Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் CarDriving.CA வழங்கிய மாசி மாதத்துக்குரிய... நினைவுப் பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள். மாசி மாதத்துக்குரிய ஒளிப்பதிவு, அஞ்சலியுடன் ஆரம்பித்தது... மனதை தொட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் போக்குவரத்து.

ஒரு நினைவு அஞ்சலியுடன் தொடங்கி அழகாக கருத்தாளர்களை தொகுத்துள்ளீர்கள். தொடரட்டும்.

அவர்களை ஊக்குவித்தும் உள்ளீர்கள், நன்றிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை முதன்மைப்படுத்தி ஆரம்பித்தது மிகவும் நன்றிக்குரிய விடயம்.

பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலியோடு அமைந்திருக்கும்.. "யாழின் பொற்கிளி எனக்குத் தான்" படைப்பு மனதை நெகிழச் செய்தது.

ஆக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி போக்குவரத்து..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறுப்பினர்களின் தாய்க்கு அஞ்சலியுடன் ஆரம்பித்த உங்கள் பதிவு மிகவும் பாராட்டத் தக்கது ......மாசி மாத பரிசு பெற்ற நெடுக்க்ஸ் க்கு என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நெடுக்சுக்கும்,ஏனையவர்களுக்கும் நன்றி.சிறந்த கருத்தாளர்களை தெரிந்தெடுத்து ஊக்குவித்து அவர்களின் ஆக்கங்களை காணொளி மூலம் தொகுத்து அளித்த போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள். கள உறவுகளின் தாயாரின் அஞ்சலியை இணைத்ததற்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

போக்குவரத்து,....

ஏனோ தானோ என்று வருபவர்களையும் , வாசிப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறீர்கள்ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒவ்வொருபடியாக... முயற்சி திருவினையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை போக்குவரத்து, நன்றாக தொகுத்து வளங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள் தொடர

நெடுக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு ஒரு நினைவுப் பரிசில் gift voucher ( 36 பவுண்கள் பெறுமதியானது.) போக்குவரத்தால் [CarDriving.CA] அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி போக்குவரத்து. உங்களையும் யாழையும் யாழ் உறவுகளையும் நினைவு கூறும் வகையில் ஒரு பொருளை நிச்சயம் அதில் இருந்து வாங்கி வைத்துக் கொள்கிறேன்.

யாழிற்கும் எங்கள் ஆக்கங்களைப் படித்து அவற்றை ஊக்குவித்த உறவுகளுக்குமே உண்மையில் இந்தப் பரிசு உரித்துடையதாக வேண்டும். அவர்களுக்கும் நன்றிகள்..! :icon_idea: :)

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணாவுக்கும்,போக்கு வரத்து நிறுவனத்தினருக்கும் நல் வாழ்த்துகள்...தங்கள் பணி தொடரட்டும்..

congratulations04.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு வாழ்த்துக்களும் போக்கு வரத்துக்கு பாராட்டுக்களும். :)

Link to comment
Share on other sites

சிறப்பான தயாரிப்பு… வாழ்த்துக்கள் போக்குவரத்து.

களப் பதிவுகளை வாசித்ததோடு மட்டுமன்றி அதை அலசி அது குறித்த ஒரு காட்சிப் பதிவை தயாரித்துள்ளீர்கள்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இது போன்ற ‘யாழ் கள ஆய்வொன்று’ பதிவிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

முன்னர் கலைஞன் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்.

சிறப்பான ஆக்கமோன்றை பதிவிட்ட நெடுக்கிற்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

போன மாதம் 2 ஆம் திகதி போக்குவரத்து எனக்கு ஒரு தனிமடல் போட்டு இருந்தார். எதையோ என் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளதாக. அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் அவசர அவசரமாக அதை வாசித்ததால், என் மரமண்டைக்கு சரியாக விளங்கவில்லை என்ன சொல்லி இருந்தார் என. வீட்டை போய் வாசிப்பம் என்று விட்டு அப்படியே மறந்து விட்டேன்

இன்று நெடுக்ஸ் தனக்கு நினைவுப் பரிசு போக்குவரத்து அனுப்பி உள்ளார் என்றதை வாசித்த பின் தான் எனக்கு கொஞ்சம் விளங்கியது. ஓடிப்போய் என் நிழலி மின்னஞ்சலை திறந்து போக்குவரத்து அனுப்பிய மடலை பார்த்தேன். அவர் போன மாசி மாதம் நினைவுப் பரிசாக 50 கனடிய டொலருக்கான voucher அனுப்பி இருந்தார்...அதுவும் Indigo புத்தகசாலையின் voucher !!. நான் இந்த புத்தகக் கடையில் என் வேலைக்கு தேவையான ஒரு புது தொழில்நுட்பமான jQuery பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த நிலையில் அதே கடையின் money voucher இனை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னேரம் ஓடிச் சென்று அந்தக் கடையில் JavaScript and jQuery புத்தகத்தினை 44 டொலருக்கு வாங்கி வந்தேன்... மிகவும் தேவையான நேரத்தில் எனக்கு கிடைத்த அருமையான ஒரு பரிசு இது.

மிக்க நன்றிகள் போக்குவரத்து...தக்க நேரத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு உதவி.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

Link to comment
Share on other sites

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

நான் அலட்சியம் செய்யவில்லை தமிழ்சிறி... காலை 8 மணிக்கு வேலைக்கு போய் இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியளவுக்கு கடும் Project வேலைகள் கிடக்கு. அதுக்குள் வரும் சில தனிமடல்களை அதிக சிரத்தையுடன் கவனிக்க முடிகின்றது இல்லை. என் தனிப்பட்ட மின்னஞ்சல் இலக்கத்தில் இன்னும் வாசிக்காத மடல்கள் கிட்டத்தட்ட 300 கிடக்கு..

சரி, என்ன சொன்னாலும் என்னில் தவறு இருக்கின்றது தான்... கூடிய வரைக்கும் நிவர்த்திக்க பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

------

எந்த, அடிப்படையில்... இப்படிக் கூறுகிறீகள் வல்வை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்தின் 'பொற்கிழியைப்; பெற்ற நெடுக்கருக்கும், மற்றும் சிறப்பு விருதுகள் பெற்ற கருத்தாளர்களுக்கு,

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அருமையான தொகுப்பை, வழங்கிய போக்குவரத்திற்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நிச்சயமாக காணொளிகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

மீண்டும் பாராட்டிற்கும் பரிசுக்கும் நன்றி. :)

அத்தோடு.. பாராட்டுப் பெற்ற மற்றைய கள உறவுகளுக்கும்.. எம்மை எமது ஆக்கங்களை படித்து ஊக்கிவித்த ஒவ்வொரு உறவுகளுக்கும் மேலும் இங்கு பாராட்டுத் தெரிவித்துள்ள உறவுகளுக்கும் எங்கள் நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

.

நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

போக்குவரத்தின் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்.

கருத்துக்களத்தில் "எம்மவர் பொருளாதார முயற்சிகள்" என்ற ஒரு பிரிவையும் திறக்குமாறு மோகனிடம் கேட்டுப் பார்ப்போம்.

இதற்குள் பொருளாதார ரீதியான தகவல்கள் மற்றும் எம்மவர் / ஏனையோர் Business Directory போன்றவற்றையும் இணைக்கலாம். பிரியோசனமான பகுதியாக இருக்கும்.

மோகன் தான் டோன்ட் கெயார் மூட்ல இருக்கிற மாதிரி இருக்கு. :mellow: :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

Link to comment
Share on other sites

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

கால்கட்டு போட்டால் நெடுக்ஸ் யாழில் எழுதிறது குறைஞ்சு போயிடும். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.