உலக நடப்பு

இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

3 months 2 weeks ago
மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Published By: RAJEEBAN   14 JAN, 2024 | 12:59 PM

image

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச அளவில் அதிகரிக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளது.

யுத்தகால அநீதிகள் பலமடங்காக அதிகரிக்கின்றன, மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறை சர்வதேச மனித உரிமை கொள்கைகள் சட்டங்கள் தாக்குதலிற்குள்ளாகின்றன, அரசாங்கங்கள் அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவுசெய்து சீற்றத்தை வெளிப்படுத்துதல் பரிவர்த்தனை இராஜதந்திரம் சர்வதேச மனித உரிமைகள் மற்றும சட்டங்களை அங்கீகரிப்பதில் இரட்டை நிலைப்பாடுகள் போன்றவற்றினால் ஆயிரக்கணக்கான உயிர்களிற்கு ஆபத்து  ஏற்பட்டுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறுகியகால ஆதாயங்களிற்காக அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விலகி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்வதால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் டிரான ஹசன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் வெளிப்படையாக தெரியும் இரட்டை நிலைப்பாடுகளிற்கு அப்பால் ஏனைய பல மனித உரிமை விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மனித குலத்திற்கு எதிரான சீன அரசாங்கத்தின் குற்றங்கள் தொடர்பில் மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றது. உக்ரைனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறலும் நீதியும் அவசியம் என உரத்த குரலில் வேண்டுகோள்கள் விடுக்கப்படும் அதேவேளை ஆப்கானில் அமெரிக்காவின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்து மௌனம் காக்கப்படுகின்றது என அவர்தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173931

அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம்

3 months 2 weeks ago
அமேசான் காடு

பட மூலாதாரம்,STEPHEN ROSTAIN

படக்குறிப்பு,

பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
  • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்
  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக அமைந்துள்ளது.

கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொதுவெளிகள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளமான மண்ணை உருவாக்கிய எரிமலை, இந்தச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம்.

பெருவில் உள்ள மச்சு பிச்சு போன்ற தென் அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் உள்ள நகரங்களைப் பற்றி நாம் அறிந்துள்ள நிலையில், அமேசானில் மக்கள் நாடோடிகளாக அல்லது சிறிய குடியிருப்புகளில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் நம்பப்பட்டது.

"அமேசானில் எங்களுக்குத் தெரிந்த மற்ற தளங்களைவிட இது பழமையானது. ஐரோப்பியர்களை மையப்படுத்தியே நாகரிகம் பற்றிய பார்வை உள்ளது. ஆனால், கலாசாரம் மற்றும் நாகரிகம் பற்றிய நமது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இது காட்டுகிறது," என்கிறார், பிரான்சில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இயக்குநரும் ஆராய்ச்சியை வழிநடத்தியவருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ரோஸ்டைன்.

 
அமேசான் காடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

2,500 ஆண்டுகள் பழமையானது

"இது அமேசானிய கலாசாரங்களை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய குழுக்களாக, அநேகமாக நிர்வாணமாக, குடிசைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இது பழங்கால மக்கள் சிக்கலான நகர்ப்புற சமூகங்களாக வாழ்ந்ததைக் காட்டுகிறது," என்கிறார், இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியர் அன்டோயின் டோரிசன்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நகரம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. மேலும், இங்கு மக்கள் சுமார் 1,000 ஆண்டுகள் வரை வாழ்ந்தனர்.

இங்கு எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவது கடினம். ஆனால், விஞ்ஞானிகள் அது நிச்சயமாக லட்சங்களில் இல்லாவிட்டாலும் 10 ஆயிரங்களில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அகழ்வாராய்ச்சியாளர்கள் 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பரப்பளவில் அகழ்வாராய்ச்சி மற்றும் விமானத்தின் மூலம் லேசர் சென்சார் எடுத்துச் செல்லப்பட்டு அடர்ந்த செடிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் இந்த நகரின் எச்சங்களை அடையாளம் கண்டனர்.

 
அமேசான் காடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த LiDAR தொழில்நுட்பத்தின் மூலம் 20மீ (66 அடி) x 10மீ (33 அடி) மற்றும் 2-3மீ உயரம் கொண்ட 6,000 செவ்வக தளங்கள் கண்டறியப்பட்டன.

மூன்று முதல் ஆறு அலகுகள் கொண்ட குழுக்களாக ஒரு மைய மேடையுடன் கூடிய பொதுவெளியைச் சுற்றி அவை அமைந்திருந்தன.

இந்தத் தளங்களில் பல வீடுகள் இருந்திருக்கலாம் எனக் கூறும் விஞ்ஞானிகள், சில சடங்கு நோக்கங்களுக்காக இருந்திருக்கலாம் என்கின்றனர். கிழமோப்பேவில் உள்ள ஒரு வளாகம் 140மீ (459 அடி) x 40 மீ (131 அடி) மேடையை உள்ளடக்கியிருந்தது. குன்றுகளை வெட்டி அதன் மேல் மேடை உருவாக்கப்பட்டன.

 
ஈர்க்கக்கூடிய சாலைகள்
அமேசான் காடு
படக்குறிப்பு,

ரேடார் சென்சார்களால் கண்டறியப்பட்ட குடியிருப்புகளின் பரவல்

நேரான சாலைகள் மற்றும் பாதைகளின் வலையமைப்பு, 25 கி.மீ. (16 மைல்கள்) வரை நீட்டிக்கப்பட்ட தளம் உட்பட பல தளங்களை இணைக்கிறது. இந்த சாலைகள் ஆராய்ச்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்று டாக்டர் டோரிசன் கூறினார்.

"சாலை வலையமைப்பு மிகவும் அதிநவீனமானது. இது ஒரு பரந்த தூரத்திற்கு நீண்டுள்ளது. அனைத்து சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சரியான கோணங்களில் அமைந்த இந்த சாலைகள் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளன," என்று அவர் கூறுகிறார். நிலப்பரப்புடன் பொருந்தக்கூடிய ஒன்றைவிட நேரான சாலையை உருவாக்குவது மிகவும் கடினம் என்று அவர் விளக்குகிறார்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்டவற்றில் சில "மிக வலுவான அர்த்தம்" கொண்டிருப்பதாக நம்பும் அவர், அவை ஒருவேளை ஏதேனும் சடங்கு அல்லது நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

விஞ்ஞானிகள் இருபுறமும் பள்ளங்கள் கொண்ட தரைப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளனர். அவை இப்பகுதியில் ஏராளமான தண்ணீரை நிர்வகிக்க உதவும் கால்வாய்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நகரங்களுக்கு அச்சுறுத்தல்களின் அறிகுறிகள் தென்பட்டன. சில பள்ளங்கள் குடியேற்றங்களுக்குள் நுழைவு வாயில்களைத் தடுத்தன. அவை, அருகிலுள்ள மக்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களுக்கான ஆதாரமாக இருக்கலாம்.

 
'சிக்கலான சமூகம்'
அமேசான் காடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 1970களில் ஒரு நகரத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்தனர். ஆனால், 25 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை.

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள நன்கு அறியப்பட்ட மாயன் சமூகங்களைவிட பெரிய, சிக்கலான சமூகத்தை இந்நகரம் வெளிப்படுத்துகிறது.

"முற்றிலும் மாறுபட்ட கட்டடக் கலை, நில பயன்பாடு, மட்பாண்டங்களுடன் மாயன் நாகரிகம் போன்ற மற்றொரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்," என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் ஜோஸ் இரியார்டே கூறுகிறார்.

சில கண்டுபிடிப்புகள் தென் அமெரிக்காவுக்கு "தனித்துவம் வாய்ந்தவை" என்று அவர் விளக்குகிறார். எண்கோண மற்றும் செவ்வக தளங்கள் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சமூகங்கள் தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்டவை, அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு அவர் குடியேற்றங்களுக்கு இடையிலான நீண்ட பள்ளமான சாலைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆனால், அங்கு வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சமூகம் எப்படி இருந்தது என்பது பற்றிப் பெரிதாகத் தெரியவரவில்லை.

 
மக்கள் என்ன சாப்பிட்டனர்?
அமேசான் காடு

பட மூலாதாரம்,STEPHEN ROSTAIN

படக்குறிப்பு,

நடைமேடைகளை இணைக்கும் சாலைகள், பாதைகள் மற்றும் கால்வாய்கள் அமேசானின் ஒரு பெரிய பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

மேடைகளில் குழிகளும் அடுப்புகளும் காணப்பட்டன. அத்துடன் ஜாடிகள், செடிகளை அரைக்க கற்கள் மற்றும் எரிந்த விதைகள் காணப்பட்டன.

அங்கு வாழும் கிலாமோபே மற்றும் உபனோ மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். மக்கள் மக்காச்சோளம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கை சாப்பிட்டனர். மேலும் "சிச்சா" என்ற இனிப்பு பீர் வகையை குடித்திருக்கலாம்.

ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சிக்கு எதிராக தான் எச்சரிக்கப்பட்டதாகக் கூறும் பேராசிரியர் ரோஸ்டைன், அமேசானில் எந்த பழங்கால குழுக்களும் வசிக்கவில்லை என விஞ்ஞானிகள் நம்பியதாகத் தெரிவித்தார்.

"ஆனால் நான் எப்படியாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நான் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

இப்பகுதிக்கு அருகிலுள்ள, ஆய்வு செய்யப்படாத 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பகுதியில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களின் அடுத்தகட்டமாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cw4emv8mgnpo

பெரு நாட்டின் 'ஏலியன்' மம்மி: டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

3 months 2 weeks ago
ஏலியன் புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிராண்டன் லைவ்சே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 15 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 'ஏலியன் மம்மிகள்' மனிதனால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

லிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மிகள் மனித உருவ பொம்மைகள் என்று கூறியது.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பெருவின் நாஸ்கா பகுதியில் காணப்படும் மற்றொரு 'மூன்று விரல் கை'யையும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நிபுணர்களைப் பொறுத்தவரை, அந்த உயிரினத்திற்கும் வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லை.

பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடயவியல் அறிவியல் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஃபிளேவியோ எஸ்ட்ராடா, "அவை வேறொரு உலகத்தைச் சேர்ந்தவை அல்ல. பூமியின் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள், நவீன செயற்கை பசையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை வேற்றுகிரகவாசிகள் என்று நம்பப்படுகிறது. ஆனால், அது முற்றிலும் புனையப்பட்டது,"என்றார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, லிமா விமான நிலையத்தில் அமைந்துள்ள டிஹச்எல்(DHL) என்ற கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு மம்மிகளும் கண்டெடுக்கப்பட்டன.

அவை ஏலியன் மம்மிகளாக இருக்கலாம் என்று பல ஊடக நிறுவனங்கள் ஊகித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நீண்ட தலைகள் மற்றும் மூன்று விரல்களைக் கொண்ட இரண்டு சிறிய மம்மிகள் ஏலியன்களின் உடல்களா இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது. ஆனால் பெரும்பாலான வல்லுநர்கள் அன்னியக் கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து நாசாவும் ஒரு அறிக்கையை அப்போது வெளியிட்டிருந்தது.

 
என்ன சொன்னது நாசா?
மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்

இது வரையில் தென்பட்ட நூற்றுக்கணக்கான யுஎப்ஒ-க்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.

ஆனால், அப்படி வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

உண்மையை சொல்லப்போனால் நீண்டகாலமாக எதிர்பார்கப்பட்ட இந்த நாசாவின் அறிக்கை எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

ஆனால், இந்த அறிக்கையில் யுஏபி எனப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை எப்படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டும் நாசா ஆய்வுக்கு உட்படுத்துகிறது என விவரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்.

நாசாவின் அந்த 36 பக்கங்கள் கொண்ட அறிக்கை மிகவும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தன்மையில் இருப்பதால், அதில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளவை இங்கே உள்ளன.

 
கேமராவில் பதிவானவை

பட மூலாதாரம்,US NAVY

படக்குறிப்பு,

கேமராவில் பதிவானவை

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா ?
மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை

நாசாவின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தில், நூற்றுக்கணக்கான யுஏபி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான எந்த காரணமும், ஆதரமும் இல்லை என்று கூறியுள்ளது.

"இருப்பினும், அந்த பொருட்கள் இங்கு வருவதற்கு நமது சூரிய குடும்பத்தின் வழியாக பயணித்திருக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறுயுள்ளது.

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை, இருப்பினும், புவி வளிமண்டலத்தில் அறியப்படாத வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

 
ஏலியன்ஸ் குறித்த ஆய்வுக்கு தரவுகள் உண்டா ?
மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று

நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறுகையில், “இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று. இதற்கு காரணம், நம்மிடம் அவை தொடர்பாக எந்த ஒரு தரவுகளும் இல்லை,” என்றார்.

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் பலவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டு வந்தாலும், அவை குறித்து போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார் பாக்ஸ்.

"யுஏபி.யின் தன்மை மற்றும் அவற்றின் தோற்றம் குறித்து உறுதியான அறிவியல் ரீதியிலான முடிவுகளை எடுக்க நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை,” என்றார் பாக்ஸ்

இதுபோன்று அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின் எதிர்கால தரவுகளை மதிப்பிடுவதற்கும், ஒரு வலுவான தரவுத்தளத்தை நிறுவுவதற்கும் இந்த புதிய இயக்குநரை நியமித்துள்ளதாக பாக்ஸ் கூறினார்.

 
மெக்ஸிகோவில் இருந்து வைரலான 'ஏலியன்' புகைப்படங்கள் உண்மையா ?
ஜெய்ம் மவுசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அன்னியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

மெக்சிகோ அதிகாரிகளால் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த வேற்று கிரகவாசிகளின் புகைப்படங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சாம் கம்பரால் நாசா அதிகாரிகளிடம் கேட்டார்.

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அந்நியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

2017 ஆம் ஆண்டில் பெருவின் குஸ்கோ பகுதியில் அந்த மனிதர் அல்லாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரேடியோகார்பன் சோதனையில் 1,800 ஆண்டுகள் பழமையான பொருள்கள் அவை என்றும் அவர் கூறினார்.

இந்த மாதிரிகளின் நம்பகத்தன்மை அறிவியல் வட்டாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு முறை மௌசானே வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை நிராகரித்திருந்தார்.

நாசா விஞ்ஞானி டேவிட் ஸ்பெர்கெல் பிபிசியிடம் பேசுகையில், “உலக அறிவியல் சமூகத்திற்கு இந்த மாதிரிகளை ஆய்வுக்காக கிடைக்கச் செய்யுங்கள, அங்கே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்," என்றார்.

 
விஞ்ஞானிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் !
மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

 

யுஏபி ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் புதிய இயக்குனர் இருப்பார், ஆனால், அவரின் அடையாளம் தற்போதைக்கு வெளியிடப்படாது.

யுஏபி ஆராய்ச்சியில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என நாசா அறிவித்திருந்தபோதிலும், புதிய இயக்குனர் பற்றிய விவரங்கள், அவருக்கு எவ்வளவு மாதச் சம்பளம், அவர் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார் போன்ற தகவல்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடந்த கூட்டத்தில் பகிரப்படவில்லை.

புதிய இயக்குநரை வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

புதிய இயக்குநரின் பெயரை வெளியிடாததற்கு நாசா குழுவின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக கருதுவதும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

 
AI கருவிகளைப் பயன்படுத்த நாசா பரிந்துரைக்கிறது
செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது என அந்த அறிக்கை கூறுகிறது. ஏனெனில், யுஏபியை புரிந்துக்கொள்ள முக்கியமான அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியமாக நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

யுஏபி.களை நன்கு புரிந்துகொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு பற்றாக்குறை என்று கூறிய நாசா, அந்த இடைவெளியை 'க்ரவுட் சோர்சிங்' நுட்பங்கள் மூலம் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், ஓப்பன் சோர்ஸ் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் "உலகளவில் பல பார்வையாளர்களின் பிற ஸ்மார்ட்போன் மெட்டாடேட்டாவும் அடங்கும்.

தற்போது வரை பொது மக்களால் கூறப்படும் அல்லது பார்க்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒழுங்கமைக்க தரப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை, அதன் விளைவாக குறைவான மற்றும் முழுமையற்ற தரவுகளே உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgle4d0j8e8o

தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் - சீனாவினால் பிரச்சினைக்குரியவர் என கருதப்படும் லாய்சிங் மீண்டும் வெற்றி

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN   13 JAN, 2024 | 07:50 PM

image

சீனாவினால் பிரச்சினைக்குரியவராக கருதப்படுபவரும்  தாய்வானின் இறைமை ஆதரவு ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

2020 முதல் தாய்வானின் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் லாய்சிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து  சீனாவின் கொள்கைக்கு எதிராக இறைமையுள்ள தாய்வானையும் தேசிய அடையாளத்தையும் முன்னிறுத்தும் அரசாங்கம்  தொடர்ந்து தாய்வானை ஆட்சிபுரியும் நிலையை உருவாக்கியுள்ளது.

லாய்சிங்கிற்கு 40 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

GDuh5RsaAAAvcPi.jpg

சீனாவுடனான எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் 19.5 மில்லியன் மக்கள் இன்று வாக்களித்துள்ளனர்..

ஜனாதிபதி வில்லியம் லாய் பிரச்சினைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்துள்ள சீனா அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173895

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3  13 JAN, 2024 | 03:49 PM

image

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை  திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.  2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்கள்.

ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது  உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண்  தலைவர் என்று அறியப்பட்டார். 

பதவியேற்று ஒரு வருடம் கழித்து, அவர் குழந்தை பெற்றுகொண்டபோது, பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுகொண்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் தனது குழந்தையுடன் அவர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

3.jpg

1.jpg

2.jpg

https://www.virakesari.lk/article/173874

தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்த டிரம்பிற்கு உத்தரவு

3 months 2 weeks ago

1851 இலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரை மையமாக கொண்டு செயற்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயோர்க் டைம்ஸ் (The New York Times).

உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை.

2018 இல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர்.

2021 இல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொனால்ட் டிரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

ஆனால், அந்த 3 பேரையும், தி நியூயோர்க் டைம்ஸையும், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

நியூயோர்க் நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் ரீட் (Robert Reed) தனது தீர்ப்பில், டிரம்ப் $3,92,638 தொகையை வழக்கறிஞர் கட்டணமாக டிரம்ப் அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப தகராறில் தனது உறவுக்கார பெண் மேரி டிரம்ப், வாக்குறுதியை மீறி, அவர் வசம் வைத்திருந்த தனது வரி விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். மேரி மீதான அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ளது.

இத்தீர்ப்பு குறித்து டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா (Alina Habba), “பத்திரிகையும், அதன் செய்தியாளர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தங்கள் தரப்பிற்கு அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/288069

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

3 months 2 weeks ago

யேமனில் உள்ள ஹூதி நகரங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அரேபிய கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றிய செய்தி ஆகியவற்றால் உலகளாவிய எண்ணெய் எதிர்காலம் இன்று கடுமையாக உயர்ந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஃபியூச்சர்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு பீப்பாய்க்கு $74ஐ நோக்கி 2% உயர்ந்தது மற்றும் ப்ரெண்ட் எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு $78ஐ நோக்கி 1.5% உயர்ந்தது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் உள்ள 12 இலக்குகள் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டணி இன்று தாக்குதல்களை நடத்தியது. பதிலடி கொடுப்போம் என ஹூதி துணை வெளிவிவகார அமைச்சர் சபதம் செய்தார்.

இதற்கிடையில், 145,000 தொன் மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட செயின்ட் நிகோலஸ் என்ற மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய டேங்கரை ஈரானிய கடற்படைப் படைகள் நேற்று கைப்பற்றியதாக ஈரானிய அரசாங்க செய்தி நிறுவனமான IRNA அறிவித்தது. இந்த டேங்கர் ஈராக்கில் உள்ள பாஸ்ராவில் இருந்து புறப்பட்டு துர்க்கியே நோக்கிச் சென்றது, அது ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் ஓமன் வளைகுடாவில் நுழைந்த உடனேயே கைப்பற்றப்பட்டது. அதில் 18 பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு கிரேக்க குடிமகன் அடங்கிய குழுவினர் உள்ளனர்.

https://thinakkural.lk/article/287933

ஏமனுக்குள் அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்

3 months 2 weeks ago
ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்
ஏமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE

12 ஜனவரி 2024, 06:35 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது.

 
ஏமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

 
யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார்.

ஏமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES

சவுதி அரேபியா என்ன சொல்கிறது?

இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹூத்திகள் என்ன கூறுகிறார்கள்?

ஹூத்திகள் இந்த தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஹூத்தி அதிகாரிகளில் ஒருவர், “அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை விக பெரியதாக இந்த போர் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹூத்திகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. செங்கடல் மற்றும் அரபிக்கடல்களில் சர்வதேச போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனின் துறைமுகங்கள் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அது இனியும் தொடரும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் தாக்குதல்களினால், பாலத்தீன் மற்றும் காஸாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏமன் கைவிடும் என்று நினைப்பது தவறு” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிற நாடுகள் என்ன கூறுகின்றன?

இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏமன் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளது. “ஏமனின் இறையாண்மையை, பிராந்திய உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச சட்டங்களையும் இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த தாக்குதல்களின் அச்சமும், நிலையற்றத்தன்மையுமே” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார்.

இரானின் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக்குழு ஹிஸ்புல்லாவும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது. “காஸா மீது சியோனிச எதிரி நடத்திய படுகொலைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அமெரிக்கா முழு உடந்தை என்பது இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இராக் பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மோதலை இந்த பிராந்தியம் முழுவதும் நீட்டிக்கிறது அமெரிக்கா” என்று கூறியுள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைவர் லார்ட் டன்னட் பிபிசியிடம் பேசுகையில், இரான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஹூத்திகள் மட்டுமல்ல, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்குகிறது. இந்த தாக்குதல்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு நடத்தப்படுபவையாக இருந்தால், செங்கடலில் நிலவும் பிரச்னையை துரிதமாக தீர்க்க உதவும். மீண்டும் நமது கவனத்தை இஸ்ரேல் காஸா போரை கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க செலுத்த முடியும்” என்று கூறினார்.

பிரிட்டன் ஆயுதமேந்தி படைகளின் அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி “நமது நாட்டின், படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நிறைய ஆபத்துகள் இருந்தன. நேற்று இரவு அவர்கள் செய்த காரியத்துக்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cnd7771x7zko

நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்

3 months 2 weeks ago
மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம் Digital News Team

நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027 இலிருந்து அமலுக்கு வரும்.

அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2 வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.

தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய ஜனாதிபதியும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.

நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287592

பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக!

3 months 2 weeks ago
france.jpg?resize=750,375&ssl=1 பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக!

பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அமெரிக்க புளேரிடா மாநிலத்தில் சூறாவளி.

3 months 2 weeks ago

 

செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
 

Checked
Mon, 04/29/2024 - 16:21
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe