![]() |
|
கனடாவில் எதிர்ப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: கனடாவில் எதிர்ப்பு (/showthread.php?tid=147) Pages:
1
2
|
- தூயவன் - 04-22-2006 பேராசிரியர் சிவத்தம்பி சொன்னது வருத்தமான செய்தி என்றாலும், அது ஏற்றுக் கொள்ளத்தகு உண்மைகள் இருப்பதை மறுக்கமுடியாது. வெறுமனே நிதி உதவிகளும், ஒரு சில கட்டுரைகளும் வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தெளிவைக் கொடுக்காது. ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தின் அமைப்பை வெளிப்படுத்தியாக வேண்டும் பேராசிரியர் அவர்களுக்கு, தங்களைக் குறித்து சில துரோகத்தளங்கள் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கின்றன. அந்தப் பேய்கள் ஆபத்தானவர்கள். உங்களின் பாதுகாப்பில் அவதானமாக இருங்கள். - KULAKADDAN - 04-22-2006 [quote][size=18]புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் எமது பிரச்சார இயந்திரம் சரியாக கவனிக்கப்படவில்லை/ஒழுங்கமைக்கப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய யதார்த்தம். போராட்டத்துகு நிதிவளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது எமது போராட்ட நியாயப்பட்டையும், எம்மீது மேற்கொள்ளப்படும் அட்டூளியங்களை பிரச்சாரப்படுத்தி, எமது போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதும். இன்றைய சர்வதேசமயப்பட்ட எமது போராட்டத்துக்கு இது முக்கியமானது. அதை செய்ய இன்னும் காலம் தாழ்த்தினால் மேலும் மேலும் சர்வதேச ரீதியில் பின்னடைவே ஏற்படும். ஒரு உதாரணத்திற்கு, எமது போராட்டம் உலகில் பலநாடுகளின் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதை நான் அவதானித்திருக்கிறேன்/ நேரில் கேட்டிருக்கிறேன். எமது கவனத்திற்கு அதிகம் வராத ஆபிரிக்க நாட்டவர்கள் கூட எனது தாய்மொழி என்ன என கேட்கும் போது தமிழ் என்றால் உடனடியாக தமிழ் புலிகள் என கேட்கும அளவிற்கு அறிமுகம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் ஐரோப்பவிற்கு பலகாலம் முதல் வந்தவர்கள் அல்ல. மிக அண்மையில் ஐரோப்பவிற்கு வந்தவர்கள். பிரச்சாரம் போதுமான அளவில் நிகழவில்லை என்பது கனடாவுக்கு மட்டுமல்ல, அனைத்து புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளுக்கும் பொருந்தும். நாம் இதுவரை பிரச்சாரம் என்று எமது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் செய்திருக்கிறோம். மற்றவர்கள் கவனத்துக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம். அதையே வேறொரு பகுதியில் சுட்டிகாட்ட முற்பட்டுள்ளேன் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=10314&start=75 - RaMa - 04-22-2006 கனடாவிற்கு வந்து அகதிநிலை அந்தஸ்தை கேட்கும் போது நாம் சொல்கின்ற பொய்களும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். பலருடைய கேஸ் கொப்பிகளை எடுத்துப்பார்த்தால் தெரியும். முக்கியமாக கோடு போட்டு காட்டியிரு்பார்கள். எம்மால் இலங்கையில் இருக்க முடியாது. புலிகளாலும் பிரச்சனை சிறிலாங்கா ஆமியாலும் பிரச்சனை என்று தான் கூறிப்பிட்டு இருப்பார்கள். புலிகள் நம்மை இவ்வளவு பணம் தரச் சொல்லி கேட்டார்கள். புலிகள் பிள்ளைகளை தங்களுடன் வரும்படி கேட்டார்கள் அது இது என்று தமது வசதிக்கு எற்றவாறு எழுதியிருப்பார்கள். இத்தகைய தகவல்களால் தான் புலிகள் தப்பானவர்கள் என்று அரசாங்கமும் வேற்று இன மக்களும் எண்ணுகின்றார்கள். கேஸ் நடக்கும்போது புலிகள் கூடதாவர்கள் என்று அவர்களுக்கு முன் அழுது காட்டிவிட்டு பின்னார் போராட்டம் என்று தொடங்கினால் என்ன நடக்கும்???? - சுடர் - 04-22-2006 <img src='http://worldtamilpress.com/images/stories/news/ours/wtm_logo.jpg' border='0' alt='user posted image'>தடையுடன் தொடர்பு பட்டு கனடா உலகத்தமிழர் இயக்கம் "அறம் செய்ய விரும்பு" எனத் தலைப்பிட்டு விடுத்துள்ள அறிக்கை. எம்மினிய உறவுகளிற்கு வணக்கம்! நாம் பிறந்த தேசம் மீண்டும் பற்றி எரிகிறது. பேரினவாதம் பட்டப்பகலில் இனி அழிப்பை மேற்கொள்கின்றது. இணையத்தளங்கள் தோறும் தோய்ந்திருக்கும் நம் உறவுகளின் குருதி நம் உறவுகளின் குருதி நம் இதயத்துள்ளும் இறங்கி வழிகிறது. யார் உதவியும் இல்லாது அல்லற்படும் எம் உறவுகளின் நிலையுணர்ந்து துடிக்கும் உள்ளத்தினால் சீரற்றுப்போன சுவாசம் நெஞ்சை அழுத்துகின்றது. நிர்க்கதியாய் நின்று நாம் 'இதைக் கேட்பாரில்லையா' என கதறுகிறோம். எனினும் வழமைபோல் சர்வதேசம் எம்மைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கின்றது. நம் உறவுகளிற்கான எமது ஆதரவும் இன்று கனேடிய மண்ணில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய மண்ணில் கடந்த எட்டாம் நாள் இடப்பட்ட சட்டமாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை எவ்வகையிலும் எம் பிறந்த மண்ணின் சமாதான முன்னெடுப்புகளிற்கு உதவப்போவதில்லை என்பதை தமிழ் கனேடியர்கள் நன்கறிவோம். சிங்களப் பேரினவாதம் இத்தடையினைத் தமது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்குக் கிடைத்த இன்னுமொரு அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டு செயற்படுவது திருகோணமலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தில் மட்டுமன்றி கனேடிய மண்ணிலும் கூட சிறிலங்கா அரசின் முகவர்கள் இச்சட்டத்தால் அகமகிழ்ந்து ஆடுவதை நாம் பார்க்கின்றோம். சர்வதேசம் தமக்குத் தங்கு தடையற்ற ஆதரவினை எப்போதும் வழங்கும் என்று சிங்களம் கொண்டுள்ள மமதையின் காரணமாகவே, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை அடக்கி தமிழ் இனத்தை அழிக்கும் அவர்களது நடவடிக்கைகள், இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் நாளிலிருந்து சமீபத்தில் திருமலையில் நடந்தது வரை, இன்னும் தொடர்கின்றன. ஈழத்தில் வாழும் நமது உறவுகளின் எதிர்காலம் மட்டுமன்றி கனேடிய தமிழர்களாகிய எமது அடிப்படை மனித உரிமைகளும் கனேடியத் தடைச்சட்டத்தால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசானது தனது தமிழ் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனஙடகளை மறைப்பதற்காக, கனேடிய அரசிற்குத் தமிழர் தரப்பு பற்றிய தவறான தரவுகளைத் திட்டமிட்டு வழங்கி வருகின்றது. இந்த வகையில்தான் 'உலகத் தமிழர் இயக்கம்' மற்றும் தாயக மேம்பாட்டிற்காக உழைக்கும் அல்லது குரல் கொடுக்கும் பல அமைப்புக்களையும் பற்றிய அவதூறுகள் சிறிலங்கா அரசால் பரப்பப்பட்டு வருகின்றன. காலம் காலமாக தாயகத்தில் எமது மக்களின் மனிதாபிமானப் பணிகளில் பெரும் பங்காற்றி வரும் 'உலகத் தமிழர் இயக்கம்' போரிற்கும் ஆயுதங்களிற்குமாக நிதி சேகரிப்பதாகவும், மக்களை வற்புறுத்துவதாகவும் பல்வேறு விசமப் பிரச்சாரங்களை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது. உலகத்தின் இதயத்தில் ஓங்கியறைந்த சுனாமிப் பேரலையினால் இலங்கைத்தீவில் ஏற்பட்ட பாரிய உயிர், உடைமை அழிவுகளில் இருந்து மீண்ட மக்களிற்கான உடனடி நிவாரணப் பணிகளை செயற்படுத்தவென சர்வதேச சமூகத்தினால் வரைந்து கொடுக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பை இல்லாது செய்த சிறீலங்கா அரசு இன்று எமது மக்கள் தம்முடைய உறவுகளின் நிலைகண்டு வழங்கிவரும் ஆதரவினையும் தடுக்க கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது. கடந்த ஐந்து வருடங்களிற்கும் மேலாகத் தொடரும் நிரந்தர சமாதானத்திற்கான முயற்சிகளின் போது தமிழரிற்கு எவ்வித நன்மைகளும் ஏற்படாதவண்ணம் திட்டமிட்ட முறையில் செயற்பட்டுவரும் இலங்கையரசை எவ்வகையிலும் கண்டிக்காமலும், கடந்த பல தசாப்தங்களிற்கும் மேலாக தொடரும் கொடிய இன அழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமலும் இருந்த எமது கனேடிய அரசானது எவ்வகையிலும் பொருத்தமற்ற இன்றைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசிற்கு சார்பாக எடுத்திருக்கும் தற்போதைய நிலைப்பாடு எமக்கு மிகுந்த கவலையையும் மனவருத்தத்தையும் தருகின்றது. தமிழ் மக்களால் தமது ஏக பிரதிநிதிகளாக, சனநாயக வழியில் சர்வதேச கண்காணிப்பின் மத்தியில் நடைபெற்ற தேர்தல்களில் தாயக மக்கள் வழங்கிய தீர்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தெரிந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ககேடிய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பினும், சட்டத்தை மதிக்கும் கனடியத் தமிழர்களாக நாம் இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு மதிப்பளித்தே எமது அனைத்துச் செற்பாடுகளையும் கனேடியத் தமிழ் மக்களாகிய நாம் மேற்கொண்டு வந்துள்ளோம். எனினும், கனேடியத் தமிழ் மக்களின் உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் இடத்து இச் சட்டத்தை அல்லது அதனது பகுதிகளை கனேடிய வழிமுறைகளிற்கு ஏற்ப சட்டரீதியாக நாம் எதிர்கொள்வோம். எமது உரிமைகளை இம்மண்ணில் தக்கவைத்துக் கொள்வதற்கு அத்தகைய வழிமுறைகள் எமக்கு அவசியமாகின்றது. எனவே, எமது சமூகம் கனேடிய தடைச்சட்டத்தினை மிகக் கவனமாக ஆராய்கின்றது. சட்டவல்லுனர்களின் சேவையினையும் நாம் பெற்றுள்ளோம். எமது அன்புக்குரியவர்களே! நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு சதமும் மனிதாபிமான பணிகளிற்கே செலவிடப்படுகின்றது. உங்களது நிதியும் உன்னத பணியும் சேர்ந்ததனால் தான் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் பட்டினிச்சாவைத் தவிர்க்க முடிந்தது. உங்களது உதவியால் தான் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமது உறவுகள் தமக்கென ஓர் இடத்தைப் நிர்மாணித்து உயிரையேனும் காக்க முடிகிறது. இது விடயத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுமென நாம் வேண்டுகிறோம். கனேடியத் தமிழராகிய நாம், <b>சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையினால் காலம் காலமாக எமது மக்கள் இரத்தமும் அழிவுமாய்ப் பட்ட துன்பங்களைச் சுமந்த எமது நீண்ட வரலாற்று உண்மைகளை சக கனேடிய உறவுகளிற்கும், அரசிற்கும் தெரியப்படுத்துவதுடன் </b>எமது நாட்டின் சட்டதிட்டங்களிற்கு அமைவாக எமது தாயக உறவுகளின் துயர் துடைப்பிற்கான செயற்பாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவர்களது நீதியான, நேர்மையான அரசியல் அபிலாசைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். நன்றி, உலகத்தமிழர் இயக்கம் (கனடா) ஆதார இணைப்பு உலகத்தமிழ் ஊடகம் - World Tamil Press - நேசன் - 04-22-2006 இது கனடா வாழ் தமிழ்மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகம் வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொருந்தும். எப்படி வாழ்ந்தோம்,எப்படி இப்போ வாழ்கிறோம் என்றதை ஒருகணம் நினைத்துப்பார்த்தால்,எங்களுக்கு இந்த வாழ்வு கிடைக்க உதவிய அந்த ஏதிலியான எமது உறவுகளை கைவிடமாட்டோம் - சுடர் - 04-22-2006 <b>கனடாவில் புலிகள் தடை-உடன் சட்ட உதவி அல்லது ஆலோசனை</b> தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கனடாவில் விதிக்கப்பட்டுள்ள தடையும் அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சட்டமும் கனடியத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்காது பார்த்துக்கொள்ளும் வகையில் ஒரு சட்டக்குழுவின் உதவியை நாடியுள்ளோம். அதன் பிரகாரம் பின்வரும் விடயங்களை எம் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். நீங்கள் எவராவது விசாரணை ஒன்றின் நிமிர்த்தம் பாதுகாப்புத் துறையினரால் அணுகப்படுமிடத்து, உடனடியாகப் பேசுவதை நீங்கள் தவிர்க்கும் உரிமை உங்களிற்கு உண்டு. ஒரு வழக்கறிஞருடன் பேசி அவர் முன்னால் பேசுவதை நீங்கள் விரும்புவதாகக் கூறலாம். நீங்கள் எவராவது சார்ந்த இடமொன்றை சோதனையிட முனைந்தால், அதற்கான சட்ட ஆவணம் இருக்க வேண்டும். அவ்வாறு யாராவது பாதுகாப்புத் துறையினர் முனைந்தால், அவ்வாநான சட்ட ஆவணம் உண்டா என்பதை உறுதி செய்யவும். அதில் விபரங்கள் சரியாக உள்ளனவா என்று பார்ப்பதுடன் சட்ட ஆவணம் அற்ற சோதனைகளுக்கு உங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கும் உரிமையும் உங்களுக்குண்டு. நீங்கள் எவராவது மேற்கண்டவாறு சூழ்நிலைகளையோ அல்லது எச்சந்தர்ப்பத்திலாவது வேறொருவிதமான சூழ்நிலைகளுக்கோ உட்பட நேர்ந்தால், உடன் சட்ட உதவி அல்லது சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் தாமதமின்றி கீழேயுள்ள தொலையேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அது குறித்த உதவிகளை நாம் மேற்கொள்வதற்குக் தயாராக உள்ளோம். தொடர்புகளுக்கு: தொலைபேசி: 416-335-0622 ஆதார இணைப்பு உலகத்தமிழ் ஊடகம் - World Tamil Press - kurukaalapoovan - 04-22-2006 பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் 1 வருடபூர்த்தி ஒட்டி நடந்த சிறப்பு நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கு பற்றிய ஆய்வு 2 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. அதன் போதும் lobbying எமது பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். களத்தில் வேறொரு பகுதியில் ஒருவர் குறைப்பட்டிருந்தார் (அல்லது ஒரு வகையில் திருப்த்திப்பட்டுக் கொண்டார்) "ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் அதன் முன்னாள் காலணித்துவ நாடுகளிலும் தான் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று. உண்மைதான் இலங்கை அரசாங்கத்தின் lobbying ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் மும்மரமாக இருக்கிறது. படித்த சிங்கள மக்கள் புலம் பெயர்ந்து பெருமளவில் இருப்பதும் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமொரிக்கா, கனடா, நியூஸ்லாந்து போன்ற இடங்களில். நோர்வேயில் சிங்களவர்களின் lobbying கடந்த 2...3 வருடங்களாக அதிகரிகத்து கொண்டு வருகிறது. நோர்வே சமூகத்தோடு அடிமட்ட உறவுகளை உருவாக்கி பலமாக்கி வருகிறார்கள். ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலிகளிற்கு தடைக்கு காரணம் அவர்களிற்கு தமிழ்மொழியிலை இருக்கிற பொறாமையால் இல்லை. அங்கு எமது பரப்புரை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மற்ற நாடுகளில் பொதுவாக uncontested ஆக இருக்கிறம், ஆனால் அது மாறிக் கொண்டு வருகுது. - Nitharsan - 04-22-2006 kurukaalapoovan Wrote:பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் 1 வருடபூர்த்தி ஒட்டி நடந்த சிறப்பு நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கு பற்றிய ஆய்வு 2 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. அதன் போதும் lobbying எமது பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். சிங்களவர்களை விட கனடாவில் தமிழர்கள் அதிகம் படிப்பறிவு கூடிய மிக பெரும் பதிவிகளில் இருந்தாலும் அவர்கள் எங்கள் சமூதாயத்தோடு ஒன்றித்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒன்றில் தமிழன் வெல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டிய நேரத்தில்.. என் பக்க ஆள் தான் வெல்ல வேண்டும் என்று ஒரே பதிவிக்கு இரு தமிழர்கள் போட்டியிட்ட காலமும் கனடாவில் இருத்தது என்பது வருத்த மான செயலாகும். அனால் இதை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்க வேண்டும் - கந்தப்பு - 04-26-2006 ஒரு பேப்பரில் வந்த 'தன்மானமும் கனடியத்தமிழரும்' http://www.orupaper.com/issue45/pages_K__7.pdf canada - valvaizagara - 04-28-2006 அன்பார்ந்த தமிழீழ மக்களே! மூன்று இலட்சம் கனேடியத்தமிழரை நினைத்து வெட்கித்தலை குனியுங்கள். பொறுப்பில்லா ஊடகங்களும், இலக்கற்ற பத்திரிகைகளும் உணர்வு செத்த தமிழரும் மலிந்தபுூமி தமிழினத்தின் அல்லலிலே வாழ்வெடுத்து வந்தவர்கள் இன்று வந்தவழி மறந்து வாயிருந்தும் ஊமையாகி ஊனமுற்றுக்கிடக்கின்றர். விடுதலையைப் பேசிப்பேசி விளம்பரம் தேடியோர் விடுகதைகள் வடிவெடுக்க விலகிப்போய் நிற்கின்றர். எழுதுகோல்முனை உரச நெருப்புப் பொறித்தவர் பழுதடைந்த பனாட்டுப்போல் பிசுபிசுத்துக்கொள்கின்றர். hock: கேளுங்கள்! ஓர்மமுள்ள குரல்வளைகள் ஒடுங்கிக் கிடப்பதேன்? கூர்மையுள்ள எழுதுகோல்கள் குறிதவறி செல்வதேன்? உயிர் துடிக்கும் உணர்வுக்கோலம் உறைத்திருப்பதேன்? வாய் உரிமைமிகு கருத்துரைக்காது ஊமையாய் நடிப்பதேன்? இணைய நண்பர்களே! வடமேற்குப் புலம் வாழும் தமிழரை நோக்கி வினா தொடுத்து உயிர் கொடுங்கள். தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள் சமுத்திரம் கடந்ததனால் சதை செத்துப்போயிற்றோ? - கந்தப்பு - 04-28-2006 இதனையும் பாருங்கள் வல்வை சகாரா http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#183254 |