Jump to content

''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ......... !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்''

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அந்த செய்திக்காக,

நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது .......

ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை !

அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ......

வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும்

நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை !

மாறாக செய்திகள் பல வருகின்றன .......

நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது !

நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

அந்த செய்தியை அறியாமல் எனது விழியும் மூட மறுக்கின்றது உதடுகள் பேச தயங்குகின்றது மொத்தத்தில் மனமோ அமைதி கொள்ள முடியாது தவிக்கின்றது ........

இன்னும் நான் எதிர்பார்க்கும் அந்த செய்தி ...... ஏன் என்னும் வரவில்லை .......?

ம் ..... நிச்சயம் அந்த செய்தி வரும் என்று என்று உள்மனசு சொல்லிக்கொண்டே ....... இருக்கின்றது .....

அடுத்த சில மணி துளிகளிலும் வரலாம், அல்லது நாளையும் வரலாம், இல்லாவிடின் நாளை மறுதினமும் வரலாம்,

அந்த செய்திக்காகவே நான் காத்திருக்கின்றேன்.

>>>>>>> தமிழரசு<<<<<<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழைகளை திருத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்..

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes: :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை, நாளையென்று,

நாட்கள் மாதங்களாகி,

மாதங்கள் வருடங்களாகியதே,

நாம் கண்ட மிச்சம் நண்பா!

பன்னீர்க் குடமுடையுமெனப்,

பார்த்திருந்தோம் நாளெல்லாம்!

கண்ணீர்க் குடமுடைந்து,

கடலாகப் பெருகியதே!

கண்ணுக்குத் தெரியாத,

கடவுள்களைத் தேடி நின்றோம்!

மண்ணின் மைந்தர்களை,

மடிய வைத்துப் பார்தனவே!

கவிதைக்கு நன்றிகள், தமிழரசு!

கட்டாயம் அந்தச் செய்தி, ஒருநாள் வரும்!>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தான் வாழ்க்கை .கட்டாயம் அந்த நல்ல செய்தி வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழைகளை திருத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்..

நன்றி யாயினி.

:rolleyes: :rolleyes: :rolleyes:

:)நன்றி இசைக்கலைஞன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை, நாளையென்று,

நாட்கள் மாதங்களாகி,

மாதங்கள் வருடங்களாகியதே,

நாம் கண்ட மிச்சம் நண்பா!

பன்னீர்க் குடமுடையுமெனப்,

பார்த்திருந்தோம் நாளெல்லாம்!

கண்ணீர்க் குடமுடைந்து,

கடலாகப் பெருகியதே!

கண்ணுக்குத் தெரியாத,

கடவுள்களைத் தேடி நின்றோம்!

மண்ணின் மைந்தர்களை,

மடிய வைத்துப் பார்தனவே!

கவிதைக்கு நன்றிகள், தமிழரசு!

கட்டாயம் அந்தச் செய்தி, ஒருநாள் வரும்!>>>

நன்றி சகோதரா புங்கையூரான்,

நம்பிக்கை தான் வாழ்க்கை .கட்டாயம் அந்த நல்ல செய்தி வரும் .

நன்றி சகோதரி நிலாமதி,

நம்பிக்கைதான் வாழ்க்கை உண்மைதான்.

எந்த ஒரு மனிதனும் தமக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையினாலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். அந்த நம்பிக்கை இல்லாது போனால் அவன் வாழ்வே அவனுக்கு பாரமாகிவிடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

நானும் தான் அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறேன் தமிழரசு. நிலாமதி சொன்னது போல நம்பிக்கைதான் இங்கு வாழ்வு.

காத்திருப்போம் நம்பிக்கையுடன்...

நன்றி கல்கி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.