Jump to content

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :):):) +1 .

Link to comment
Share on other sites

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .

கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

தாழ்மைக்கு என்ன தேவை, இப்போது?

உணர்வு பற்றிய உங்கள் கருத்து, உண்மையானதே!

சில வேளைகளில், கணணி ஒன்று, கவிதை எழுதியமாதிரிப் போய்விடாமலிருக்க அவ்வாறு எழுதினேன்!

இனி எழுதும்போது, கவனத்தில் கொள்கிறேன்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

நன்றிகள்,மல்லிகை வாசம்!

ஊர் கூடித் தேரிழுப்பதில், இன்னும் நம்பிக்கையுள்ளவன் நான்!

விடிகாலை வானம், எவ்வளவு அழகானது?

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள், சாந்தி!

'கொலைக் களங்கள்' ஒளிநாடாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்!

சிந்திய கண்ணீர், காய முன்பு எழுதி முடிக்க நினைத்தேன்!

இப்போது பார்க்கும் போது, இன்னும் மெருகூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

Link to comment
Share on other sites

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

உலகத்தின் இயக்கம், ஒரே திசையில் என்றுமே பயணித்ததில்லை!

சுழற்சி முறையிலேயே உலகம் இயங்குகின்றது!

எங்கள் காலமும் விரைவில் வரும் என நம்புவோம்!

அதை விரைவாகக் கொண்டுவர எம்மால் முடிந்ததைச் செய்வோம்!

தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள், கல்கி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

அருமையான வரிகள் ரோமியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஒரு பச்சை....

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

கருத்துக்கு நன்றிகள், ரதி!

அருமையான வரிகள் ரோமியோ

நன்றிகள், வல்வை!

கீழ்வானம் வெளிக்கும் போது,

காரிருள் கடை கட்டும்! :D

நல்ல கவிதை ஒரு பச்சை....

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

போர்குற்றம் ஏந்துகின்ற தூபிகளின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் ஆன்மா, எப்போதோ உயிர் விட்டிருக்கும்!

சிங்களத்தின் புத்த கோவில்களும், தாஜ் மகால் கல்லறையும், எனது பார்வையில் ஒன்றே!

கருத்துக்கு நன்றிகள், புத்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

//கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ //

எப்பவோ எழுதிய எனது கவிதை ஒன்றில் இருந்து சிலவரிகள் புங்கை அண்ணா...உங்கள் கவிதை இதை நினைவூட்டியது..நன்றி புங்கை அண்ணா அருமையான கவிக்கு...

Link to comment
Share on other sites

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

வலிமையான வரிகள்

நன்றி புங்கை

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.எமக்காக வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் கொலைக்கூட்டத்தையும்,கொலைக்கு அனுசரணையாக இருந்தவரையும் தண்டிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

புங்கையூரானே படைப்புக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் பணி.

வலிமை நிறை வரிகள்!

இது சிங்கள தேசத்தின் நிரந்தரக் குறியீடாகவே இருக்கப் போகிறது. ஆனால் இனவாத உருவேறிக் கருக்கொண்டு பிறக்கும் புதிய குருத்துகள் கூட நவீன உலகின் நடைமுறைகளை ஏற்குமா? மன்னிப்புக்கோருமா? என்பது விடைகாண முடியா வினாவாகும். ஆனால் எமக்கானதை நாமே அடைய வேண்டும். 'கம்மாலையின் இரும்பாவோம் காலத்தை எமதாக்குவோம்'

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.