Jump to content

தொடர் கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவும் மறக்காது எழுதுகின்ற என்நினைவு

பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும்

படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு

தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி

திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு

இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும்

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே

இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்

குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே

எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க

எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! :)

Link to comment
Share on other sites

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே

இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்

குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே

எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க

எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! :)

எல்லாம் கனவாகி

ஏதோ ஒரு காலமாகி

போனது போனதுதான்

மயங்காதே என்கிறேன்

மனசிடம் - கேட்கிறதா?

அந்த ஓலை பாயில்

உறங்கிய நாட்களையுன்

பஞ்சு மெத்தை தூக்கம்

வென்றதா என கேட்டு

மீண்டும்... நெஞ்சில் அறைகிறதே! :arrow:

Link to comment
Share on other sites

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

மாமரவடி மரக்கட்டிலுக்கு நன்றி

காப்புறிதி கட்டியே கடனாளியானேன்

நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்

புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்

லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்.

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}

Link to comment
Share on other sites

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

மாமரடி மரக்கட்டிலுக்கு நன்றி

காப்புறிதி கட்டியே கடனாளியானேன்

நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்

புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்

சட்டை தைக்கக் குடுக்கப்போறன் வாடி நீயும்

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}

எனக்கு தெரிந்த விளக்கம் :P

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்

ஊரோடு நின்று உக்கிய

மாமரத்தடி கட்டிலே எப்போ வருவாய்?

வாகனக் காப்புறுதி கட்டியே கடனாளியானேன்

கிடங்கு முடங்கெல்லாம் என்னை குலுக்கிச் சிரித்த

என் ஓட்டைச் சைக்கிளே நீ எங்கே?!

ஒருநாளைக்கு மூன்றுபடத்தில் மூச்சு வாங்கல்

பசுவை கன்றை நாயை பூனையை

விசாரிக்கும் உலாத்தலில் ஊரில் தேகாரோக்கியம்

நீலம் சில்க் மலிவு விற்பனையாம்

அலுமாரியில் குட்டிக்கடை ஆரம்பம்

'லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்..'

சிக்கனத்தில் சிறந்த வாழ்வு.

Link to comment
Share on other sites

சிக்கனத்தில் சிறந்த வாழ்வு

சிங்களத்தால் சிதைந்த வாழ்வு

இலங்கைத் தீவினிலே

சிங்கள வைப்பகத்தில்

அதிகம் சேமித்தவர்

தமிழர்தானாமே

இன்றும் புலத்தில்

அதிக சேமிப்புடன்

தாயக நினைவுகளை

விட்டெறியா பசுமையுடன்

பச்சை வயல் வெளியில்

பட்டம் விட்ட காலங்கள்

பட்டம் காசுக்காய்

விளம்பரங்களாய் பத்திரிகையில்

பள்ளி படிக்கையிலே

வெள்ளைச் சட்டையுடன்

கையில் புத்தகமும்

நையாண்டிப் பேச்சுகளும்

வெள்ளைக்காரனிற்கு தலையாட்ட

நையாண்டி சிரிப்புடனே

அடுத்தவரை அழைத்துவந்து

இவனிற்கு ஏவல்

Link to comment
Share on other sites

'இவனிற்கு ஏவல்'

ஏவலிட்டது சிங்கள அரசு

துவட்டப்பட்டனர் தமிழர்

சிங்களக் குண்டர்களால்..!

இழந்து விட்டோம் உயிர்கள் பல

இடம்பெயர்ந்தோம் அகதிகளாய்

புலம்பெயர்ந்தோம் வெளிநாடு

கடன்பட்டோம் இந்நாட்டில்

புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்

தாயக நினைவுகள் மட்டும்

புலம் பெயர மறுக்கின்றது...!

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்

தாயக நினைவுகள் மட்டும்

புலம் பெயர மறுக்கின்றது...!

புலம்பெயர மறுக்கின்றது

புலம்பெயர்ந்த வாழ்வினிலும்

சாதிகளே பெரிதென எண்ணும்

எண்ணம் மட்டும்

போக மறுக்கிறது

சாதிகள் இல்லையடி

குலத் தாழ்ச்சி

உயர்ச்சி சொல்லல்

பாவம் என்றுரைத்த

பாவலனின் கனவுதனை

எள்ளி நகையாடி

தொடர்கின்றனர் சாதிதனை

தொழிலிற்கோர் சாதியென

சாதித்து நின்றபின்னர்

வாழ்விற்காய் செய்கின்றார்

அத்தொழிலே தம் தொழிலாய்

சாதிமட்டும் அழியவில்லை

Link to comment
Share on other sites

சாதிமட்டும் அழியவில்லை

'சாதி, சாதி' என்று ஆக்கங்கள் சொன்னாலும்

புகலிடத்தில் சாதித்த சாதனைகள் என்ன என்ன?!

தாயகத்தில் சாதித்த சரித்திரங்கள் கணக்கற்று

வீரம் தியாகமென வீரியமாய் நிமிர்ந்துநிற்க

புகலிடத்தில் சாதனைகள் தமிழினத்தை நிமிர்த்திடுமா?!

Link to comment
Share on other sites

நிமிருமா நாய்வால்

பேத வர்க்கமற்ற காதல்

சமூகப் புரட்சி

கதைக் கருவாக இன்னும்

Link to comment
Share on other sites

கதை கருக்கள் இன்னும்....

கழிப்பறையிலேயே தூங்குகின்றன ...

ஏதாவது சட்டம் யாரும் போட்டால் என்ன? ..

இனியாவது திருந்து தமிழா..

எத்தனை மாற்றம் கொண்டாலும் ...

ஏன் இன்னும் பழமை வாதம்

எம் முதுகிலிருந்து ..

இறங்கி போவதாய் இல்லை???

Link to comment
Share on other sites

இறங்கிப் போகமறுப்பதனை இறக்கி வைப்பதற்கு

இறைவன் கொடுத்த இனிய கொடை

இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து

பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே

பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான்

அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை

அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி

தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே

பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார்

தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும்

மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை

Link to comment
Share on other sites

வளையலவள் என்று

கதையும் சொல்லி

வட்ட நிலா என்று

கவியும் எழுதி

அழகுப் பொருளாய்

பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே!

தொலைந்தது அக்காலம்!

தீ பந்தம் ஏந்திய

தேவதைகள் - ஒளியில்

தேசம் மெல்ல விடிகிறது! :arrow:

Link to comment
Share on other sites

மொட்டைக் கறுப்பனுக்காய்

தட்டையாய் நிலம் பரவி

ஆழ நாற்று நட்டு

மூமாதம் காந்திருந்து

அறுக்கும் நாம் தமிழர்.

தேசப் பயிருக்காய்

நாற்று நட்டோம்

களை பறித்தோம்

காவல் போட்டோம்.

காத்திருப்போம்.

அதை அறுக்க உளம் வருமோ...???

Link to comment
Share on other sites

அறுப்பவர் தலைகள் அறுபடும்

அறுப்பவர் உயிர்கள் விடை பெறும்.

மறுப்பவர் கைகள் உடைபடும்

காப்பவர் கைகள் உரம்பெறும்.

ஏய்ப்பவர் செயல்கள் பொடிபடும்

மேய்ப்பவன் செயல்கள் பலம் பெறும்.

புலிகளின் கனவுகள் நிஜம் பெறும்

தமிழ் இனம் விரைவில் தமிழீழம் பெறும்.

Link to comment
Share on other sites

பெறுகின்ற தமிழீழம் உயர்வடைய

உயர்ந்துள்ள எம்மவரும் கரம்கொடுப்பார்

கொடுத்திடும் கரங்களை அணைத்து

அணையாத தமிழீழம் அடைந்திடுவோம்

அடைய முடியாது என்றிருந்த தமிழீழம்

தமிழீழ மக்களின் கரம்வரும்

கரம்தனை தரவிரும்பும் இளையவர்கள்

இளமையான தம் அறிவுதனை வழங்கிடுவர்

Link to comment
Share on other sites

அடையமுடியாது

என்று சிலர் சொன்ன தமிழீழம்

அருகில் -மிக அருகில் வந்ததுவே!

குருதி கொண்டொரு

வேள்வி நடத்தினோம்

கொள்கைவீரர் ஈந்த

ஆவியில் வாழ்வு கொண்டோம்..........

நெஞ்சுக் கூட்டுக்குள்

பயந்து - பயந்து....

நித்தம் செத்தழியும்

வாழ்வு தொலைத்து....

ஆலமரமாய் எழுந்து நிற்கிறோம்!

ஆணிவேராம்

அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்! :arrow:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆணிவேராம் அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்.

தம்பியாகி அண்ணண் ஆகி இன்று மாமாவாகி நிற்கும் எம் தலைவர் புகழ் பாட

விண்ணும் மகிழ்ந்து மழைத்தூறலால் புகழ

மண்ணும் மகிழ்ந்து அறுவடைகளை தந்திட

பஞ்சம் இன்றி பசி இன்றி

தணைத்தலைவர் காலத்தில் வாழ்கின்ற மகத்தான அனுபவத்தை எண்ணி

கூடி பாடி மகிழ்ந்து விடுவோம்.

Link to comment
Share on other sites

விடுவோம் பானங்கள்

மலரே மதுவே மதுரசமேஎன

கோடைகாலத்துக் கொழுகொழும்பை காண்பதற்று

விடுவோம் கோடிக் கதைகள் விடுவோம்

காதல் என்ற கவலையை விடுவோம்

சாதல் என்ற சுமைகளை விடுவோம்

காலம் என்ற ஆழ்கடல் நீரில்

களிப்பு என்ற படகுகள் விடுவோம்!! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டா கதைகள் விடுவோம்

வேண்டும் விதைகள் இடுவோம்

காதலை நெஞ்சில் விதைப்போம்

கனவினை மண்ணில் புதைப்போம்

சாதலையும் மகிழ்வாய் ஏற்ப்போம்

காலம் என்ற பெயரில்...காலம்

கடத்துவதை தவிர்ப்போம்... :D

Link to comment
Share on other sites

தவிர்ப்போம் என்று மேடையில் குளறி

கவிழ்ப்போம் எனவே வாழ்க்கையை கிளறி

முகிழ்ப்போம் என்ற சிந்தனை கருகி

அழிழ்ப்போம் எனவே பலரும் அருகி.

உணர்வின் பகுதிக் காதலைப் பெருக்கி

வில்லைக்கண்ணால் உருவை பெருக்கி

மனதை அழித்து வாழ்வைத் தொலைத்து

பிறவிப்பயனை கொல்லும் மனிதா! சிந்தி!! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடத்துவதை தவிர்ப்போம்

கடந்துவந்த பாதைகளை மறவோம்.

களிப்பு என்ற படகுகள் விடுவோம்

கடந்தகால நினைவுகளைத் தொடுவோம்.

காலைக் கதிரவன் வரவும்

கலைந்திடும் இரவுப் பனியும்

புள்ளினம் எழுப்பும் ஒலியும்

புூக்களின் நிசப்த விரிவும்

வண்டினம் எழுப்பும் இசையும்

வீசிடும் வாடைக் காற்றும்

கண்டுநாம் களித்த காலை

என்றுதான் மீண்டும் வருமோ?

Link to comment
Share on other sites

வருமோ....வருமோ....

அவள்- கடிதமென்று

போஸ்மனை....

-எதிர் பார்த்து

நானிருந்த ...காலங்கள் !

மணி -அடிக்கும்

போதெல்லாம்

அவள் போனென்று...

-எதிர் பார்த்து

நானெடுத்த...நேரங்கள் !

கண்- மூடும்

போதெல்லாம்

எதிரில் அவளிருந்து

என் - மனதில்...

போட்டுவைத்த....கோலங்கள் !

heartthingy8cu.gif

:arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருமே வருமே

வசந்த காலங்கள் வருமே!

வண்ண நிலாக்காலங்களும் வருமே!

போஸ்மனும் வருவார்..

கடிதமும் வரும்..-ஆனால்

காதல் கடிதத்தில் வருமோ!

போன் அடிக்கும்

கையேடுக்கும்..-வாய்

மெளனமாய் பதிலளிக்கும்

அதனால் என்றாலும்

காதல் வருமோ!

தூக்கம் வருமோ!

கனவு வருமே

காதல் நினைவு எழுமே

காலை வருமே

விடியே வேலையும் வருமே

பேசமல் தூங்கிடு

வேலையாவது மிஞ்சட்டும்

வேண்டாத நினைவை

தலாட்டி தூங்க வை..

வந்து சேரும் நீ வருமோ!?

என்றவை... :)

Link to comment
Share on other sites

வருமோ என்றவை

என்று வரும்...?

போனெடுக்கும்

நேரமெல்லாம்...

யுனிற் ஓடும்-ஆனாலும்

அவள் குரல் இனிக்கும்!

எங்கள் இதழ் சிரிக்கும்...

அந்தநேரம் பிடிக்கும்!

போஸ்மன் வரும்

போதெல்லாம்...

பில்லு வரும்-ஆனாலும்

அவள் ஓலை வரும்....

நாளைப் போல

எந்த நாள் வரும்...?

இன்றுவரும்-நாளைவரும்..

காலை வரும்..பின்

வேலை வரும்....

கையில் காசு...எப்பவரும்....?

இது போல- நாளை

-என்றும் வரும்!! :)

1370943rv5rw.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.