| Thread Review (Newest First) |
| Posted by அனிதா - 06-13-2005, 10:02 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by வெண்ணிலா - 06-13-2005, 07:40 PM |
Quote: சிம்பு: ''மோதல் வளர்த்தேன்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேட்டுக்கு வேட்டு நல்லாக இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by kavithan - 06-13-2005, 01:52 AM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by vasisutha - 06-13-2005, 01:32 AM |
|
<b>வேட்டுக்கு வேட்டு</b>! இந்த வாரம் 'வேட்டுக்கு வேட்டு'! அதிரடி பாட்டுப் போட்டி நிகழ்ச்சி யின் தொகுப்பாளராகத் தொடை தட்டி வருகிறார் பாரதிராஜா... அரங்கத்தில் பலத்த கரகோஷம்! <img src='http://img186.echo.cx/img186/2931/parathirasa4zb.png' border='0' alt='user posted image'> <b>பாரதிராஜா:</b> ''என் இனிய தமிழ் மக்களே... இந்தத் தேனி அல்லிநகரத்து பால்பாண்டி, வண்ணத்திரையில் பாரதிராஜாவாகி, இதோ இன்று சின்னத்திரைக்கும் சின்னச்சாமியாக வருகிறான். என்ன திரையாக இருந்தாலென்ன... என் திரை தமிழ்த்திரை! யெஸ்... ஐ எம் பிரவுட் ஆஃப் திஸ்! இதோ, வெள்ளாமையின் முதல் மரக்கா நெல்லாக இந்த 'வேட்டுக்கு வேட்டு' நிகழ்ச்சியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்!'' கைத்தட்டல் பின்னுகிறது. <b>பாரதிராஜா:</b> ''நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் தனுஷ். கிராமத்து ராசா கஸ்தூரிராஜா பெற்றெடுத்த மம்முத ராசா. தம்பி தனுஷ், வாடா!'' என்றதும் மீண்டும் கைத்தட்டல். தொடர்ந்து... <img src='http://img186.echo.cx/img186/3411/thanus9fq.png' border='0' alt='user posted image'> ''தனுஷக்கு எதிரான போட்டியாளர் சிம்பு. அவர் மம்முதராசா என்றால் இவர் மன்மதன். விஜய டி.ஆர். வீட்டுச் சிங்கக் குட்டியே, மேடைக்கு வா!'' என்றவர் தனுஷிடம் திரும்பி, ''ஓகே! ஆக்ஷன்... பாடு தமிழா!'' என்று கர்ஜிக்க, திகிலாகிற தனுஷ் சமாளித்தபடி, 'தேவதையைக் கண்டேன்... காதலில் விழுந்தேன்' பாடல் மெட்டில் ஆரம்பிக்கிறார். <b>தனுஷ்:</b> ''சினிமாவுக்கு வந்தேன் மூணு ஹிட்டு கொடுத்தேன் ஹாட்ரிக் ஃப்ளாப் கொடுத்துவிட்டேன் செல்வா அண்ணன் கூட்டணியில் 'புதுப்பேட்டை' பண்றேன் மன்மதனை ஜெயித்திடுவேன் உன் மூக்கோடு...'' <b>பாரதிராஜா (குறுக்கிட்டு):</b> ''அருமை... அருமை. மூ... இந்த எழுத்தில் மணி ஒலித்திருக்கிறது. சிம்பு, நீங்க மூனா வரிசையில் பாடலை ஆரம்பிக்க வேண்டும். மு மூ மொ மோ... ஏதாவது!'' என்றதும், 'காதல் வளர்த்தேன்' மெட்டில் சிம்புவிடமிருந்து சீறி வருகிறது பாடல். <img src='http://img186.echo.cx/img186/2914/simpu4if.png' border='0' alt='user posted image'> <b>சிம்பு:</b> ''மோதல் வளர்த்தேன் மோதல் வளர்த்தேன் உன் மேல் சுள்ளான் உன் மேல் நானும் மோதல் வளர்த்தேன் 'தம்'ம போட்டு 'அலை'ஞ்சப்போ கும்மாங்'குத்து' வாங்கியிருந்தேன் இன்னிக்குத்தான் வல்லவனா நானும் மாறியிருக்கேன் ஏய் சுள்ளான் சுள்ளான் உன்னை ஜெயிப்பேன் நயன்தாரா உதட்டை நானும் கடிப்பேன்... ஏய் சுள்ளான்...'' <b>பாரதி:</b> ''அய்யய்யே... பயமுறுத்தறானுங்களே! மணி சு என்ற எழுத்தில் ஒலித்திருக்கிறது. தனுஷ் சு வரிசையில் பாடலாம்!'' 'துண்டக் காணோம்' பாடல் மெட்டில் அதிரடியாக வருகிறது அடுத்த பாடல். <b>தனுஷ்:</b> ''சிம்பக் காணோம் கம்பக் காணோம் புதுப்பேட்ட பண்ணப் போறோம் என்ன செய்வே நீதான் என்ன செய்வே அண்ணந் தம்பி சேரப்போறோம் அடுத்த ஹிட்டு கொடுக்கப் போறோம் என்னம்மா செய்வே நீதான் என்னம்மா செய்வே..'' <b>பாரதி:</b> ''மணி 'மா'வில் ஒலித்திருக்கிறது. லிட்டில் சூப்பர் ஸ்டாரே, பாடுய்யா!'' <b>சிம்பு:</b> ''மன்மதன் ஹேஹே மன்மதன் சொத்தை சொத்தை சொத்தை என் எதிரியெல்லாம் சொத்தை ஜெயிக்கலைன்னா எழுதித் தர்றேன் டாடியின் சொத்தை'' <b>பாரதி:</b> ''தை. மணி ஒலித்த எழுத்து தை. பாடு, தனுஷ் பாடு!'' தனுஷ் தடுமாறி நிற்க, நேரம் முடிந்துவிடுகிறது. <b>பாரதி:</b> ''ஓ... வாட் எ பேத்தடிக் சிச்சுவேஷன்! உனக்கான நேரம் முடிந்துவிட்டது தனுஷ். நீ வீட்டுக்குக் கிளம்பு!'' என்றதும், தனுஷ் வெளியேறுகிறார். கூடவே 'ஊஊஊ' என ஜாலியாகக் கத்தியபடி சிம்புவும்! <b>பாரதி:</b> ''ஏய் சிம்பு... நீ எதுக்கு வெளியில போற? உனக்கு ஆட்டம் இன்னும் முடியலை!'' <b>சிம்பு:</b> ''என்னைப் பொறுத்தவரை முடிஞ்சிடுச்சு போட்டி! அடுத்த ஆட்டத்துல பார்ப்போம், இன்னொரு வாட்டி! ஜெயிக்கறது புதுப்பேட்டையா, வல்லவன் கோட்டையா... ஊஊஊ''என்றபடி சிம்பு வெளியேறிவிடுகிறார். <b>பாரதி:</b> ''வெளங்க மாட்டானுங்க..! 'போட்டியில அலையற ஹீரோ பொசுங்கிருவான், ஓட்டுக்கு அலையற ஹீரோ ஒழிஞ்சிடுவான்'னு அடுத்த பேட்டிக்கு தலைப்பு கொடுத்துற வேண்டியதுதான். ஓகே, லீவ் இட்! நாம அடுத்த போட்டியாளர்களை அழைப்போம். இதோ விருது நாயகன் விக்ரம், விறுவிறு நாயகன் சூர்யா... கமான், கமான்!'' என்றதும், விக்ரமும் சூர்யாவும் மேடைக்கு வர, விசில் பறக்கிறது. <b>பாரதி:</b> ''உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. விக்ரம், உனக்கு விருப்பமான பாடலைப் பாடு!'' <b>விக்ரம்:</b> ''அந்நியன் சாங்ஸெல்லாம் கேட்டீங்களா? இட்ஸ் நைஸ் யு நோ! அதிலே வர்ற 'அண்டங்காக்கா கொண்டக்காரி' மெட்டுல ஒரு பாட்டு பாடறேன்... ''நேஷனல் விருது வின்னர்காரன் ரண்டக்க ரண்டக்க ரண்டக்க முப்பது கெட்டப் மூஞ்சிக்காரன் ரண்டக்க ரண்டக்க ரண்டக்க 'மஜா' பண்ணும் சித்தன் நான்தான் ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அருவா மீச ஆளு நான்தான்...'' <b>பாரதி:</b> ''மணி ஒலித்த எழுத்து அ குறில். அடிச்சுத் தூக்கு சூர்யா!'' என்றதும், 'அம்புலிமாமா... அம்புலிமாமா' பாடல் மெட்டில்... <b>சூர்யா:</b> ''அந்நியன் மாமா அந்நியன் மாமா சேலஞ்ச் உனக்கு நான்தானே கஜினியாகிப் படையெடுத்தே ரேஸில் முந்த வருவேனே... ஏய்... அழகி!'' <b>பாரதி:</b> ''அடி பின்றானுங்களே! யப்பா, மணி இப்ப 'ஏ'ல ஒலிச்சிருக்கு. ஏல ஏதாவது பாடுங்கடே!'' ஜில்லென்று பிதாமகனின் 'எளங்காத்து வீசுதே' பாடல் மெட்டில் இதோ... <b>விக்ரம்:</b> ''எளங்காத்து வீசுதே கிசுகிசுவும் பரவுதே வளையாத மூங்கிலில் வதந்தி வளைஞ்சு ஓடுதே ஊரும் முழிச்சுக் கேக்குதே...'' <b>பாரதி:</b> ''அடடா! குத்து குத்துனு குத்துறீங்களேப்பா! கே வரிசையில் மணி ஒலித்திருக்கிறது. இது சூர்யாவின் முறை!'' என்றதும் 'மாயாவி' பட 'காத்தாடி போல' பாடல் மெட்டில்... <b>சூர்யா:</b> ''காத்தாடி போல ஏன் ரீலு சுத்தறே கண்டகண்ட நியூஸ் கேட்டு கடுப்பேத்தறே நட்புன்னு சொன்னா நீயும் நம்ப மாட்டறே லக்கலக்க பாத்தும்கூட திருந்த மாட்டறே...'' <b>பாரதி:</b> ''அப்படியே ம, மா, மி, மீ, மு, மூனா வரிசையில் இழுத்துப் பிடிச்சு நீ போட்டுத் தாக்குய்யா விக்ரம்!'' சாமி பட பாடலின் மெட்டில் சாமியாடுகிறார் <b>விக்ரம்:</b> ''மொட்ட போட்டா சீயான்டா பீடா போட்டா ஜெமினிடா பாதி கமல் பாதி ரஜினி நானுடா தொப்பி போட்டா சாமிடா குடுமி வெச்சா அந்நியன்டா...'' <b>பாரதி:</b> ''மணி ஒலித்த இடம் டாவன்னா! சூர்யா, இட்ஸ் ஸோ டிஃபிகல்ட்!'' <b>சூர்யா:</b> ''டாவன்னாவா?'' என யோசிக்க, அவருக்கான நேரம் முடிந்து விடுகிறது. சூர்யா சோகமாக வெளியேற, அதைப் பார்த்து குஷியாகி, <b>விக்ரம்:</b> ''ஏய்... டாவுல 'டாடி டாடி ஓ மை டாடி'னு ஒரு பாட்டு இருக்கு, நைஸ் யு நோ! இதுகூடத் தெரியலை, ஹைய்யோ ஹைய்யோ!'' இதைக் கேட்டு கடுப்பாகி, <b>பாரதி:</b> ''அதை நீ சொல்லக் கூடாது. ஏன் எல்லா ஹீரோக்களும் சொன்ன பேச்சைக் கேட்காம முந்திரிக்கொட்டை மாதிரி டார்ச்சர் பண்றீங்க. நீ பண்ணினது விதிமுறை மீறல். நீயும் அப்படியே கிளம்பு!'' என்று விக்ரமை வெளியேற்றுகிறார். <b>பாரதி:</b> ''இப்போது செம சூடான போட்டியாளர்களை அழைக்கப் போகிறான் உங்கள் பாரதிராஜா. ஒன்று மலை... இன்னொன்று தலை. இதோ உங்கள் முன்பு விஜய், அஜீத்!'' என்றதும், 'உய்உய்உய்'என அரங்கம் களேபரமாகிறது. <img src='http://img186.echo.cx/img186/3284/viaji1rj.jpg' border='0' alt='user posted image'> <b>அஜீத் (வந்தவாக்கில்):</b> ''ஆஸ்பட்டுட்டேன். நாந்தான் மொதல்ல பாடுவேன். யாராவது தடுத்தா அட்ச்சிடுவேன், மறிச்சா மித்ச்சிடுவேன்!'' <b>பாரதி:</b> ''ஆத்தீ... தம்பி இருக்கிற வேகத்தைப் பார்த்தா பிராண்டி வெச்சிடுவான் போலிருக்கே. எதுக்கு வம்பு... யெஸ்! ஐ வில் காம்ப்ரமைஸ். (சத்தமாக) அஜீத், நீங்களே பாடுங்க!'' 'அட்டகாசம்' படப் பாடல் மெட்டில் ஆவேசமாகிறார் அஜீத். <b>அஜீத்:</b> ''என்னப் பத்தி இந்த ஊருக்குள்ள கேளு பஞ்ச்சில் பொளக்கறவன் அஜீத்துனு பேரு தீபாவளி தல தீபாவளி... தீபாவளி தல தீபாவளி!'' என அஜீத் ஆட, மேடையே குலுங்குகிறது. <b>பாரதி:</b> ''மணி தீ என்ற எழுத்தில் ஒலித்திருக்கிறது. தீ நெடில் அல்லது தி குறில்...'' <b>விஜய்:</b> ''ண்ணா... இது அநியாயமா இருக்குங்ணா! கண்டவங்க பாடி முடிக்கிற இடத்துலயிருந்து நான் எதுக்குங்ணா ஆரம்பிக்கணும்?'' என்றபடி, 'திருப்பாச்சி' படப் பாடல் மெட்டில் இஷ்டத்துக்குப் பாட ஆரம்பிக்கிறார். ''நீ எந்த ஊரு, உனக்கில்ல பேரு தலைக்கெல்லாம் மவுசு இல்ல... இல்ல இல்ல நான்தானே ஸ்டாரு, போட்டேன் டாப் கியரு பண்ணாத பஞ்ச் டயலாக் தொல்லை...'' <b>பாரதி:</b> ''மணி இப்போது...'' என பாரதிராஜா ஆரம்பிப்பதற்குள், ஆவேசமாகக் குறுக்கிட்டு 'ஜி' படப் பாடலைப் பாடுகிறார் அஜீத். ''வம்ப வெலைக்கு வாங்கும் நடிகன்டா பேட்டி கொடுத்து உன்னைக் கிழிப்பேன்டா கார் ரேஸ§ இல்லடா உன் ரேஸ§ உண்டுடா...'' <b>பாரதி:</b> ''டேய்! நான்தான் நடுவர்... என் இனிய தமிழ் மக்களே... திஸ் ஈஸ் பப்ளிக் பிளேஸ்'' என்றெல்லாம் ஏதேதோ சொல்ல, எதையும் கண்டுகொள்ளாமல் விஜய் 'மதுர' பாடலை அள்ளிக்கொட்ட, போட்டி தொடர்கிறது... <b>விஜய்:</b> ''மச்சான் பேரு தளபதி நின்னா உனக்குத் தலைவலி நான் றெக்க கட்டி தியேட்டரெல்லாம் காசு அள்ளும் கலெக்ஷன் புலி!'' எனப் பாட, அரங்கத்தில் கலவர முன்னோட்டம். <b>அஜீத்:</b> ''தலய எதிர்த்தா என்ன நடக்கும்? மலைக்கெல்லாம் சீக்கிரம் மணியடிக்கும்'' என்று 'வில்லன்' படப் பாடல் மெட்டில் பாட ஆரம்பிக்கிறார். விஜய்யும் விடாமல், 'திருப்பாச்சி' படப் பாடல் மெட்டிலேயே, ''அப்ப கொடுத்த ஃப்ளாப்புல ஆடுற நீ மப்புல கைய நீட்டாதே சொடுக்கி வசனம் பேசாதே'' என்று சூட்டைக் கிளப்ப... <b>பாரதிராஜா:</b> ''வேட்டுக்கு வேட்டு நடத்த வந்தா, இவனுங்க ரெஸ்லிங் நடத்த ஆரம்பிச்சிடுவானுங்க போலிருக்கே! ஏ... யாருப்பா அங்கே?'' என்றதும் காவலாளிகள் வந்து, திமிறிக்கொண்டு ஆடும் விஜய்யையும் அஜீத்தையும் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போகிறார்கள். <b>பாரதி:</b> ''அப்பாடா... நம்மளை டென்ஷன் பண்ணிப் பார்க்கறதே இவனுங்களுக்கு வேலையா இருக்கு. ஓகே! இந்த நிகழ்ச்சியில் போட்டி போட்ட அத்தனை பேரும் தமிழ்த்திரை நடத்துகிற ஒரு நிகழ்ச்சியில் இலவசமாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். திஸ் இஸ் எ ஃபென்டாஸ்டிக் கிஃப்ட்!'' எனப் பாரதிராஜா வலைவிரிக்க, அத்தனை ஸ்டார்களும் ஸ்டாப் பிளாக்கில் எஸ்கேப்! vikatan |
| Posted by sinnappu - 04-20-2005, 06:08 PM |
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by தூயா - 04-17-2005, 11:24 AM |
| இப்படி கத்தி கத்தி தான் ஆளையே காணோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by KULAKADDAN - 04-16-2005, 04:54 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by shanmuhi - 04-16-2005, 09:04 AM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by vasisutha - 04-16-2005, 04:04 AM |
|
<span style='font-size:25pt;line-height:100%'>கவுண்(டர்)டென்</span> அடங் கொக்கமக்கா... வணக்கமுங்க! நேரடியா நிகழ்ச்சிக்குப் போலாண்டா டேய்! கேமரா தலையா! <i>என கவுண்டமணி சவுண்டுவிட, அதிரடி கவுண்ட் டவுன் ஆரம்பமாகிறது. </i> <img src='http://img92.echo.cx/img92/7929/p1541bl.jpg' border='0' alt='user posted image'> இந்த வாரம் பத்தாவது இடத்துல இருக்கறது <span style='color:orange'>மன்மதன்! படத்தோட ஹீரோ இருக்கானே, சரியான பம்பைத் தலையன் பிரேமானந்தா. பள்ளிக்கூட வயசுல வாய்லேருந்து பல்பம் எடுத்துத் தர்றேன்னு சொல்லி ஹீரோவை ஏமாத்திடறா ஒரு பொண்ணு. அந்தக் கடுப்புல வளர்ற ஹீரோ பின்னால பெரிய சாமியாராகி, வாய்லேருந்து லிங்கம் எடுக்கறேன்னு டமாஷ் பண்ணி, பல பொண்ணுங்களை உஷார் பண்றான். ஒரு நாளு, இந்த லிங்க வாயனை பொசுக்குனு போலீஸ் அமுக்கிருது. கடைசியா கோர்ட்டு கொடுக்கற ஷாக்கிங் தீர்ப்போட முடியுது படம். முடி வளர்த்தேன், முடி வளர்த்தேன்... உன்னால் புள்ள வாயிக்குள்ள லிங்கம் எடுத்தேன்!ங்கற பாட்டுல பிரேம்ஸ் அழுது பொரண்டு புழுதி கிளப்புறாரு. அடிக்கடி லிங்கம் எடுக்கும்போது மூக்குல ரத்தம் வர்றதும், அப்பப்போ பேக்கிரவுண்ட்ல ஹேய்... ஹேய்... மன்மதானந்தா! மாட்டப் போறானந்தா!னு வர்ற மியூஸிக்கும் கலக்குதுடா டேய்! ஹீரோயின் திவ்யா மாதாஜிக்கு இதில் பெரிய வாய்ப்பு இல்லேன்னாலும், பிரேம்ஸை டாவடிச்சு, இடையில ஏமாத்திட்டுப் போயிடுது மர்ம ரோசா. மொத்தத்துல மன்மதன்... மண்ணக் கவ்வுன மதன்! <i>என்று அஷ்டகோணலாக முகம் காட்டுகிறார். </i> <b>கவுண்டமணி:</b> ஆங்... இப்ப அடுத்ததா ஒன்பதாவது இடத்துல இருக்கிற படம் காதல்! இங்கிலாந்து இளவரசரு வெள்ளெலித் தலையன் சார்லஸ்தான் ஹீரோங்கண்ணா! கமீலாங்கற கவுனு போட்ட கெழவிதான் ஹீரோயினாம். என்னா பெரிய பொல்லாத கதை? பொடலங்கா கதை! ஹீரோ தன்னைவிட வயசுல முத்திப்போன முள்ளங்கி மண்ட கமீலாவ லவ்வுறாரு. ஆனா, அவரோட அரச குடும்பத் துல அதை எதிர்க்கறானுங்க. அதனால கடுப்பாகி, ஹீரோவும் ஹீரோயினும் நாட்டை விட்டு அயர்லாந்து, சுவிட்சர்லாந்துனு நட்டு கழண்டு ஓடிப்போயி ஜாலி பண்றாங்க. டென்ஷனாகி அவங்களைப் பிரிக்குது அரச குடும்பம். அதுல டார்ச்சராகி ஙேஙேஙேஙேஙே னு வளராத தாடியச் சொறிஞ்சிக்கிட்டு அலையறாரு சார்லஸ. அதப் பார்த்து பயந்துபோயி, சார்லஸ மகனுங்களே சேர்ந்து டேய் டாடி நல்லாருடா!னு காதலைச் சேர்த்து வைக்கிறானுங்க. இப்ப ஒரு பாட்டு ஸீன். பாத்தா பாருங்க... பாக்கலைன்னா போங்கடா டேய் <i>என்றதும், கமீலாவை உப்பு மூட்டை தூக்கியபடி சார்லஸ் பாடுகிற பாடல் வருகிறது. </i> <i>உனக்கென வாழ்கிறேன், அரச பதவியும் தருகிறேன் ரெண்டு மகனுங்க இருக்கையில் நான் டாவு அடிக்கிறேன் கமீலாவே.... கமீலாவே... பண்ணிப்புட்டேன் கண்ணாலமே!</i> <b>கவுண்டமணி:</b> கெழவன் ரவுசப் பாத்தீங்களா! காதல்... முதியோர் காதல்! அடுத்ததா எட்டாவது இடத்துல இருக்கறது ஜி! நம்ம கேப்டன் விஜயகாந்து நடிகர் விஜயகாந்தாவே வந்து கலக்கியிருக்காருங்கோ. ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தா என்னாகும்ங்கறதுதான் கதை. நடிகர் சங்க எலெக்ஷன்ல நிக்கிற விஜயகாந்துக்கு கலைத் துறை மந்திரிகிட்டே இருந்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டல் வருது. கடுப்பாகிற விஜயகாந்த், சங்க தேர்தல்ல மட்டுமில்லை, உங்க தேர்தல்லயும் நிப்பேன்னு சொல்லி, பொசுக்குனு அரசியல்ல குதிக்கிற கதை. வழக்கமா காலால அடிக்கிறவரு, இதுல அத்தனை பேரையும் வாயால வசனம் பேசியே கொல்றாரு. கள்ளக்குறிச்சி, மதுரை, தூத்துக்குடினு ஊர் ஊரா மீட்டிங்லயே ஷட்டிங் நடத்தின படம். ஜி... ஓவர் பேச்சு! அந்தக் கண்றாவியை நீங்களும் கொஞ்சம் பாருங்க சாமியோவ்! <i>சுற்றி கரை வேட்டிகள் இருக்க நடுவே கன்னச் சதையாட, கண்கள் சிவக்கப் பேசுகிறார் விஜயகாந்த்</i>, என் கையில பட்ட ஒரு திருட்டு வி.சி.டி, நான் பக்கத்துல பார்த்த சி.எம். ஸீட்டு நான் எடுத்துக்கறேன். ஏய்... எனக்கு அரசியல்ல தளும்பு வாங்கவும் தெரியும், அழும்பு பண்ணவும் தெரியும். இப்ப சொல்றேன் கேட்டுக்க... தமிழ் நாட்டுல மொத்தம் முப்பத் தோராயிரம் ஊராட்சி... <i>சட்டென்று கட் ஆகிறது ஸீன். </i> <b>கவுண்டமணி:</b> அடங்குங்க புள்ளிவிவரத் தலையரே. ச்சீ... தலைவரே! ஓகே., இப்ப ஏழாவது இடத்துல ஒரு திகில் படம் ராம் <i>சிறை காம்பவுண்ட் சுவரின் மேல் காவி வேட்டி வெற்று உடம்போடு ஒற்றைக்காலில் நின்றபடி மந்திரம் சொல்கிறார் ஹீரோ... வானாகி மண்ணாகி, சங்கர்ராமன் மர்டராகி, ஜெயிலாகி பெயிலாகி, காஞ்சி கலவையாகி... என்ப தோடு காட்சி கட் ஆகிறது.</i> <b>கவுண்டமணி:</b> சூப்பர்ல! அடுத்து ஆறாவது இடத்துல ஒரு கிளுகிளு படமுங்கோ. காக்கிவாடன் பட்டி மயிலு, எம்.எல்.எம். குயிலு ஜெகஜ்ஜால ஜெயலட்சுமி ஹீரோயினா கலக்குற தேவதையைக் கண்டேன். பொதுவா போலீஸ்கிட்டே கேஸ் கொடுப்போம். அந்த போலீஸ் மேலயே ஒரு பொம்பள சரமாரியா கேஸ் போடறாள்னு ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ணியிருக் கானுங்க. படத்தோட ஓபனிங்லயே பல தொப்பைத் தலையனுங்க சேர்ந்து, துண்டக் காணோம் துணியக் காணோம், தூங்கும்போது துப்பாக்கியக் காணோம்... என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே, தொடாமலே தூக்குறியே, சி.பி.ஐ|யில தாக்குறியே என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே?னு பாடற சோகக் குத்து சூப்பர். இன்டர்வெல் வரைக்கும் ஜெயலட்சுமி கூட நிக்குற அழகர்சாமி, திடுதிப்புனு அம்மணிக்கு எதிரா கோல் அடிக்கறது செம ட்விஸ்ட். <i>தேவதையைக் கண்டேன்... தெருவில் நின்றேன்!</i> <b>கவுண்டமணி:</b> இப்ப நாம அடுத்ததா பார்க்கப் போறது அஞ்சாவது இடத்தைப் பிடிச்ச படம்... அல்டிமேட் அழுகை ஸ்டார் ஃபீலிங் தலையர் வைகோவோட ஆட்டோகிராஃப் <i>குலுங்கிக் குலுங்கி அழுகிறார் வைகோ. அதைப் பார்த்துப் பாடுகிறார் கலைஞர், ஒவ்வொரு துளிகளுமே சொல்கிறதே, என் மேல் தம்பி வைத்த பாசத்தை. அழுகைக்கு அர்த்தம் தெரிகிறதே, தம்பி ஸ்டாலின் மேல் நீ வைத்த நேசத்தை. அதைக்கேட்டு உணர்ச்சிவசப் பட்டுக் குமுறிக் குமுறி அழு கிறார் வைகோ.</i> <b>கவுண்டமணி:</b> ஆவூன்னா அழுவாச்சிதான்! ஆட்டோகிராஃப் அழுகை கிராஃப்! ஓகே. நாலாவது இடத்தில் மாயாவி! மர்மத் தலையன் ஜோஷ்வா ஸ்ரீதர்தான் ஹீரோ. நடாஷானு ஒரு அப்பாவிப் பொண்ணு ஹீரோயினு. கதை ஒரு மண்ணும் புரியலீங்கோ. திடீர்னு ஹீரோ வும் ஹீரோயினும் காணாமப் போறாங்க. கடத்தல்னு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல் றானுங்க, கல்யாணம் பண்ணிட்டாங்கனு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல்றானுங்க, காதல்னு இவனுங்க சொல்றானுங்க, நட்புனு அவனுங்க சொல்றானுங்க... என்னங்கடா டேய்! விளையாடறீங்களா... ஆனா, ஜோஷ்வா பாடற மீடியா ஏண்டா என்ன சுத்துது? கீ போர்டுக்குள்ள ஆந்த கத்துது!ங்கற பாட்டு சூப்பர். இப்ப அந்த ஜோஷ்வா நம்ம ஸ்டுடியோவுக்கு வந்திருக்காரு <i>என்கிறபோதே ஜோஷ்வா உள்ளே நுழைகிறார். </i> <b>கவுண்டமணி:</b> வா மியூஸிக் வாயா! மாயாவி படம் ஒண்ணும் புரியலியே? <b>ஜோஷ்வா:</b> நாங்க நல்ல நண்பர்கள்தான். <b>கவுண்டமணி:</b> அத நான் உன்கிட்ட கேட்டனா... ஏற்கெனவே இருக்கற இம்சையில ஏண்டா இப்படி எக்ஸ்ட்ரா டார்ச்சர் பண்றீங்க! ஒழுங்கா படத்தோட கதையைச் சொல்லு. படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு! <b>ஜோஷ்வா (பயந்து போய்):</b> கடத்தல் இல்லை. நாங்க விரும்பிதான் டூர் போனோம். கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஆனா, சேர்ந்து இருப்போம். அதாவது... <b>கவுண்டமணி (டென்ஷனாகி):</b> டேய்! கன்ஃபியூஸ் மண்டையா... ஓடிப்போயிரு. இனிமே இந்த ஏரியா பக்கம் உன்னைப் பார்த்தேன், மவனே கடிச்சி வெச்சிருவேன்... ஆமா <i>எனப் பாய, அலறி ஓடுகிறார் ஜோஷ்வா.</i> <b>கவுண்டமணி:</b> அப்பிடியே பாகிஸ்தான் பார்டர் பக்கம் ஓடிரு. மாயாவி... எஸ்கேப்! <i>(ஸ்க்ரீனைப் பார்த்து)</i> மகா ஜனங்களே! இதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை. அடுத்ததா மூணாவது இடத்தில், கலைஞர் கதை வசனத்துல புன்னகை மன்னன் துரை முருகன் கலக்கும் கண்ணம்மா. படத்துல கதையெல்லாம் கேட்கக் கூடாது. ஸீனுக்கு ஸீன் ஒரு வில்லி அம்மாகிட்டே ஹீரோ ஆவேசமா வசனம் பேசிட்டு வெளிநடப்பு பண்றதுதான் கதை. சரியில்லை நாட்டு நடப்பு, அதனால் செய்கிறேன் வெளிநடப்பு!ங்கற பஞ்ச் டயலாக் வரும்போதெல்லாம் உடன்பிறப்புக்களின் விசிலு காது கிழிக்குது சாமீயோவ். படம் முழுக்க துரைமுருகன் இந்தா இந்தானு ஏகப்பட்ட குத்து டான்ஸை போடறாரு. சபையில என்ன நடந்ததுனு துரைமுருகன் தன் தலைவர்கிட்டே விவரிக்கிற காட்சிகள் சுவாரஸ்யம். அதை நீங்களே பாருங்க <i>என்றதும் ஸீன் வருகிறது.</i> தலைவரே! அந்தம்மா வரும்போது அமைச்சர் களெல்லாம் இந்தா இப்படி ஆடறாங்க. ந்தா... ந்தா... ந்தா! <i>என்றபடி வளைந்து நெளிந்து ஆடுகிறார். வேட்டியை மடித்துக்கட்டி உருள்கிறார்.</i> அப்புறம் அந்தம்மா பேசும்போது இப்படி கையத் தட்டி பல்டி அடிக்கிறாங்க! <i>என்றபடி</i>, ஆஹா! மோனோ ஆக்டிங் செஞ்சே முதுகு பழுத்துரும் போலயிருக்கேடா <i>என முனகுவதோடு காட்சி முடிகிறது.</i> கண்ணம்மா... அம்மம்மா! <b>கவுண்டமணி:</b> அடுத்ததா இரண்டாவது இடத்தில் வங்கப் புளி கங்குலியோட ஆக்ஷன் ரீப்ளே ஸ்டோரி திருப்பாச்சி. பேட்ட நேராப் புடிச்சி போல்ட் ஆனாத் தான் அவுட்டு. பேட்ட திருப்பிப் புடிச்சி அவுட்டானா அது டவுட்டு!னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டே பேட்ட தலைகீழா பிடிச்சி ஆடி சரமாரியா டக் அவுட் ஆகறாரு ஹீரோ புளி மூட்டை மண்டையன், வாத்துத் தலையன் கங்குலி. பட்டாசு பாலுவா வர்ற சச்சின் டெண்டுல்கரோட லோக்கல் சண்டை, சகட சனியனா வர்ற இன்ஸமாமோட இன்டர்நேஷனல் சண்டைனு வெத்து வாய்லயே மொழம் போட்டுக்கிட்டிருக்காரு ஹீரோ. கடைசியா நாடே கூடி நடத்துற போராட்டத்துல அவரை டீம்லயிருந்து தூக்கறாங்களா... இல்லையாங்கிறதுதான் கதை. திருப்பாச்சி... வெறுப்பாச்சி! <i>என்றபடி, நாக்கைத் துருத்து கிறார்.</i> <b>கவுண்டமணி:</b> முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது... ஆய்த எழுத்து! சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ்னு மூணு ஹீரோக்கள் ஒரே நேரத்தில் சந்திச்சு சவால் விடற கதை. இந்தப் படம் இந்த வாரம்தான் ரிலீஸாகுது. ஆனா, அதுக்குள்ளே பரபரப் பாகிருச்சு. ஒருத்தருக்கு தன்னோட சூப்பர் ஸ்டார் பட்டம் போயிருமோனு பயம். இன்னொருத்தருக்கு அந்த சூப்பர் ஸ்டார் பேரைத் தட்ட முடியுமானு நப்பாசை. மூணா வது ஆளுக்கு, படப் பேரே அடிக்கடி பிரச்னையாகுதேனு கவலை. இப்படி மூணு பேரு தங்களோட வாழ்க்கையில் ஒண்ணா சேர்ந்து நிக்கிறதுதான் ஆய்த எழுத்து... இவங்க தலையெழுத்து! <i>என்கிற கவுண்டமணி,</i> அட! நெத்திலி மீனு நேயர் தலையனுங்களா, புரோகிராம் முடிஞ்சு போச்சுங் கடா! <i>என்று ஸ்கிரீனிலேயே உதைவிடுகிறார்</i>. </span> thanks vikatan.com |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேட்டுக்கு வேட்டு நல்லாக இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->