Jump to content

கவி எழுதும் ஆசை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவி எழுதும் ஆசை

பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு

கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை

நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில்

நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன்

பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை

தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி

சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க

எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன்

கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து

சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு

வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை

எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன்

கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா?

பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி

கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை

எட்டிப் பிடித்திடவே மொய்த்தபடி கண்ணயர்ந்தேன்

சொட்டக் கவியென்று சொல்லி அங்குவந்து

குட்டித் து}க்கமிடல் குற்றமே என்பதுபோல்

எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை

கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி

சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்

மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன்

பட்டால்தான் தெரியும் படுகவி பட்டதுன்பம்

கட்டாயம் கவியெழுத கதிரைகொண் டங்குசெல்லேன்

வீட்டுவேலை செய்யாமல் பாட்டெழுதச் சென்றகவி

புூட்டிவிட்டுக் குளியறையில் புகுந்துவிட்ட மாயமென்ன?

ஏட்டினிலும் ஏதுமில்லை எனஏங்கி என்மனையாள்

ஆட்டிவிட்ட பம்பரமாய் அடுக்களையில் நின்றிருந்தாள்

மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி

நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட

ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ

அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்

உறவுகளே இக்கவிதையைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்பதை எதிர்பார்க்கிறேன். கூடியளவு நகைச்சுவை கலந்து எழுதவே விருப்பம். இயன்றவரை முயன்றிருக்கிறேன். இக்கவிதை எழுதி சில வருடங்கள் கழிந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா!! கவிதை மிக அற்புதம்..............ஈழத்தில் இருந்து....

மிக இரசித்து ....... எழுதியது போல்....... நன்றாக அமைந்திருந்தது.

உங்கள் சிந்தனையும் கவி ஆர்வமும் மேன் மேலும் உயர்ந்து ஓங்க.......இச் சிறியவளின் வாழ்த்துக்கள்!!!!!!!

அன்புடன் தினவா.............

Link to comment
Share on other sites

ஆகா கவிதை நல்லாயிருக்கு.நாராய் நாராய் பாட்

டு மாதிரி :-)

"எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை

கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி

சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்

மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன் "

இதுவும் கனவிலதானே ஆசிரியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஆசிரியரே கவிதை நன்றாக இருக்கு. அப்படியே முற்றத்து வேம்பின் ஞாபகத்தை கொண்டுவந்திட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஆகா என்று கவிதையை ரசிக்கும் கள உறவுகளுக்கு எனது நன்றிகள் பல.

ஆகா கவிதை நல்லாயிருக்கு.நாராய் நாராய் பாட்

டு மாதிரி

"எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை

கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி

சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்

மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன் "

இதுவும் கனவிலதானே ஆசிரியர்?

_________________

எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம் அல்லவா?

ம்! மொட்டந்தலை?............பார்த்துச் சொல்கிறேன்!

Link to comment
Share on other sites

மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி

நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட

ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ

அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்

சிலசொற்கள் புதிதாக இருந்தாலும் வாசிக்க விளக்க கூடியதாக இருக்கின்றது.. கவி நகைச்சுவையாக இருக்கின்றது. அப்படியே உங்கள் மற்றக் கவிதைகளையும் இணைக்காலமே?...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ரமா அவ்வப்போது ஒவ்வொன்றாக இணைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அல்லவா?

Link to comment
Share on other sites

ஆசிரியரின் கவிதை பற்றி விமர்சனம் சொல்லுற அளவு தமிழ் அறிவு இல்லை அங்கிள் வாசிக்கும் போது நகைச்சுவையாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனம் வேண்டும் என்பதற்காக இங்கே இதனை இணைக்கவில்லை.

நான் சுவைப்பதை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

வாசிக்கும்போது சுவைக்கவேண்டும். அதுதான் கவிதை!

"நகை" யோடு நல்ல தமிழும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

மனதில் வந்ததை எழுதினேன் அவ்வளவுதான்.

நன்றி நித்திலா.

Link to comment
Share on other sites

ஆஹா , கவிதையும் அந்த மாதிரி எழுதுறீங்க.... கவிதையில், ட் டா எண்டு வருவதும் பார்ப்பதுக்கு அழகாகவும் இருக்கு..:wink: நல்லா எழுதிருக்குறீங்க செல்வமுத்து அங்கிள் தொடர்ந்து உங்கள் கவிதைகளை இணையுங்கள்.... வாழ்த்துக்கள்..... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று ஆசிரியர். அப்படியே ஊர் ஞாபகத்தை கொண்டு வந்துட்டுது. வாழ்த்துக்க:ள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

என்ன சொல்ல-

தமிழால் விளையாடி இருக்கிங்க ஆசிரியர் அவர்களே!

நீங்க எங்கயோ - நாங்கள் எங்கோ!

அருமை! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிச் சொல்லக்கூடாது.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" தான்.

முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை.

"முயற்சி திருவினையாக்கும் அல்லவா?"

Link to comment
Share on other sites

ஆஹா!! கவிதை மிக அருமை. ஊரில் இருந்து மிகவும் இரசித்து எழுதியது போல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் செல்வமுத்து அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.