5 hours 29 minutes ago
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 04
60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் மரபணு [ஜெனடிகல் / genetical] ரேகைகளை விட்டு விட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இதற்கு மரபணு திட்டம் [ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் / Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனித உடல் மரபணுக்களின் [ஜீன்களின் / Gene] கட்டமைப்பாலானது. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் மரபணுக்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும் மரபணுக்களை சார்ந்ததே. "நான் ராஜ பரம்பரையிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!, அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்'' இவையெல்லாம் நாடக அரங்கில் அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய நிறைய தொடர்பு உண்டு. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான். அதாவது மரபணு என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன. உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (குருதி வகை) இருக்கலாம்.
ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவான ஒட்டக்கூத்தர், குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண் கேட்க சென்றார். அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர் பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் இப்படி பாடினார்.
"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?"
அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம் ஈடாகாது [ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?] என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது [வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும்.
உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்த, மரபணு திட்டம் ஆகும். மனிதர்களின் Y - நிறப்புரிகளை [குரோமோசோம் / Chromosome] அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா மற்றும் இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130 ஆகும். இது நடந்தது சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். அதன் பின், 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் [a narrow-pass between hills] வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும்.
நாம் இலங்கையை கருத்தில் எடுத்துக் கொண்டால், பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார். அது மட்டும் அல்ல, இவ்வற்றை மெய்ப்பிப்பது போல, இடைக் கற்காலஞ் சார்ந்த இரு பக்க மக்களும் ஒரேவித ஆயுதங்கள், கருவிகள் பாவித்து உள்ளார்கள் [There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka.] என்றும் கூறுகிறார். மேலும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த R. L. கிர்க் [R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia] என்பவர் சிங்கள மக்கள் தென் இந்தியாவை சேர்ந்த தமிழ் மற்றும் கேரள மக்களுடனும் மற்றும் உயர் குல வங்கநாட்டவர்களுடனும் [பெங்காலி] நெருக்கமாக உள்ளன என்கிறார். இங்கு கேரள மக்கள் அன்று உண்மையில் சேர நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத் தக்கது. இதை விக்கிப்பீடியாவில் சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை மேலும் உறுதி படுத்துகிறது [Refer Genetic studies on Sinhalese / Wikipedia]
ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை கீழே தருகிறேன், இது இலங்கையில் தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்றே வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. மேலும் அப்பொழுது இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சிங்களம் என்றொரு ஒரு மொழி, மலையாளம் மாதிரி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு தான் தோற்றம் பெற்றது.
"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!"
[நற்றிணை 366]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி :05 தொடரும்
6 hours 39 minutes ago
·
Tamil Journalist ·
விருதுகளும், விடுகதைகளும்…
படைப்புக்களுக்கன்றிப் பணக்காரர்களுக்கும், கோட் சூட்காரர்களுக்கும்,
பார்த்துப்பார்த்து விருதளிக்கின்ற இன்றைய முதலாளித்துவ உலகில்
“டெல்லிக்கு செல்ல என்னிடம் பணம் இல்லை, தயவுசெய்து விருதை தபால் மூலம் அனுப்பவும்." என பத்மஸ்ரீ விருது பெற்ற ஹல்தர் நாக்கின் குரல் எல்லோரையும் வியக்க வைத்தது சில ஆண்டுகளுக்கு முன்பு...
வெறும் மூன்று செட் ஆடைகள், உடைந்த ரப்பர் ஸ்லிப்பர், ஒரு ஜோடி விளிம்பு இல்லாத கண்ணாடி மற்றும் 732 ரூபாய் சேமிப்பை வைத்திருக்கின்ற பரம ஏழையான அவர் அற்புதமான பெருங் கவிஞர்.
ஒடிசாவைச் சேர்ந்த ஹல்தர் நாக், கோஸ்லி மொழியில் எழுதும் புகழ்பெற்ற கவிஞர்.
அவரது எழுத்துக்களின் தொகுப்பான 'ஹல்தர் கிரந்தவாலி2' இப்போது சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
அன்று பத்மஶ்ரீ விருது அவருக்கு வழங்கியவர்களைப் பாராட்டலாம்.
7 hours 37 minutes ago
மகளே மாஷா அமீனி,
பெண்களின் பிறப்புறுப்பில் தன் கெளரவத்தை மறைத்து வைத்த இன்னொரு பேடி இறந்து விட்டான்.
உன் குரல்வளையை நெரித்த ஆணாதிக்க கரம் ஒன்று, இன்று ஏதோ ஒரு மலை இடுக்கில் அநாதையாய் தொங்கி கொண்டிருக்கிறதாம்.
உன் முடியை மொக்காடு போட்டு மறைக்க துடித்த மிருகம் ஒன்று, தன் அடித் துணியும் அகன்று அம்மணமாய் கிடந்ததாம் அதே மலை சரிவில்.
உன் உடலை வைத்து அரசியல் செய்தவரை, இன்று உரப் பையில் கூட்டி அள்ளுகிறார்களாம்.
சாவின் விளிம்பில் நீ சந்தித்த கொடுமைகளை, வானூர்தி வட்டம் கிறுக்கிய கணத்தில் அவர்கள் நினைத்திருப்பார்கள்.
இருபத்தினான்கு மணிதாண்டி, ஈ ஊர்ந்து நாறிப்போன உடல்கள், துண்டமாய் சிதறி தூவப்பட்ட சதைகள்….
தீர்ப்பு நாள் அன்று நீ அப்படியே மீள்வாய் மகளே!
ஆனால் இவர்கள்?
தெய்வம் அன்றே கொல்லும்.
8 hours 11 minutes ago
அமெரிக்கன் வியற்நாமில் கொன்றான், ஐரோப்பியன் அதற்கு முன் அவுசிலும், அமெரிக்காவிலும் கொன்றான், எனவே நாம் சதாமையும், கடாபியையும், இப்ப றைசியையும் மனிதாபிகள் றேஞ்சுக்கு வைத்துக் கும்பிட வேண்டுமென்ற புளித்துப் போன வாதம் பல காலமாய் பரவி வருவது தான். இரண்டு தரப்பையும் நேர்மையாகச் சுட்டிக் காட்டுவதில், கண்டிப்பதில் என்ன பிரச்சினை ஒரு மனிதனுக்கு இருக்க முடியும் என்கிறீர்கள்? இதை நான் செய்திருக்கிறேன் (நீங்கள் வாசித்தே இருக்க மாட்டீர்கள்), ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்களா?
ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால் உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன் உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.