Jump to content

பாமினி


Recommended Posts

" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?"

எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .

"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".

கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .

"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".

பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .

"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".

"என்னகதை ?"

"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?

அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .

"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மாநில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".

பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .

" எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்க்கு வாறான் . இந்தக் கேணியடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது . பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".

என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .

"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".

பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதியில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .

"சொல்லு பாமினி".

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............

"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".

அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் .

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர்

அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :( :( :( :(
Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

Link to comment
Share on other sites

ஆம்! விடுதலைப்புலிகள் தவறான பாதையில் திசை திருப்பப்பட்டார்கள் இது தான் உண்மை.அவர்களுக்கு தேவையான நேரத்தில் பணம் போய் சேரவில்லை,சரியான சந்தர்பங்களில் தேவையான ஆயுதங்கள் அல்லது அதற்கான ரவைகள் கிடைக்கவில்லை.போர் நிறுத்தகாலத்தில் பணப்பற்றாக்குறையால் போராளிகளை வீடுகளுக்கு அனுப்ப நேர்ந்தது.ஒரு சில கட்டத்தில் போர் முனையில் இருந்த போராளிகளுக்கு சாக்கிலேட் அனுப்ப பட்டது.அச் சந்தர்பத்தில் பெண் போராளிகள் எமக்கு சாக்கிலேட்டில் விட உள் ஆடைகள் தான் முக்கியமாயுள்ளது.அதனை முதலில் வழங்குங்கள் என்ற கேள்வி எழுந்தது.இப்படித்தான் கள நிலைமை இருந்தது.மொத்ததில் பாலா அண்ணாவின் மறைவின் பின் தவறான பாதையில் தான் நாம் அனைவரும் பயணித்தோம் இதுதான் உண்மை.ஏன் இப்போது கூட ஏகன் என்பவர் சனல்4 தொலைக்காட்சி தலைவரின் இருப்பை அறிய முற்படுகிறது என்று இணையங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.இப்படியே கேட்டு கேட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.இலங்கை அரசு புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று உதவி கோரினார்கள்.ஒருசில ஆதாரத்துடன்,இனப்படுகொலை நடந்துமுடியும் வரை அனைவரும் அமைதி காத்தார்கள்.இலட்சக்கணக்கில் படுகொலை நடந்தேறியது.இப்போ ஒரு சிலர் விழித்துகொண்டார்கள் அல்லது தமது இருப்பை இலங்கையில் தொடர இருக்கிறார்கள் எனலாம்.இப்படித்தான் காலம் ஓடுகிறது.இதில் எங்களுக்கு சாதகமாக ஏதும் அமைந்தால் கச்சிதமாக பிடிக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.

தலைவன் ஒரு வழிகாட்டி. தானே உங்களை செல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. நாம் ஒன்று பட்டு (இங்க தான் இடிக்குது) காட்டிய வழியை பாவித்து முன் செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளது

அதற்கும் ஒரு காரணம் இருந்தது , நாங்கள் அதிமேதாவிப் புத்திசாலிகள் என்ற உளப்பாங்கே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நான் என்றுமே விமர்சனத்திற்கு கட்டுப்பட்டவன் ரதியக்கா . முக்கியமாக உங்களைப்போல் சுயவிமர்சனத்திற்கும் கட்டுப்பட்டவன் . உங்கள் தபால் பெட்டியை திறந்து பாருங்கோ ரதியக்கா :) :) :) .

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன்,

இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன்,

இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அகூதா . பாமினி எனது கதைதான் . கிராமிய வழக்கு என்றபடியால் இலக்கணரீதியாகத் தவறுகள் உண்டு . முடிந்தளவில் திருத்தியுள்ளேன் :):):) .

Link to comment
Share on other sites

கோமகன்,

இந்தக்கதையில் நீங்கள் கூற விரும்பும் கருத்துப்பொருள் கடந்த (பரிமளம்), நிகழ் (பாமினி), சரியாக நிலைமைகளை ஆராய்ந்து நடக்காவிட்டால், எதிர்கால (பமி) கதைகளாக நீடிக்கும்.

கருத்துப்பொருள் என்னவென்றால் 'சந்தர்ப்பங்களை பயன்படுத்தல்' என்பதாகும்.

அந்தவகையில் கடந்தகாலத்தில் பாமினி கூறுவதற்கும், அவவின் பாட்டியார் பரிமளம் கூறுவதும் அரசியல் வரலாறு. இங்கே பமி, பாமினியின் பேத்தியார் நாளை எம்மைவைத்து கண்ஸ்க்கு கதை கூறாமல் சுதந்திரமாக வாழ இன்றைய சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

கனடா நாட்டுச் சட்டத்திற்கும் விதிக்குள்ளும் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதை மீறினால் தூக்கி கட்டுநாயக்காவில வீசிடுவாங்கள்.

ஒரு அமைப்பிற்கு.. ஒரு நிறுவனத்திற்கு.. ஏன் இணையத்திற்கு.. விதிகள் சட்டதிட்டங்கள் அவசியமானவை.

Governance அரசுக்கு மட்டுமல்ல.. இணைய உலகில்.. ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. தகவல்தொழில் நுட்பம் அதை இன்று வலியுறுத்தியும் வருகிறது.

இயக்க விதி அற்றவர்கள் இயக்கமற்று போனதையும்.. இயக்க விதி கொண்டவர்கள்.. நீண்ட காலம் இயங்கியதையும் நாம் காண்கிறோம். யாழ் விதியோடு இருப்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக அதன் பெருமை சொல்லி வளர முடிந்திருக்கிறது. அதை யாழ் என்றும் காப்பது அவசியம்.!

இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தை மீறுவோர்.. சட்டவிரோதிகள்.. அதேபோல்.. மக்கள் பொது விருப்பை மீறுவோர் துரோகிகள்.. விதிகளை மீறுவோர்.. விதிமீறிகள்..! இவர்கள் எல்லோரும் தண்டனைக்குரிய மனிதர்களே..! :icon_idea:

Link to comment
Share on other sites

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

அண்ணை சொல்லுறார் எல்லாரும் கவனமாய் கேளுங்கோ!!!!!!......அது சரி இஞ்சை இருக்கிறதுகள் எல்லாம் கூன் குருடு செவிடுகள் தானே....அவர் சொல்லுற தெய்வ வாக்கெல்லாம் இதுகளுக்கு எங்கை விளங்கப்போகுது...

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

யாழில அறி - விக்கப்படாத மட்டு நீங்கள்தானாம் உண்மையோ?

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

Link to comment
Share on other sites

அண்ணை சொல்லுறார் எல்லாரும் கவனமாய் கேளுங்கோ!!!!!!......அது சரி இஞ்சை இருக்கிறதுகள் எல்லாம் கூன் குருடு செவிடுகள் தானே....அவர் சொல்லுற தெய்வ வாக்கெல்லாம் இதுகளுக்கு எங்கை விளங்கப்போகுது...

கூன் குருடு செவிடாக மனதில் இருப்பதே ஊனம்

Link to comment
Share on other sites

இந்தியா இலங்கை ஒப்பந்தத்திலை இணைச்ச வடக்கு கிழக்கு கூட இப்ப இல்லை

Link to comment
Share on other sites

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

ஆரந்தப்புதுத்தலைவர் அர்யுன் ? :o

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

யேசுநாதர் இப்ப எங்கையிருக்கிறார் துரோகி ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

கள விதி:

4. உரையாடல்

"நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

அர்ஜீன் தொடர்ந்து பல தடவைகள் மேற்படி பல களவிதிகளை மீறி எழுதி வருகிறார். நாகரிமான முறையில் கருத்தை முன் வைக்க முடியாத நிலையில் கள விதிகளை சகட்டு மேனிக்கு மீறி வருகிறார். இது மற்றைய உறவுகளும் களவிதிகளை மீறி எழுதத் தூண்டுவதோடு.. வேண்டாத பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகிறது. இதுவே அவர் இங்கு பதிவிடுவதன் நோக்கமாகக் கூட இருக்கலாம். நிர்வாகம்.. எனிமேலும் பொறுமை காப்பது இவர்கள் விடயத்தில் இவர்கள் திருந்த இடமளிக்கும் என்று தெரியவில்லை.

அர்ஜீன் கள விதிகளை மதித்து திருந்தும் வரை அவரின் பின்னூட்டலுக்கு பதிவிட மாட்டோம். அதுமட்டுமன்றி அவர் எம் பின்னூட்டல்களை மேற்கோள் காட்டியோ.. குறிப்பிட்டோ கள விதிகளை மீறிப் பதிவிடுவதை நாம் விரும்பவில்லை என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டுகின்றோம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.