Jump to content

நான் பார்த்த சாத்திரி!!


Recommended Posts

ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன.

அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மிகவும் சினத்துடன் 'அவர் ஒரு மனுசனா..' என்னும் போக்கில் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்கள். நானும் அப்போது யாழில் இணைந்து பதில் எழுதுங்கள் என்று கூறிவிடுவேன். அவர்கள் யாழில் உள்ளார்களா இல்லையா என்பதை நான் அறியேன். :)

ஆனால் சாத்திரியின் அந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது எனக்கு மனதுள் சிரிப்பாக இருக்கும். ஏனெனில் 90களில் Dosல் ஆதமி போன்ற தமிழ் எழுத்துகளை பாவித்த காலத்தில் வெளியிட்ட கடல் என்ற சஞ்சிகையிலும் இப்படியான வகை கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதனால் திரும்ப வந்த அடிகளையும் தாங்கியிருக்கிறோம். அதற்கும் ஒரு துணிவும் அதன் தாக்கங்களைத் தாங்கும் குடும்பமும் வேண்டுமல்லவா?! :)

எழுத்தாளன் என்பவன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால்தான் அந்த உணர்வுகளை எழுத்தில் இறக்கிவைக்க முடிகிறது. அதுமட்டுமல்ல.. தனது உணர்வுகளை மற்றவனுடன் பகிர்ந்துகொண்டு அதை ஒரு அறிவித்தலாக அல்லது அனுபவமாக தான் சார்ந்த சமுதாயத்தில் பதிவுசெய்ய விளைகிறான். இந்த விளைவு இல்லாவிட்டால் தாக்கும் உணர்வுகளைச் சமாளிக்க மது.. போன்ற எத்தனையோ விடயங்களை நாடிவிட்டுப் போகலாம்.

ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் எழுத்தாளன்.. அந்த உணர்வுகளை தனது எழுத்தனுபவங்களைக் கொண்டு நிதானமாகச் சிந்தித்து ஒரு சீரான முறையில் எழுத்தாக்குகிறான் என்பதுதானே உண்மை?! ஆக உணர்ச்சிவசப்படுபவன் அந்த உணர்வுகளை ஒரு பக்குவமான நிலைக்குகொண்டு வரும்போதுதானே எழுத்தாளனாகிறான். இது அந்த எழுத்தாளனது அனுபவங்களைப் பொறுத்தே காத்திரமாகிறது.

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு காலத்தில் ஏதாவது ஒன்று பேசப்படும் பொருளாக இருக்கும்

தற்போது யாழில் "சாத்திரி" :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணா தனது அனுபவத்தில் சாத்திரி என்ற கள உறவு பற்றி தெளிவுறச் சொல்லி இருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றே..!

சாத்திரி ஒரு எழுத்தாளனாக தான் சொல்ல விரும்புவதை தனது வடிவில் சொல்லக் கூடியவர். அதனால் அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிறைய வாசகர்களைக் கவர்ந்தும் இருக்கிறார். பிரச்சனையும் பட்டிருக்கிறார்.

அவருடைய பல ஆக்கங்களோடு முரண்படாத போதும் சில ஆக்கங்கள் மக்களது மேன்மை பொருந்திய நம்பிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த நிலையில் அவற்றோடு இணைந்து அவரோடு விவாதம் செய்திருக்கிறேன். என்ன அவர் இலகுவில் தனது தவறை ஒத்துக் கொள்ளமாட்டார்..! ஆனால் கோபப் படுவார். அது சோழியண்ணா சொன்னது போல.. எழுத்தாளர்களின் சுபாவம் போலும்..!

அண்மையில் அவர் கள விதிக்கு மாறாக நடந்து கொண்டதை இட்டு ஏற்பட்ட தடை என்பது அவருக்கான ஒரு வழிகாட்டலாக இருக்குமே தவிர அவரின் எழுத்தாளுமையை அது பாதிக்காது என்றே நம்புகிறேன். சோழியண்ணா சொன்னது போல தடையை + ve ஆக எடுத்து சாத்திரி தனது படைப்புக்களை இன்னும் ஸ்திரமாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமா.. சாத்திரியோ.. எவருமோ.. அவரவரின் படைப்பளவில் நாம் தவறு காணும் போது.. அதை நிச்சயம் சுட்டிக்காட்டியும்.. மெருகு காணும் போது வாழ்த்தியும் நிற்போம்..! சாத்திரியும் வாசகர்களின் விமர்சனங்களை நக்கலாக நளினமாக நோக்காது அதனுள் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை சிந்தனைகளை உணர்ந்து ஆக்கங்களில் அவற்றை பிரதிபலிப்பது.. இன்னும் இன்னும் அவர் தன்னை எழுத்துலகில் ஸ்தரப்படுத்த உதவும்.

எழுத்துக்களுக்கு அப்பால்.. யாழ் கள உறவாக.. சாத்திரி எமக்கும் நல்ல நண்பரே. அவரோடு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் இல்லாத போதும் பிரச்சனைகளும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

அப்பிடியும் மரம் அந்த இடத்திலயே நின்று காய்க்கும்.. ஆனா...?? மரம் பெட்டர் என்கிறீங்க.. அப்படித்தானே?!! :)

Link to comment
Share on other sites

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

அவரது எழுத்துக்களை யாழ்களத்தில் மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதைகளும் நாட்குறிப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. நகைச்சுவையாகவும் இரட்டை அர்த்தத்திலும் எழுதும் திறமை கொண்டவர். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அவரோடு நான் சில சமயங்களில் முரண்பட்டே வந்துள்ளேன். அதை அவருக்கு தெரிவித்தும் வந்துள்ளேன். அவரும் சில திரிகளுக்கு என் போன்றவர்களை வரவேண்டாம் எழுதவேண்டாம் என்று சொல்லியே திரியை ஆரம்பிக்கும் அளவுக்கு எமக்குள் புரிந்துணர்வு இருந்துள்ளது. இருக்கிறது.

அதேநேரம் எதைப்பகிடியாக எழுதணும் எதை எழுதக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டையும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அதைர அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது நடப்பது சட்டமீறல் சம்பந்தமானது. அதை நிர்வாகமும் அவரும்தான் தீர்க்கணும்.

அதேநேரம் காமம் என எழுதப்பட்ட திரியில் முழுப்போராளிகளையும் ஒருவித காமகளியாட்டக்காறர்கள் என திசை திருப்பியதால் அதை மட்டுப்படுத்தும்படி நிர்வாகத்திடம் நானும் கேட்டுக்கொண்டேன் என்பதை தெரிவிப்பதிலலிருந்து நான் ஒழிந்து கொள்ளமாட்டேன்.

நான் யாழில் செலவிடும் நேரம் எவருக்கானது என்பதை என்றும் ஞாபகம் வைத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

அது நிலாந்தனா அல்லது சயந்தனா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆகா மொத்தத்தில் சாத்திரி எழுதுவதிலும் தவறில்லை அவரை 15 நாள்மாட்டும் தடைசெய்ததும் தவறில்லை என்ற நிலைப்பாட்டுக்கே அனைவரும் வருகிறார்கள் போல?

சோழியன் அண்ணா சொன்னது போல்:

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

அந்த உணர்வுக்கு சாத்திரி ஜயா அடிமையானார் அதனால் அவர் ஆக்கங்களை நீக்கினார்

அதே போல் யாழ்கள விதிகளுக்கு நிழலி கட்டுப்பட்டு அவரை தடை செய்தார்.

தட்ஸ் ஆல்.,,

இனி சாத்திரி செய்ய வேண்டியது 15 நாள் முடியா தனது பயனத்தை யாழில் தொடரவேண்டியது தான் அந்த பயணத்தில் நானும் ஒரு வாசகனாக வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னனைப்பொறுத்த வைரைக்கும் சாத்துக்கு நடந்தது எப்ப பிழை விடுவான் அதுவும் தேசியம் அல்லது புலி என்று பா(கா)த்து இருந்து பழி தீர்க்கப்பட்டிருக்கு.இங்கு யாரோ சொன்ன மாதிரி காய்கிற மரம் தான் எறி வாங்கும்.சாத்து தொடர்ந்தும் எறி வாங்க எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் எழுத்து பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல எழுத்தாளர். அவர் தொடர்ந்து யாழில் எழுதவேண்டும். எங்களால் அறியபடாத பல சம்பவங்களை அவருடைய பார்வையில் மிக தெளிவாக தருவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவருடைய எழுத்துகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

Link to comment
Share on other sites

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

ஆகா.. இந்த தள(அதி)பதி மோகன்தானே?!! :)

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

தொடர்ந்து எழுதுபவர்களை இழக்கக் கூடாது என்ற உணர்வுதான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் இணைப்பில், சாத்திரிக்கு ஏன் முன்னறிவித்தல் கொடுக்கப் படவில்லை என்பதற்கான விளக்கம், மிகத் தெளிவாகவேயுள்ளது!

சாத்திரியும், ஒரு எழுத்தாளன் என்ற முறையில், மனத்தின் ஆதங்கத்தால், எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல என்பதை அறிவார்!

எத்தனை தடவைகள், நாங்கள் ஒரு காலத்தில் எடுத்த முடிவுகளைத் திரும்பிப்பார்க்கும் போது, நமக்குள்ளேயே சிரித்து விட்டிருக்கின்றோம்!

பதினைந்து நாட்கள், சாத்திரியார் தனது முடிவைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து இருப்பார்! ஒரு தெளிவையும் அடைந்திருப்பார்!

திரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

நன்றி ஜஸ்டின்,

எனது கருத்தும் இதுதான்.

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் தலைவரில் விசுவாசம் கொண்டவர்கள் என்று கூறமுடியாது,

முன்னையகாலங்களில் இயக்கத்தில் இருந்த இயக்க போராளிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளமாட்டார்கள் இவரைப்போல் சிலர் தான் இயக்கத்தில் இருந்ததாக கூறிக்கொண்டு இவர் எழுதும் தனது சொந்தகருத்துக்களை புனித இலட்சியம் கொண்ட இயக்கத்துக்கு மாசுவிளைவிக்கும் வகையில் எழுத அனுமதிக்கமுடியாது

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

நன்றி தமிழ்சிறி,

இவர் எழுதியதைப்பார்த்து என்னையும் ஆச்சரியப்பட வைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளிக்கு சரவெடி இல்லாமலா? யாழ் களம் சாத்தர் இல்லாமலா? 

அவர் இன்னும் சூடா வந்து தளத்தை பிரிச்சு மேயபோறார். 

Link to comment
Share on other sites

இதில் இன்னொரு விடயத்தையும் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்

நாம் 2008 இன் இறுதிப் பகுதியில் 'யாழ்கள கனடா உறவுகள் சந்திப்பை' நிகழ்த்தும் போது எம்மை தூற்றியவர்கள் பலர். தூற்றியதுடன் நின்று விடாமல் அதில் கலந்து கொண்ட கள உறவுகளின் மனைவிமாரையும் கொச்சையாக வேறு தளங்களில் எழுதி இருந்தனர். அந்த நேரத்தில் எம் நிகழ்வை வாழ்த்தி எம்மை பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவர் சாத்திரி !!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

 

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

 

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

 

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

 

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

 

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

 

3. சாத்திரி தனது தொடர்கதையின் ஓர் பகுதி நீக்கப்பட்டதால் மனமுடைந்து தான் எழுதிய பதிவுகளை நீக்குவதற்கு யாழ் நிர்வாகமும் நிச்சயம் காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் ஓர் படைப்பாளியாக இருந்தால் அதை - வேதனையை, அவமானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். யாழ் இணையம் பற்றி மோகன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நேரம் இல்லை, அதிககவனம் செலுத்தமுடியவில்லை என்று. இவ்வாறே கருத்துக்களத்தை நிர்வகிக்கும் நிழலி, இணையவனின் சிரமங்களையும் நாம் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அமரர் வசம்பு அவர்களின் நினைவுப்பகிர்வு பற்றிய ஓர் பகுதியில் கருத்துக்களம் பற்றிய சில சிக்கல்களை, சிரமங்களை நான் ஏற்கனவே கூறினேன். இந்தவகையில்...

 

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

 

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

 

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

 

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்புக்கு இரன்டாவது பச்சை குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது போராட்டம் பின்னடைந்துவிட்டது என்று சொல்லுபவர்களே, அதனுடைய காரணங்கள் என்னவென்று பார்க்க விளைவதில்லை. போராடத்தில் ஈடுபட்டவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் பல்வேறுபட்ட நெருகடிகளுக்கூடகவே பயணித்தார்கள் என்பதையும் , அவர்களுக்கும் ஏனையவைகளைப் போல மன உளைச்சல்கள் இருந்திருக்கும், இருந்தது என்று சொன்னால் அது அவர்களை பற்றி நாங்கள் கொண்டிருந்த (மாய) விம்பத்தை தகர்த்து விடும், எனவே அப்படியான செய்திகள், கதைகள் எழுதக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். அப்படி எழுதுபவர்களையும் "மாற்று" கருத்து கொண்டவர்கள் என்ற (இழிவான) பட்டத்தை வழங்க தயாராக உள்ளார்கள். சின்ன வயதில் எனது பேரனார் சொன்ன "அவை மற்ற பார்ட்டி ஆக்கள்" என்பதன் அர்த்தம் இப்போதுதான் அதன் சரியான பொருளுடன்/வலியுடன் தெரிகிறது.

ஆயுத போராட்டத்தின் முடிவில், ஆயிரம் ஆயிரம் போராளிகளும், தளபதிகளும், சரணடையும் போது அல்லது சிலரின்/பலரின் வார்த்தையாலப்படி "ஆயுதங்களை மௌனித்த" போது "செய் அல்லது செத்துமடி" என்கிறவர்களாய் எதிரியிடம் போகவில்லை, நாங்களும் உங்களில் ஒருவர் எங்களுக்கும் உங்களை போன்ற வாழுகிற, அழுகிற, சிரிக்கிற உரிமைகள் இருக்கு, எங்களையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் என்றுதான் வந்தார்கள். அவர்களில் பலர்/சிலரைத்தான் சிங்களம் மனித வேட்டையாடினது, அதைதான் இன்று நாங்கள் பேசுகிறோம். அப்படி அழிந்த மறைந்த மனிதர்களுக்குத்தான் நிஜாயம் கேட்கிறோம்? அந்த பாதையை தாண்டி வந்தர்வர்களுக்குதான் வாழ்வுதேடி அவர்களும் அலைகிறார்கள் எங்களில் இயன்றவர்களும் உதவுகிறார்கள்.

இதிலே அவர்களுக்கும் இடையிடையே "மனிதகுனங்ககளும்" இருந்தது என்று எழுதினால் அதை தடை செயவேண்டும் என்று கடிதம் எழுதும் அன்பர்களும், அது காலத்தின் தேவை என்பவர்களும், ஒன்றை மறந்து விடுகிறார்கள், பிரபாகரனையும் மனிதனாக சிந்திக்க மறக்கும் கூட்டந்தான் சனல் நாலில் இருந்த எல்லாவற்றையும் அதிலே இருந்த பிரபாகரனின் இறப்பு பற்றிய பகுதியால் தவற விட்டு விட்டு இருக்கிறார்கள். காலம் இன்னும் ஓடும், சனல் நாலில் அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்? அப்படி வரும் போது எங்களில் இன்னும் சிலர் மொட்டாக்கு போடவேண்டி வரலாம். அதுவரைக்கும் "மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்....."

மற்றும்படி சாத்திரி என்ன சாத்திரி, எழுதுங்கோ ஆனால் நாங்கள் எதை விரும்புவோம் என்று நாடி பிடித்து எழுதுங்கள். நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் எங்கடை நாலு பச்சை விழாட்டி அது உங்கடை கடைகணக்கு கொப்பியில எழுதின புண்ணாக்கு கணக்குத்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.