Jump to content

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :):):) +1 .

Link to comment
Share on other sites

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .

கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

தாழ்மைக்கு என்ன தேவை, இப்போது?

உணர்வு பற்றிய உங்கள் கருத்து, உண்மையானதே!

சில வேளைகளில், கணணி ஒன்று, கவிதை எழுதியமாதிரிப் போய்விடாமலிருக்க அவ்வாறு எழுதினேன்!

இனி எழுதும்போது, கவனத்தில் கொள்கிறேன்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

நன்றிகள்,மல்லிகை வாசம்!

ஊர் கூடித் தேரிழுப்பதில், இன்னும் நம்பிக்கையுள்ளவன் நான்!

விடிகாலை வானம், எவ்வளவு அழகானது?

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள், சாந்தி!

'கொலைக் களங்கள்' ஒளிநாடாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்!

சிந்திய கண்ணீர், காய முன்பு எழுதி முடிக்க நினைத்தேன்!

இப்போது பார்க்கும் போது, இன்னும் மெருகூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

Link to comment
Share on other sites

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

உலகத்தின் இயக்கம், ஒரே திசையில் என்றுமே பயணித்ததில்லை!

சுழற்சி முறையிலேயே உலகம் இயங்குகின்றது!

எங்கள் காலமும் விரைவில் வரும் என நம்புவோம்!

அதை விரைவாகக் கொண்டுவர எம்மால் முடிந்ததைச் செய்வோம்!

தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள், கல்கி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

அருமையான வரிகள் ரோமியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஒரு பச்சை....

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

கருத்துக்கு நன்றிகள், ரதி!

அருமையான வரிகள் ரோமியோ

நன்றிகள், வல்வை!

கீழ்வானம் வெளிக்கும் போது,

காரிருள் கடை கட்டும்! :D

நல்ல கவிதை ஒரு பச்சை....

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

போர்குற்றம் ஏந்துகின்ற தூபிகளின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் ஆன்மா, எப்போதோ உயிர் விட்டிருக்கும்!

சிங்களத்தின் புத்த கோவில்களும், தாஜ் மகால் கல்லறையும், எனது பார்வையில் ஒன்றே!

கருத்துக்கு நன்றிகள், புத்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

//கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ //

எப்பவோ எழுதிய எனது கவிதை ஒன்றில் இருந்து சிலவரிகள் புங்கை அண்ணா...உங்கள் கவிதை இதை நினைவூட்டியது..நன்றி புங்கை அண்ணா அருமையான கவிக்கு...

Link to comment
Share on other sites

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

வலிமையான வரிகள்

நன்றி புங்கை

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.எமக்காக வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் கொலைக்கூட்டத்தையும்,கொலைக்கு அனுசரணையாக இருந்தவரையும் தண்டிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

புங்கையூரானே படைப்புக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் பணி.

வலிமை நிறை வரிகள்!

இது சிங்கள தேசத்தின் நிரந்தரக் குறியீடாகவே இருக்கப் போகிறது. ஆனால் இனவாத உருவேறிக் கருக்கொண்டு பிறக்கும் புதிய குருத்துகள் கூட நவீன உலகின் நடைமுறைகளை ஏற்குமா? மன்னிப்புக்கோருமா? என்பது விடைகாண முடியா வினாவாகும். ஆனால் எமக்கானதை நாமே அடைய வேண்டும். 'கம்மாலையின் இரும்பாவோம் காலத்தை எமதாக்குவோம்'

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.