உலக நடப்பு

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.

8 hours 50 minutes ago

இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார்.

https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html

61b96ffc-59f0-46f7-bc63-b54d7c3a8069.JPG

நாங்கள் இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம் - பாலஸ்தீன மக்கள் கருத்து

11 hours 19 minutes ago

Published By: RAJEEBAN

15 MAY, 2024 | 01:00 PM
image
 

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பாலஸ்தீனியர்கள் எனினும் இம்முறை தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் 1948 ம்ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள்பூர்த்தியாகியுள்ளன.

எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில்காணப்பட்டன.

எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

சிலர் 1948ம் ஆண்டுஅராபிய இஸ்ரேலிய யுத்தத்தைநினைவுகூர்ந்துள்ளதுடன்  சமூகத்தின் அனைத்துர தரப்பினரும் பாலஸ்தீனத்திற்காக போரடி உயிர்நீத்தனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த யுத்தத்தில் சியோனிஸ்ட்களிற்கு எதிராக பாலஸ்தீனியர்களுடன் இணைந்து ஈராக்கிய படையினர் போரிட்டனர் என அடிப் நசல் என்பவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அராபிய இராணுவம் என்பதே இல்லை அனைவரும் தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183601

காட்டுத் தீ : கனடாவின் எண்ணெய் வளமிக்க பகுதிக்கு அச்சுறுத்தல்

11 hours 29 minutes ago

Published By: DIGITAL DESK 3    15 MAY, 2024 | 11:04 AM

image

கனடாவின் எண்ணெய் வளம் மிக்க போர்ட் மெக்முரே பகுதியில் (Fort McMurray) பாரிய காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.

இதன் காரணமாக நான்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 மக்களை  வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

வரட்சி மற்றும் பலத்த காற்றினால் ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது.

தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது.

பலத்த காற்று வீசுவது துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமானதாக இல்லை.  காற்றின் வேகம் குறையும் வரை காட்டு தீ நகரத்தை நோக்கி தொடர்ந்து பரவி வரும் என  ஆல்பர்ட்டா காட்டுத் தீ தகவல் தொடர்பு அதிகாரி ஜோசி செயின்ட்-ஓங்கே தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும்  பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது.

அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய பகுதிகளிர் வசிப்பவர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீ 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.  ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

GNlp3h6WYAAl71D.jpg

GNlUBffXsAA4obO.jpg

GNlUDQmWkAAl2O_.jpg

https://www.virakesari.lk/article/183580

சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?

16 hours 19 minutes ago
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெஸ்ஸா வாங்
  • பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூரிலிருந்து
  • 19 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து வலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார்.

இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.

லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.

லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.

அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.

அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது
லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.

ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.

2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.

ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.

"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.

அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.

சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.

இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.

இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.

"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.

ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.

மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.

அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.

 
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.

சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.

அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.

"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.

அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .

https://www.bbc.com/tamil/articles/cd131z29zvko

இஸ்ரேலிய, டெல் ஹாஷோமர் இராணுவ தளத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

21 hours 52 minutes ago

Published By: VISHNU

15 MAY, 2024 | 04:18 AM
image
 

இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் கூறுகின்றன.

தீக்கு இரையான கிடங்குகள் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183566

33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் சிகிச்சை குறிப்பை திருடி உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி?

1 day 11 hours ago
பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி?
சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?

பட மூலாதாரம்,EUROPOL

படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ டைடி
  • பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை
  • 35 நிமிடங்களுக்கு முன்னர்

ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது.

தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன.

"அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார்.

"அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார்.

டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார்.

24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார்.

தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

 
சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?

பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI

படக்குறிப்பு,டினா பரிக்கா

`வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன.

திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது.

இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார்.

"மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார்.

இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார்.

பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன.

மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.

நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது.

சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?

பட மூலாதாரம்,SKY NEWS

படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill)

கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை.

ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார்.

கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர்.

இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.

 
சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?
படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம்

கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை.

உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை.

ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார்.

(ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை )

"அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார்.

கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார்.

சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?

பட மூலாதாரம்,POLICE OF FINLAND

படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர்
சிவப்பு அறிக்கை வெளியீடு

கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது.

சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது"

“கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர்.

நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார்.

விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார்.

"இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார்.

பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.

 
சாதுர்யமான டீனேஜ் ஹேக்கர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளி ஆனது எப்படி?

பட மூலாதாரம்,JOE TIDY

படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும்

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம்.

டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை.

"இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர்.

உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார்.

ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo

ஆப்கானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை - அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு கரிநாள் என விமர்சனம்

1 day 14 hours ago

Published By: RAJEEBAN

14 MAY, 2024 | 12:48 PM
image
 

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இராணுவஇரகசியங்களை திருடி அம்பலப்படுத்தியதை  மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது.

யுத்த குற்றங்கள்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை தண்டிக்க நினைக்கின்றது  குற்றவாளிகளை தண்டிக்க முயலவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் ஆப்கான்யுத்த குற்றங்கள் தொடர்பில் முதலில் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் யுத்தகுற்றவாளியல்ல மாறாக அதனை அம்பலப்படுத்தியவர் என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் என சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ரவான் அராவ் தெரிவித்துள்ளார்.

இது அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என மெல்பேர்னை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட நிலையத்தின் பதில் சட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

மக்பிரைட்டின் சிறைத்தண்டனை உண்மையை அம்பலப்படுத்தும்  ஆர்வம் கொண்டுள்ளவர்களிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் ஆவணங்களை பகிர்ந்துகொண்டதை தான் ஒருபோதும் இரகசியமாக வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/183498

காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு அமெரிக்காவின் உதவி தார்மீக காயங்களை ஏற்படுத்தியது - பதவியை இராஜினாமா செய்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அதிகாரி

1 day 14 hours ago

Published By: RAJEEBAN

14 MAY, 2024 | 11:06 AM
image

காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான்  இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது, நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183480

ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?

2 days 12 hours ago
இஸ்ரேல்- அமெரிக்க உறவில் விரிசலா

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 13 மே 2024, 04:31 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்?’ என்று அமெரிக்க அதிபர் பைடனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பைடன், “அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை," என்றார்.

ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணியின் அடித்தளமாக இருக்கிறது. பைடனின் இந்த பதிலால், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா- இஸ்ரேல் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஸாவில் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்தவும், அங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி நிலையை சரிசெய்யவும், அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பைடனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

 

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவது என்ற முடிவை இறுதியாக எட்டியுள்ளார் பைடன். 1980களில், அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் ஆட்சியில் தான் இதே போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த முடிவால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பதிலடி என்ன? பைடனின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு உள்ளதா?

 
இஸ்ரேல்- அமெரிக்க உறவில் விரிசலா

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,18 அக்டோபர் 2023 அன்று டெல் அவீவ் நகரின் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.
'அரசியல் மோதலில் சிக்கியுள்ள பைடன்'

இஸ்ரேல்- காஸா போரின் தொடக்கத்தில் இருந்தே, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும், தனது சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு அரசியல் மோதலில் பைடன் சிக்கியுள்ளார் என்று முன்னாள் வெளியுறவு ஆய்வாளரும், மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த நிபுணருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகிறார்.

“இப்போது வரை, அமெரிக்க- இஸ்ரேல் உறவை சீர்குலைக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுக்க பைடன் தயக்கம் காட்டி வந்தார்” என்கிறார் மில்லர்.

ரஃபா மீது படையெடுக்கும் முடிவை இஸ்ரேல் விரைவில் எடுக்கப்போகிறது என்ற தகவல் வெளியான பிறகு, பைடனின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

திங்களன்று தனது தரைப்படைகள் ரஃபா நகரின் கிழக்குப் பகுதியில் ‘ஒரு இலக்கு நடவடிக்கையை’ ஆரம்பித்துள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே இஸ்ரேலிய டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.

அதே சமயத்தில் அரிதாகவே இயங்கும் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், ஷெல் குண்டுகளின் சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர் என்றும், தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சபையின் அறிக்கை கூறுகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலத்தீனிய அகதிகள் வசிக்கும் ரஃபா நகரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளது.

இஸ்ரேல்- அமெரிக்க உறவில் விரிசலா

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,24 ஏப்ரல் 2024 அன்று ரஃபாவில் இடிபாடுகள் வழியாக நடந்து செல்லும் ஒரு பெண்.

போர் நிறுத்தம் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தாலும் கூட, ரஃபாவில் பதுங்கியுள்ள ஹமாஸின் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கை அவசியம் எனவும் அதனால் முழு அளவிலான தரைவழித் தாக்குதல் அங்கு நடத்தப்படும் எனவும் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.

ரஃபாவில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென நெதன்யாகுவை அமெரிக்க அரசு தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியுள்ளது.

ரஃபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு, போரை நிறுத்துவதற்கான வாய்ப்பையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வாய்ப்பையும் பாதிக்கும் என்று அதிபர் பைடன் அஞ்சுவதாக மில்லர் கூறுகிறார்.

(மில்லர், பைடனின் நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக ஆலோசனை வழங்கிய முன்னாள் அரசு ஆலோசகரும் கூட)

“எகிப்து நாட்டுடன் ஒரு புதிய சிக்கல் உருவாவதையும் தவிர்க்க விரும்புகிறார் பைடன். அது மட்டுமல்லாது இஸ்ரேலின் ரஃபா படையெடுப்பு பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் பதற்றங்களையும், பிளவுகளையும் அதிகரிக்கும்” என்று எச்சரிக்கிறார் மில்லர்.

"இதனால் தான் இஸ்ரேலுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பினார் பைடன்", என்கிறார் மில்லர்.

 
இஸ்ரேல்- அமெரிக்க உறவில் விரிசலா

பட மூலாதாரம்,AFP

இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு

புதன்கிழமை ஒளிபரப்பான பைடனின் தொலைக்காட்சி நேர்காணலுக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு செல்ல வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை நிறுத்தி வைத்தது அமெரிக்கா. அதில் இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய 2,000-பவுண்டு மற்றும் 500-பவுண்டு வெடிகுண்டுகள் இருந்தன.

ஒரு மூத்த நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை மக்கள் நெருக்கமாக வாழும் நகர அமைப்புகளின் மீது பயன்படுத்தும்போது, காஸாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டது போல மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்ற கவலையும் உள்ளது என்கிறார்.

2,000 பவுண்ட் குண்டுகள் இஸ்ரேலின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். ஹமாஸை ஒழிக்க இத்தகைய ஆயுதங்கள் அவசியம் என்று இஸ்ரேலிய இராணுவம் வாதிடுகிறது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைடனால் உத்தரவிடப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், காஸா போரின் போது சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கான மதிப்பீட்டில் ‘முழுமையான தகவல்கள்’ இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது, எனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைத் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பைடன், நெதன்யாகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கிழக்கு பகுதிக்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்த, முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர் கர்னல் ஜோ புசினோ, “இஸ்ரேலிய ராணுவம் ஏற்கனவே தன்னிடம் உள்ள வெடிமருந்துகளைக் கொண்டே ரஃபாவை தரைமட்டமாக்க முடியும்” என்று கூறுகிறார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை வழங்குகிறது. சமீபத்தில் மேலும் 17 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வரலாற்றில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடமிருந்து அதிக ராணுவ உதவியைப் பெற்ற நாடாக உள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று கர்னல் புசினோ கூறுகிறார்.

"இஸ்ரேல் மீது அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களுக்காக நடத்தப்படும் ஒரு சிறிய அரசியல் நாடகம் இது" என்று அவர் கூறுகிறார்.

இது உண்மையோ பொய்யோ ஆனால், அதிபர் பைடனின் இந்த செயலுக்கான தாக்கம் அமெரிக்க அரசியலில் குறைவில்லாமல் இருக்கிறது. அமெரிக்க செனட் சபைகளில் குடியரசுக் கட்சியினரின் கோபம் வெளிப்பட்டது.

"அந்த ஆயுத இடைநிறுத்தம் முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று நான் நினைக்கிறேன். இதைச் செய்ய வேண்டிய அவசியம் அதிபருக்கு இல்லை" என்று அமெரிக்க செனட்டர் பீட் ரிக்கெட்ஸ் கூறுகிறார்.

ரஃபா மீது ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று அவரிடம் சொன்னபோது, "ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் நமது நட்பு நாடான இஸ்ரேலை ஆதரிப்பது பற்றிய பிரச்னை இது. எனவே அந்த கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும்" என்று அவர் கூறினார்.

குடியரசுக் கட்சியின் மற்றொரு செனட்டரான ஜான் பர்ராசோ, "தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எது அவசியம் என அவர்கள் நினைக்கிறார்களோ, அதைச் செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. பைடனின் இந்தச் செயல் ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கிறது. அதாவது இந்த அதிபருக்கு ஒரு பலவீனம் இருக்கிறது என்பதை" என்று கூறினார்.

ஆனால் பைடனின் சொந்தக் கட்சிக்குள், அவரது நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

 
இஸ்ரேல்- அமெரிக்க உறவில் விரிசலா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,பைடன் மற்றும் நெதன்யாகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (இடது), இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் (வலமிருந்து இரண்டாவது), மற்றும் இஸ்ரேலின் போர் அமைச்சரவையின் உறுப்பினரான பென்னி காண்ட்ஸ்.
'நெதன்யாகுவைத் தடுக்க பைடன் முயற்சித்தார்'

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் கூன்ஸ், பாலத்தீனிய குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ரஃபா மீது ஒரு முழு அளவிலான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தால், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய கூன்ஸ், "இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களாக நாம் இருக்கும் அதே வேளையில், காஸாவின் மக்கள் படும் துன்பங்கள் மற்றும் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலைகள் குறித்து நமக்கு மிகுந்த அக்கறை இருப்பதாக கூறிக்கொள்ளும்போது, மிகவும் வேதனையான ஒரு மறுபரிசீலனை தேவைப்படுகிறது." என்றார்.

“நெதன்யாகுவைத் தடுக்க அதிபர் பைடன் ‘மீண்டும் மீண்டும்’ முயற்சித்தார், ஆனால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை எதிர்க்கும் மற்றும் மேற்குக் கரையில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற்ற விரும்பும் அதீத தேசபக்தர்களின் அரசியல் ஆதரவை இஸ்ரேலிய தலைவர் நெதன்யாகு நம்பியிருப்பதால் போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன” என்று கூன்ஸ் கூறுகிறார்.

மேலும், "இருநாட்டு உறவில் முதல் உண்மையான விரிசலாக இது இருக்கலாம்" என்கிறார் கூன்ஸ்.

நெதன்யாகு உடனான இந்த விரிசல், கைதிகளை விடுவிக்கும் நோக்கில் ஹமாஸுடன் ஒரு போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படையான ஒரு தீர்வு இல்லாமல் தோல்வியில் முடிந்தன.

சில இஸ்ரேலிய விமர்சகர்கள், பைடனின் நடவடிக்கை பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகளை பலவீனமடையச் செய்யும் என்று பரிந்துரைத்துள்ளனர். ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் அச்சுறுத்தலை மழுங்கடிக்கும் எந்தவொரு முயற்சியும் ஹமாஸுக்கு தான் பயனளிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படையில் நடக்கின்றன என்பது தெளிவாக இல்லாததால், விமர்சகர்களின் கூற்றை உறுதியாக மதிப்பிடுவது கடினமாக உள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கை தான் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. இஸ்ரேல் அதனை நிராகரித்து விட்டது.

பைடனுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

நெதன்யாகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலுக்கு அதிபர் பைடன் அளித்த தொடர் ஆதரவிற்காக அமெரிக்காவை அடிக்கடி பாராட்டியுள்ளார் நெதன்யாகு, ஆனால் பாலத்தீனியர்கள் தொடர்பான முக்கிய கொள்கை பிரச்னைகளில் அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து சில நாட்களுக்குள், இஸ்ரேலுக்கு சென்ற அதிபர் பைடன் டெல் அவீவ் நகரில் நெதன்யாகுவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையுடனான சந்திப்பில் முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்திய அதிபர் பைடன், ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார், “9/11 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் செய்த தவறுகளை நீங்கள் செய்யாதீர்கள். அதே சமயம் பாலத்தீனிய மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், உலகின் மற்ற நாடுகளைப் போலவே அப்பாவி பாலத்தீனியர்களின் இறப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம்." என்று கூறினார்.

பின்னோக்கிப் பார்க்கும்போது அதிபர் பைடனின் இந்த இஸ்ரேல் பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாரம் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட விரிசலைத் தடுக்கும் முயற்சியின் தொடக்கம் தான் அந்தப் பயணம்.

வியாழன் அன்று இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டதாக அறிவித்த மறுநாள், நெதன்யாகு ஒரு பதிலடி கொடுத்தார்.

“நாம் தனித்து நிற்க வேண்டும் என்றால் தனித்து நிற்போம். தேவைப்பட்டால் வெறும் கைகளால் கூட சண்டையிடுவோம் என்று நான் கூறியுள்ளேன்,'' என்றார்.

நெதன்யாகுவின் அறிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் செனட்டரான கிறிஸ் கூன்ஸிடம் கேட்டபோது, "அவர்கள் வெறும் கைகளால் சண்டையிட தேவையில்லை. அமெரிக்காவோடு இணைந்து அவர்கள் உருவாக்கியுள்ள நவீன ஆயுத அமைப்புகளின் உதவியோடு போராடுவார்கள். அந்த ஆயுதங்கள் எங்களால் தானே வழங்கப்படுகின்றன.

ஆனால் ஒன்று, பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் அந்தப் போராட்டம் நடக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn3dmemm14yo

ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?

2 days 12 hours ago
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார்.

இதன் போது, அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்தி வாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னையால் போராடி வருகிறது.

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது.

உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார்.

உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்துகொள்வோம்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓபியாய்டுகள் என்றால் என்ன?

ரிக் ட்ரெபிள் ஒரு தடயவியல் வேதியியலாளர். அவர் மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் அரசாங்கத்தின் குழுவின் ஆலோசகராக உள்ளார். அவர் பிபிசியுடன் பேசுகையில், செயற்கை ஓபியாய்டு என்பது ஓபியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருளின் அதே விளைவைக் கொண்ட ஒரு பொருள் என்று கூறினார்.

"ஓபியம் பாப்பி தாவரம் (ஓபியாய்டு மருந்துகளின் ஆதாரம்) அல்லது ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஓபியாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, மார்ஃபின் மற்றும் ஹெராயின். இவை ஓபியம் பாப்பி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை ஓபியாய்டுகள் மார்ஃபினை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை" என்றார் அவர்.

தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஓபியாய்டுகள் நமது மூளையின் எந்த பகுதியை பாதிக்கிறதோ, அதே பகுதியை இந்த சிந்தெடிக் மருந்துகள் அல்லது செயற்கை ஓபியாய்டுகள் பாதிக்கின்றன. ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரிக் ட்ரெபிள் கூறுகையில், “செயற்கை ஓபியாய்டுகளில் ஒரு ஏற்பி உள்ளது, இது வலியைக் குறைக்க அல்லது நோயாளியை மயக்கமடையச் செய்யப் பயன்படுகிறது. ஆனால், இந்த ஏற்பியின் மோசமான விளைவு என்னவென்றால், அது ஒரு நபரின் சுவாச மண்டலத்தை அடக்குகிறது. இந்த ஓபியாய்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால், அந்த நபர் மூச்சுத் திணறலால் இறக்கக்கூடும்" என்றார்.

 
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தவறாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஓபியாய்டுகள்

1950களில், மருந்து நிறுவனங்கள் ஓபியாய்டுகளின் நன்மை பயக்கும் பண்புகளைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், செயற்கை ஓபியாய்டுகளை உருவாக்கத் தொடங்கின. இப்போது சந்தையில் நூற்றுக்கணக்கான செயற்கை ஓபியாய்டுகள் உள்ளன.

ஃபெண்டானில் (Fentany)l என்பது அத்தகைய நன்கு அறியப்பட்ட செயற்கை ஓபியாய்டு ஆகும்.

ரிக் ட்ரெபிள் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியை மயக்கமடையச் செய்ய பலமுறை செயற்கை ஓபியாய்டுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், நோயாளியின் சுவாசத்தைப் பராமரிக்க ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மார்ஃபின் பயன்படுத்தினால், நோயாளி நீண்ட நேரம் மயக்கநிலையில் இருக்கிறார். ஆனால் செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தினால் இது நடக்காது. பிரசவத்தின் போது வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன“ என்றார்.

புற்றுநோயாளிகளின் வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில், செயற்கை ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 1990களில், அதன் தவறான பயன்பாடு பற்றிய நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின.

அமெரிக்காவில் சில மருத்துவர்கள் செயற்கை ஓபியாய்டுகளை அதிகமாகப் பரிந்துரைத்ததால், ஒரு சமூகத்தில் உள்ள ஏராளமான மக்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர் என்று ரிக் ட்ரெபிள் கூறுகிறார். அதன் அதிகப்படியான பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, போதைக்கு அடிமையானவர்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர். இந்த ஓபியாய்டு அமெரிக்க போதை மருந்து சந்தையில் ஹெராயினின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. மக்கள் ஹெராயினுக்குப் பதிலாக ஃபெண்டானில் பயன்படுத்தத் தொடங்கினர்.

 
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

பல நாடுகளின் அரசாங்கங்கள் சட்டவிரோத ஓபியாய்டுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை தடை செய்துள்ளன.

ஆனால், சட்டவிரோதமாக இதனை உற்பத்தி செய்பவர்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலவையை மாற்றுவதன் மூலம் புதிய ஓபியாய்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நெட்டாசின் ஓபியாய்டுகள் இப்போது பல இடங்களில் விற்கப்படுவதாக ரிக் ட்ரெபிள் கூறுகிறார். ஃபெண்டானிலை விட நெட்டாசின் வலிமையான மருந்து.

பிரிட்டனில் அளவுக்கதிகமாக நெட்டாசின் மருந்தை உட்கொண்டதால் இறந்த சம்பவங்களும் உள்ளன. பிரிட்டன் அரசாங்கம் ஃபெண்டானில் மற்றும் நெட்டாசின்-ஐ தடை செய்துள்ளது. ஆனால், பலர் இந்த மருந்துகளை இணையம் மூலம் பெற்று தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் விற்கின்றனர். உண்மையில், இப்போது செயற்கை ஓபியாய்டுகளின் தவறான பயன்பாடு உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

சிந்தெடிக் மருந்து பிரச்சனை

போதைப்பொருள் மற்றும் குற்றவியல் ஆய்வுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆராய்ச்சித் துறையின் தலைவர் டாக்டர் ஏஞ்சலா மே, உலகில் போதைப்பொருள் மற்றும் ஓபியாய்டை தவறாக பயன்படுத்துதல் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்று கூறுகிறார்.

"உலகளவில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளில் 70 சதவிகிதம் ஓபியாய்டு தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என்று மதிப்பிடலாம். மற்ற மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஓபியாய்டு பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதை இது காட்டுகிறது" என்கிறார் அவர்.

அமெரிக்காவில் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் ஃபெண்டானிலின் பயன்பாடு ஆகும். ஆனால், உலகின் பிற நாடுகளில் இந்த பிரச்னை மற்ற செயற்கை ஓபியாய்டுகளால் பரவுகிறது.

டாக்டர் ஏஞ்சலா மே கருத்துப்படி, செயற்கை ஓபியாய்டுகள் போதைக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் டிராமடோல் போதைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

அவர் கூறுகையில், "நைஜீரியாவில் மட்டுமே இதைப் பயன்படுத்துவோர் குறித்த உறுதியான எண்ணிக்கை எங்களிடம் உள்ளன. அங்கு குறைந்தது 50 லட்சம் பேர் போதைக்காக டிராமாடோலை எடுத்துக்கொள்கிறார்கள். கானா, செனகல் மற்றும் பெனினிலும் இந்த பிரச்னை உள்ளது" என்றார்.

 
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அபின் சாகுபடி தடை செய்யப்பட்டபோது என்ன நடந்தது?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அபின் சாகுபடியை தாலிபன்கள் தடை செய்தனர். அதன் பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்தது.

2000 ஆம் ஆண்டில் அபின் சாகுபடிக்கு தாலிபன்கள் தடை விதித்த பிறகு ஹெராயின் தட்டுப்பாடு ஏற்பட்டதாக மருத்துவர் ஏஞ்சலா மே கூறுகிறார். வடக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் - எடுத்துக்காட்டாக, எஸ்டோனியாவில் - போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால், 2001 ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபன்களின் ஆட்சியை அகற்றியது. அபின் சாகுபடி மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால், 2022 இல், தாலிபன் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, அபின் சாகுபடி தடை செய்யப்பட்டது.

டாக்டர் ஏஞ்சலா மே கூறுகையில், “பல நாடுகளின் சந்தைகளில் ஹெராயினுக்கு பதிலாக சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் வருவது கவலை அளிக்கிறது. உலகளவில் பார்த்தால், ஹெராயின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்கள். அதாவது, ஆண்கள் ஹெராயினை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது" என்றார்.

"இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், பல இடங்களில் மருந்து கடைகளில் வாங்கலாம் என்பது. இரண்டாவது காரணம், சட்டவிரோதமான இடங்களில் இருந்து ஹெராயின் வாங்குவதற்கு பெண்கள் வெட்கப்படுகிறார்கள்" என்றார்.

ஆனால், செயற்கை ஓபியாய்டுகளின் பரவல் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதற்கு ஏஞ்சலா மே பதில் கூறுகையில், “ஒரு காரணம், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஹெராயின் போன்ற மருந்துகள் ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் மெக்சிகோ போன்ற சில நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன, ஏனெனில் அது அங்குள்ள வானிலை மற்றும் நிலத்தைப் பொறுத்தது. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம். நாட்டில் உள்ள ஆய்வகங்களில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுவதோடு, அதைக் கடத்துவதும் எளிது” என்கிறார்.

ஃபெண்டானில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

செயற்கை ஓபியாய்டுகளின் உற்பத்தி மற்றும் கடத்தல் பற்றிய விரிவான தகவலுக்கு, புலனாய்வுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பென் வெஸ்ட்ஹாஃப் என்பவரிடம் பிபிசி பேசியது. இதுகுறித்து அவருடைய ‘ஃபெண்டானில் இங்க்' (Fentanyl Inc.) எனும் புத்தகத்தில் நிறைய விவாதிக்கப்பட்டது.

அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஃபெண்டானில் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. அவர் சீனாவில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானில் தொழிற்சாலைகளுக்கு ரகசியமாக சென்றார்.

இந்த ஆய்வகங்களில் அவர் ஒரு கடத்தல்காரர் போல் காட்டிக்கொண்டு, அதிக அளவு ஃபெண்டானிலை வாங்க விரும்புவதாகக் கூறினார்.

அவர் கூறுகையில், “நான் ஷாங்காய் நகருக்கு அருகிலுள்ள ஒரு ஆய்வகத்திற்குச் சென்றேன், அது மிகவும் சிறியதாக இருந்தது, அங்கு 5-6 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால், அங்கு அதிக அளவு ஃபெண்டானில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் அவரிடம் பொருட்களை வாங்குவது பற்றி பேசினேன், ஆனால் எங்களுக்கு இடையே பண பரிவர்த்தனை எதுவும் இல்லை” என்றார்.

மேலும், "பின்னர் நான் வூஹானில் ஒரு ஆய்வகத்தைப் பார்த்தேன். அது ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சுமார் 700 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் பலர் ஒரு ஹோட்டலில் இருந்து வேலை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்தனர்” என்றார்.

 
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப்படம்)
சீனா எப்படி மையமாக மாறியது?

இந்த செயற்கை ஓபியாய்டின் உற்பத்தி மையமாக சீனா மாறியதன் காரணம் என்ன?

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதற்குக் காரணம், அதை அங்கு உற்பத்தி செய்வது மலிவானது. பயிற்சி பெற்ற வேதியியலாளர்களும் விஞ்ஞானிகளும் அதிக எண்ணிக்கையில் சீனாவில் காணப்படுகின்றனர். சீனாவில் முறையான மருந்துகளை உற்பத்தி செய்யும் பல மருந்து நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவர்களுடன் சேர்ந்து ரசாயனங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. அவை சீனாவில் சட்டபூர்வமானவை. ஆனால் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் சட்டவிரோதமானது" என்றார்.

இந்த ரசாயனங்கள் நேரடியாக அமெரிக்காவை சென்றடைவதில்லை. அவை முதலில் மெக்சிகோவிற்கு அனுப்பப்படுகின்றன.

இந்த ரசாயனங்கள் மிக வேகமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால் ஒரு கிலோ ரசாயனத்தில் இருந்து மில்லியன் கணக்கான மாத்திரைகளை தயாரிக்க முடியும் என்று பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். எனவே, பத்து முதல் இருபது கிலோ வரையிலான ரசாயனங்களை கொள்கலன்களில் மறைத்து அனுப்புவது மிகவும் எளிதானது. மெக்சிகோவில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் அல்லது கடத்தல் கும்பல்கள் தங்கள் தொழிற்சாலைகளில் ஃபெண்டானில் மாத்திரைகள் தயாரிக்க இந்த ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர்.

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், “மெக்சிகோவில் இவற்றை தயாரிக்கும் கும்பல்கள், காடுகளில் சிறிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் சட்டவிரோத செயற்கை மருந்துகளை தயாரிக்கின்றன. அதைத் தயாரிக்கும் நபர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இந்த ஆய்வகங்களை நகரங்களிலும் அமைக்கின்றனர் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றார்.

அதன் பிறகு, அங்கு தயாரிக்கப்பட்ட சட்டவிரோத செயற்கை மருந்துகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த கடத்தலை தடுக்க அமெரிக்காவின் எல்லை பாதுகாப்புப் படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினம் என்றும் பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். ஏனெனில், ஹெராயினை விட ஃபெண்டானில் ஐம்பது மடங்கு அதிக திறன் கொண்டது அல்லது சக்தி வாய்ந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு கிலோ ஃபெண்டானிலைப் பிடிப்பது கடினம், ஏனெனில் அதை எளிதில் மறைக்க முடியும்.

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதை தயாரிப்பது மிகவும் மலிவானது, எனவே கடத்தல்காரர்களைப் பிடிப்பதால் இதன் வணிகச் சங்கிலியை உடைக்க முடியாது. மாறாக, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்த்த வேண்டும். ஒரு கேளிக்கை விருந்தில் உட்கொள்ளும் சட்டவிரோத ஃபெண்டானில் மாத்திரை மரணத்தையும் ஏற்படுத்த முடியும்" என்றார்.

 
உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

“போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை”

ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனின் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன், சட்டவிரோத ஃபெண்டானில் மற்றும் பிற செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னைக்காக பல நாடுகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன என்று கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், சிந்தெடிக் மருந்துகளின் சிக்கலைச் சமாளிக்க அமெரிக்கா 179 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது, ஆனால் அதை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.

அவர் கூறுகையில், “நாட்டில் சட்டவிரோத செயற்கை ஓபியாய்டுகளின் சிக்கலைத் தீர்க்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் அவசியம்.அவற்றை திறம்பட செயல்படுத்துவதும் முக்கியம். ஆனால், சீனாவும் மெக்சிகோவும் இந்த திசையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, இது கவலைக்குரிய விஷயம்” என தெரிவித்தார்.

அரசியல் காரணங்களால் அமெரிக்காவுடனான இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த திசையில் நிச்சயமாக சில முன்னேற்றம் ஏற்பட்டது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மேலும் கூறுகையில், “2017 முதல் 2019 வரை, சீனா இந்த திசையில் ஒத்துழைப்பை அதிகரித்தது. அப்போது, அங்கிருந்து ஃபெண்டானில் அனுப்புபவர்களுக்கு எதிராக சீனா சட்ட நடவடிக்கை எடுத்தது. 2019 ஆம் ஆண்டில், ஃபெண்டானில் வகை மருந்துகளுக்கு சீனா கட்டுப்பாட்டை விதித்தது. பதிலுக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் சீனாவின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரி விகிதத்தைக் குறைக்கவும் சீனா விரும்பியது" என்றார்.

சீனா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஆனால் சீனாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிறைவேற்றவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் பைடன் ஆட்சிக்கு வந்த பிறகும், அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, சீனா ஒத்துழைப்பை நிறுத்தியது.

அமெரிக்கா மட்டுமல்ல, சீனாவும் நல்லுறவு இல்லாத அனைத்து நாடுகளிடமும் இந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்கிறார் வாண்டா ஃபெல்பாப் பிரவுன். அதே சமயம், ஃபெண்டானில் போதை பழக்கத்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அதற்கு தங்கள் நாடு பொறுப்பல்ல என்றும் சீனா கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் கலிஃபோர்னியாவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு, பரஸ்பர ஒத்துழைப்புக்கு உடன்பாடு ஏற்பட்டது. ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களை தயாரிக்கும் மெக்சிகன் கும்பல்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்களை சீனா மூடியது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுனின் கூற்றுப்படி, சீனா உண்மையில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியிருந்தாலும், இந்த நடவடிக்கையின் விளைவுகள் களத்தில் பிரதிபலிக்க இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.

மெக்சிகோ என்ன செய்கிறது?

ஆனால், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், இதற்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில், மெக்சிகோ எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் காவல்துறையாக செயல்படாது என்று கூறினார்.

கடந்த ஆண்டு, மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சகம் அங்கு ஃபெண்டானில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை நிராகரித்தது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மெக்சிகோ, இத்தகைய சில பெரிய கும்பல்களின் தலைவர்களை கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளதாக நம்புகிறார், ஆனால் அங்கிருந்து ஃபெண்டானில் கடத்தப்படுவதற்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கடத்தல் மட்டுமின்றி செயற்கை ஓபியாய்டு போதை பழக்கத்தையும் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

செயற்கை ஓபியாய்டுகள் உலகளவில் ஒரு பிரச்னையா? அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் செயற்கை ஓபியாய்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அவற்றை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரச்னைகள் தீவிரமாகி வருகின்றன.

ஒரு நாட்டில் அவற்றின் கடத்தல் மற்றும் உற்பத்தி தடைசெய்யப்பட்டவுடன், கடத்தல்காரர்கள் உடனடியாக அவற்றை உற்பத்தி செய்து மற்ற வழிகளில் கடத்தத் தொடங்கி புதிய சந்தைகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.

இன்று இது பெரிய பிரச்னையாக இல்லாத நாடுகளில் கூட எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை பரவலாம் என்கிறார் நமது நிபுணர் டாக்டர் வெண்டா ஃபெல்பாப் பிரவுன்.

https://www.bbc.com/tamil/articles/cd19rv9mgevo

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின : 315 பேர் பலி

2 days 16 hours ago

Published By: DIGITAL DESK 3

13 MAY, 2024 | 10:55 AM
image
 

வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன.

வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப்   கூறுகையில், 

"எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது," 

உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள்.  42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தனியார் வணிகங்களை தலிபானின் பொருளாதார அமைச்சர் டின் முகமது ஹனிஃப் வலியுறுத்தியுள்ளார்.

"உயிர்களும் வாழ்வாதாரங்களும் கழுவப்பட்டுவிட்டன," "திடீரென வெள்ளம் கிராமங்களை அழித்து, வீடுகளையும் அழித்து கால்நடைகளை கொன்றது." மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 310,000 சிறுவர்கள் வசிக்கின்றனர் என சேவ் தி சில்ரன் ஆப்கானிஸ்தான் பணிப்பாளர் அர்ஷத் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 153 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையால் கருதப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்க தடை உள்ளிட்ட  பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/183376

குழந்தைகள் மீது 33 ஆண்டுகள் நடந்த கொடிய பரிசோதனை - மஞ்சள் மாளிகை மர்மம் என்ன?

2 days 22 hours ago
மஞ்சள் மாளிகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அவுட்லுக் தொடர்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 12 மே 2024

"ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார்.

ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி மீண்டும் அவரின் கண் முன் தோன்றியது.

`இன்’ நதியின் பள்ளத்தாக்கின் சரிவுகளில், பனி மூடிய ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத் தொடரின் நிழலில் அமைந்திருக்கும் வெளிறிய மஞ்சள் நிற வீட்டின் புகைப்படம் அது.

இப்போது அந்த மஞ்சள் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடமாக உருமாறி இருந்தது. ஆனால் அதன் சுவர்கள், இன்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் வாழ்ந்த ஈவி போன்ற குழந்தைகளிடம் மறைக்கப்பட்ட ஒரு பயங்கரமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது.

ஆஸ்திரியாவை பூர்விகமாக கொண்ட ஈவி, விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, தன் குழந்தைப் பருவத்தின் இருண்ட அத்தியாயத்தை தனது மனதில் பூட்டி வைத்திருந்தார். தனது உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையாளரிடம் கூட இந்த உண்மைகளை ஈவி சொல்லவில்லை.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

ஈவியின் வாழ்க்கையில் இரண்டு கருப்பு அத்தியாயங்கள் இருந்தன. ஒன்று அவரின் வீடு, மற்றொன்று அந்த மஞ்சள் நிற குழந்தைகள் கண்காணிப்பு மையம். முதல் அத்தியாயத்தில் சரியான குடும்ப அமைப்பு இன்றி தனிமையில் எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்துள்ளார். ஆஸ்திரியாவில் இருந்தவரை அவருக்கு சில இனிமையான நினைவுகள் இருந்தாலும், பெரும்பகுதி கசப்பான நினைவுகளை கொண்டிருந்தது. எனவே அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஆஸ்திரியா பற்றிய கடினமான நினைவுகள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும் முயற்சியில், அவர் அங்கு திரும்பி செல்லக்கூடாது என்றும் ஜெர்மன் மொழியைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

ஆனால் உண்மை வேறு. அவர் அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாலும், அவை ஆழ்மனதில் நிரந்தரமான வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தை பற்றிய இணையத் தேடலுடன், தனக்குள் புதைந்திருக்கும் கொடிய நினைவுகளை மீண்டும் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஒருவழியாக அந்த சம்பவங்களை வெளியே சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. குழந்தை பருவத்தில் நடந்தவற்றை, 59 வயதான ஈவி பகிர்ந்து கொண்டார்.

ஈவியின் தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. ஆனாலும் துன்பகரமான குழந்தை பருவத்தை பற்றி சொல்லும் போது, சிரமத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார்.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,8 வயதில் ஈவி

ஈவியின் மகள் லில்லி மற்றும் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முற்பட்டார்.

"நான் என் கடந்த காலத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்தேன். ஆனால் குழந்தைகள் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய அந்த மனநல மருத்துவமனையில் நான் வைக்கப்பட்ட அத்தியாயத்தை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அது இருட்டு, வலி.. என்னோடு போகட்டும்”

ஒரு நாள், ஈவி தனிமையில் இருந்தபோது, அவருக்கு சட்டென நினைவுக்கு வந்த ஆஸ்திரிய நகரான இன்ஸ்ப்ரூக்கில் ஒரு முகவரியை இணையத்தில் தேடினார், அப்போது தான் அந்த ’வார்த்தை’ அவர் கண்களில் தென்பட்டது.

" `Kinderbeobachtungsstation” .. ஆம் இது தான் அந்த குழந்தைகள் காப்பகத்தின் பெயர். அதன் பொருள் 'குழந்தைகள் கண்காணிப்பு நிலையம்’. டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்...,' என்று தொடர்ந்து படித்த போது, ஆமாம், அவர்தான் அந்த மருத்துவர் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த இடம் என்று நினைத்தேன்."

Kinderbeobachtungsstation என்பது ஈவிக்கு ஒரு புதிய பெயர்; ஆனால் அந்த காப்பகத்தை வழி நடத்திய அந்த நபரை ஈவிக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகள் அவர் மனதில் மெல்லமெல்ல எழ ஆரம்பித்தது.

மேலும் அந்த இடத்தை பற்றி இணையத்தில் இருந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். அங்கு வளர்ந்த மற்றவர்களும் தங்களின் கொடிய அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். பல விரிவான தகவல்கள் கிடைத்தன. ஈவி அவற்றை அவநம்பிக்கையுடன் படித்தார்.

குழந்தை பருவத்தில் ஈவியை அங்கு அனுப்பி வைத்தவர்கள், குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் என்றே சொல்லி சேர்த்து விட்டனர். ஆனால் அதன் நோக்கம் மிகவும் மோசமானது என்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார்.

அவர்கள் ஈவி போன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக அங்கு ஒரு பெரிய பரிசோதனைக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர்.

ஓர் இருண்ட இரவு
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்..

இன்ஸ்ப்ரூக்கில் உள்ள அந்த மஞ்சள் வீட்டில் தன்னை வைத்து என்ன பரிசோதனை செய்தார்கள் என்பதை இப்போது அவர் அறிய விரும்பினார்.

"என்னை என்ன செய்தார்கள்?’’

குழந்தை பருவத்தில் தனக்கு இருண்ட அறையில் நடந்ததை பற்றி ஈவி தற்போது கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

" எட்டு வயது சிறுமியாக இருந்த போது எனக்கு அது நடந்தது. அந்த கண்காணிப்பு மையத்தின் இருட்டு அறையில் எனக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. அதன் தாக்கம் 60 வயதை கடந்தும் எனக்குள் இருக்கிறது. இப்போதும் நான் இருட்டைக் கண்டு பயப்படுகிறேன், எனவே நான் எல்லா நேரங்களிலும் விளக்கை எரிய விடுகிறேன். எனக்கு மஞ்சள் மீது வெறுப்பு உள்ளது. இந்த நிறம் என் அனுபவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறது.

மஞ்சள் நிறத்துடன் சமாதானம் செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. மஞ்சள் அந்த வீட்டின் நிறம் மட்டும் அல்ல. சூரியன், பூக்கள் மற்றும் ஒளியின் நிறம் என்பதை நினைவூட்ட முயற்சிக்கிறேன்."

கடந்த காலத்தை பற்றி மீண்டும் ஆராய வேண்டுமெனில் இந்த பயத்திலிருந்து விடுபட வேண்டும். எனவே ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்.

ஈவி 60களின் நடுப்பகுதியில் ஆஸ்திரியாவில் பிறந்த போது, அவரது தாயாருக்கு திருமணமாகவில்லை, எனவே அந்த சமயத்தில் ஈவி மீதும் அவரது தாயின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூகத்தின் பார்வையில் இருவரும் தவறாக தெரிந்தனர்.

சரியான குடும்ப சூழல் அமையாததால், ஈவி அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்களின் பராமரிப்பில் வளர்ந்தார்.

பின்னர், ஈவி தனது வளர்ப்பு தாய் 'ஆனி' நடத்தி வந்த விடுதியில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார்.

"என் வளர்ப்பு தாயான ஆனிக்கு என்னைப் பிடிக்கவில்லை, என்னை தொல்லைமிகு உயிரினமாக பார்த்தார். சதா என்னை திட்டி கொண்டே இருப்பார்.

விடுதியில் இருந்த பாதிரியாரும் என்னை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். நான் முட்டாள்தனமாக இருந்ததற்காகவும், என் அம்மாவுக்கு கஷ்டம் கொடுப்பதற்காகவும் என்னைத் திட்டி கொண்டிருப்பார்."

"எனக்கு 4 வயது இருக்கும். எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஆனி என்னை திட்டியது மட்டும் தான். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டினார். பாத்திரங்களை உடைக்கிறேன். சுவற்றில் கிறுக்குகிறேன் என்று காரணங்களை சொல்லி திட்டுவார். ஆனால் நான் எதையும் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை என்னை அடிப்பார், பின்னர் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து தண்டனை கொடுப்பார்.”

"அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு, டிசம்பர் 1973 இன் இறுதியில் ஓர் இரவில் அங்கிருந்து நான் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 8 வயது. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மஞ்சள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."என்றார்.

 
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,6 அல்லது 7 வயதாக இருந்தபோது ஈவி..

அன்று நடு ராத்திரியில் என் வீட்டில், யாரோ வந்து என்னை கட்டிலில் இருந்து தூக்கி சென்று, காரில் ஏற்றினார்கள். அப்போது இருட்டாக இருந்தது, குளிர்ந்தது, நான் மிகவும் பயந்தேன். யாரும் எதுவுமே பேசவில்லை, நாங்கள் நீண்ட நேரம் பயணித்தோம். காரில் யார் இருந்தார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் இன்ஸ்ப்ரூக் வந்தடைந்த போது என்னுடன் ஆனி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது.

அவர்கள் எனக்கு சீருடை, உள்ளாடைகள் மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை கொடுத்தனர். எனக்கு நினைவிருக்கிறது, அந்த வீட்டின் உட்புற சுவர்களில் எல்லா இடங்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது, ஹால்வேயில் ஒரு பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டாவது மாடியில், ஒரு ஜன்னல் கொண்ட ஒரு பெரிய அறை இருந்தது, வரிசையாக படுக்கைகள் இருந்தன. கட்டிலில் ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் காணும் தனி வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. என் கட்டிலில் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது.

அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. வெள்ளை கோட் அணிந்த பெரியவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அந்த அறையின் கதவுக்கு மேல் ஸ்பீக்கர் இருந்தது, பகல் முழுவதும் பல ஒலிகள் மற்றும் அலாரங்களை அது உருவாக்கியது."

குழப்பமும் பயமுமாக அந்த இடத்தின் விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அவர்கள் எங்களை பேச விடவில்லை, சைகையால் பேச வேண்டும், இல்லையெனில் சுருக்கமாக பேச வேண்டும். எதையும் செய்வதற்கு முன் நாங்கள் அனுமதி கேட்க வேண்டும். உதாரணமாக, 'தயவுசெய்து, பல் துலக்க வேண்டும்’ , சாப்பிடும் போது, 'ப்ளீஸ், ஸ்பூன்' என்று சொல்ல வேண்டும்.

தட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் சாப்பிட வேண்டும். மீதம் வைத்தால், அந்த தட்டில் இருக்கும் உணவு கெட்டு போனாலும், அடுத்த வேளைக்கு அதையே கொடுத்து சாப்பிட சொல்வார்கள்.

கொடூர மருத்துவர்
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அடிக்கடி ஊசி போடப்பட்டது, ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது.

ஈவி மற்றும் இளம் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்வகித்த, அந்த மையத்தை நடத்திய மனநல மருத்துவரின் பெயர் டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்.

"அவர் ஜெர்மனியின் நாஜிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் அந்த சித்தாந்தத்தை கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரியாவில் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்தில் நிபுணராக கருதப்பட்டார். ஆஸ்திரிய குழந்தைகள் சுகாதார அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், எனவே அவரது பரிசோதனைக்கு அதிக அளவில் குழந்தைகள் தரப்பட்டனர்."

மஞ்சள் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நோவாக்-வோகல் ஒரு நாள் எங்கள் முன்னிலையில் கூறினார். அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் தனது ஊழியர்களுக்கான வழிமுறைகளின் பட்டியலையும் அவர் சொன்னார்.”

"இது மிகவும் நீளமானது மற்றும் அபத்தமானது. அவர்கள் குழந்தைகளின் அனைத்து பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பார்கள். எங்களின் குளியல் அறையை கூட பார்ப்பார்கள். இது மிகவும் ஊடுருவும் சூழல். எங்கள் கனவுகளை கூட அவர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தினார்கள்."

குழந்தைகள் அங்கு பயத்தில் வாழ்ந்தனர். ஈவி வேண்டுமென்றே விதிகளை மீறிய ஒரு குழப்பமான தருணத்தை தெளிவாக நினைவு கூர்ந்தார்.

"அன்று ஏதோ இனிப்பு தருவதாக வரிசையாக வரச் சொல்லி இருந்தார்கள், அதைக் கொடுத்த போது, அந்த இனிப்பு முழுக்க எறும்புகள் நிறைந்திருப்பதை கண்டு நான் பயந்தேன். நான் ஓ வென கத்தினேன், கவுன் அணிந்த பெரியவர்கள் என்னைத் தூக்கி வெளியே அழைத்துச் சென்று அடிக் கொடுத்தார்கள்.”

இது அடிக்கடி நடந்தது, ஆனால் ஈவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இல்லை.

கொடிய சிகிச்சை முறை

ஈவி இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒன்றைக் கண்டுபிடித்தார்.

"சிகிச்சைகள்"

நோவாக்-வோகல் குழந்தைகளுக்கு ரோஹிப்னோல் உட்பட வலுவான மயக்க மருந்துகளை வழங்கி இருக்கிறார், மேலும் எபிஃபிசன் என்ற விசித்திரமான ஹார்மோனையும் உட்செலுத்தி இருக்கிறார். எபிஃபிசன் என்பது கால்நடைகளின் பினியல் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதனை கால்நடை மருத்துவர்கள் கால்நடைகள் மற்றும் பசுக்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தினர்.

இது மனிதர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை அடக்கவும், சுயஇன்ப உணர்வை கட்டுப்படுத்தவும், நோவாக்-வோகல் இதை சோதித்திருக்கிறார் என்பது இப்போது எனக்கு தெரிய வந்தது.

அவர் உடலுறவு மற்றும் குழந்தைகள் பாலுறவு மீது வெறுப்பாக இருந்தார். நாங்கள் அவருடைய சோதனைப் பொருட்களாக இருந்தோம். அவர் எங்களை விலங்குகளைப் போல நடத்தினார். சக்தி வாய்ந்த மருந்துகளை எங்களுக்கு கொடுத்தார்."

நோவாக்-வோகலைப் பற்றி ஈவி எவ்வளவு அதிகமாக கண்டுபிடித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவள் வருத்தமடைந்தார்.

குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவரின் அணுகுமுறை, நாஜி கண்ணோட்டத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கலாம். பராமரிப்பில் உள்ள பிரச்னையுள்ள குழந்தைகளின் குறைபாடுகள் மரபணு அடிப்படையைக் கொண்டு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த நேரத்தில் ஆஸ்திரிய கத்தோலிக்கத்தின் மிகவும் பழமைவாதம் பின்பற்றப்பட்டு வந்ததால் ஈவி போன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

"திருமணமாகாத தாயின் மகளாக இருப்பதால், என்னைப் போன்ற குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கைகளுக்கு நான் பலியானேன். அவர்களை பொருத்தவரை நாங்கள் தேவையற்றவர்கள், சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்."

நோவாக்-வோகலை பொறுத்தவரை, இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், சுய இன்பம் செய்யும் குழந்தைகள் மோசமான பிறப்பை கொண்டவர்கள் என்று நம்பினார். ஆஸ்திரிய சமுதாயத்தைப் பாதுகாக்க, அத்தகைய "குறைபாடுள்ள குழந்தைகளை" கவனித்துக் கொள்வதை விட சரிசெய்ய வேண்டும் என்று அவர் நம்பினார்.

மேலும் அவர்களை, கீழ்ப்படிய வைத்து, அவர்களது பாலியல் உணர்வை மாற்றி, சாதாரண நபர்களாக மாற்றுவதை அவர் தனது பணியாக மாற்றினார். அங்கு இரவுகள் மிகவும் பயங்கரமானவை. நாங்கள் ஒருவரையொருவர் தொடாதபடி எங்கள் அக்குளுக்கு கீழே போர்வை மற்றும் அதன் மேல் கைகளை வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வோம்.

மெத்தைகளில் உள்ளமைக்கப்பட்ட அலாரம் இருந்தது, அது யார் படுக்கையை நனைத்தாலும் அவர்களை எச்சரித்தது. அப்படி படுகையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வெள்ளை கோட் அணிந்தவர்கள் தண்டனையாக குளிர்ந்த நீரில் குளிக்க செய்வார்கள். பின்னர் நீங்கள் ஹால்வேயின் மூலையில் நிற்க வேண்டும். அடுத்த நாள், குழந்தைகள் படுக்கையை நனைத்த குழந்தையின் படுக்கையைச் சுற்றி நின்று அவரைப் பார்த்து அவமானப்படுத்தி சிரிக்க வேண்டும்."

 
வலியின் சுவடுகள்
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி தனது கடந்த காலத்தைக் கண்டறிய ஆஸ்திரியாவுக்குச் சென்ற பயணங்களில் ஒன்றில் தனது குழந்தைகளுடன்.

தற்போது, அந்த இடத்தைப் பற்றி ஈவி கண்டுபிடித்தது உண்மையிலேயே பயங்கரமானது, ஆனால் அது அவளுடைய நினைவுகளை அவற்றின் சரியான சூழலில் வைக்க உதவியது. அப்போது தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள உதவியது.

"அந்த மஞ்சள் வீடு 3,650 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்தது என்பதைக் கண்டுபிடித்தது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது."

2013 ஆம் ஆண்டில், இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த மையத்தின் மீது ஒரு அறிக்கையை வெளியிட்டது, நோவாக்-வோகல் "குறைபாடுள்ள" குழந்தைகளை கையாள்வதற்கான சாக்குப்போக்கின் கீழ் பல்வேறு துஷ்பிரயோகங்களை செய்ததாக அந்த அறிக்கை கூறியது. Kinderbeobachtungsstation ஐ "வளர்ப்பு இல்லம், சிறைச்சாலை மற்றும் சோதனை கிளினிக்" என்று விவரித்தது, அங்கு 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சள் மாளிகை 1954 முதல் 1987 வரை 33 ஆண்டுகள் செயல்பட்டது.

அவரது மையம் மூடப்பட்ட பிறகும், நோவாக்-வோகல் பல்கலைக் கழகங்களில் விரிவுரை பணியைத் தொடர்ந்தார் மற்றும் 1998 இல் அவர் இறப்பதற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பதக்கம் பெற்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகள் இந்த விதிமுறைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

"என்னை இன்ஸ்ப்ரூக்கில் சேர்த்தது என் தவறு என்று நான் நம்பினேன். என்னை நானே குற்றம் செய்தவள் என்று நம்பினேன். நிறைய குழந்தைகள் அப்படித்தான் நம்பினார்கள்”

ஈவி ஏன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் அல்லது ஒரு கட்டத்தில் அவர் ஏன் எதிர்பாராத விதமாக வளர்ப்புத் தாயான ஆனியுடன் வாழத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று ஈவி ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை.

"மீண்டும் ஆனியிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்த கொடுமைகளுக்கு இது தேவலாம் போலிருந்தது. அன்று இரவு சாப்பாட்டு மேசையில், ஆனி குனிந்து, நாற்காலியில் ஒரு சிறிய கீறலைக் காட்டி, இது உன் வேலையா என்று திட்டத் தொடங்கினார். என் இதயம் நடுங்கியது. மீண்டும் மற்றொரு கொடுமை தொடங்கியது."

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி, Kinderbeobachtungsstation இல் தனது கோப்பில் ஸ்டேபிள் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்திருக்கிறார் .

"ஓரளவுக்கு சுயமாக முடிவெடுக்கும் வயது வந்த போது, ஆஸ்திரியாவை விட்டு வெளியேறினேன். அதுவரை ஆனியை சகிக்க வேண்டியிருந்தது. நண்பர்களின் உதவியுடனும், கரீபியனில் ஒரு பயணக் கப்பலில் வேலை கிடைத்தது. அதன் பின் நியூயார்க் வந்தேன். எனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடித்தது. என்னை யாரும் குறை சொல்லவில்லை. தண்டிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்த முதல் இடம் நியூயார்க் தான்"

அங்கிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. புதிய எல்லைகளை அடைந்தேன். ஆனால் எனக்கு நடந்த கொடுமைகளால் மனநோயாளி ஆனேன். ஆழமாக பாதிக்கப்பட்டேன். தூங்குவதில் மிகவும் சிரமப்பட்டேன், சாப்பிட முடியவில்லை.

Kinderbeobachtungsstation இல் இருந்த பிறகு , மனநல மருத்துவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நான் ஒருபோதும் உளவியலாளரின் உதவியை நாட போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தபோது தான் மனநல சிகிச்சை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து என்னால் சிகிச்சைக்கு செல்ல முடிந்தது."

முதலில் நியூயார்க்கிலும் பின்னர் வாஷிங்டனிலும், ஈவி ஒரு புகைப்படக் கலைஞராக ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கினார், காதலித்தார், திருமணம் செய்து கொண்டார், மூன்று குழந்தைகள் மற்றும் பல பூனைகளுக்கு தாயாக நிம்மதியாக வாழ்ந்தார்.

2021 ஆம் ஆண்டில், மஞ்சள் மாளிகை பற்றிய உண்மையை கண்டுபிடித்த போது, ஈவி தன் குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். கடந்த காலத்தின் பயங்கரங்களுக்கு விடை தேடி அவர் ஆஸ்திரியா திரும்பிய போது ஈவியின் குழந்தைகள் அனைவரும் அவருடன் சென்றனர்.

மஞ்சள் வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையம் இருப்பதை அவர்கள் அறிந்தனர் மற்றும் ஈவி அவர்களிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

"மற்றொரு பயணத்தில் என்னை வளர்த்த ஆனியைப் பார்க்க சென்றேன்.

அவர் என்னை பார்த்துவிட்டு வெளியே போ என்று சொல்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில் நம்ப முடியாத ஒன்றை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்து என் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். அன்பான ஒரு வயதான பெண்ணை அன்று நான் சந்தித்தேன்."

ஆனி என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். நான் ஆறுதல்படுத்தினேன். நான் அவருக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை. அதே சமயம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நான் மன்னிப்பதில்லை."

இப்போதெல்லாம் ஈவி நிம்மதியாக தூங்குகிறார், கடந்த காலத்தை பற்றி நினைப்பதில்லை.

"நான் கண்டறிந்த உண்மைகள் என்னை மாற்றின. இனி குற்றவுணர்ச்சிக்கும் பயத்துக்கும் இடமில்லை. நான் நன்றாக தூங்குகிறேன், நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்கிறார் ஈவி உற்சாகத்துடன்.

https://www.virakesari.lk/article/183355

காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்

3 days 10 hours ago

Published By: RAJEEBAN

12 MAY, 2024 | 01:57 PM
image
 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது  என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

gaza_bodies.jpg

இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின்  சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.

அவர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்கள் - உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இடிபாடுகளிற்குள் சிக்குப்படுபவர்களை மீட்பதற்கு அவசியமான இயந்திரங்களை காசாவிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஐநாவும் மனிதாபிமான அமைப்புகளும் ஆதரவளிக்கவேண்டும் என என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் விலகி 40நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மருத்துவமனைக்குள் பாரிய மனித புதைகுழிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த உடல்களை இன்னமும் மீட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/183313

இஸ்ரேலிய பிரதமர் ஒரு இனப்படுகொலையாளி - கொலம்பிய ஜனாதிபதி கடும் விமர்சனம்

3 days 10 hours ago
12 MAY, 2024 | 11:45 AM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது  என அவர் பதிவிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் யூதர்களை கொலை செய்த  நாஜிகளுடன் இஸ்ரேலிய ஜனாதிபதியை ஒப்பிட்டுள்ள  அவர்  எந்த மதத்தினரையும் நீங்கள் கொலை செய்தாலும் இனப்படுகொலை  இனப்படுகொலை தான் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொலம்பிய ஜனாதிபதியை இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/183299

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்

3 days 21 hours ago
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சூ மிட்செல்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 11 மே 2024

'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.'

இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன்.

அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் அவருடன் உரையாட முடிந்தது. எங்கள் இருவருக்குமான உரையாடலின் போது, ஆங்கிலக் கால்வாய் வழியாக அவரால் கொண்டு செல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

“ஆயிரமாக இருக்கலாம், 10,000 இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் எண்ணவில்லை” என்கிறார் மஜீத்.

சில மாதங்களுக்கு முன், மஜீத்துடனான இந்த சந்திப்பு சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றியது.

அகதிகளுடன் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ராப் லாரியுடன் சேர்ந்து, ‘ஸ்கார்பியன்’ (Scorpion) என்று அழைக்கப்படும் இந்த மனிதரை (மஜீத்) கண்டுபிடித்து விசாரிக்க நான் புறப்பட்டேன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிப்ரவரி 2023: துருக்கியில் இருந்து இத்தாலிக்குச் சென்ற படகில் குறைந்தது 95 புலம்பெயர்ந்தோர் இறந்தனர்.

பல ஆண்டுகளாக, ஆங்கிலக் கால்வாய் வழியாக படகுகள் மற்றும் லாரிகள் மூலம் ஆட்களைக் கடத்தும் தொழிலை மஜீத்தும் அவரது கும்பலும் செய்து வந்தனர். ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான ஆள் கடத்தல்களில் இந்த கும்பலுக்கு பங்கு இருந்தது.

2018 முதல் இன்று வரை, ஆங்கிலக் கால்வாயை படகு மூலம் கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தான ஒன்று, ஆனால் கடத்தல்காரர்களுக்கு இவை மிகவும் லாபகரமானதாக இருக்கின்றன.

படகு மூலம் ஆங்கிலக் கால்வாயை கடக்க ஒரு நபருக்கு 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 6.27 லட்சம்) வசூலிக்கிறார்கள். 2023இல் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயற்சி செய்தார்கள், இதனால் இந்தத் தொழிலில் லாபத்திற்கான சாத்தியம் மிகத் தெளிவாக உள்ளது.

ஸ்கார்பியன் என்னும் இந்த குற்றவாளி குறித்த எங்கள் தேடல், வடக்கு பிரான்சின் கலேஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்து தொடங்கியது.

அங்கு நாங்கள் ஒரு சிறுமியைச் சந்தித்தோம். டிங்கி (Dinghy) எனப்படும் காற்று அடைக்கப்பட்ட ஒரு சிறிய படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அந்தச் சிறுமி, கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலைக்குச் சென்றார்.

அந்த டிங்கி படகு கடல் பயணத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கவில்லை. மிகவும் மலிவான விலையில், பெல்ஜியத்தில் இருந்து அந்த பழைய டிங்கி படகு வாங்கப்பட்டது. அதில் பயணித்த 19 பேரிடமும் லைஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்.
கடலுக்கு மக்களை அனுப்புவது யார்?

சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் இங்கிலாந்து காவல்துறையினர், அவர்கள் மொபைல் போன்களை எடுத்து சோதனை செய்கிறார்கள்.

2016 முதல் செய்த சோதனைகளில், ஒரு மொபைல் எண் மீண்டும் மீண்டும் கிடைத்தது.

பெரும்பாலும் அந்த எண் ‘ஸ்கார்பியன்’ என்ற பெயர் அல்லது தேள் புகைப்படத்துடன் சேமிக்கப்பட்டிருக்கும். பர்ஸான் மஜீத் என்ற குர்திஷ் இராக்கிய மனிதரின் குறியீட்டுப் பெயர் தான் இந்த ‘ஸ்கார்பியன்’ என்பதை அதிகாரிகள் உணரத் தொடங்கினர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மூத்த விசாரணை அதிகாரி மார்ட்டின் கிளார்க் எங்களிடம் கூறினார்.

2006ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் மஜீத். ஒரு வருடம் கழித்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார்.

அவர் இறுதியாக 2015இல் இராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

பின்னர் மஜீத், ஸ்கார்பியன் என்ற பெயரால் அறியப்பட்டார்.

2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஸ்கார்பியன் கும்பல் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார் ஸ்கார்பியன்.

பெல்ஜிய நீதிமன்றத்தில் அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 121 நபர்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 834,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.72 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்போதிருந்து, ஸ்கார்பியன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. இதுவே நாங்கள் உடைக்க விரும்பிய மர்மம்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,மஜீத், 2012இல், நாட்டிங்ஹாமில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
ஸ்கார்பியனை சந்திப்பதற்கான முயற்சி

ராபின் தொடர்பு மூலம் ஒரு இரானிய நபரிடம் பேசினோம். அவர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது ஸ்கார்பியனை தொடர்பு கொண்டதாக கூறினார். ஸ்கார்பியன் அந்த இரானியரிடம் தான் துருக்கியில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது வணிகத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

பெல்ஜியத்தில், மஜீத்தின் மூத்த சகோதரரை நாங்கள் கண்டுபிடித்தோம், இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்கார்பியன் துருக்கியில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கிலாந்திற்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு, துருக்கி ஒரு முக்கியமான இடமாகும். அதன் குடியேற்றச் சட்டங்கள் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விசா பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது.

இஸ்தான்புல்லில் கடத்தல்காரர்கள் அடிக்கடி வரும் ஒரு ஓட்டலுக்கு நாங்கள் சென்றோம். பர்ஸான் மஜீத் சமீபத்தில் அங்கு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் வணிகத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா என்று மேலாளரிடம் கேட்ட போது, மொத்த கஃபேயும் அமைதியாக இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் எங்கள் மேஜையைக் கடந்து செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் காட்ட தனது மேல் சட்டையை விலக்கி காண்பித்தார். நாங்கள் ஆபத்தானவர்களைக் குறித்து விசாரிக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது.

எங்கள் அடுத்த விசாரணை மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. சில தெருக்களுக்கு அப்பால் உள்ள பணப் பரிமாற்ற நிலையத்தில் மஜீத் சமீபத்தில் 172,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.8 கோடி) டெபாசிட் செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் கைப்பேசி எண்ணை அங்கே கொடுத்துவிட்டு வந்தோம், அடுத்த நாள் இரவில், ராபின் தொலைபேசி ஒலித்தது.

தொலைபேசியின் மறுமுனையில் யாரோ ஒருவர் பர்ஸான் மஜீத் என்று கூறிக்கொண்டிருந்தார்.

இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அழைப்பின் தொடக்கத்தை பதிவு செய்ய நேரம் இல்லை.

ராப் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், “நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.” என்று கூறினார்.

நான் அவரிடம், 'நீங்கள் யார்? ஸ்கார்பியனா?' எனக் கேட்டபோது, 'நீங்கள் என்னை அப்படி அழைக்க விரும்புகிறீர்களா? பரவாயில்லை’ என்றார்.

இவர்தான் உண்மையான பர்ஸான் மஜீத் என்பதைச் சொல்ல வழியில்லை, ஆனால் அவர் கொடுத்த விவரங்கள் நமக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகின்றன. 2015ஆம் ஆண்டு நாடு கடத்தப்படும் வரை நாட்டிங்ஹாமில் தான் வசித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் தான் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்தார்.

"இது உண்மையல்ல. இது வெறும் ஊடகங்களின் கூற்று" என்று அவர் தெரிவித்தார். தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது, ஆனால் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கொடுக்கவில்லை.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,தனது சகோதரர்களுடன் ஸ்கார்பியன். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் இடம் தெரியவில்லை.
12 பேருக்கான படகில் 100 பேர்

அவர் எப்போது மீண்டும் அழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இதற்கிடையில், துருக்கியிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்துவதில் ஸ்கார்பியன் இப்போது ஈடுபட்டுள்ளதாக ராபின் உள்ளூர் தொடர்பு எங்களிடம் கூறினார்.

நாங்கள் கேட்டது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம்கூட்டமாக ஏறத் தயாராக இருந்தனர்.

படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும்.

இதில் பெரிய அளவிலான பணம் விளையாடுகிறது. இந்த படகுகளில் ஒரு இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 720,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

எஸ்ஓஎஸ் மெடிட்டரேனியன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா ஷாஃபர்மேயர் கூறுகையில், “கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்."

இந்த நேரத்தில், இந்த கேள்வியை ஸ்கார்பியனிடம் நேரடியாக கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் எங்களை அழைத்தார்.

மீண்டும் ஒருமுறை, தான் ஒரு கடத்தல்காரர் என்பதை அவர் மறுத்தார். இருப்பினும், தான் பார்த்த வேலைக்கான அவரது வரையறை என்பது “நான் பணியை மட்டுமே செய்தேன், ஆனால் கட்டளையிட்டவர் வேறு யாரோ” என்று தோன்றியது.

“நான் வெறுமனே அங்கு இருந்தேன், இப்போது அப்படி கூட இல்லை. நான் பணத்தைக் கையாள்பவன் மட்டுமே” என்று அவர் கூறினார்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்தான்புல், ஐரோப்பாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது.
ஸ்கார்பியனுக்கு சொந்தமான வில்லா

மஜீத் நீரில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் மீது சிறிதும் அனுதாபம் காட்டவில்லை.

"நீங்கள் இறந்து போவது கடவுள் கையில் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உங்கள் தவறும் உள்ளது. கடவுள் ஒருபோதும் 'அந்த படகில் ஏறு’ என்று கூறுவதில்லை." என்கிறார் மஜீத்.

எங்களின் அடுத்த விசாரணைக்கான இடம் மர்மரிஸ் ரிசார்ட் ஆகும், அங்கு ஸ்கார்பியனுக்கு சொந்தமாக ஒரு வில்லா இருப்பதாக துருக்கி போலீசார் கூறினர். நாங்கள் அங்கு விசாரித்தபோது, அவருடன் எல்லோருடனும் நட்பாக இருந்ததாக ஒரு பெண் கூறினார்.

மஜீத் ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார். இது மஜீத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அவரது கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் தலைவிதி பற்றி அல்ல என்றும் அந்தப் பெண் கூறினார்.

"மஜீத் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நான் கேள்விப்பட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தால், மிகவும் அவமானமாக உள்ளது. ஏனென்றால் அவை நல்லதல்ல என்று எனக்குத் தெரியும்." என்கிறார் அந்தப் பெண்.

அவர் இராக்கில் இருக்கலாம் என்று யாரோ தன்னிடம் கூறியிருந்தாலும், சமீபத்தில் மர்மரிஸில் உள்ள அவரது வில்லாவில் அவரைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு நகரமான சுலைமானியாவில் உள்ள ஒரு பணப் பரிமாற்றத்தில் ஸ்கார்பியனை அண்மையில் பார்த்ததாக மற்றொரு நபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

நாங்கள் அந்த இடத்திற்கு புறப்பட்டோம். அங்கு ஸ்கார்பியன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஆனால் ராபின் நண்பரால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. முதலில், மஜீத் மிகவும் சந்தேகமடைந்தார், எப்படியாவது அவரைப் பிடித்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறோம் என்று கவலைப்பட்டார்.

முதலில் ராபின் நண்பர் மூலமாகவும், பின்னர் நேரடியாக ராப் மூலமாகவும் குறுஞ்செய்திகள் குவிந்தன. ஸ்கார்பியன் எங்களை சந்திப்பார், ஆனால் சந்திக்கும் இடத்தை அவரே முடிவு செய்வார் என்றால் மட்டுமே சந்திப்பு நடக்கும். அவர் சொல்லும் இடம் என்றால் பாதுகாப்பாக இருக்குமா அச்சம் இருந்ததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

பின்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?"

நாங்கள் அருகில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னோம். ஸ்கார்பியன் எங்களிடம் அவரை தரை தளத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்கச் சொன்னார்.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,சூ மிட்செல் மற்றும் ராப், ஸ்கார்பியனைச் சந்தித்தபோது, அவர்களின் ஓட்டுனர் ரகசியமாக அதை படம்பிடித்தார்.
ஸ்கார்பியனை சந்தித்த தருணம்

இறுதியாக, நாங்கள் அவரைப் பார்த்தோம்.

பர்ஸான் மஜீத் ஒரு பணக்கார கோல்ப் வீரர் போல் தோற்றமளித்தார். புதிய ஜீன்ஸ், வெளிர்-நீல சட்டை மற்றும் கறுப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார்.

அவர் கைகளை மேசையில் வைத்தபோது, அவரது விரல் நகங்கள் மெனிக்யூர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன்.

இதற்கிடையில், மூன்று பேர் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தனர். அவரது பாதுகாப்பு குழு என்பதை நாங்கள் யூகித்தோம்.

மீண்டும், அவர் ஒரு குற்ற அமைப்பின் தலைவராக இருப்பதை மறுத்தார். மற்ற கும்பல்கள் தன்னை சிக்க வைக்க முயன்றதாக அவர் கூறினார்.

"சிலர் தாங்கள் கைது செய்யப்படும்போது, 'நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம்' என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைவான தண்டனையைப் பெற விரும்புகிறார்கள். அதனால் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார்.

மற்ற கடத்தல்காரர்களுக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களின் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் அவருக்கு கோபம் உள்ளது.

"பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்த பையன் ஒருவன், மூன்று நாட்களில் 170 அல்லது 180 பேரை துருக்கியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினான். நான் தொழில் செய்ய வேறு நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது” என்றார் மஜீத்.

புலம்பெயர்ந்தோர் இறப்புக்கான அவரது பொறுப்பு குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் சொன்னதையே மீண்டும் கூறினார், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு படகில் இடங்களை மட்டுமே முன்பதிவு செய்தேன் என்று.

அவரைப் பொருத்தவரை, ஒரு கடத்தல்காரன் என்பவன் மக்களை படகுகள் மற்றும் லாரிகளில் ஏற்றி அவர்களை சட்டவிரோதமாக கடத்துபவன்.

"நான் யாரையும் படகில் ஏற்றியதில்லை, யாரையும் கொன்றதில்லை." என்றார் அவர். உரையாடல் முடிந்தது, ஆனால் சுலைமானியாவில் தான் பணிபுரிந்த பணப் பரிமாற்ற அலுவலகத்தைப் பார்க்க ராப்பை அழைத்தார் ஸ்கார்பியன்.

அது ஒரு சிறிய அலுவலகம், ஜன்னலில் அரபு மொழியில் சில எழுத்துகளும் ஒன்றிரண்டு மொபைல் போன் எண்களும் இருந்தன. மக்கள் பணம் செலுத்த அங்கு வந்தனர். அங்கு இருந்தபோது ஒரு நபர் ஒரு பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார் ராப்.

இந்த சந்தர்ப்பத்தில், 2016ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் சென்ற போது, தான் எவ்வாறு இந்த வணிகத்தில் இறங்கினேன் என்பதைப் பற்றி பேசினார் ஸ்கார்பியன்.

“யாரும் அந்த மக்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பியே சென்றனர்” என்று அவர் கூறினார். "அவர்கள் கடத்தல்காரர்களிடம், 'தயவுசெய்து, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் கடத்தல்காரர்கள், 'கடவுளுக்காக நான் அந்த மக்களுக்கு உதவுவேன்' என்று கூறுகிறார்கள். பின்னர் இது உண்மையல்ல, அது உண்மையல்ல என்று அவர்கள் புகார் கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கார்பியன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,பெல்ஜியத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற தகவல் தாள்.

2016 மற்றும் 2019க்கு இடையில், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு முக்கிய நபர்களில் ஒருவராக தான் இருந்ததாக ஸ்கார்பியன் கூறினார், மேலும் அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களைக் கையாண்டதாக ஒப்புக்கொண்டார்.

"நான் அவர்களுக்கு வேலை செய்தேன். பணம், இருப்பிடம், பயணிகள், கடத்தல்காரர்கள், இவை அனைத்திற்கும் இடையில் நான் செயல்பட்டேன்” என்று சொல்லும் அவர், தான் ஆட்கள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்தார்.

ஆனால் அவரது நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் முரணானது.

ஸ்கார்பியன் அதை உணரவில்லை, ஆனால் அவர் தனது மொபைல் ஃபோனை ஸ்க்ரோல் செய்தபோது, ராப் பின்னால் உள்ள கண்ணாடியில் மொபைல் திரையின் பிரதிபலிப்பைப் பிடித்தார்.

சில பாஸ்போர்ட் எண்களின் பட்டியலை ராப்பால் பார்க்க முடிந்தது. கடத்தல்காரர்கள் இவற்றை இராக் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள் என்று பின்னர் அறிந்தோம். புலம்பெயர்ந்தோர் துருக்கிக்கு செல்ல, போலி விசாக்களை வழங்க இராக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும்.

அதுதான் நாங்கள் ஸ்கார்பியனைக் கடைசியாகப் பார்த்தது. ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் எங்கள் விசாரணையின் முடிவுகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

பெல்ஜியத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆன் லுகோவியாக், ஸ்கார்பியனுக்கு எதிரான வழக்கில் முக்கிய பங்கு ஆற்றியவர். ஸ்கார்பியன் ஒரு நாள் ஈராக்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அவர் நம்புகிறார்.

"நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்ற சமிக்ஞையை குற்றவாளிக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். நாங்கள் கண்டிப்பாக அவரை வீழ்த்துவோம்" என்று வழக்கறிஞர் ஆன் லுகோவியாக் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cp9gw9e8dnjo

பூமியைத் தாக்கும் சூரிய புயல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

4 days 15 hours ago
download.jpg

பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://thinakkural.lk/article/301379

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலியைக் குறைக்க உதவிய அனிமே, மாங்கா

4 days 16 hours ago
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலியைக் குறைக்க உதவிய அனிமே, மாங்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES/TEZUKA PRODUCTIONS CO., LTD.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 11 மே 2024, 07:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது.

ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனதுக்குள்ளேயே பொருமிக்கொள்வோம்."

இந்த அனுபவத்தைப் பகிராத 90ஸ் கிட்ஸ்களை அரிதாகவே காண முடியும் என்னும் அளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி, இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கின அனிமேக்கள்.

அப்படிப்பட்ட அனிமேக்களும் அவற்றின் உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகிக்கும் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்காக்களும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் குறித்த ஜப்பான் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டதாகவும் அதன் வரலாறு கூறுகிறது.

ஜப்பான் மட்டுமின்றி இன்று உலகம் முழுக்கவே பலரின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட அனிமேக்களும் மாங்காக்களும் அணுகுண்டுக்குப் பிந்தைய ஜப்பானில் வகித்த பங்கு என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

 
அணுகுண்டுகள் ஜப்பானியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்பே ஜப்பான் தோற்றுவிட்டது, ஆனால் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பசிபிக் பெருங்கடலில் முழு ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு, அமெரிக்காவிடம் வீழ்ந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக சரணடையவில்லை.

அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை ஜப்பானிடம் கோரியபோது, தங்கள் பேரரசருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் மட்டுமே சரணடைய முடியும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜப்பானை அணுகுண்டு குறித்து அமெரிக்கா எச்சரித்தபோதும் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று ஜப்பான் ராணுவம் நினைத்தது.

இவற்றைத் தொடர்ந்தே ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுப் பேரழிவு நடத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நிலையில், இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் - அதாவது சுமார் 100கி.மீட்டருக்கு உள்ளாக இருக்கும் ஓர் ஊரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் வானுயர் எழும் காளான் புகைத் திரளைக் காணும்போது நாம் எப்படி உணர்வோம்!

அத்தகைய பேரழிவைக் கண்முன் காணும்போது ஏற்படும் கலக்கம், அச்சுறுதல், நடுக்கம், வேதனை, வெறுப்பு அத்தனையும் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைக் கண்ட மக்களை ஆட்கொண்டிருந்தது.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெந்ரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பிறகான நிலை

ஜப்பானிய மாங்கா கலைஞரான கட்சுஹிரோ ஒட்டோமோ எழுத்தில் உருவான அகிரா என்ற அனிமேவின் இறுதிக்காட்சிகளில் எழும் பிரமாண்ட புகைத்திரளால், நியோ-டோக்கியோ என்ற நகரமே வெறும் எலும்புக்கூடாய்க் காட்சியளிப்பதைப் பார்த்தால், உங்களுக்கு ஓரளவுக்கு அந்த உணர்வின் தாக்கம் கிடைக்கும்.

ஒரு வெடிகுண்டு! ஒரேயொரு முறை வெடித்து, மொத்த நகரத்தையும் விழுங்கிச் செரித்து, அதன் எலும்புக்கூட்டை மட்டும் துப்பும்போது, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அனாதையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களைக் கண்ணால் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்தது.

“இவையனைத்துமே ஜப்பானியர்களுக்கு பேரதிர்ச்சிகரமான அனுபவங்கள். பல ஆண்டுகளாக, பேரழிவு அவர்களின் மனக்கண்ணில் இருந்து நீங்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து தாங்கள் மீண்டுவர, இலக்கியம், இசை, கலை ஆகியவற்றில் அந்தத் தாக்கத்தின் உருவகத்தைக் கொண்டு வருவதை, குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகச் செய்ததாக” தி கான்வர்சேஷன் இதழில் வெளியான அனிமே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகிரா அத்தகைய உருவகங்களுக்கான ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகப் பல மாங்காக்கள் மற்றும் அனிமேக்களில் அணுகுண்டு வெடிப்பின் உருவகங்களையும் குறியீட்டையும் காண முடியும்.

இன்று வரை பல அனிமேக்களில் அந்த பிரமாண்ட புகைத்திரளின் உருவகம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன.

எடுத்துக்காட்டாக, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் நருட்டோ அனிமேவில் வரும் பெயின் (Pain) என்ற கதாபாத்திரம், கொனோஹா கிராமத்தின் மேலே வானில் நின்றுகொண்டு தனது 'ஷின்ரா டென்சேய்' என்ற சக்தியைப் பயன்படுத்துவார். அது அந்தக் கிராமம் முழுவதையும் மிகப் பிரகாசமான ஒளியால் மூடிப் பிறகு பெருவெடிப்பை ஏற்படுத்தும்.

அணுகுண்டை நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும் இதை ஒத்தே இருக்கின்றன. இதேபோல் ஒன் பீஸ் தொடரிலும் வேகாபங்க் என்ற விஞ்ஞானி உருவாக்கிய மதர் ஃப்ளேம் என்ற ஆயுதமாகவும் பயன்படுத்தவல்ல ஆற்றலும் அணு ஆற்றலையே மையாமக் கொண்டுள்ளது.

 
அனிமே, மாங்கா என்றால் என்ன?
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனிமேக்களின் வரலாறு 1907ஆம் ஆண்டில் இருந்தே தொடங்குகிறது.

இருப்பினும், அவற்றுக்கு அனிமே என்ற குறிப்பிட்ட சுருக்கம் பயன்படுத்தப்பட்டது 1960களில் இருந்துதான் என்கிறார் ஜோனாதன் க்ளிமென்ட்ஸ். முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் எய்கா ஹ்யோரான் என்ற திரைப்படங்களை விமர்சிக்கும் இதழில் இவை குறித்து கட்டுரை எழுதிய மோரி டகுயாதான் அனிமே என்ற அனிமேஷனுக்கான சுருக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் 2013 வெளியான தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அனிமே என்பது ஏதோ உருவாக்கப்பட்ட பதம் அல்ல, அது அனிமேஷன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கப்பட்ட வடிவமே என்கிறார் அனிமே சார்ந்த வணிகப்பொருட்களுக்கான அனிசிங்க் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அனிமேக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவருமான நிகில் ரவிக்குமார்.

அதே கூற்றை அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய படிப்புகள் துறையின் பேராசிரியர் சூசன் ஜே.நேப்பியர் தனது ‘அனிமே ஃப்ரம் அகிரா டூ பிரின்சஸ் மோனோனோகே’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அனிமேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமான அனிமே, இப்போது அமெரிக்க சொல்லகராதியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்துப் புதிர்களில் இடம்பெறும் அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது.”

அடிப்படையில், ஜப்பானியர்களை பொறுத்தவரை மேற்கத்திய படைப்பாக இருந்தாலும் சரி, ஜப்பானிய படைப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே அனிமேதான். ஆனால், ஜப்பானிய அனிமேக்களின் கதைக்களம், சண்டை, அதிரடி, காமெடி போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கதைக்களத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சூழலை உணர்வுபூர்வமாகக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இதை மாங்காக்கள் மிக ஆழமாகச் செய்வதாகக் கூறுகிறார் நிகில்.

மாங்கா என்பது மேற்கத்திய, இந்திய காமிக்ஸ் புத்தகங்களைப் போன்றது. அதுவும் காமிக்ஸ் புத்தகம்தான். ஆனால், கதை மீதான மாங்காவின் அணுகுமுறை காமிக்ஸில் இருந்து அதைத் தனித்துவமாக்குகிறது.

நிகிலின் கூற்றின்படி, காமிக்ஸ்களை பொறுத்தவரை அதிரடியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் மாங்காக்கள் “ஒவ்வொரு தருணத்தின்மீதும் அதிக கவனம் செலுத்தும். ஒரு திறந்திருக்கும் கதவு, சூரிய உதயம், ஒருவரின் கண்ணீர், பசி, மகிழ்ச்சி என அனைத்தையும் மாங்காக்களில் வரும் ஓவியங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துல்லியமாகக் கடத்தும். அதுதான் அவற்றின் தனித்துவம்.”

 
காட்ஸில்லா – உயிருள்ள அணுகுண்டு உருவாக்கப்பட்டதன் பிண்ணனி
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஷிரோ ஹோண்டாவின் இயக்கத்தில் 1954ஆம் ஆண்டு வெளியான கோஜிரா படத்தில் வரும் காட்சி

ஜப்பான் இரு அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிடம் சரணடைந்த பிறகு, அந்நாடு மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ள அமெரிக்கா உதவியது. அதைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதிக்கத் தொடங்கியது.

இப்படியாக மார்ச் 1, 1954 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அடோல் என்ற சிறிய தீவில் ஓர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் கடந்து சென்ற ஒரு மீன்பிடிப் படகு அந்த அணுகுண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது. அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டதைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தது.

இதன் பாதிப்புகளால், அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐகிச்சி குபோயாமா உயிரிழந்தார். இது ஜப்பான் மக்களிடையே அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் கொந்தளிக்க வைத்தது. ஐகிச்சி குபோயாமாவின் கடைசி விருப்பமாக இருந்தது ஒன்று மட்டுமே, “அணுகுண்டுக்குப் பலியான கடைசி உயிர் தனதாக இருக்க வேண்டும்.”

இதைத் தொடர்ந்துதான் ஜப்பானில் அணுகுண்டுக்கு எதிரான இயக்கமே உருவானது.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படியாக ஜப்பான் மக்கள், ஹிரோஷிமா, நாகசாகியை தொடர்ந்தும் அணுகுண்டுகளின் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அதன் விளைவாக உருவானதே ஜப்பானிய மொழியில் கோஜிரா என்றழைக்கப்படும் காட்ஸில்லா.

காட்ஸில்லா என்பது அணுகுண்டின் பண்புகளை உருவகப்படுத்திய ஓர் உயிருள்ள கதாபாத்திரம்தான் என்கிறார் அனிசிங்க் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நிகில்.

காட்ஸில்லா கதையில் அதன் அறிமுகமே கடலில் ஒரு மீன்பிடிப் படகைத் தாக்குவதில் இருந்துதான் தொடங்கும். ஐகிச்சி குபோயாமா இருந்த மீன்பிடிப்படகு அணுகுண்டு வெடிப்பில் சிக்கியதைக் குறிக்கும் குறியீடுதான் அந்தக் காட்சி. கலை எப்படி ஜப்பானிய மக்கள் தங்கள் வலிகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுதான் காட்ஸில்லா.

இப்படியாக, பேர்ஃபூட் ஜென், பிரின்சஸ் மோனோனொகே, கிரேவ் ஆஃப் ஃபயர்ஃப்ளைஸ் போன்ற கதைகளின் மூலம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை உருவகப்படுத்தி, ஜப்பான் மக்களின் உணர்ச்சியைக் கடத்துவதற்கான ஓர் ஊடகமாக அனிமேக்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.

 
அனிமே மற்றும் மாங்காக்களில் அணுகுண்டின் தாக்கம்
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

“அனிமே உட்பட ஜப்பான் இலக்கியங்கள் போரின் ஆயுதங்களைப் பற்றிப் பேசியதைவிட, அந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையே பேசின. அவ்வளவு கொடூரமான ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தன” என்கிறார் நிகில்.

“எவ்வளவு பெரிய போர்வீரனாக இருந்தாலும், முழுவதும் எரிந்து கருகிப்போன ஒரு குழந்தையின் சட்டையையும் கடைசியில் மிச்சமிருந்த அந்தக் குழந்தையின் ஒற்றைச் செருப்பையும் காட்டினால், போர் குறித்த அவனது வெறி சலனப்படும்.”

அதைத்தான் மாங்காக்களும் அனிமேக்களும் உருவகப்படுத்த முயன்றன என்று கூறும் நிகில், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற அனிமே திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அனிமே துறை மிகவும் இளம் கட்டத்தில் இருந்தது. ஆகவே, அனிமேவை ஒரு முக்கிய ஊடகமாக வைத்து அணுகுண்டின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் மக்கள் விடுபட்டனர், அல்லது அதையே முற்றிலும் வடிகாலாகப் பயன்படுத்தினர் என்று கூற இயலாது என்பது நிகிலின் கூற்று.

ஆனால், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற அனிமே திரைப்படங்கள் ஜீரணிக்கவே முடியாத அணுகுண்டின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வடிகாலாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. மேலும், இந்தக் குறிப்பிட்ட படத்தை ஜப்பான் அரசாங்கமே காட்சிப்படுத்தி, மக்களிடையே விளம்பரப்படுத்தும் அளவுக்கு, அது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைப் பற்றியும் மீண்டு வருதல் குறித்தும் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

 
அனிமேக்களில் அணுகுண்டு தாக்கத்தை தொடக்கி வைத்த முன்னோடிகள்
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,TEZUKA PRODUCTIONS CO., LTD.

நவீன அனிமேக்களின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு டெசுகா மற்றும் மியாசாகி ஹயாவோ ஆகியோர்தான் அணுகுண்டின் தாக்கத்தைத் தங்கள் அனிமேக்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒசாமு டெசுகாவின் மாங்கா படைப்புகளில் விவரிக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் காட்சி, அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தன.

அவரது படைப்புகள் தாங்கவொண்ணா துக்கத்தைக் கையாள்வது, இயற்கையின் அத்தனை அழகையும் அதை அடக்கி ஆள வேண்டுமென்ற மனிதனின் ஆசையால் அழித்துவிட முடியும் என்பன போன்றவற்றைப் பேசின.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒசாமு டெசுகாவின் ஆஸ்ட்ரோபாய்

அவரது பெரும்பாலான படைப்புகள், அனாதையாக்கப்பட்ட ஓர் இளம் கதாபாத்திரம் தன்னந்தனியாக உயிர் பிழைக்கப் போராடுவதைச் சுற்றியிருக்கும். அவரது ஆஸ்ட்ரோபாய் என்ற மாங்காவில், தனது மகனின் இழப்பை ஈடுகட்ட ஒரு விஞ்ஞானி ஆண்ட்ராய்டு சிறுவனை உருவாக்குகிறார்.

பின்னர், அதனால் மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றுணர்ந்து கைவிடுகிறார். அநாதையாக்கப்படும் அந்த ஆஸ்ட்ரோபாய் பிறகு போராடி ஒரு சூப்பர் ஹீரோ ஆகிறார்.

அவரைப் போலவே, அணுகுண்டு வெடிப்பை நேரில் கண்டு உயிர் பிழைத்த கெய்ஜி நகாஸாவா உருவாக்கிய பேர்ஃபூட் ஜென் அணுகுண்டால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் கதையைப் பேசியது.

“நகாஸாவா தனது தங்கை பிறந்து சில வாரங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழந்தைக் கண்முன் கண்டவர். அவரது தாயும் அதே பிரச்னையால் காலப்போக்கில் மரணித்தார்,” என்று தி கான்வர்சேஷன் இதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பேர்ஃபூட் ஜென்னின் கதையும் அத்தகைய ஒன்றுதான்.

 
மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கெய்ஜி நகாஸாவா

இந்த முன்னோடிகளின் படைப்புகள் அதிகம் பேசியது ஒரு பேரழிவின் விளைவுகள், மரணங்கள், இழப்புகள் மற்றும் அதன் பிறகும் நீடிக்கும் இந்த வாழ்வில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அந்தச் சிறிய ஒளி.

அனைத்தையும் இழந்த பிறகும், ஒருவன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும், வாழ்வைப் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதை இவர்களது கதைகள் வலியுறுத்தின.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெசுகாவின் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. முற்றிலும் அழிந்த பிறகும் அதன் அத்தியாயம் முடிந்துவிடாமல், மீண்டும் உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறந்து வரும். அவை அனைத்துமே அப்போதைய ஜப்பான் மக்களின் போருக்குப் பிறகு, அதனால் விளைந்த ஒரு பேரழிவுக்குப் பிறகான மீட்சியை, எழுச்சியை உருவகப்படுத்தின.

போருக்கு முன்பு மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அனிமே கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய சகாப்தம் அனிமே மற்றும் மாங்காக்களில் தொடங்கியது.

ஒசாமு டெசுகா, மியாசாகி ஹயாவோ, கட்சுஹிரோ ஒட்டோமோ, கெய்ஜி நகாஸாவாவை தொடர்ந்து அடுத்து வந்த மாங்கா, அனிமே கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி அதாவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மையமாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார்கள்.

அதன்மூலம், ஜப்பான் மக்கள் எப்படி அது சந்தித்த வரலாற்றின் மிகப்பெரும் அழிவில் இருந்து, அது தந்த வலியில் இருந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது.

https://www.bbc.com/tamil/articles/cz5dj6rlr8ro

The US and the West are facing the blowback of sanctions against Russia, economist says

4 days 17 hours ago


இது ஒரு கருத்து மட்டுமே.

இது ஒரு காரணம் (இங்கு) முன்பு சொல்லி இருக்கிறேன் - (முன்பு நடந்த உலக யுத்தங்களும் பொருளாதாரத்தில் (தடை போன்றவற்றில்) தான் தொங்கியது) -   பெரிய யுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்திய கூறு கூடி வருகிறது.

இந்த கருத்தில் சொல்லியது நடக்காது இருக்க வேண்டும் என்கிறால், (மேற்கு) கடல், ஆகாயம், தரை வழி வழங்கல் பாதைகளை தடுத்தல், கடற்படை முற்றுகை (naval blockade) போன்றவையே அடுத்த  வழி, 

ஆனால், அது யுத்த பிரகடனம்.

 

https://www.businessinsider.com/us-russia-sanctions-impact-dedollarization-oil-inflation-war-ukraine-2024-5

 

The US and the West are facing the blowback of sanctions against Russia, economist says
May 10, 2024, 8:43 PM BST
 
 
Oil prices

Craig Hastings/Getty Images

 
  • The West's sanctions against Russia triggered a "dramatic" inflation problem. 
  • That's according to economist Jeff Rubin, who says the US is feeling the blowback of its economic war on Russia. 
  •  
 
 
 

The US miscalculated when it imposed harsh sanctions on Russia, and not only has Vladimir Putin's economy weathered the impact, but the West is facing the negative effects of the economic restrictions it imposed. 

That's according to Jeff Rubin, an economist who thinks the West may have opened "Pandora's box of unintended consequences" by enforcing tight restrictions after Russia's invasion of Ukraine.

"The most obvious of those consequences is the resurrection of inflation, which had been long buried for more than four decades. Sanctions were the trigger for its dramatic revival," Rubin wrote in an op-ed for The Globe and Mail on Friday.

The US and other Western nations have introduced a host of sanctions targeting Russian goods, including bans on Russian energy flows and a $60 price cap on Russian oil traded using Western shipping and insurance firms.

Those measures have helped crimp Moscow's war revenue, but they've likely also resulted in higher prices for Western consumers, Rubin said. Food and energy prices have soared since the West imposed sanctions on Russia, he noted partly because Russia is one of the world's largest exporters of oil and grain.

Inflation could worsen if US trade with Russia's allies, like China, becomes impacted, Rubin said. US firms are at risk of shifting their operations to countries that are on more friendly terms with the US, but America's closest allies are countries where workers earn high wages, which can push prices up for consumers.

"That, in turn, has forced a crippling rise in interest rates, as central banks such as the Federal Reserve Board and the Bank of Canada were reluctantly forced to respond by raising their target interest rates from near zero to the 5-per-cent range," he added.

Rubin notes that Russia had quietly sanction-proofed much of its economy leading up to the invasion, while the BRICS bloc of nations expanded and became more intertwined. This helped insulate Russia against the measures, and rising economies in the global south helped Putin blunt the impact of sanctions. 

 
"That proved to be a fatal miscalculation. Whereas in the past the loss of Western markets – particularly for Russian energy exports, the lifeblood of Moscow's war machine – would have dealt a fatal blow to the Russian economy, that certainly is no longer the case."

Even the US dollar may end up worse off due to sanctions, Rubin said. Russia has been coordinating with its allies to shift away from using the US dollar for trade. Russia's trade with China, for instance, has nearly completely phased out the dollar, Russian officials said last year. 

"Sanctioning the ruble and confiscating a third of the Russian central bank's foreign reserves was supposed to cripple the Russian economy. Instead, it has cost the US dollar its five-decade status as the petrocurrency of the world and may soon cost it even more: its once unrivalled position as the sole reserve currency in the world," Rubin wrote.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் - ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

4 days 22 hours ago
11 MAY, 2024 | 06:25 AM
image
 

ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

https://www.virakesari.lk/article/183203

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் 107 பேர் உயிரிழப்பு!

5 days 15 hours ago
Deaths in Brazil floods rise to 107 | Emirates News Agency

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளப் பெருக்கில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 754 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் தற்போது கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301346

Checked
Thu, 05/16/2024 - 02:50
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe