நீங்கள் அந்த நாட்டைப் பற்றி என்ன மாதிரியான உணர்வலைகளை உங்களுக்குள் கொண்டிருந்தீர்கள்?

:?: வந்ததும் வந்த நாட்டைப் பற்றி என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன?

:?: இப்போது அந்த நாட்டைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

:?: ஆரம்பத்தில் இருப்பது போலவே இருக்கிறதா?

:?: இல்லை மாற்றம் தெரிகிறதா?

உண்மையை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
சற்று நிதானமாக யோசியுங்கள்.
உங்கள் நிலைதான் மோகன்தாஸது நிலையாக இருக்கும்.

ஆரம்ப காலங்களில்
ஏகப்பட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி முகாம்களை வைத்திருந்தார்கள்.
உதாரணத்துக்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
டெலோ
ஈபீஆர்எல்எப்
ஈரோஸ்
................இன்னும் எத்தனையோ?
ஆனால் இவர்களை இனம் காண அவர்களுக்கு தெரியவில்லை.
இந்தியர்கள் அனைவரையும் <b>விடுதலைப் புலிகள்</b> என்றுதான் குறிப்பிட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகள் என்ற பெயரில்தான் தாக்குதல் சம்பவங்கள் ஆரம்பித்தன.
அவை பாமர மக்களின் மனதில் பதிந்தன.
அது தொடர்கின்றன.

சிங்கள மக்கள் கூட சாதாரண தமிழனைக் கூட <b>கொட்டியா</b> (புலி) என்றுதான் அழைத்தான். இன்றும் தொடராமல் இல்லை.
இருந்தாலும் <b>அது பற்றிய தெளிவு அரசியல்வாதிகள் தவிர்ந்த சிங்கள மக்களுக்கு இன்று உண்டு.</b>
ஒரு சில இராணுவ வீரர்களைக் கொன்றதற்காக 1983 ஜுலையில்
கொழும்பு தமிழர்களையும் தமிழர் உடமைகளையும் எரித்தவர்கள்.............
இன்று பல்லாயிரம் இராணுவம் சாகும் போது அதைக் கண்டு கொள்ளாததற்கு காரணம் அதுவே?

இன்றும் இந்தியாவில் அரசியல் தெரியாத பாமர மக்கள் அதே நிலையாகவே இருக்கிறார்கள். பார்க்கிறார்கள்.

அண்மையில் நான் இந்தியா போன போது
ஒருவர் என்னிடம் சொன்னார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பத்மநாபா நம்ம வீட்டுலதான் குடியிருந்தார் சார்.
அவரை சிங்களவனுக கொண்ணுட்டானுக..............

அவருக்கு நான் என்ன கொள்கை விளக்கமா கொடுக்க முடியும்?
அவருக்கு சொன்னாலும் புரியப் போவதில்லை.
இது பலரது நிலை.

<b>குழந்தைகளை நம்ம நிலையில இருந்து பார்க்கக் கூடாது.
நாங்கள் பெரியவங்கள் என்றால்
அவங்கட இடத்துக்கு நம்மை தாழ்த்திக் கொண்டு போய் பார்க்க வேணும்.
அப்போதான் அவர்களது உணர்வுகள் புரியும்.</b>


- sathiri - 12-10-2005

இங்கு இஈழவன் குறிப்பிட்டது போல கதை அது எழுதியரின் ஈழம் பற்றிய அறிவு அவரது பார்வையின் கொணத்தில் எழுதப்பட்டிருக்கலாம் ஆனால் அதன் தலைப்பை அப்படி பேட்டதன் கரணம் கதையில் விழங்கவில்லை.

அதை விட இந்திய இராணுவத்தின் செயல்களால் பொதுவாக ஒட்டு மொத்தமாக ஈழ தமிழருக்கு ஒரு வெறுப்பு இருந்தாலும் உண்மையில் அதை சாதாரண தமிழ் நாட்டு பொது மக்களிடம் காட்டுவதில் எந்த பயனும் இல்லை ஏனெனில் எனக்கு தெரிந்த வரை தமிழ் நாட்டில் எமது போராட்டம் பற்றிய தெளிவு எண்பது வீதம் ஏன் கூட என்றும் சொல்லலாம் அவர்களிற்கு இல்லை வெறும் பத்திரிகை செய்திகளிலேயே எமது போராட்டத்தை பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

ஆனால்: இந்திய இராணுவத்துடன் மோதல் நடந்து காயப்பட்ட பல போராளிகளிற்கு அதே கால கட்டத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் மக்கள் ஆதரவளித்து பாது காத்து இருக்கிறார்கள் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் தங்கள் வீடுகளில் போராளிகளைமறைத்து வைத்து பாதுகாத்திருக்கிறார்கள்.எனவே முடிந்த அளவு எமது போராட்டம் பற்றிய மக்களிற்கு போராட்ட தெளிவை கொடுப்பது எமது கடைமை.

இப்படித்தான் ஒரு சமயம் நான் இந்தியாவில் நின்றபோது யெயா தொலைக்காட்சியில் ஒரு பட்டி மன்றம் அதிலே ஏதோ வேலை வாய்ப்பு பற்றியது.அதிலே வந்த தமிழ்பேராசிரியர் ஒருவர் கூறினார் சிலோனிலே ஏன் தமிழர் போராடுகிறார்கள் வேலை வாய்ப்பின்மை அதனால் வறுமை என்று அதை பாத்து கொண்டிருந்த எனக்கு எப்பிடி இருந்திருக்கும்இப்படி ஒரு பேராசிரியரே பேசும் போது மற்ற சாதாரண பொது அறிவு அற்றவர்கள் எப்படி எமது போராட்டத்தை அறிந்திருப்பார்கள்


- sathiri - 12-10-2005

அஜீவன் நீங்கள் தவறுதலாக கலவரம் நடந்த ஆண்டை 1981என்று தட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அது 1983 யுலை என்பதே சரி


- AJeevan - 12-10-2005

Eelavan Wrote:இதற்கு <b>தமிழீழக் காதல் </b> என்று எதற்காக பெயர் வைத்தார் என்பது மட்டுமே மோகன் தாஸிடம் கேட்க விரும்பும் கேள்வி.

மற்றும்படி கதையில் சொல்லப்படுபவை யதார்த்தத்தில் நடப்பவை அதற்கு காரண காரியம் ஆராய்வதில் பலனில்லை.

ஈழத்தமிழரை புனிதராகாவோ அசிங்கமாகவோ காட்டாமல் யதார்த்தமான வாழ்வியலூடாக அணுக முயன்றிருப்பதற்குப் பாராட்டுக்கள்

நான் ஒரு படைப்பாளியாக இவரது கதையைப் பார்க்கும் போது
அவருக்குள் தமிழீழத்தின் மேல் ஒரு காதல் அடி மனதில் இருக்கிறது, இருந்திருக்கிறது என்பதை உணர்கிறேன் ஈழவன்.

இது மனித இயல்பு.
நமக்குப் பிடித்த ஒரு திரைப்படத்தின் கதாபாத்திர பெயரை அல்லது இறந்து போன ஒரு உறவினரின் அல்லது ஒரு வீரனின் பெயரை நாம் வைப்பது ஏன்?
நம் அடி மனதில்
அது பற்றிய பொஸடிவ் சிந்தனைகள் இருக்கின்றன.
அது ஒருவருக்கு தெரியாமலே வந்து விடுகின்றன.
அப்படி என்றே கருதுகிறேன்.

Quote:
<img src='http://www.iranian.com/PhotoDay/2002/August/Images/couple.jpg' border='0' alt='user posted image'>
படம் முடிந்த அன்றிரவு
மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன்.
அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

\"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளைய வர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க.\" சொல்லி விட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

\"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?\"

\"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க\" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது.
எங்கள் வீட்டிற்கும் இது ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை.
ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள்.
எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும்.

விரசமேயில்லாத விதத்தில் அந்தக் காதல் வளர்கிறது.
அது வரிகளாகி நிற்கின்றன.

[quote]அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க <b>உங்கட அரசு சம்மதிக்காது</b>.
என்பதிலிருந்து
அவளுக்கும் இந்தியா பற்றிய விளக்கமில்லை என்பது இந்த வார்த்தைகளினூடாக தெரிகிறது.

அது பற்றி கதாநாயகன் கூட அவளுக்கு விளக்க எத்தனிக்கவில்லை.
காதல் தானாகவே வளரட்டும் என்று விட்டுப் பிடித்தாரா?
அல்லது
அவருக்கும் அது பற்றிய விபரம் தெரியவில்லையா?
இருந்த போதும் அந்த கதாபாத்திரங்களின் தன்மை நிலையை புரிந்து கொள்ள இவை வழி வகுக்கிறது.
டை கோட் போட்ட ஆட்டோக்காரராக சித்தரிக்காமல்
யதார்த்தமாக
அது அப்படியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.


இந்தியாவில்
எவரும் எவரையும் திருமணம் செய்யலாம்.
ஆனால் இந்திய நாட்டு குடியுரிமை தரப்பட மாட்டாது.
இது சட்டப்படி.
ஆனால் இந்தியாவில் வாழும் 95 சதவீதமான இலங்கைத் தமிழர்கள்
வாக்குரிமை
ரேசன் காட்
பாஸ்போட் ( ஒன்றுக்கு மேல........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
வைத்திருக்கிறார்கள்.

லலிதா ஜுவலர்ஸ்
ராஜ் டீவி
இப்படி எத்தனையோ நிறுவனங்கள் சிலோன்காரங்களுடயது.

[quote]ஒரு உண்மை சம்பவம்:-
நான் தமிழ்நாட்டில் இருக்கும் போது ஒரு பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்தேன்.
அதுபற்றி விசாரிக்க போலீஸ் வீடு தேடி வரும்.
போலீஸ் என்னைத் தேடி வந்து விசாரித்த போது
வீட்டிலிருந்தவர்கள் "சார் சிங்கப்பூர் போயிருக்கார்" என்றிருக்கிறார்கள்.
வந்ததும் ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச் சொல்லுங்க என்று போய் விட்டார்கள்.
நான் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின் போலீஸ் நிலையத்துக்கு போன போது
உங்க ஊரு எது சார் என்று கேட்டார் போலீஸ்காரர்.
நான் "காரைக்குடி தனாவயல்" என்றேன்.

காரைக்குடியில இருந்து <b>தனாவயலுக்கு</b> எத்தனை கிலோ மீட்டர் சார் என்றார்.

நான் ஒரு மதிப்பீடாக சொன்னேன்.

அதுக்கு மேல ஆவுமே என்றார்.

நீங்க மெயின் ரோடு வழியா சொல்றீங்க சார்.
நான் சோட்கட் வழியா கிராமத்துக்குள்ளாற போற தூரத்தை சொன்னேன் என்றேன்.

அதற்கு மேல் பேசாத அவர் சிரித்து விட்டு சொன்னார்.
100 இந்தியன்ல 10 பேருக்கு கூட பாஸ்போட் கிடையாது.
ஆனா ஒரு சிலோன்காரருக்கு 10 இந்திய பாஸ்போட்டாவது இருக்குது சார்.
நான் வந்தப்போ நீங்க சிங்கப்பூர் போயிருந்தீங்க என்றார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் பேசவில்லை.

சார். இந்த பேரில யாருமில்லண்ணு கிழிச்சு போடுறேன் சார்.
நான் தப்பான போலீஸ்காரன் இல்ல சார் என்று தனது நேர்மையை மட்டுமல்ல
எம்மீது இருந்து கருணையையும் வெளிக் காட்டினார்.
இல்லாவிட்டால் அன்று அவரால் நான் உள்ளே தள்ளப்பட்டிருக்கலாம்.



- AJeevan - 12-10-2005

sathiri Wrote:அஜீவன் நீங்கள் தவறுதலாக கலவரம் நடந்த ஆண்டை 1981என்று தட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அது 1983 யுலை என்பதே சரி

நன்றி சாத்திரி.
மேலே திருத்தி விட்டேன்.


- Vasampu - 12-10-2005

நான் கூட ஆரம்பத்தில் தமிழீழக்காதல் என்ற தலையங்கத்தைப் பார்த்ததும் ஏதோ தாயகத்தில் நடைபெற்ற காதலோ என எண்ணியபடி வாசித்தேன். ஆனால் கதையின் ஆரம்பத்திலிருந்த கதாசிரியரின் நிலைக்கும் பின்பு சொரூபன் அவரது சகோதரி ஆகியோர் மூலம் போராட்டத்தின் மற்றைய கோணத்தை கதாசிரியர் புரிந்தபின் அதன் மேல் அவர் கொண்ட பற்று ( உதாரணமாக வைரமுத்துவின் கவிதை பற்றிய விளக்கம் ) தமிழீழம் மேல் அவரைக் காதல் கொள்ள வைத்திருக்கலாம். ஆனால் கதையில் அவர் முக்கியமாக சுட்டிக்காட்ட முனைந்தது உணர்வு புூர்வமான காதலையே!!!!!


- தூயவன் - 12-10-2005

அஜீவன் அண்ணா சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் நான் எனது பார்வையில் அடிமட்ட தமிழ்நாட்டு தமிழர்களை என்றுமே எதிராக பார்த்தில்லை. ஆனாலும் இதில் எழுத்தாளர் குறித்து சுட்டிக் காட்டியது என்னவென்றால் எம் விடுதலைப் போராட்டத்தை ஏன் என்னும் புரியமாட்டேன் என்கின்றார் என்ற ஆதங்கமே அது தவிர அவரது எழுத்துக்களை தாழ்த்தி எடை போடவில்லை.


- AJeevan - 12-10-2005

தூயவன் Wrote:அஜீவன் அண்ணா சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் நான் எனது பார்வையில் அடிமட்ட தமிழ்நாட்டு தமிழர்களை என்றுமே எதிராக பார்த்தில்லை. ஆனாலும் இதில் எழுத்தாளர் குறித்து சுட்டிக் காட்டியது என்னவென்றால் எம் விடுதலைப் போராட்டத்தை ஏன் என்னும் புரியமாட்டேன் என்கின்றார் என்ற ஆதங்கமே அது தவிர அவரது எழுத்துக்களை தாழ்த்தி எடை போடவில்லை.

நன்றி தூயவன்.
என்னால் உங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணத்துக்கு பாருங்கள் தூயவன்

இங்கு உள்ளவர்கள் கூட இலங்கை இந்தியாவென்றால் ஏழை நாடுகள் என்றே கருதுகிறார்கள்.
என்னிடம் கூட ஆரம்பத்தில் கையெழுத்து போடுவாயா என்று இங்கு கேட்டதுண்டு.
இன்று நிலமை வேறு................
அதே போல இந்திய சினிமாக்களில் காதலன் காதலியோடு பேசுவதில்லை.
பாடிக்கொண்டு தெருக்களில் ஓடித் திரிகிறார்கள்.
மனித நேயமேயில்லாமல் விரும்பிய ஒருவரை அடைய விடாமல் கொலை கூட செய்கிறார்கள்.
பெண் குழந்தைகளை கருக் கொலை செய்கிறார்கள்
13 வயது குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள்..................
இப்படியெல்லாம் எத்தனையோ நினைக்கிறார்கள்..............
அவர்களுக்கு உண்மைகளை புரிய வைக்க சிரமப்பட வேண்டியே இருக்கிறது.
இலங்கையைக் கூட ஈராக் போல என நினைக்கிறார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே உண்மையின் யதார்த்தம் தெரிகிறது.
சுவிஸைப் பொறுத்த வரை இன்று தமிழர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் கடும் உழைப்பாளிகள்.
இது இன்றைய நிலை.

இதனால் நாம்தான் கொஞ்சம் மேலே போய்
யோசிக்க வேண்டும்.

எதிரியை நண்பனாக்கிக் கொள்ள முயல்வதை விட
ஒரு நண்பனை எதிரியாக்கிக் கொள்ளாமல் இருந்தாலே
நமக்கு நல்ல நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள்.

உண்மை, நேர்மை, அன்பு, பரிந்துணர்வு
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளை விட சிறப்பானது தூயவன் கண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 12-10-2005

[b]எதிரியை நண்பனாக்கிக் கொள்ள முயல்வதை விட
ஒரு நண்பனை எதிரியாக்கிக் கொள்ளாமல் இருந்தாலே
நமக்கு நல்ல நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள்.

உணர்வு புூர்வமான வார்த்தைகள் நன்றி அஜிவன்


- kuruvikal - 12-10-2005

poonai_kuddy Wrote:
tamilini Wrote:நல்லா மட்டம் தட்டியிருக்கார் முதலிலே வாசிச்சன் இந்தக்கதையை தமிழ்மணத்தில். :evil: :evil:

kuruvikal Wrote:வந்தாரை அன்போடு வரவழைத்து விளங்காததை பண்போடு விளக்க முனைவதுதான் வரவேற்கத்தக்கது..! <b>தமிழினி ஒரு வாசகராக குறித்த கதையில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியது சிறப்பான ஒரு விமர்சனம் என்றே கொள்ள வேண்டும்..! </b>அதை அவர் கதைக்குரிய இடத்தில் வைத்திருந்தார்...! நிச்சயம் அவரைப் போலவே எமக்குள்ளும் ஒரு ஆதங்கம் எழுந்தது...அப்படி இன்னும் பலருக்குள் எழுந்திருக்கலாம்..! அதைச் சர்ச்சை ஆக்குவதிலும் தேவையானவற்றை பண்போடு விமர்சித்து விளங்கிக் கொள்வதே எல்லோருக்கும் நல்லது ஒற்றுமையையும் வலுப்படுத்தும்..! படைப்பாளியையும் பண்படுத்தும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ன இங்க நடக்குது..... தமிழினியக்கா எழுதினதுக்கு பேர் விமர்சனமெண்டா விமர்சனத்த என்னெண்டு சொல்லுறது......சின்னப்பிள்ளையள் மாதிரியே இருக்கினம் இங்க....... முதல்ல தமிழனியக்கா வச்சது கருத்தே இல்ல...அதுக்குள்ள அத விமர்சனம் எண்டா எங்க போய் தலையை முட்டுறது..... உத விமர்சனம் எண்டு சொல்லுறவை விமர்சனம் எண்டா என்னெண்டு ஒருக்கா விளங்கப்படுத்துங்கோவன்.....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மோகனதாஸ் அண்ணா உங்கட அனுபவங்கள எழுத்துவடிவில கற்பனையள் கலந்து சொல்லியிருக்கிறீங்கள்......அது உங்கட பார்வைதான். அதில மட்டந்தட்டினா மாதிரி ஒண்டும் எனக்க தெரியேல அண்ணா..... தமிழனிட்ட இருக்கிற குறையே தன்ர குறையள ஏத்துக்கொள்ளாத தன்மை தான்.....மற்றவன் தன்ன மட்டந்தட்டுறான் எண்டு சொல்லிச் சொல்லியே தாழ்ந்து போட்டுது எங்கட தமிழினி.னம்.

பெட்டை எண்டு சொல்லுறது எங்கட ஊரில மரியாத குறைவான வார்த்தையில்ல....அது இடத்துக்கு இடம் மாறுபடுந்தர்னே..... மூஞ்சி எண்டுறதும் எங்கட ஊரில அதிகமா பாவிக்கறதுதான்.... ஆனா உங்கட ஊரில அது கூடாம பார்க்கப்படுது..... இதெல்லாம் புரிஞ்சு கொள்ளக்கூடியதுதான்.....

உங்கட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கொண்ணா........நாங்கள் எங்கட கருத்த சொல்லுவம்......நீங்கள் எங்கள மட்டந்தட்டுறீங்களெண்டு அழுது புலம்ப மாட்டம்.......விமர்சனம் எண்டுற பேரில எங்கட தாழ்வுச்சிக்கல்கள வெளிப்படுத்தமாட்டம் அண்ணா.....எங்களுக்கு யாராவது விமர்சனம் வச்சா அத நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டம்....ஆனா மத்தாக்களுக்கு நல்லா அறிவுரை சொல்லுவமே.......எங்களுக்கு ஆரும் வச்சா அத வசைபாடுகினம் எண்டு சொல்லி அனுதாபம் தேடுவம்....ஆனா மற்றாக்கள நல்லா நயவஞஇசகமா வசைபாடுவமே........கவலைப்படாதேங்கோண்ணா.... தமிழினி திருந்தும்......

உங்கட அடுத்த கதையை நாங்கள் எதிர்பாக்கிறமண்ணா.....

விமர்சனம் என்று முட்டி முழங்கி நீட்டி நிமித்தி விளக்கி எழுத வேண்டும் என்ற பழைய சித்தாந்தம் அவசியமில்லை..! விமர்சனம் என்ற போர்வையில் தங்கள் சார்பானோருக்கு சுயசரிதை எழுதுவதும் எழுத்துப் புகழாஞ்சலி செய்வதுமே நடக்கிறது..! 50 ஆக்கத்தில் இரண்டை எடுத்து வைச்சு நாலு வரி புகழ்ந்திட்டால் அது விமர்சனம் அல்ல..! ஒருவரின் ஒரு ஆக்கம் தொடர்பில் அதன் கருத்தியல் புறநிலைகளை அவரின் ஆக்கத்தில் இருந்து கண்டறிந்து அவை ஒரு வாசகனில் தரவல்ல தாக்கங்களின் தன்மைகளை ஆராய்ந்து சொல்வதே விமர்சனம் எனலாம்..! தமிழினி எழுதிய ஒரு வரி சொன்ன விமர்சனம்...பல பக்கங்களுக்கு நீட்டி நிமித்த வல்லதே...! அதை அறிய அதற்கு ஆள் பார்க்காது ஆக்கத்தை கருத்தை உள்வாங்கும் பக்குவம் அவசியம்..! அது இல்லாதவர்கள் விமர்சனம் பற்றி கருத்து எழுதுவது வேடிக்கையானது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- siluku - 12-10-2005

குருவி அண்ணா விமரிசனம் பற்றியும் அதிலேயும் தமிழினி அக்காவின்ட விமர்சனம் பற்றியும் சொல்லி எங்கேயோ போய்ட்டீங்க.உங்கள மாதிரி அறிவுஜீவிகள் எங்களுக்கு வழி காட்ட வேணும்.தமிழினி அக்கா ஒரு வரி சொன்னா அது ஆயிரம் வரி சொன்ன மாதிரி.அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.இதெல்லாத்தையும் ஆயிரத்தால பெருக்கினால் இவயள் எல்லாம் கிட்ட நிக்க ஏலுமே?


- kuruvikal - 12-10-2005

பக்கம் பக்கமா புகழாஞ்சலி பாடுவதிலும்...ஒரு வரில ஒரு அர்த்தமுள்ள விசயத்தைச் சொல்லிட்டா...அது தாற தாக்கம் அளப்பரியது என்பதையே இங்கு கண்டுகொண்டு இருக்கிறீர்கள்...! கண்டுகொண்டும் நக்கல்...வேற...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யாழ் களம் 100,000 கருத்துக்களைத் தாண்டியாச்சு..! அதில் 20,000 ஜஸ்ட் 20% வீதம் அவ்வளவும் தான்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(Our users have posted a total of <b>142620</b> articles
We have <b>1742</b> registered users)


- siluku - 12-10-2005

நான் சொன்ன கணக்கு நீங்க இரண்டு பேரும் எழுதிற மற்றப் பேர்களையும் சேத்தண்ணா.ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சபை அடக்கம் கூடாதண்ணா.எதோ உங்கட கருத்துக்காளாலும் விமர்சனங்களாலும் இந்தக் களம் மணம் பரப்பி வியாபித்து ,புதிய உறவுகளை வரவேற்று இருக்கல்லோ அண்ணா.


- kuruvikal - 12-10-2005

சரிங்கோ...உங்கட கண்டுபிடிப்புகளை நோபல் பரிசுக்கு சிபார்சு செய்வம்..ஓக்கேதானே..!

நன்றிங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-10-2005

Quote:எனவே உங்கள் மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறீர்கள்.
அது <b>முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர் கடமை.</b> இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரை கிடையாது.
உங்கள் வாழ்வோடு நெருங்கிய இதயத்தில் உறைந்து விட்ட ஒரு அன்பு நினைவு............
ஆட்டோ கிராப்
அஜீவன் அண்ணா.
உங்கள் ஆக்கங்களை வாசகர்கள் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே இது எத்தனை வீதம் சாத்தியமாகும் என்கிறீர்கள். வாசகர்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று எதிர்பார்ப்பவர்கள் வாசகர் கருத்துக்களை ஏற்க ஏன் தயாராகவில்லை..??
அப்படி ஏற்றுக்கொண்டாலும் குறிப்பிட்ட எழுத்தாளரிற்கு ஆதரவு என்ற ரீதியில் கருத்தெழுதுபவர்களை தூற்றுதல் எந்த வித நியாயம்.??
ஒரு எழுத்தாளனின் ஆக்கத்திற்கு 100 வீதம் ஆதரவான கருத்துக்களாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா??? :roll: :roll: