Jump to content

Recommended Posts

தல வர்ணன் இரண்டு கவிதைகளும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

வர்ணன் நல்ல முயற்சி.

ஆனால் அடுத்து தொடங்குபவர் எதை கருவாக வைத்து தொடங்க வேண்டும் என்று சொன்னால் முயற்சி செய்ய சுகமாக இருக்கும் என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

அடுத்து தொடங்குபவர் -ஒருவர் முடிக்கும் வரில இருந்து ஆரம்பிப்பதுதான் ரமா-!

கரு- தலைப்பை ஆரம்பித்தவருக்குதான் சொந்தம்!

யாராவது இப்பிடி முயற்சி எடுத்தால் நானும் பங்கு கொள்கிறேன் -! 8)

Link to comment
Share on other sites

வர்ணன் எருக்கலம் பூவைப்பற்றி ஒன்றும் தெரியாதெனக்கு.....வேற மாதிரி தொடங்கவா :lol: கரு காதலா?

Link to comment
Share on other sites

என்ன சினேகிதி :?

ஒருவர் முடிக்கும் வரில அடுத்தவர் - கவிதை தலைப்பை ஆரம்பிக்கணும் என்று இல்லையே- தல எழுதினத பாருங்க அதே போல

உ_ம்:

மல்லிகையே மூச்சு விடு

உன் மெளனத்தை விட்டு தள்ளு

-என்று ஒருவர் ஆரம்பித்தால்-

நீங்கள்

தள்ளி தள்ளி போகிறாய் - நீ

மெல்ல மெல்ல சாகிறேன் நான்

- இப்பிடி ஆரம்பிக்கலாம்-

நான் நினைக்கிறேன் - ஒருவர் முடித்த வரியை தலைப்பாய் கொண்டு ஆரம்பிக்கணும் என்று நீங்க நினைச்சு இருக்கிங்க போல - அப்பிடி இல்ல வரியை -!! :roll:

Link to comment
Share on other sites

நான் என்று தொடங்கி முயற்சித்தேன் வர்ணன்.....சரியா வராதாம் :lol:

Link to comment
Share on other sites

இல்ல நீங்க எழுதினது சரி -

நான் அரட்டைப் பேர்வழி

நீ அமைதியா அடாவடி பண்றாயே

-இப்பிடி தொடர்ந்தேன் -

என்னென்று என்னை நினைத்தாய்

என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?

Link to comment
Share on other sites

என்னென்று என்னை நினைத்தாய்

என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?

:arrow:

இருந்தாலும்.. வட்டிக்கடையில்

பத்தரை மாற்று உன்னை

அடகாய்வைத்து

அன்பை குட்டியாய் போடுவேன்.!

வர்ணன். கவிதை தொடர்வதற்கு வசதியாய் கேள்வியோடோ இல்லை தொடராய் அமைவது போலவோ வரவேண்டுமா...?? இல்லை வந்தால் நண்றாக இருக்குமானால். என் வரிகளை சிறிது மாற்றுங்கள்...... :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...நல்ல முயற்சிதான் தொடருங்கள்......

Link to comment
Share on other sites

என்னென்று என்னை நினைத்தாய்

என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?

:arrow:

இருந்தாலும்.. வட்டிக்கடையில்

பத்தரை மாற்று உன்னை

அடகாய்வைத்து

அன்பை குட்டியாய் போடுவேன்.!

அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்?

வட்டியும் முதலுமாய்

சேர்த்து தருகின்றேன்

தந்திடு உனது இதயத்தை!

Link to comment
Share on other sites

குழப்புவதாக நினைக்காதீர்கள்..

கலாப காதலன் படத்தை பார்த்த பின் நானும் இப்படி ஒன்று தொடங்கலாமா என்று நினைத்தேன்.. :P நீங்கள் தொடங்கி விட்டீர்கள்..

ஏன் இதற்கு தனியாக ஒரு பகுதி அமைக்க கூடாது? அப்போ நிறைய பேர் பங்கு பற்றும் வாய்ப்பு இருக்குமல்லவா? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

எல்லாரது முயற்சியிலும் இதுவரை வந்ததை தொகுத்து....:P

:arrow:

மல்லிகையே மூச்சு விடு

உன் மெளனத்தை விட்டு தள்ளு

தள்ளி தள்ளி போகிறாய் - நீ

மெல்ல மெல்ல சாகிறேன் நான்

நான் அரட்டைப் பேர்வழி

நீ அமைதியா அடாவடி பண்றாயே

என்னென்று என்னை நினைத்தாய்

என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?

இருந்தாலும்.. வட்டிக்கடையில்

பத்தரை மாற்று உன்னை

அடகாய்வைத்து

அன்பை குட்டியாய் போடுவேன்.!

அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்?

வட்டியும் முதலுமாய்

சேர்த்து தருகின்றேன்

தந்திடு உனது இதயத்தை!

தந்து விடுகிறேன்..

இதயத்தை..

ஆயுள் வரை...

வட்டி செலுத்துவாயானால்...!

:arrow: :arrow:

சோர்ந்து விள உன் தோழும்

தூக்கிவிட உன் மொழியும்.

இனாமாகத் தருவாயா.?

பணத்துக்கு அதை வாங்கிவிட

படுபாவி அல்லவே நான்.

Link to comment
Share on other sites

ஆதவன் மறையும் பொழுதில்

என்னுள் உதிக்கிறாய்!

அனலென்றே ஆகி

நெஞ்சை எரிக்கிறாய்!

பேசடி கிளியே கொஞ்சம்

என்னை பிடிக்காதா?

ஏதெனினும் சொல்லு

ஏங்குதடி நெஞ்சு!

வாசமலரே நில்லு!

என் வாழ்வழிதா?

எட்டு நிறத்தில்

என் இதயம் இல்லயடி

உன்னை பார்த்த

நாள் முதலாய்

பைங்கிளியே இருக்கும்

இதயமும் எனக்கு

சொந்தம் இல்லையடி!

கடலில் காய்ந்த

நிலவென்றாகுமோ? வாழ்வு

காட்டில் பெய்த

மழையென்றாகுமோ? :arrow:

Link to comment
Share on other sites

குழப்புவதாக நினைக்காதீர்கள்..

கலாப காதலன் படத்தை பார்த்த பின் நானும் இப்படி ஒன்று தொடங்கலாமா என்று நினைத்தேன்.. :P நீங்கள் தொடங்கி விட்டீர்கள்..

ஏன் இதற்கு தனியாக ஒரு பகுதி அமைக்க கூடாது? அப்போ நிறைய பேர் பங்கு பற்றும் வாய்ப்பு இருக்குமல்லவா? :roll: :roll: :roll:

ப்ரியசகி சொல்வது- உண்மை!

இந்த தலைப்பில் எழுதியவர்கள் வரிசையில்-

கவிதை என்ற ரீதியில் நீங்கதான் மூத்த உறுப்பினர் - என்று நினைக்கிறேன் !- சரியோ தெரியல -

நீங்களே - ஒரு தலைப்பை ஆரம்பிக்கலாம் என்பது என் எண்ணம்- !

மற்றவர்கள் கருத்தையும் அறியணும்-!

இதால நல்லா நாங்க எழுதுறமோ இல்லையோ - நாங்களும் எழுதி பார்த்தா என்ன என்று - இதுவரை முயற்சி எடுக்காதவர்களுக்கு - ஒரு ஆர்வத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன் -! 8)

Link to comment
Share on other sites

எப்பிடிப் பிடிக்கும் உன்னை

உன்னை நேசித்த என் தோழியை

தணல்பட்ட தளிராய் துடிக்க வைத்த

வாடாமலரை வாடவைத்த உன்னை

எப்பிடிப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

எப்பிடிப் பிடிக்கும் உன்னை

உன்னை நேசித்த என் தோழியை

தணல்பட்ட தளிராய் துடிக்க வைத்த

வாடாமலரை வாடவைத்த உன்னை

எப்பிடிப் பிடிக்கும்

எப்பிடி பிடிக்கும்

வட்ட நிலவு முகத்தை

சுட்டுப்போன உன்னை

எப்பிடி பிடிக்கும்?

பெண்ணென்றால் என்ன

மண்ணென்றா நினைத்தாய்?

மனம் என்றால் தினமும்

மாறுமொரு திகதியா உனக்கு?

எப்பிடி பிடிக்கும் உன்னை?

இரும்பினால் செய்ததொரு

நரம்பு கொண்டாய்!-சீ :arrow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.