Jump to content

ஹிந்திய நடிகையுடன் டேற்றிங் இனவெறி சிறிலங்கா அணி வீரர் டில்சான் சிக்கலில்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா

23-nupur-mehta-and-dilshan-300.jpg

டெல்லி: சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது என்று கூறியிருந்தது.

மேலும், சில இந்தி நடிகைகளை வைத்து பல கிரிக்கெட் வீரர்களை செக்ஸ் ஆசை காட்டி வலையில் வீழ்த்தி வருவதாகவும் அந்த இதழ் கூறியிருந்தது. இந்த செய்தியில், நடிகை நூபுர் மேத்தாவின் முகத்தை மட்டும் லைட்டாக மறைத்து விட்டு அவர் மல்லாந்து கிடப்பது போன்ற அரை நிர்வாணப் படத்தையும் சண்டே டைம்ஸ் போட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியுடன் தனது படத்தை இணைத்துப் போட்டதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் நூபுர். எனக்கு கிரிக்கெட்டே தெரியாது. நான் எந்த கிரிக்கெட் வீரரையும் சந்தித்தில்லை, போட்டியைக் கூட பார்த்ததில்லை. எனது படத்தை எனது அனுமதி பெறாமல் போட்ட பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போகிறேன் என்று ஆவேசமாக குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது தடாலடியாக ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான் என்றும், லண்டனில் கிரிக்கெட் வீரர்கள் சிலரை சந்தித்ததாகவும், இலங்கை வீரர் தில்ஷனுடன் தான் டேட்டிங் செய்ததாகவும் நூபுர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது காசினோ ஒன்றில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலரைச் சந்தித்தேன். ஆனால் எனக்கும் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

அப்போது தில்ஷனுடன் நான் டேட்டிங் செய்து வந்தேன். அவருடன் சேர்ந்துதான் கேசினோவுக்குப் போனேன். ஆனால் அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக கூற முடியாது.

தில்ஷனுடன் நான் போனது எனது தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட உறவு தொடர்புடையது. அதை கிரிக்கெட் சூதாட்டத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. நான் தனிமையில் வசிக்கும் பெண், அழகான பெண். உலகின் எந்த மூலைக்கும் சுதந்திரமாக போய் வரக் கூடிய சுதந்திரம் எனக்கு உள்ளது. யாருடனும் நான் பழக முடியும். பேச முடியும். எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார் நூபுர்.

நூபுர் டேட்டிங் போனதாக கூறப்படும் தில்ஷன் மீது ஏற்கனவே சூதாட்டப் புகார் இருப்பது நினைவிருக்கலாம்.

நன்றி தட்ஸ்ரமிழ்.

Link to comment
Share on other sites

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:

:lol::icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nupur-mehta.jpg

Hot-Sunny-Leone-Bikini.jpg

இண்டைக்கு பின்னேரம் குமாரசாமி வேலையிடத்திலை புத்துணர்ச்சியோடை வேலை செய்வான்.இன்னுமொராளின்ரை வேலையயும் தன்ரை வேலைமாதிரிச்செய்து நல்லபெயர் எடுப்பான் :wub::icon_mrgreen:

Link to comment
Share on other sites

இண்டைக்கு பின்னேரம் குமாரசாமி வேலையிடத்திலை புத்துணர்ச்சியோடை வேலை செய்வான்.இன்னுமொராளின்ரை வேலையயும் தன்ரை வேலைமாதிரிச்செய்து நல்லபெயர் எடுப்பான் :wub::icon_mrgreen:

உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................

அவருக்கு புத்துணர்ச்சி வரலாம். உங்களுக்கு வந்தால் தான்.. தப்பு...! :lol::D

Link to comment
Share on other sites

nupur-mehta.jpg

Hot-Sunny-Leone-Bikini.jpg

உங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி கறுப்பன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................

இப்ப இந்த உலகத்திலை மொத்தமாய் எவ்வளவு சனம் இருக்கெண்டதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? விரும்பினால் வேறை ஆரும் சொல்லலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.