Jump to content

"சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

OxfordSt_0802.JPG

என்ன கமலரஜனி..... லண்டனில.. ஏ/எல் சோதின மறுமொழி வந்திட்டுதாம்.. மகனுக்கு எப்படி... உங்க உள்ள பிரபல்யமான ஜூவலரி கடை முதலாளிட மகளுக்கு கேம்பிரிஜ் மெடிசின் கிடைச்சிருக்காம்.. கேள்விப்பட்டினியே..??!

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

அட லண்டனுக்குப் போனதும்.. பெயரையும் மாத்திப் போட்டியே. பறுவாயில்ல..! லண்டன் நாகரிகம் உனக்கும் நல்லாப் பிடிச்சிருக்குப் போல.

இல்ல.... அக்கா. இங்க ஆக்கள் கூப்பிட சுகம் என்று தான். நீண்டுப் பெயர் என்றால் கூப்பிடுறது கஸ்டமெல்லோ..! அதுவும் இல்லாமல்.. அதென்ன.. சினிமாக்காரங்கட பெயரில தூக்கி கலந்தடிச்சு எனக்கு வைச்சு விட்டிருக்கினம்.. என்ற வெறுப்பும் தானக்கா.

சரி சரி.. அதை விடு.. இப்ப பொடிக்கு யுனீவேர்சிட்டி கிடைக்குமோ.. இல்ல...

இன்னும் சரியா தெரியல்லயக்கா. இன்னும் ஒரு கட்டம் சோதனைகள் இருக்குது. அது முடியத்தான் தெரியும் அக்கா. நேற்றும் ஒரே சண்டை. செய்தன் செய்தன் என்டா.. என்ன எல்லாம் குறைஞ்சு வந்திருக்குது... என்று பேசிப் போட்டன்.வெள்ள, கறுப்பெண்டு.. ரியூசனுகளுக்கும் காசைக் கொட்டிப் போறான். நான் அவனைப் பேச அவன் பதிலுக்கு படிச்சு என்னத்தைக் காணப் போறன்... அம்மா நீங்கள் படிச்சுப் போட்டோ லண்டனுக்கு வந்தனீங்கள் என்று கேட்கிறான்..! இந்தக் காலத்தில பிள்ளையளப் பெத்து வளர்க்கிறது சரியான கஸ்டம் அக்கா. அதுவும் வெளிநாட்டில இன்னும் சரியான கஸ்டம். பொம்பிளப் பிள்ளையள் என்றால் சொல்லி வேலை இல்ல. நாய் மொச்ச கணக்கா அதுகளின்ர வீட்டை மொய்ப்பாங்கள் பொடியங்கள்..! ஏதோ எங்களால இயன்ற மட்டும் சமாளிக்கிறது தான். இல்லது வீட்டை விட்டு ஓடிடுங்களே..!

உன்ர பொடியின்ர பலன் என்னவாம். சாத்திரம் கேட்டுப் பாத்தனியே..! இங்க சாத்திரம் கேட்டுச் சொல்லவே. நல்ல ஒரு சாத்திரி இந்தியாவில இருந்து வந்திருக்குது. போர் முடிஞ்சது தான் தாமதம்.. உந்த மலையாள.. மாந்திரிகள் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்துக்க தான் நிற்குதுகள்.

அதையேன் அக்கா பேசுவான். இங்க லண்டனிலும் அதுகளிற்கு குறைவில்ல. வீதி வீதியா நின்று ஒரு துண்டையும் எழுதி வைச்சுக் கொண்டு போற வாற ஆக்களட்ட நீட்டிக் கொண்டு நிற்குதுகள். பொம்பிளையளையும் கூட்டிக் கொண்டு வந்து எப்படித்தான் உழைக்குதுகளோ.. தெரியல்ல..??! முழத்துக்கு முழம் நிற்குதுகள். இப்ப அங்கையும் வந்திட்டுதுகளே..??!

ஓமடியப்பா. இங்க சனம்.. படையெடுக்குது. வெளிநாட்டுக்கு போற பலன்.. படிப்பு.. பதவி.. காதல்.. குழந்தைப் பாக்கியம்.. வீடு.. வாகனம்.. வசியம்.. பில்லி.. சூனியம்.. என்று அவங்களும் சொல்லாத குறிகள் இல்ல..!

எங்கட சனங்கள் உதுகளை இன்னும் நம்புதுகளே அக்கா..?!

நீ வேற.. எங்கட பவளம் அன்ரி.. வீட்டுக்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்கள் என்று சொல்லி.. அவான்ர மகன் கனடாவில இருந்து காசனுப்ப.. இரண்டு இலட்சம் செலவழிச்சு.. கழிப்பு கழிச்சவா எண்டால் பாரன். அதுவும் இல்லாமல் பர்வதம் பெத்தாச்சி.. பேத்திக்கு யாரோ லண்டனில வசியம் வைச்சிட்டாங்களாம் என்று அதை தேசிக்காய் வைச்சு வெட்ட வந்து நிண்டா..!

ஆஆ.. நீங்கள் உதுகளைச் சொல்லத்தான் எனக்கும் நினைவு வருகுது. இவன் என்ர பொடிக்கும்.. படிப்பை இடையில குழப்புவான் என்று முந்தி இந்தியா போன மூட்டம் கேட்க ஒரு சாத்திரி சொன்னவன். இவன்ர கதையை பார்த்தால் குழப்புவான் போலக் கிடக்கு. எதுக்கும் அவன்ர குறிப்பை ஈமெயிலில அனுப்பி விடுறன் பார்த்துச் சொல்லுறீங்களே அக்கா.

அதுக்கென்னடி. பார்த்துச் சொல்லுறன். அதுசரி.. உன்ர மகனுக்கு கேர்ள் பிரண்ட் அதுஇதெண்டு இருக்கே. அதனால சிலவேளை படிப்பில கவனம் குறைச்சிருக்கலாம் இல்லையே..!

அப்படி ஒரு சிலமனும் இல்ல. முந்தி ஒன்றோட கதைச்சுக் கொண்டு திரிஞ்வன் தான். அது வேற்று மதம்.. அம்மம்மா பேசுவா என்று சொல்லி முறிச்சு விட்டிட்டன். அவன் அம்மம்மா சொன்னால் கேட்ப்பான். அவாக்கு கலை வாறது தானே. ஒருக்கா இஞ்ச லண்டனுக்கு வந்து நிற்கேக்க கலை வந்திட்டுது. அப்ப அவா இவனுக்கு கலைல விபூதி அடிச்சுப் போட்டு சொன்னவா.. அம்மா அப்பா சொல் கேட்டு நட என்று. அதுக்குப் பிறகு அம்மம்மா என்றால் சரியான பயம். சாமி பக்தியும்..!

அதுதான் நல்லது. அப்படி வெருட்டி வைச்சால் தான் உந்தப் பிள்ளையள் கொஞ்சம் என்றாலும் அடக்க ஒடுக்கமா இருக்குங்கள். என்ன பாடுபட்டு என்றாலும் அவன யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிப் போடு. இல்ல இஞ்ச நான் தலைகாட்ட முடியாது. உன்ர ஒண்டவிட்ட தங்கச்சிட மகனுக்கு லண்டனில யுனிவேர்சிட்டி கிடைக்கல்லையாம். ரவுடியா சுத்துதாம் என்று நக்கலும் நளினமும் கூடிடும்..!

எனக்கு தெரியும் தானேக்கா. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதெண்டு. என்னால இயன்ற மட்டும் முயற்சிப்பன். போறதும் விடுறதும் பிள்ளைகளின்ர பலனிலும் இருக்கல்லே அக்கா.

ஓம்.. நீ சொல்லுறதும் சரி தான். எதுக்கும் அவன்ர குறிப்பை மறக்காமல் அனுப்பி விடு. நான் சாத்திரியிட்ட கொடுத்து.. பார்த்துச் சொல்லுறன். சரியே.

சரியக்கா. உங்கட உதவிக்கு நன்றி. இப்பவே அனுப்பி விடுறன். அந்த பழைய ஈமெயில் தானே.. இப்பவும் பாவிக்கிறியள்.

ஓம்.. அதுதான்ரியப்பா இப்பவும் பாவிக்கிறன்.

சரி.. சரி.. மகன் ஸ்கூலால வந்திட்டான். சாப்பாடு போட்டு தீத்தி விடனும்.

என்ன.. அவனுக்கு இப்ப தானே பெரிய கோல் எடுத்து 18 வது பிறந்த நாள் கொண்டாடினா. இன்னும்.. சாப்பாடு தீத்தி விடுறியோ..??!

அதையேன் அக்கா கேட்கிறீங்கள்.. அவனுக்கு படிக்கிறதும்.. லப் டொப்பில படம் பாக்கிறதும்.. ஐபொட்டில பாட்டுக் கேட்கிறதும்.. கேம் விளையாடிறதும்.. கால்பந்து விளையாடுறதும் தான் தெரியும். ஒரு வீட்டு வேலை செய்யமாட்டான். உடுப்பை வாசிங் மிசினில போடக் கூடத் தெரியாது. கசங்கின உடுப்பை அயன் பண்ணத் தெரியாது. சாப்பாடும் போட்டுக் கொடுத்தால் தான் சாப்பிடுவான். சில நேரம் தீத்தி விடனும். இல்ல தூக்கி வீசிட்டு.. மக்டொனால்ட் போறன் என்று போயிடுவான். சமைச்ச சோறு கறி கிடந்து இழுவிண்டும்..!

நல்ல பழக்கம் பழக்கி வைச்சிருக்கிறா. உவன் எப்படி வெளில போய் பிழைக்கப் போறானோ..??!

அவனுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்குது. யுனிவேர்சிட்டிக்கு போனால் எல்லாம் பழகிடுவான். எதுக்கும் யுனிவேர்சிட்டிக்கு போற பலன் இருக்கோ என்று நீங்கள் ஒருக்கா சாத்திரிட்ட கொடுத்து மறக்காமல் பார்த்துச் சொல்லுங்கோ. அவன்ர வாழ்க்கையே யுனிவேர்சிட்டில தான் இருக்குது. அது சாத்திரியின்ர வாக்கில தான் தங்கி இருக்குதக்கா.

சரி சரி..ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாத்தையும் கடவுள் மேல பாரமாப் போட்டிட்டு... சாத்திரியை நம்பு.. அப்புறம் பார்.. அவன் எல்லாம் பாஸாகி.. யுனிவேர்சிட்டி போய்.. பட்டமும் எடுத்திடுவான்.

சரி அக்கா. நீங்கள் சொல்லுற படியே செய்யுறன். எப்படியாவது அவனை யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிட்டன் என்றால் அது போதும் அக்கா.

வேற என்ன.. அப்ப நான் வைக்கிறன். இங்கையும் பொழுது இரவு 8 ஆச்சுது. அவர் வெளில போனவர் வரப் போறார். புட்டுக் கொத்திப் போட வேணும்.

சரி அக்கா.. நானும் அவனுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்கப் போறன். வைக்கிறன் அக்கா.

சரிடி. பிறகு கதைக்கிறன். பாய்.

பாய் அக்கா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கள உறவுகளினதும் மோகன் அண்ணாவினதும் அபிப்பிராயப்படி கதையின் தலைப்பில் தவறான புரிதலுக்கு இடமில்லாத வகையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

*****************************************************************************************************************************************************

நன்றி.

நட்புடன்

நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

நன்றி புங்கையூரன். கமலரஜனி அக்கா மட்டுமல்ல.. உங்க பல பேர் உப்படி தான். இலவச ஆங்கில வகுப்புக்கள் நடத்துது அரசாங்கம். ஒரு சிலரை தவிர மிச்சாக்கள் போறதே இல்ல. அப்படி போனாலும்.. அரச உதவிப் பணம் எடுக்க ஆதாரம் காட்ட என்று.. தான் போவார்கள்..! படிக்கப் போறதில்ல..! :lol::):icon_idea:

கதை நல்லாயிருக்கு நெடுக்ஸ், நல்ல கிராமத்து வசனங்கள்!!

எமது கிராமத்து வழக்கை அடையாளம் கண்டுகொண்டதற்கு நன்றி. எனக்கொரு பயமிருந்தது.. நம்மவர்கள் அதனையும் மறந்திருப்பார்களோ என்று..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: :icon_idea: :icon_idea:
Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு.

அண்மைய கதைகளில் 'லண்டன் டாமில்ஸ்' ஐப் போட்டு இந்த வாங்கு வாங்குகிறீர்கள். இப்பத்தான் தமிழ் சமூகத்தோடு பழகத் தொடங்கியிருக்கிறீர்கள் போலக் கிடக்கு. :lol:

சிலர் தமிழ்நாட்டு சினிமா தொலைகாட்சி கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஊரில் இருந்ததை விட இன்னும் மோசமாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு.

அண்மைய கதைகளில் 'லண்டன் டாமில்ஸ்' ஐப் போட்டு இந்த வாங்கு வாங்குகிறீர்கள். இப்பத்தான் தமிழ் சமூகத்தோடு பழகத் தொடங்கியிருக்கிறீர்கள் போலக் கிடக்கு. :lol:

சிலர் தமிழ்நாட்டு சினிமா தொலைகாட்சி கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஊரில் இருந்ததை விட இன்னும் மோசமாக இருக்கிறார்கள்.

நன்றி.

ஆமாம். தப்பிலி. பொதுவாக தமிழ் சமூகத்தோட பழகிறது உண்டு. ஆனாலும் இப்படி பல தரப்பட்ட அந்த சமூக அங்கத்தவர்களையும் சந்திக்கிற வாய்ப்பு முந்தி அவ்வளவா இருக்கல்ல. எந்தச் சமூகத்திலும் இளைய சமூகத்தோடு தான் அதிக உறவாடல் இருந்தது. இப்ப தான்.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

நல்லதொரு ஊடுருவல்....

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் பல விடயங்களை தொட்டு சென்று இருக்கின்றீர்கள்,

நானும் இங்கு சிலரை அவதானித்திருக்கின்றேன் அவர்கள் பிள்ளைகளுக்கு பொதுவான பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை .......

மாறாக தனது பிள்ளை அந்த படிப்பு படிக்குது உன்ரபிள்ளை என்ன படிக்குது ? ரியூசனுக்கு எங்கு விடுகின்றாய் நான் ஒரு வெள்ளையிடம் விடுகின்றேன் என்று பெருமை பேசுவார்கள் பிள்ளைகளைப்பார்த்தால் வெளியில் வரும்போது மற்றவர்களுடன் கதைக்க கூடமுடியாது முழி பிதுங்கிப்போய் இருப்பினம் அங்கிளுக்கு காய் ..... சொல்லு என்றால் ஹாய் அவ்வளவுதான் பேசுவார்கள்,

இவர்களைப்பற்றி நான் எழுத வெளிக்கிட்டால் ..... நான் ஒரு தொடர்கதை எழுதுவது போல் ஆகிவிடும். :lol:

தொடர்ந்தும் எழுதுங்கள் நெடுக்ஸ், கதை சூப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் பல விடயங்களை தொட்டு சென்று இருக்கின்றீர்கள்,

நானும் இங்கு சிலரை அவதானித்திருக்கின்றேன் அவர்கள் பிள்ளைகளுக்கு பொதுவான பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை .......

மாறாக தனது பிள்ளை அந்த படிப்பு படிக்குது உன்ரபிள்ளை என்ன படிக்குது ? ரியூசனுக்கு எங்கு விடுகின்றாய் நான் ஒரு வெள்ளையிடம் விடுகின்றேன் என்று பெருமை பேசுவார்கள் பிள்ளைகளைப்பார்த்தால் வெளியில் வரும்போது மற்றவர்களுடன் கதைக்க கூடமுடியாது முழி பிதுங்கிப்போய் இருப்பினம் அங்கிளுக்கு காய் ..... சொல்லு என்றால் ஹாய் அவ்வளவுதான் பேசுவார்கள்,

இவர்களைப்பற்றி நான் எழுத வெளிக்கிட்டால் ..... நான் ஒரு தொடர்கதை எழுதுவது போல் ஆகிவிடும். :lol:

தொடர்ந்தும் எழுதுங்கள் நெடுக்ஸ், கதை சூப்பர்.

கதை என்று கற்பனைகளையும் மற்றவர்களை இகழும்.. இட்டுக்களையும் செருகி எழுதுவதிலும் கண் முன்னால்.. நம்முன்னால் நடப்பதை பிரதிபலிபத்து எழுதுவதே.. சமூகம் தன் தவறை.. நடத்தையை இனங்காணவும்.. திருத்த வேண்டியதை திருத்தவும்.. சீர்திருத்த வேண்டியதை.. சீர்செய்யவும்.. வகை செய்யும்..! அதையே தான் நாங்கள் பிரதானமாக கையில் எடுத்துள்ளோம்..!

நன்றி தமிழரசு. உங்களின் சில கதைகளையும் படித்திருக்கிறேன். நல்ல சமூக நோக்கோடு அவை எழுதப்படுவதையும் அவதானித்திருக்கிறேன்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

கண்டதை சொல்லியிருக்கிறியள்.. கொஞ்சக் காலத்தால அனுபவிச்சதையும் சொல்லவேணும்.. அப்ப சிலதுகளோ இல்லாட்டி பலதுகளோ வித்தியாசப்படலாம்.

ஊரில பாருங்கோ சொந்தம் பந்தமெண்டு நெருக்கமா சுத்திச் சுத்தி ரண்டு மூண்டு ஒழுங்கேலை ஊருப்பட்ட சனம் இருந்ததுகள்.. ஆனா இஞ்சை.. குடும்பமெண்டு வந்தால் தாய் தேப்பன் பிள்ளையள்.. அதுவும் ஒண்டு ரண்டு பிள்ளையள்.. ஊரைப்போலை ஆறேழு பிள்ளையளும் இல்லை.. உந்த ரீவீயள் கொம்பியூட்டரள் ரெலிபோனளை அங்கால வைச்சுட்டு பாத்தால் தாய் தேப்பனுக்கு கொஞ்சமாலும் அன்போடை மனம்விட்டு உரிமையோடை கதைக்குறதுக்கு பிள்ளையள்தான் கெதி.. இந்த நாட்டு சனங்களைப்போல நாய் பூனையளை வளத்தலாவது அதுகளோட பொழுதைப் பிராக்காட்டி மனசை றிலாக்சாக்கலாம்..

இப்பிடி பிள்ளையளோட கொஞ்சம் செல்லங்குடுத்துப் பழக.. அதுகளும் சிலவேளை அப்பா அம்மா ஒண்டும் பேசாயினம் எண்டு கொஞ்சம் ஓவரா நடக்க வெளிக்கிடூதுகள்.. அடிச்சு வளக்காத பிள்ளையுமில்லை முறிச்சு வளக்காத முருங்கையுமில்லை எண்டு சொல்லுவினம்.. முருங்கை ஊரிலை எல்லோ கிடக்குது.. அதாலை அது இஞ்சை சரிப்படாது..

இப்படி கொஞ்சங்கொஞ்சமா தங்கடை இஸ்டத்துக்கு வளருற பிள்ளையள் கொஞ்சக்காலத்தால பெரிய படிப்பு அது இதெண்டு தனிய போகேக்கை.. அப்பா அம்மான்ரை சின்னச் சின்ன அட்வைசுகளையே ஏதோ பெரிய தொந்தரவெண்டமாதிரி நினைச்சு.. ரெலிபோன் எடுத்தா கதைக்காம.. இப்பிடி அப்பிடி எண்டு தூரத்தூர விலகிக் கொண்டே போறது கனவீடுகளில நடக்குது.. பாவம் தாய் துப்பனும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு எண்ட மாதிரி பிள்ளை என்ன செய்யுறானோ.. படிக்கிறானோ.. ஒழுங்காச் சாப்பிடுறானோ எண்டு வீட்டுக்கை இருந்து யோசிச்சு யோசிச்சு.. பிள்ளையபற்றி வேறையாக்களிட்ட விசாரிச்சால் மானம் போவிடும் எண்டு இல்லாத பொல்லாத மானத்தையும் நினைச்சு.. யோசிச்சு யோசிச்சு.. பிறசரும் ஏறி... என்னத்தை சொல்ல.. என்னத்தை பறைய..??!!

இப்ப கனபேருக்கு பிறசரால கை கால் வாயெல்லாம் ஒருபக்கம் இழுக்குதாம்.. :o:D:rolleyes:

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்

நீங்கள் சொன்னவிடயம் உண்மை

ஆனால் சொன்னவிதம்

இதை நீங்களும் நாங்களும் ரசிப்பது போலுள்ளது.

ஆனால் இதுவும்தமிழரது அவலங்களில் ஒன்றல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதை சொல்லியிருக்கிறியள்.. கொஞ்சக் காலத்தால அனுபவிச்சதையும் சொல்லவேணும்.. அப்ப சிலதுகளோ இல்லாட்டி பலதுகளோ வித்தியாசப்படலாம்.

ஊரில பாருங்கோ சொந்தம் பந்தமெண்டு நெருக்கமா சுத்திச் சுத்தி ரண்டு மூண்டு ஒழுங்கேலை ஊருப்பட்ட சனம் இருந்ததுகள்.. ஆனா இஞ்சை.. குடும்பமெண்டு வந்தால் தாய் தேப்பன் பிள்ளையள்.. அதுவும் ஒண்டு ரண்டு பிள்ளையள்.. ஊரைப்போலை ஆறேழு பிள்ளையளும் இல்லை.. உந்த ரீவீயள் கொம்பியூட்டரள் ரெலிபோனளை அங்கால வைச்சுட்டு பாத்தால் தாய் தேப்பனுக்கு கொஞ்சமாலும் அன்போடை மனம்விட்டு உரிமையோடை கதைக்குறதுக்கு பிள்ளையள்தான் கெதி.. இந்த நாட்டு சனங்களைப்போல நாய் பூனையளை வளத்தலாவது அதுகளோட பொழுதைப் பிராக்காட்டி மனசை றிலாக்சாக்கலாம்..

இப்பிடி பிள்ளையளோட கொஞ்சம் செல்லங்குடுத்துப் பழக.. அதுகளும் சிலவேளை அப்பா அம்மா ஒண்டும் பேசாயினம் எண்டு கொஞ்சம் ஓவரா நடக்க வெளிக்கிடூதுகள்.. அடிச்சு வளக்காத பிள்ளையுமில்லை முறிச்சு வளக்காத முருங்கையுமில்லை எண்டு சொல்லுவினம்.. முருங்கை ஊரிலை எல்லோ கிடக்குது.. அதாலை அது இஞ்சை சரிப்படாது..

இப்படி கொஞ்சங்கொஞ்சமா தங்கடை இஸ்டத்துக்கு வளருற பிள்ளையள் கொஞ்சக்காலத்தால பெரிய படிப்பு அது இதெண்டு தனிய போகேக்கை.. அப்பா அம்மான்ரை சின்னச் சின்ன அட்வைசுகளையே ஏதோ பெரிய தொந்தரவெண்டமாதிரி நினைச்சு.. ரெலிபோன் எடுத்தா கதைக்காம.. இப்பிடி அப்பிடி எண்டு தூரத்தூர விலகிக் கொண்டே போறது கனவீடுகளில நடக்குது.. பாவம் தாய் துப்பனும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு எண்ட மாதிரி பிள்ளை என்ன செய்யுறானோ.. படிக்கிறானோ.. ஒழுங்காச் சாப்பிடுறானோ எண்டு வீட்டுக்கை இருந்து யோசிச்சு யோசிச்சு.. பிள்ளையபற்றி வேறையாக்களிட்ட விசாரிச்சால் மானம் போவிடும் எண்டு இல்லாத பொல்லாத மானத்தையும் நினைச்சு.. யோசிச்சு யோசிச்சு.. பிறசரும் ஏறி... என்னத்தை சொல்ல.. என்னத்தை பறைய..??!!

இப்ப கனபேருக்கு பிறசரால கை கால் வாயெல்லாம் ஒருபக்கம் இழுக்குதாம்.. :o:D:rolleyes:

அய்ய்ய்... நம்மட சோழியண்ணா. எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்கீங்க.. நான் உங்களுக்கு வைத்தியப் பார்க்க என்றே தானே படிக்கிறன்..! கவலைப்படாதேங்கோ சோழியண்ணா..! ஓகேவா..! :):lol:

தங்கள் நேரத்துக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி அண்ணா. :)

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

எந்த விதத்தில் என்ன செய்து சாத்திரி உங்களுக்கு துரோகியானார் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

நன்றி.

அது வேற.. இது வேற. ஆட்டுக்க ஏன் மாட்டைக் கலக்கனும்..! தயவுசெய்து சாத்திரி என்ற கள உறவோடு நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. அவர் நமக்கு நல்ல நண்பர். உங்களுக்கு அவரோட தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தா.. அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கோ. இந்த தலைப்பு அவருக்கானதல்ல..! இது நிஜ சாத்திரிகள் பற்றியது.. மட்டுமே..! :):icon_idea:

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

இதுக்கையும் அரசியலா. ஒருவேளை புளொட்டு ராஜீவ் காந்திக்கு சாத்திரம் சொல்லுற சாத்திரியோட பேசி இருந்தா.. தமிழீழம் இல்ல.. இப்ப மாலைதீவையாவது ஆட்சி செய்திருக்கலாம். :lol::D

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

மாலைதீவு தாக்குதலும் இந்த நாள் பாக்காததால் தான் பிழைச்சதாம்.மெய்யே?? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

கதை சொல்வது போல நிஜத்தில... நடக்காதவைக்கு இது நகைச்சுவை. நடக்கிறவைக்கு கடுப்பு..! அந்த வகையில் நிலாமதி அக்காவிற்கு நகைச்சுவையாக அமைந்துள்ளது. நன்றி அக்கா..! :)

Link to comment
Share on other sites

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

துரோகி?

ஒருமனிதனை எப்படியெல்லாம் திடீரென்று தூற்றுகிறீர்கள்.

அதுசரி, தமிழராயிற்றே.

Link to comment
Share on other sites

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

நன்றி அண்ணா.

பல பெற்றோர் நினைக்கினம்.. இங்க இங்கிலாந்தில் படிக்கிறது ஊரில படிக்கிறது போல என்று. ஆனால் இங்க கொஞ்சம் வேறுபாடு உண்டு. அங்கே போட்டிப் பரீட்சைக்குப் படிக்கிறார்கள். இங்கே தரமறி பரீட்சைக்குப் படிக்கிறார்கள். அங்கே பல்கலைக்கழக நுழைவு இன்றேல்.. வேறு வழி கண்டறிவது கடினம். இங்கே பல்கலைக்கழகம் போக பல்பேறு வழிகள் உள்ளன.

அதுமட்டுமன்றி ஊரில் சாதாரண தரமோ.. உயர்தரமோ.. குறித்த ஆண்டில் ஒரு தடவை தான் தோற்றலாம். ஆனால் இங்கு சாதாரண தரத்தில் கூட.. ஒரு பாடத்தையே பகுதி பகுதியாக பிரித்து ஆண்டுக்கு பல தடவை தோற்ற வைத்து சித்தியடைய வைக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பிப்புக்களின் தரம் ஊரில் கிரமமாக பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு அவை கிரமமாக பரிசோதிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தகுந்த வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

இருந்தும் எம்மவர்கள்.. பிள்ளைகளுக்கு அதிக வேலைப்பளு உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மணித்தியாலத்துக்கு 20.. 25 பவுன் கொடுத்து படிக்க அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் பள்ளியில் படித்ததையே திருப்பிப் படிக்கிறார்கள். பல மாணவர்கள் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காகவே இப்படிப் படிக்கின்றனர். இதனால் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் சுய கற்றல் ஆற்றல் இன்றி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

தமிழ் பெற்றோர் ஒன்றை மனதில் இருத்த வேண்டும். இங்கிலாந்து சிறீலங்கா அல்ல. அங்கு வேறு வகையான கல்வித்திட்டம் நுழைவு முறைமைகள். இங்கு இலகுபடுத்திய செயல்முறை ரீதியான கல்வித்திட்டமும்.. கூடிய அளவு திறந்த நுழைவும்.. எல்லோருக்கும் உயர் கல்வி வாய்ப்பும் என்பது அமுலில் உள்ளது. இங்கே பல்கலைக்கழகம் போவது சாதனை அல்ல.. தேவை..! அங்கே தான் அது சாதனை.. காரணம் அங்கு இலவசக் கல்வி.. போட்டிச் சூழல்..!

பல பெற்றோர் தாம் சிறீலங்காவில் இழந்த கல்வியை எண்ணி இங்கிலாந்தில் பிள்ளைகளைப் போட்டு வாட்டி வதைக்கின்றனர். இது மிகவும் தவறான ஒரு அணுகுமுறை. இதனால் பல்கலைக்கழகத்தில் அது எதிர்பார்க்கும் திறமைகள் இன்றி மாணவர்கள் உள் நுழைவதையே ஊக்குவிக்க முடிகிறது. இதனால் பெற்றோர் அல்ல சிரமப்படுவது. மாணவர்களே. அதனால் தான் பல தமிழ் மாணவர்கள் தொடங்கிய பட்டப்படிப்பையே நிறைவு செய்ய முடியாமல் இடை நடுவில் விட்டு வேறு துறைகளுக்கு தாவித் தாவி காலத்தையும் அரசின் நிதிக் கடனையும் வீணாக்குகின்றனர்..!

இதனை தமிழ் பெற்றோர் நன்கு உணர்ந்து கொண்டு செயற்படுவது அவசியம்..! இதை.. உணரும் பக்குவம்.. படித்த பெற்றோரில் இருந்து சாதாரண பெற்றோர் வரை அநேகரில்.. இருப்பதாகத் தெரியவில்லை.

இதனை இங்கு எழுத வாய்ப்பளித்த ஈஸ் அண்ணாவுக்கு மீண்டும் நன்றி. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

நாமே ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு அதற்குள் தான் நிற்போம் என்ற நிலையில் இருந்து பார்ப்பதால் வரும் குழப்பம் இது என்று நினைக்கிறேன். இந்தத் தலைப்பு அந்த வழக்கத்தை மாற்ற முனைந்தால் அதுவும் ஒரு வகை சீர்திருத்தமாகவே கருத்தப்பட வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.