Jump to content

இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை


Recommended Posts

இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை india_china_map_001.jpgஇந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் குறைவாக இருக்கும் இடம்) சென்று குண்டு வீசும் திறம் படைத்தது என்றும் கூறப்படுகிறது.

http://www.newsonews.com/view.php?22yOld0bcs80Qd4e3UMM302cBnB3ddeZBnT202eMAA2e4U08qacb3lOU42

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு இந்தியாவும் தனது, விமான எதிர்ப்புப் படையணியைத் தயார் நிலையில் இருக்கும் படி பணித்துள்ளது!

அவர்கள் பயிற்சி செய்வதையே இங்கு காண்கின்றீர்கள்!

610x.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சர்தாருங்க ஒற்றைக்கால நிண்ணா மட்டும் சீனாவை அடிக்கேலாது. போய் ஒரு வழி பண்ணுங்கப்பா !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

J-10_fighting_plane_combat_aircraft_Chinese_Air_Force_002_AR.jpg

சீன J-10 போர் விமானம். :icon_idea::lol:

நல்லது சீனாவும்.. ஹிந்தியாவும் அடிபடனும்.. சிங்களவனும் பாகிஸ்தான் முஸ்லீம்களும்.... சீனா பக்கம் சாயனும்.. இந்தியா அடிவாங்கனும்.. அப்புறம்.ஐயோ அம்மான்னு.. ஹிந்தியா.. தமிழங்கட காலில வந்து விழ வேணும்.. நமக்கும் கொஞ்ச இடம் தாங்க.. உங்க பலம் அறியாம தப்பிப் பண்ணிட்டோன்னு.. சிங்கும்.. சோனியாவும் கதறி அழுது மன்னிப்புக் கேட்கனும்..!

அதுக்கு நாங்க.. தமிழீழம் வாங்கித் தாங்க.. மிச்சம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லனும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

J-10_fighting_plane_combat_aircraft_Chinese_Air_Force_002_AR.jpg

சீன J-10 போர் விமானம். :icon_idea::lol:

நெடுக்கர்!

இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!

ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!

பாவம். ஹிந்தியா! :lol::D:lol:

Link to comment
Share on other sites

நெடுக்கர்!

இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!

ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!

பாவம். ஹிந்தியா! :lol::D:lol:

உது குன்டில்லை குண்டுன்ர Fan. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்!

இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!

ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!

பாவம். ஹிந்தியா! :lol::D:lol:

Air- Air missile ஆக இருக்கும். சாதாரண பயிற்சியின் போது அதிக நிஜக் குண்டுகளை கொண்டு பறக்கமாட்டார்கள் தானே. இது சாதாரண பயிற்சிப் பறப்பின் போது எடுத்த படமாக இருக்கலாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

China_J-10_fighters-230312-150.jpg

இந்திய எல்லைப் பகுதி அருகே அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் சீனா மிகப் பெரிய அளவில் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதில் முதல்முறையாக சீனாவின் சொந்த தயாரிப்பான ஜே-10 ரக போர் விமானங்களும் இடம் பெற்றன.3,500 மீட்டர் உயரமுள்ள இந்தப் பகுதியில் தரைப்பகுதிகளை தாக்கும் வகையிலான பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டது.

மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் இப்பகுதியில் ஜே-10 ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதற்கான செய்தியையும், படங்களையும் சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜே-10 விமானங்களில் வழக்கமான விமானப் படை குண்டுகளும், லேசர் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதுபோன்ற ராணுவப் பயிற்சி குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதில்லை.

எனினும் இந்த முறை அவ்வாறு வெளியிட்டுள்ளது, இந்தியாவுக்காக சொல்லப்படும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

captain-vijaykanth.jpg

கார்கிலுக்கு போய் ஒண்டியாக பாகிஸ்தான் ராணுவத்தையும் தீவிர வாதிகளையும் ஒரு கை பார்த்து விட்டு வரும் தலைவர் விஜயகாந்து இருக்கும் வரை இவ்வாறு பலரும் எழுதுவது கண்டிக்க தக்கது.. சீனாவெல்லாம் தலைவருக்கு ஜிஜிபி <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்!

இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!

ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!

பாவம். ஹிந்தியா! :lol::D:lol:

சீனன்

தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனன்

தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol::icon_idea:

பெரியவரே கடுகு சிறுசாக இருந்தாலும் காரம் பெருசு..

டிஸ்கி:

பஜ்ஜி மிளகாய் பெருசாக இருக்கும் காரம் கம்மி.. சின்ன மிளகாய் சிறுசாக இருக்கும் காரம் அதிகம்.. நான் கேப்டனை(விஜயகாந்து) உசார் படுத்த போகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவரே கடுகு சிறுசாக இருந்தாலும் காரம் பெருசு..

டிஸ்கி:

பஜ்ஜி மிளகாய் பெருசாக இருக்கும் காரம் கம்மி.. சின்ன மிளகாய் சிறுசாக இருக்கும் காரம் அதிகம்.. நான் கேப்டனை(விஜயகாந்து) உசார் படுத்த போகிறேன்

இதைத்தான் அந்தக்காலத்திலிருந்து சொல்கிறீர்கள்

தூங்கிற சிங்கத்தை எழுப்பக்கூடாது அது இது என்று?

நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் வசனங்களை மட்டும் கேட்பது?

இனி செய்முறை வேணும்

சொல்லிப்போட்டன்

அதுவும் இந்தியாவோட வேணும் :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா பெரியவரே !! நீங்கள் தவறாக நினைத்து போட்டீர்கள் நான் சீனாக்காரன் வைத்திருக்கும் பாமை சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனன்

தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol::icon_idea:

:D:lol::D:lol::D

Link to comment
Share on other sites

வடபிரதேசங்களில் சீனா போர் ஒத்திகை நடத்தினாலும் அது தென்னாசியப் பிராந்தியங்களில், அதுவும் சிறிலங்காவில் நடந்திருக்குமாயின் வரவேற்கப்பட வேண்டியது.

யார் கண்டது? இனிவரும்காலங்களில் அது நிகழலாம். :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

தமிழனப் படுகொலைகளை மேற்கொண்டவர்கள் சிதறி அழியவேண்டும் என்பதே மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனின் அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு இந்தியாவும் தனது, விமான எதிர்ப்புப் படையணியைத் தயார் நிலையில் இருக்கும் படி பணித்துள்ளது!

அவர்கள் பயிற்சி செய்வதையே இங்கு காண்கின்றீர்கள்!

610x.jpg

இதாலை.. கொக்கு கூட, சுட முடியாது.

கவடு தான்... கிழியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதாலை.. கொக்கு கூட, சுட முடியாது.

கவடு தான்... கிழியும்.

:D :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.