Jump to content

தொடர் கவிதை - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரமா, கள உறவுகளே.

இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று இல்லை இரண்டு:

(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.

(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.

கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

நன்றி

Link to comment
Share on other sites

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

ஆசிரியரின் கருத்து சரியானதே!

ரமா அவசரத்தில் எழுதி இருக்கலாம்

அதனால் சில பிழைகள் ஆச்சோ தெரியல -! 8)

இருந்தாலும் எனக்கும் குட்டுறீங்க போல :P -இப்பிடி

"கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்."

தவறுதான் - திருத்தி & திருந்தி கொள்கிறோம் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் வணக்கம்

நான் யாருக்கும் குட்ட வரவில்லை.

களத்திலே நான் அடிக்கடி கூறும் கருத்தைத்தான் இங்கேயும் குறிப்பிட்டேன்.

தவறுகள் எதனையும் "முளையிலே கிள்ளுவது" நல்லதுதானே!

Link to comment
Share on other sites

சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

.

இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று இல்லை இரண்டு:

(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.

(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.

கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

நன்றி

உங்கள் கருத்துக்களை எற்றுக்கொள்கின்றோம். அறியமால் விடும் பிழைகளை சுட்டி காட்டுங்கள் ஆசிரியாரே. எனது பிழையை திருத்தி விட்டேன். இனி தொடர்வோம்.

Link to comment
Share on other sites

சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அப்ப நாங்க என்னவாம் இப்பதான் கவிதைல ஆனா ஆவண்ணாவே அழிச்சு அழிச்சு எழுதுறம் :oops: :oops:

Link to comment
Share on other sites

அப்ப நாங்க என்னவாம் இப்பதான் கவிதைல ஆனா ஆவண்ணாவே அழிச்சு அழிச்சு எழுதுறம் :oops: :oops:

:oops: :oops: நானும் தான்.

Link to comment
Share on other sites

:shock: :shock:

மன்னிக்கவும் சுடர்-

நான் - எழுதி கொண்டு இருக்கேக்க

நீங்க அனுப்பிட்டிங்க

அதுதான் நடந்தது :roll:

Link to comment
Share on other sites

:shock: :shock:

மன்னிக்கவும் சுடர்-

நான் - எழுதி கொண்டு இருக்கேக்க

நீங்க அனுப்பிட்டிங்க

அதுதான் நடந்தது :roll:

பரவாயில்லை வர்ணன். :P

அனைவரும் யோசித்து எழுதுவதற்கு நேரம் எடுக்கும் போது இவ்வாறான தவறுகள் நடப்பது வழமை. அதை பொறுத்துக் கொண்டு முன்னோக்கிசெல்வது நம்கையில்தான் தங்கியிருக்கிறது. ஒரு விடயத்திற்கு இருவரும் எழுதியாகிவிட்டது என்று தயக்கமடையாது தொடர்ந்து செல்லலாம். என்ன இரண்டு தரம் எழுதும் போது இன்னும் எங்களைப் புடம் போடலாம் :wink: :idea: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி நன்றாக இருக்கிறது சின்ன விண்ணப்பம்.. கவிதைகளை இந்த தலைப்பில் எழுதிக்கொண்டு.. கருத்துக்களை தனியாக எழுதலாமே.. கவிதைகளை தொடராக படிப்பதற்கு இலகுவாக நன்றாக இருக்கும். :roll: :P

Link to comment
Share on other sites

:D ஆகா..நன்றாக போகிறதே..தொடர்..கவிதை.. :P

ஆனால் செல்வமுத்து அங்கிள் சொன்ன ஒரு விடயத்தை நானும் திருப்பி சொல்ல நினைக்கிறேன்(தவறெனில் மன்னிக்கவும்)

கவிகளை 10 வரிக்குள் எழுதினால்..சின்ன சின்ன கவிகளாக தொடர அழகாக இருக்கும்.

அத்தோடு...அடுத்து எழுத இருப்பவருக்கும்..கொஞ்சம் சுலபமாக இருக்கு மல்லவா? :roll: :roll:

அப்போ கவி இதுவரை எழுதாதவரும் குட்டி குட்டியாக தொடர முயற்சிக்க இலகுவாக இருக்கும்..

என்ன நினைக்கின்றீர்கள்..:roll:

அத்தோடு தமிழ் அக்கா சொன்னதும் நல்ல ஐடியா தான் :idea:

Link to comment
Share on other sites

நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

ஆகட்டுமுங்க..அப்பிடியே செஞ்சுடுறோம் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமாவின் ஆரம்ப கவிதையும்

அடுத்தடுத்து இருந்த வேறு சில கவிதைகளையும் இங்கே காணவில்லையே! எங்கே போய்விட்டன என்றுபார்த்தேன். அப்போதுதான் அவை தொடர் கவிதைப் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அறிந்தேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனித்தா நன்றி

நான் அதனை எழுதிமுடித்து அனுப்பிய பின்னர்தான் களப்பிரிவிற்குள் சென்று பார்த்தேன்.

உங்கள் உதவிக்கு எனது நன்றி.

Link to comment
Share on other sites

ஆசிரியரே! இந்த முயற்சி நல்ல முயற்சி. சகி சொன்ன மாதிரி கருத்தை ஓரிடத்திலும் கவியை ஓரிடத்திலும் எழுதலாமே?

Link to comment
Share on other sites

எனது தனிப்பட்ட கருத்துதான் -!

தொடர்ந்து உற்சாகமாக கவிதை எழுதினாலும்

சரி பிழைகளை சுட்டி காட்டவும்-வழி நடத்தவும் - சிலர் இருக்கணும்!

இல்லைனா நாங்க எழுதினதுதான் - கவிதை என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டு - சரி பிழை - கவிதை வரைமுறை தெரியாம - எல்லாமே வீணாய்போயிடும்-!

ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள

இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -

ஒரு கடமையாய் நினைத்து -வழி நடத்தணும்- உதவி செய்யணும் - எல்லாரையும் ஊக்கபடுத்தணும் - என்று நினைக்கிறேன் -!

வெளியிலிருந்து வெறும் வாசகர்களாய் இருப்பவர்களுக்கும் -

உங்கள் நெறிபடுத்தலை பார்த்து கவிதை விடயத்தில் முயற்சி செய்தால்-

முகம் தெரியாத உறவுகளின் நன்றிகளும் - உங்களை சாரும்!

ஒரு தகவல் துணையாகவும் இருக்கும் - பலருக்கு-!

ஒவ்வொருவர் கவிதையின்மீதான உங்கள் - கருத்துக்கள் அவசியம்-!

அப்போதான் நிறைய விடயங்களை -கவி எழுத - கன்னிமுயற்சி செய்பவர்கள் - அறிந்து கொள்வார்கள்-!

கவிதை எழுதி ஏற்கனவே பழக்க பட்டவர்கள்-

தாம் விட்ட பிழைகளை தெரிந்து கொள்வார்கள்! 8)

Link to comment
Share on other sites

வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள்.

சினேகிதி - எல்லாரையும் ஒவ்வொன்றாய் குறிப்பிட -முடியுமா?

அதுதான் பொதுவா-

"ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள

இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -"

எண்டு சொன்னேன்!

மற்றும்படி - ஒண்ணுமில்ல!

ரசிகை அக்கா போன்ற எல்லார் கருத்துமே தேவை - !

Link to comment
Share on other sites

சகி இங்க பாருங்களேன்....நான் புதுசா "கவிதைத் தொடர்-கருத்துக்ககள்" என்று தொடங்கி எழுதின கருத்து கடைசில வந்து நிக்குது.எல்லாரும் கருத்து எழுதின பிறகு "நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

" என்று சொல்ற மாதிரி. :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும்.

புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும்.

பா இலக்கணம், யாப்பிலக்கணம் என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும்.

இது எனது நீண்டநாள் ஆசை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.