Jump to content

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது


Recommended Posts

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது

நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.

'சிறிலங்காவின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும் முயன்றுள்ளது. நான்கு கற்கைகளை அராய்வதன் மூலம் இவ் ஆவணத் திரைப்படமானது சிறி லங்காவின் அதிபர் மகிந்த இராசபக்ச மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய இராசபக்ச ஆகியோர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் போர்குற்றங்களை இழைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா சிறி லங்காவிற்கு எதிராக முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் இத் திரைப்படம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற நிலைப்பாட்டையும் ஐ.நா. சபையின் சிறி லங்காவிற்கு ஆதரவான கண்மூடித்தனமான நிலைப்பாட்டையும் அலசியுள்ளது.

முன்னைய விவரணத்திலிருந்து தொடரும் இத் திரைப்படம் பாதுகாப்புப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், பெண் போராளிகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கைதானவர்கள் திட்டமிட்ட முறையிற் கொல்லப்பட்டமை போன்றவற்றோடு போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக அதிர்ச்சியான பல புதிய ஆராங்களை வெளியிட்டுள்ளது. கண்ணாற் கண்ட சாட்சியங்களின் படி மக்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் இறக்கக் காரணமாகப் பொய்யான தகவல்களை வெளியிட்ட சிறி லங்காவின் அதிகாரிகள் தொடர்பான தகவல்களும் அடங்கியுள்ளன.

மீண்டும் ஒரு கவலைக்குரிய கேள்வியுடன் திரைப்படம் முடிக்கு வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களின் கதறல் செவிடன் காதில் ஊதிய சங்காகிடுமா? காட்சியின் முடிவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இக் கேள்வியானது பார்வையாளரிடையே மீண்டும் மீண்டும் எழுந்தது. சர்வதேச விசாரணை ஒன்றுக்கான குரல் அங்கே ஓங்கி ஒலித்தது.

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' - 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சி எதிர்வரும் 14ஆம் நாள் மார்ச் மாதம் 2012ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் காணத் தவற வேண்டாமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. கனடியப் பாராளுமற்ற உறுப்பினர், அதிகாரிகள், ஐ.நா. சபை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இவ் ஆவணத் திரைப்படத்தை எடுத்துச் செல்லக் கனடியத் தமிழர் பேரவை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.