Jump to content

யார் அந்தக் கறுத்த ஆடுகள்?????


Recommended Posts

black-sheep_1719970i.jpg

... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெனீவாவில் களமிறக்கி மிக திட்டமிட்ட ஓர் யுத்தம் போன்றதையே நிகழ்த்தியது சிங்களம். சிங்களத்தின் இப்பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கியதே ஓர் நரம்பற்ற தமிழிச்சி, அதைவிட இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்களை விரும்பியோ, விரும்பாமலோ தாயகத்தில் இருந்து இழுத்தும் வந்தது. அதில் காலம் காலமாக தமிழின அழிப்புக்கு துணை போகும் ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் முன்னிலை படுத்தப்பட்டதோடு, முள்ளீவாய்க்காலில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றிய வைத்தியர்கள் பலர் பல நிர்பந்தங்களின் மத்தியில் அழைத்து வரப்பட்டு, சிங்களத்தின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர்.

இவைகள் எல்லாவற்றுக்கும் மேலாக இருபதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று எமது இனத்தில் தோன்றிய கறுத்தாடுகள் சிலவற்றையும் களமிறக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, அக்கறுத்தாடுகள் தாம் அங்குள்ள மக்களோடு தொடர்பில் இருப்பவர்கள், அடிக்கடி சென்று வருபவர்கள், ஏதோ தாயகத்தில் உள்ள மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்கள் என்ற மாயையை தோற்று விக்க படாதபாடு பட்டார்களாம். புலத்தில் இருந்து எம் மக்களுக்காக எம்மில் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சென்றாலும், சிங்களத்தினால் இலங்கையில் இருந்து கும்பலாக கொண்டு வரப்பட்டவர்களோடு, இந்த புலத்தில் தமிழினத்தில் தோன்றிய கறுத்தாடுகளும் இணைந்து, இலங்கை திருநாட்டில் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று, சந்தோசமாக வாழ்கிறார்கள் என்ற மாயையை தோற்றுவிக்க முற்பட்டார்களாம்.

பிரித்தானியாவில் இருந்து இரண்டு உட்பட புலமெங்கும் இருந்து இருபது நாலறிவு கூட இல்லாத எம்மினத்தில் பிறந்து விட்ட மிருகங்களை சிங்களம் விலை கொடுத்து வாங்கி சர்வதேசத்துக்கு காட்சிப்படுத்தியதோடு, இம்மிருகங்களை கொண்டே, ஜெனீவாவில் பங்குபற்றிய புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகிய எம்மவர்களில் சிலரையும் மிரட்டியும் உள்ளதாம். ஜெனிவாவில் பங்கு பற்றிய எம்மவர்களில் பலரை புகைப்படங்கள் எடுத்தும், அவர்களது நேரடி குடும்பங்கள் ஆபத்துக்களை சந்திக்கும் வண்ணம் அவற்றை சிங்களம் இணையங்கள், பத்திரிகைகளில் பிரசுரித்தும் உள்ளது.

காலாகாலமாக சிங்களத்துடன் ஒட்டியிருந்து இனவழிப்புக்கு துணை போனதற்கு புலிக்காச்சலை காரணமாக காட்டித்திரிந்த இந்த நாலுகால் மிருகங்கள், முள்ளிவாய்க்காலுக்கு பின்னும் தம்மை மாற்றத்தயாரில்லை என்பது மட்டுமல்ல சிங்களத்தின் இனவழிப்புக்கு எதிரான சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கும் உலகத்தமிழினத்துக்கு இடையூறுகளை உண்டு பண்ணத்தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த புலத்தில் இன்னும் எம்மத்தியில் இருக்கும் கறுத்தாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். மக்களுக்கு இந்நாலு கால் மிருகங்களை அடையாளம் காட்ட வேண்டும்.

இதை செய்ய தவறுவோமாயின், இன்னும்/இன்றும் பணத்துக்காக இனத்தை விற்றுப்பிழைக்கும் கூலிகள், தமது செயற்பாடுகளை அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய் விடும்.

Link to comment
Share on other sites

Paramilitary leader’s website praises Tamil quislings supporting the government

| by a Special Correspondent in Colombo

douglasdevananda.jpg

( March 27, 2012, Geneva, Sri Lanka Guardian) The paramilitary leader and the government minister Douglas Devanand’s proxy website JalaJalappu (Jolting muddle) published the names of the expatriate Tamils and a Tamil Muslim who had come out of the way to rescue the Sri Lanka government at the Geneva session of Human Rights Council.

News titled ‘Expatiate Tamils campaign in support of motherland’ published in the controversial Jalajapappu website presented photographic display of the three determined campaigners accused of in the payroll of the government. The campaigners were portrayed as true hero’s who had come to the aide of the motherland Sri Lanka with true affection. A lady, who is well known as Drama Queen, is introduced as the member of the unknown Diaspora Dialogue group in the website.

rajesbala.jpg

Though the news displayed the photograph of the lawyer, known as Dirty Bazeer, it did not elaborate about his participation.

bazeer-smm.jpg

The news also praised another henchman of the government, who had been brought from his hideout in Sweden to help in the campaign work for the government at the UN sub-body session.

The news report further said that the right wing Sinhala extremist Douglas Wickramaratne from London and Jarani Silva from Canada joined the government’s jumbo campaign group that packed their bags after experiencing humiliation in the voting on Sri Lanka.

http://www.srilankag...te-praises.html

Link to comment
Share on other sites

...மேல் குறிப்பிட்ட தகவலை லங்கா கார்டியனில் .. ஜெயதேவன் தான் ... பிரசுத்திருக்க வேண்டுமென ஊகித்து ... சிறிலங்கா அரச லண்டன் கூலிகளான ... மங்காத்தா / காக்கா / குத்தியின் மச்சான் ... அடங்கிய கும்பல், ஜெயதேன் மீது தமது இணையங்களில் மிக கீழ்த்தரமான தாக்குதலை தொடுத்திருக்கிறது.

... ஜெயதேவனின் பதில் இதற்கு எவ்வாறு இருக்கப்போகிறது??????

... ஜெயதேவனுக்கு நிச்சயம் ஜெனீவா சென்ற புலத்து கறுத்தாடுகள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும்! அவற்றை வெளியிடுவாரா??????

... ஜெயதேவன் இங்குள்ள ஏனைய சிங்கள கூலிகளை பகிரங்கப்படுத்துவாரா, மக்களுக்கு?????

.... பொறுத்திருந்து பார்ப்போம் .....

Link to comment
Share on other sites

constantine_t_and_minister_dd.jpg

... லண்டன் மங்காத்தாவின் தோஸ்தும், விளம்பரம் என்றால் அம்மணமாக எங்கு ஓடத்துணிந்த கொன்ஸன்ரனையும் சிங்களம் களம் இறக்கியதாக சொல்கிறார்கள்????

என்ன ... இவன்பாவி தொட்டதெல்லாம் நாசம்தான்!... சில மாதங்களுக்கு முன் கூழுக்கு குழையடிச்சு, யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக்க தலைகீழாக நின்று, கூழையும் யாழ்பாணத்தால் திறத்திய பெருமை கொன்ஸன்ரைனுக்கே!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.