![]() |
|
உராய்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: உராய்வு (/showthread.php?tid=3818) |
- stalin - 09-04-2005 kuruvikal Wrote:என்ன சொல்லவாறிங்கள் குருவி எனக்கு இளைஞனை உங்களைப்போல களத்திலை தான் தெரியும் அன்று தான்லநேரில் கண்டேன் ..உங்கள் அடிப்படை விமர்சனம் நோக்கம் ஆரோக்கியமற்று இருக்கிறது முதலில் கவிதை படித்து விமர்சனம் வையுங்கள்..சின்சக் போடுவர்களுக்கு சொல்லுங்கோ கவிதையை படிக்கச்சொல்லி...இருவரும் கவிஞர்கள் கவிதையை படித்து ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே ........stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது - kuruvikal - 09-04-2005 KULAKADDAN Wrote:kuruvikal Wrote:குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு தனிப்படக் கருத்து அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்..நீங்கள் நாங்கள் முன்வைத்த அவதானிப்பை சரியாக உள்வாங்காமல் சமாளிப்பைப் பிரதிபலிக்கிறீர்கள் என்றே எண்ணுகின்றோம்..!ஏன் என்றால் கும்ப விடயத்தில் தமிழர் காலாசார சின்னம் அல்லது தமிழர் நடைமுறைகள் என்று ஆதரித்துக் கருத்துக் கூறும் நீங்கள் மறு இடத்தில் தமிழர் கலாசார அல்லது நடைமுறை ஆடை விடயத்தில் அவரவர் விருப்பம் போல என்று கலாசார நடைமுறைகளை மறுதலிக்கவும் செய்கிறீர்கள்..! இது கலாசாரக் குழப்பமா அல்லது அந்த இடத்தில் இது தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்வு இல்லையா...உங்கள் கருத்துக்களின் பிரகாரம் இப்படி கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..!எனது மனதில் பட்டதை சொன்னென் குருவிகளே. அதற்கு யாரிடம் இருந்தும் பதிலை எதிர் பார்த்து கருத்து வைக்கவில்லை. குறிப்பாக நாங்கள் முன்வைத்த அவதானிப்புக்களுக்கு வசி மற்றும் மதன் தங்கள் விளக்கங்களைத் தந்தார்கள்...அதில் குறிப்பிடத்தக்க அளவு நியாயப் பார்வை இருந்து...! அதை எவரும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது...! ஆனால் வேறு சிலர் தங்கள் சுய முரண்பாடுகளோடு வைக்கும் கருத்துகளே பெறப்பட்ட தெளிவைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது..! மற்றும் படி உங்கள் பதிலும் வசியின் பதிலும் கிட்டத்தட்ட ஒரே வகையினதே குளக்காட்டான்...! நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-04-2005 நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] நிச்சயமாக உங்களை விட எங்களை விட ஏன் கலைஞனை விட பல நூற்றுக்கணக்கில் நுட்பப்பார்வையிலான வாசகர்கள் இருக்கிறார்கள்..! படைப்பு கலைஞனுக்கானதல்ல... வாசகனுக்கானது...சமூகத்துக்கானது..! அதைப்படிக்க விமர்சிக்க அவனுக்கு உரிமை இல்லை என்றால் பிறகேன் படைக்கிறீர்கள்..??! எதற்காகப் படைப்பு...யார் உங்களைக் கலைஞன் அல்லது கவிஞன் ஆக்கியது... வாகனே...சமூகமே...! கவிஞன் என்பது பல்கலைக்கழகப்பட்டமல்ல...சமூகம் தரும் பட்டம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]நிச்சயமாக படைப்பு நூற்றுக் கணக்கான வாசகர்க்கு ஆனது,அதனாலேயே புத்தக வெளியீடும் நடந்தது அதனாலேயே இங்கே எல்லோரும் கருத்து எழுதுகிறோம், நீங்களும் கருத்து எழுதுங்கள் ,அதை விமரிசிக்கவும் இங்கே உரிமை இருக்கிறது.இங்கே விமரிசித்திற்கானது உங்கள் விமரிசனம் என்று எழுதப்பட்ட காழ்ப்புணர்வு.எழுதுங்கள் மென் மேலும் எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் யாரென்பது புலன் ஆகும். பல்கலைப் பட்டமே ஒருவனைக் கவிஞ்ஞன் ஆக்கியது என்று இங்கு யார் சொன்னார்,வாசகரே கவிஞ்ஞனை அடயாளம் காட்டுகின்றனர்.இப்ப உங்களைக் கவிஞர் என்று ஏற்க வேண்டும் என்றால் ,புத்தகமா வெளியிடுறது,பாரட்டுறவை காசு குடுத்து வேண்டுவினம் தானே. :wink: ஏன் எப்ப பாத்தாலும் பல்கலைப் படிப்பை பற்றிக் கதைக்கிறியள் ,ஏதாவது உளவியல் ரீதியான தாழ்மை உணர்வோ ?
- tamilini - 09-04-2005 stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது பாத்தீங்களா எனது கருத்தை நான் சொன்னன் சின்சக் என்றீங்க?? இதன் அர்த்தம் என்னவோ? எனது கருத்தை வைக்க எனக்கு சுதந்திரம் இருக்காக்கும். யாருக்கும் சின்சக் போட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை ஸ்ராலின் அவர்களே. நிகழ்ச்சி பற்றிய படங்கள் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன அவற்றை வைத்து விமர்சிக்கின்றார்கள்.
- kuruvikal - 09-04-2005 stalin Wrote:kuruvikal Wrote:என்ன சொல்லவாறிங்கள் குருவி எனக்கு இளைஞனை உங்களைப்போல களத்திலை தான் தெரியும் அன்று தான்லநேரில் கண்டேன் ..உங்கள் அடிப்படை விமர்சனம் நோக்கம் ஆரோக்கியமற்று இருக்கிறது முதலில் கவிதை படித்து விமர்சனம் வையுங்கள்..சின்சக் போடுவர்களுக்கு சொல்லுங்கோ கவிதையை படிக்கச்சொல்லி...இருவரும் கவிஞர்கள் கவிதையை படித்து ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே ........stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது நிச்சயமாக நாங்கள் கவிஞர்கள் அல்ல...! அதற்கான தகுதியையும் நாங்கள் அடையவில்லை...! அதை எதிர்பார்க்கவும் இல்லை..! ஆனால் நூல் கிடைக்கும் போது நிச்சயம் வாசிப்போம்..அதையும் விமர்சிப்போம்..! அந்தக் கவிதைத் தொகுப்பில் வர முதலே சில கவிதைகளை ஏற்கனவே படித்த அனுபவத்தோடும் இளைஞனின் கவிதைகள் தாங்கும் எண்ணக்கருக்கள் தொடர்பில் வந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் பிற செய்திகளின் அடிப்படையிலும் ஒரு சாதாரண வாசகனுக்குள் எழத்தக்க இவ் நிகழ்ச்சி தொடர்பான நெருடலுக்கான அம்சங்களையே சுட்டிக்காட்டி தெளிவுறுத்த விரும்பினோம்...! இது முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு கலைஞனின் படைப்புக்குள் நெருடல்கள் தோன்றுவதை தவிர்க்கவே அன்றி குறைபிடிக்க அல்ல...அதை முதலிலேயே சொல்லிவிட்டோம்..! ஆனால் அதை புரிந்து கொள்ள பலர் முனையவில்லை...முன்னைய முரண்பாடுகளோடு இதையும் கலக்க நிற்கின்றனரே தவிர....வைக்கப்பட்ட கருத்துக்கான தெளிவை பெற முயலவில்லை...அதுவே இவ்வளவுக்கும் காரணம்...! அது தவிர்க்கப்படக் கூடியதே..! இத்தோடு இதை எங்கள் மட்டில் நிறுத்துவது அவசியமற்ற விமர்சனங்கள் பெருகுவதைத் தடுக்கும் என்று எண்ணுகின்றோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-04-2005 narathar Wrote:நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நிச்சயமாக உங்களை விட எங்களை விட ஏன் கலைஞனை விட பல நூற்றுக்கணக்கில் நுட்பப்பார்வையிலான வாசகர்கள் இருக்கிறார்கள்..! படைப்பு கலைஞனுக்கானதல்ல... வாசகனுக்கானது...சமூகத்துக்கானது..! அதைப்படிக்க விமர்சிக்க அவனுக்கு உரிமை இல்லை என்றால் பிறகேன் படைக்கிறீர்கள்..??! எதற்காகப் படைப்பு...யார் உங்களைக் கலைஞன் அல்லது கவிஞன் ஆக்கியது... வாகனே...சமூகமே...! கவிஞன் என்பது பல்கலைக்கழகப்பட்டமல்ல...சமூகம் தரும் பட்டம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ![]() நிச்சயமாக படைப்பு நூற்றுக் கணக்கான வாசகர்க்கு ஆனது,அதனாலேயே புத்தக வெளியீடும் நடந்தது அதனாலேயே இங்கே எல்லோரும் கருத்து எழுதுகிறோம், நீங்களும் கருத்து எழுதுங்கள் ,அதை விமரிசிக்கவும் இங்கே உரிமை இருக்கிறது.இங்கே விமரிசித்திற்கானது உங்கள் விமரிசனம் என்று எழுதப்பட்ட காழ்ப்புணர்வு.எழுதுங்கள் மென் மேலும் எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் யாரென்பது புலன் ஆகும். பல்கலைப் பட்டமே ஒருவனைக் கவிஞ்ஞன் ஆக்கியது என்று இங்கு யார் சொன்னார்,வாசகரே கவிஞ்ஞனை அடயாளம் காட்டுகின்றனர்.இப்ப உங்களைக் கவிஞர் என்று ஏற்க வேண்டும் என்றால் ,புத்தகமா வெளியிடுறது,பாரட்டுறவை காசு குடுத்து வேண்டுவினம் தானே. :wink: ஏன் எப்ப பாத்தாலும் பல்கலைப் படிப்பை பற்றிக் கதைக்கிறியள் ,ஏதாவது உளவியல் ரீதியான தாழ்மை உணர்வோ ? ![]() ஆமாம் சார்... 5ம் கிளாஸோட ஸ்கூல் விட்டமா...அதுதான் தாழ்வுமனப்பான்மை...எப்படிக் கண்டுபிடிச்சியள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sathiri - 09-04-2005 மேலே கருத்தாடும் அனைவரும் தயவு செய்து கவனிக்கவும் நான் நெருடல் என்று கூறியது எனக்கு கிடைத்த தகவல்களின்படி இiளுஞனின் புத்தகங்கள் சாமி முன் அய்யரின் புசைக்குட்படுத்தபட்டதென்று பின்னர் படங்களை பார்த்தபோது அதில் அய்யர் மற்றும் புசைநடந்திருக்குமா என்று எண்ண கூடியமாதிரியிருந்தது பின்னர் மதனும் இளைஞனும் சpல விளக்கங்களை தந்தனர். அய்யர் ஒரு விருந்தினராக தான் வந்தார் அதை விட மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு பண்ண பட்டிருந்தது வேறு சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லையென்று ஆகவே நான் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாத படியாலும் மேலும் விவாதிக்காமல் மன்னிப்பு கோட்டு விட்டு விட்டேன். ஆனால் விமர்சனங்கள் என்பது ஒரு கலைஞனுக்கு முக்கியம் அதுவும் வளர்ந்து வரும் கலைஞனுக்கு மிக முக்கியம்.விமர்சனத்தை எற்று கொள்ளும் பக்குவம் அவனை புடம் போடும் ஆனால் இங்கு குருவியின விமர்சனத்திற்கு சிலர் உடனே கோப பட்டு வார்த்தை(எழுத்து பிரயோகங்கள்) ஒருவர் விமர்சனம் செய்யும் உரிமையை மறுக்கிற மாதிரியுள்ளது.ஒரு படைப்பாளியின் படைப்புகள் எப்படியானவையோ அவற்றை போலவே அவனும் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் நான் இல்லாவிட்டால் அவன் வெறும் எழுத்து வியாபாரி. என்னை பொறுத்தவரை விற்பனைக்காகமட்டும் எழுதுபன் எழுத்தாளன் அல்ல விபச்சாரி அவனது குறிக்கோள் பணம் மட்டுமே . ஒரு கலைஞனுக்கு மிகவும் தேவையானவர்கள் ஆக்கமான விமர்சகர்களே தவிர அவன் செய்வதற்கெல்லாம் சரியென்று ஆமா போடும் ஜால்ராக்கள் அல்ல அது கலைஞனுக்கு கௌரவத்தை கொடுப்பதற்கு பதிலாக கர்வத்தையே கொடுக்கும் இது ஆபத்தானது - narathar - 09-04-2005 kuruvikal Wrote:] கண்டுபிடிப்பல்ல ,கேள்வி, :?: உங்கள் பதில்களில் இருந்து எழுந்தது. :wink:
- kuruvikal - 09-04-2005 narathar Wrote:kuruvikal Wrote:] சரியான கிளவர் நீங்கள்...கீப் இற் அப்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி வணக்கம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-04-2005 kuruvikal Wrote:சரியான கிளவர் நீங்கள்...கீப் இற் அப்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி என்ன சொல்லுறீங்க,எழுதினது விளங்கேல்ல? :wink: நன்றி,வணக்கம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 09-04-2005 ஒருவர் கூட இன்னமும் கவிதைகளைப் படித்து தமது கருத்துக்களை வைக்க முன்வரவில்லை. இதற்குள் விமர்சகர்கள், வித்தகர்கள் என்று நினைப்பு வேறு. வளரும் கலைஞனை உற்சாகப்படுத்த அவனது ஆக்கங்களை விமர்சியுங்கள். கவிதைப் புத்தகத்தை வாங்கவும் காசில்லை என்பது போல் தெரிகின்றாது. அதில் என்ன உள்ளது என்று ஆராயமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து என்னத்தை விமர்சித்துக் கிழிக்கிறீர்கள். யாழ் களம் கள்ளுக்கொட்டில் என்று யாரோ எழுதியதை உண்மையாக்குவது போலுள்ளது இங்குள்ள கருத்துக்கள். :twisted: - Mathuran - 09-05-2005 இளைஞ்ஞனின் உராய்வு நூலினை நோர்வேயில் எங்கு பெற்றுக்கொள்ளலாம்? மதன் முடிந்தால் அறியத்தாருங்கள். - Mathan - 09-05-2005 நோர்வேயில் அங்குள்ள ஒருவர் மூலம் பெற்று கொள்ள முடியும் இளைஞன் அறியத்தருவார். - இளைஞன் - 09-05-2005 <b>நெருடல் என்ன?</b> கும்பமா? குத்துவிளக்கா? குருக்களா? இசையா? நடனமா? இளைஞனின் உடையா? பெரியார் ------ பெரியார் வழியில் பிசகல் நடந்திருப்பதாக கூறுவது எதனால்? இங்கே பெரியார் எங்கு வந்தார்? இளைஞன் பெரியாரை நேசிப்பதால், இளைஞனை பெரியாராகவோ அல்லது பெரியாரை பின்பற்றுபவனாகவோ கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!! இளைஞன் பொதுவுடமை பற்றிப் பேசினால், இளைஞனை கார்ல் மார்க்ஸ் ஆக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நிகழ்வு ஒழுங்கமைப்பு -------------- நிகழ்வு ஒழுங்கமைப்பு இளைஞனால் மேற்கொள்ளப்படவில்லை.உலகத் தமிழ்க் கலையகமும், அப்பால் தமிழுமே நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தன. உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒருங்கமைத்தவர் திரு எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி). அதேபோல் உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைத்தவர் திரு. கந்தையா இராஜமனோகரன் (இலண்டன்). அப்பால் தமிழ் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைப்பில் பங்கேற்றவர் கவிஞர் கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்). நூலாசிரியன் இளைஞன் (யேர்மனி). உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக இலண்டனில் நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன் ஒரு தமிழ், சைவப் பற்றாளர் என்பது அவரை அறிந்த பலருக்குத் தெரியும். தமிழ் இலக்கிய நிகழ்வுகள் பலதும் இவர்கள் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இலக்கியத்திற்கு உரிய இடத்தை அளிப்பவர்கள் - அந்த வகையில் இளைஞனின் படைப்பும் அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. (சாந்தி அக்காவின் முதல் கவிதை நூலும் இவர்கள் மூலம்தான் இதே மண்டபத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) நிகழ்வு அரங்கு மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது (நூல் வெளியீட்டை மையமாகக் கொண்டு). கண்காட்சி, நூல் வெளியீடு, கலை நிகழ்வு. ஆரம்பத்தில் நிகழ்ச்சி நிரலில் கலைநிகழ்வு இருக்கவில்லை என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அதற்கு பதிலாக குறும்பட நிகழ்வே இருந்தது. ஆனால் கோவிலில் குறும்படம் திரையிடுவதில் சில சிக்கல்கள் எழுந்தன. அதனாலேயே அந்நிகழ்வு கலைநிகழ்வாக கடைசிநேரத்தில் மாற்றப்பட்டது. கலைநிகழ்வை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை திரு. கந்தையா இராஜமனோகரன் எடுத்துக் கொண்டார். அவர் இசை மற்றும் நடன நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினார். எனது மூன்று கவிதைகள் மெட்டமைத்து பாடப்பட்டன (அதில் ஒன்று ஏற்கனவே இறுவட்டில் வந்த பாடல்). இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. இரண்டும் பரதநாட்டிய வகை. நிகழ்வு அரங்கின் வாசலில் கும்பம் வைக்கப்பட்டது. குத்துவிளக்கு வைக்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்விற்கு இடம் தந்தவர்கள் என்பதால் அவர்களை கெளரவிக்கும் பொருட்டு வாழ்த்துரை நிகழ்த்த குருக்கள் அழைக்கப்பட்டார் (நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களால்). கோவில் குருக்கள் தன்னை அடையாளப்படுத்தும் உடையில் வந்தார். திரு. கந்தையா இராஜமனோகரன் வேட்டி சட்டையுடன் வந்தார். இளைஞன் தனதுடையில் வந்தான். இவ்வளவும் நடந்தது. இங்கே இளைஞனின் கருத்துக்கும் (கவிதைகள் உட்பட) செயலுக்கும் என்ன முரண்? விளங்கவில்லை? பரதக் கலை தமிழர் கலையா என்பதில் முரண்பாடுள்ள கருத்துக்கள் இருக்கலாம். தேவதாசிகள் நடனமாக இருக்கட்டும். தமிழர் நடனக் கலையின் வளர்ச்சியடைந்த வடிவமாகக் கூட இருக்கட்டும். கலையை கலையாகத் தான் இளைஞன் பார்க்கிறான். அவற்றில் அந்த இளைஞர்களின் திறமைகளைத்தான் இளைஞன் பார்க்கிறான். அடுத்தவர் கலைகளாயிருந்தாலும் அதனை கலையாக ஏற்றுக்கொண்டு இரசிப்பதில் இளைஞனிற்கு தடையில்லை. எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை. திரு. கந்தையா இராஜமனோகரன் அணிந்தது கூட தமிழர் உடையா என்பதில் மாற்றுக்கருத்துக்களும் உண்டு. அதை விடுவோம். இளைஞன் அணிந்தது மேலைத்தேய உடைதான். (இளைஞன் நுல் வெளியீட்டு நிகழ்வில் மட்டும் தமிழனாக பாவனை செய்யவேண்டியதில்லை. இளைஞன் இயல்பாக எதனை அணிவானோ அதனைத் தான் நிகழ்விறகும் அணிந்தான். இதுதான் இளைஞனின் பண்பு - இது இளைஞனை அறிந்தவர்களுக்குத் தெரியும்.) இதனால் இளைஞனின் கருத்துக்கும் செயலுக்கும் என்ன முரண்பாடு என்பது தான் தெரியவில்லை. இப்படித்தான் செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தையும், மூடநம்பிக்கைகளையும் இளைஞன் விரும்புவதில்லை. இப்படியும் செய்யலாம் என்கிற புதுமையைத்தான் இளைஞன் விரும்புகிறான். மங்கள விளக்கேற்றியதில் எந்த முட்டாள்தனமும் எனக்குத் தெரியவில்லை. ஒளியேற்றி நிகழ்வைத் தொடக்குவதில் நிறைவான கருத்து வெளிப்படுகிறது. ஆனால், மங்கள விளக்கேற்றனால் தான் நிகழ்வு நடைபெறுமென்றில்லை - மங்கள விளக்கேற்றாமலும் நிகழ்வை நடாத்தலாம் - அப்படி நடத்தினாலும் நிகழ்வு நடக்கும், நிறைவு பெறும். இளைஞன் இப்படித்தான். கோயில் குருக்களை எவரும் மதம் சார்ந்து அழைக்கவில்லை. இடத்தை இலவசமாகத் தந்தவர்கள் என்றமுறையிலேயே அழைக்கப்பட்டார். மதங்களையும் கடவுளையும் அவற்றினூடான மூடத்தையும் தான் இளைஞன் வெறுக்கிறான் - புறக்கணிக்கிறான் - ஒதுக்குகிறான். மனிதர்களை அல்ல!!! நீங்கள் சைவக் குருக்கள் - நான் கடவுளையும் மதத்தையும் ஏற்பதில்லை - எனவே என் நிகழ்வுக்கு வராதீர்கள் - அது தீட்டு - என்று மனிதர்களை புறக்கணிக்கச் சொல்கிறீர்கள்? அப்படியானால் இளைஞனிடம் உள்ள மானுட நேயத்தை எங்கே குழிதோண்டிப் புதைப்பது? பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் - எதிராளியாகக் கூட இருக்கலாம் - ஆனால் இங்கே இலக்கியம் என்ற ஒன்றில் தான் ஒன்றித்தோம். இதேபோலத்தான் நிகழ்விற்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ஊடகங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஓரளவு ஊகிக்க முடிகிறது: இளைஞன் பெரியாரின் கருத்துக்கள் சிலவற்றை வெளிப்படுத்துவதால், பெரியாரையே இளைஞனுக்குள் பார்க்க விளைகிறீர்கள். இளைஞன் இளைஞனாகவே இருக்கிறான், இருப்பான். எவரையும் இளைஞன் பின்பற்றுவதில்லை. பெரியாரையும் இளைஞனும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.பிள்ளையார் படத்தை நடுரோட்டில் வைத்து செருப்பால் பெரியார் அடித்தது போல் இளைஞனும் அடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான். நிகழ்வு ஒழுங்கமைப்பில் இளைஞனிற்கும் சில உராய்வுகள் உள்ளன. நெருடல்கள் உள்ளன. நிகழ்வின் இறுதிவரை நின்றவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். எனது ஏற்புரையின் போது நான் கூறியது: "...இந்தக் கவிதை நூலின் பெயரும் உராய்வு, நிகழ்வும் உராய்வு...". உராய்வுகள் இருந்தாலும் நிகழ்வு நிறைவாய் அமைந்ததில் இதளைஞனிற்கு மகிழ்ச்சியே. இளைஞனின் கவிதை எழுதலின் ஆரம்ப காலத்தில் உற்சாகப்படுத்தியவர்கள், இளைஞனின் நண்பர்கள், இளைஞனால் நேசிக்கப்படுபவர்கள், இளைஞன் மீது பெரியதொரு எதிர்பார்ப்பை வைத்திருப்போர் என்று பலர் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்தமை இளைஞனின் மனதுக்கு நிறைவைத் தந்தன. இளைஞன் தானாக ஒழுங்கமைக்கும் ஒரு நிகழ்வாக இருந்தால், இளைஞனின் புதிய சிந்தனைகள் வடிவம் பெறும் - இளைஞனின் கருத்துக்கள் உருவம் பெறும். அதேபோல் எப்போதும் இளைஞனின் கருத்துக்கும் செயலுக்கும் முரண் ஏற்படுவதை இளைஞன் அனுமதித்ததில்லை - அனுமதிப்பதில்லை. இனளஞனின் செயலோடு முரண்படுமாயின் அதனை இளைஞன் கருத்தாக முன்வைப்பதில்லை. [*** இளைஞனின் புதிய உலகம் எது? இளைஞனின் கருத்துக்கள் என்ன? என்பதை உள்வாங்காமல் - மேலோட்டமாக இளைஞனின் கருத்துக்களைப் பார்த்து - இளைஞனை பெரியாராக உள்வாங்கியதால் வந்த கருத்தாகவே இவற்றைப் பார்க்கிறேன்.] - kuruvikal - 09-05-2005 Quote:இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான். Quote:எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை. நன்றி இளைஞன்...! உங்கள் கருத்துக்களுக்கு..! இளைஞன் தமிழன் என்று எழுதினால் தான் தெரிகிறது...மற்றும்படி தெரியவில்லை...! கூடி இருந்தவர்களும் மேடையில் ஆடியவர்களும் பாடியவர்களும் தான் சில அடையாளங்களை தமிழர் என்பதற்கு தந்ததாகத் தெரிந்ததால் தான் என்னவோ...நெருடல்கள் வெளிப்பட்டன போலும்..! தமிழ் தெரிந்த ஆங்கிலேயன்...தமிழன்...! இது ஒன்றும் போதும் புதிய உலகம் பற்றி அறிவதற்கு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 09-07-2005 குருவி அண்ணா Hospital<img src='http://img237.imageshack.us/img237/2351/rooster39vt.gif' border='0' alt='user posted image'> போகிறார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 09-08-2005 Danklas Wrote:<img src='http://img296.imageshack.us/img296/4175/nool783qo.jpg' border='0' alt='user posted image'> இளைஞன் அண்ணாவின் உராய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டன் அங்கிள் உங்கட புலனாய்வு சரியில்லை..முக்கிய புள்ளியின் தலையைப் போடலை நீங்க :twisted: :wink: :wink: - அருவி - 09-09-2005 Mathan Wrote:[quote=Aruvi] அப்ப என்ன தமாஷாவா கேட்கிறம்? :evil: - Mathan - 09-09-2005 லண்டனில் புத்தகங்கள் கேட்போருக்காக அவற்றின் ஒரு பகுதியை என்னிடம் தந்திருந்தார் இளைஞன். அந்த சமயம் நீங்கள் கனடாவில் கேட்டதும் தபால் மூலம் அனுப்பி வைக்கவே, வேணுமானல் சொல்லுங்கள் கனடாவிற்கும் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். அதன் பின்பு உங்களிடமிருந்து பதில் எதையும் காணவில்லை. தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன். - வெண்ணிலா - 09-09-2005 இலங்கைக்கு திங்கட்கிழமைதான் புத்தகம் வருமாம். திங்கட்கிழமை வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டியதாகிட்டுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|