Jump to content

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12)

749084937_BHyMQ-L.jpg

ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ....

இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு ....

சொல்லுங்கோ மச்சாள்.

வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு.

ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,

அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்காதேங்கோ, இனியா நீங்கள் வேறு நாங்கள் வேறு அல்ல நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் இதைக்கூட நாங்கள் செய்யாவிட்டால் உடன்பிறந்த சகோதரம் சொந்தம் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர்களாகி விடுவோம், இப்போது அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வளவு காசுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் மச்சாள் ? கொஞ்சம் பொறுங்கோ,.......

மச்சாள் நானும் அண்ணாக்களிடம் கதைத்துவிட்டு சொல்கின்றேன்.

சரி இனியா ..... நான் திரும்ப கூப்பிடுகின்றேன்.

சரி மச்சாள்.

என்னம்மாச்சி ஏதாவது பிரச்சனையோ ......? யார் போணில் ? உன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது !

என்ன நடந்தது ?

ஒன்றும் இல்லை .... வாங்கோ வீட்டுக்கு போவோம்.

ஏன் விசாரிக்காமல் வீட்டுக்கு போவோம் என்று சொல்கின்றாய் .....

எல்லாவற்றையும் வீட்டுக்கு போய் அப்பாவுடனும் கலந்து கதைப்பம் யோசிக்காதேங்கோ அம்மா நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள் எங்களை கைவிடாது .....

ஏன் பிள்ளை எனக்கு சொல்லிபோட்டு அப்பாவுக்கு சொல்லலாம்தானே,.....

அப்படி நீங்கள் யோசிக்கின்றமாதிரி ஒன்றுமில்லை .....

ம் ...... ஒரு ஆட்டோவை கூப்பிடு பிள்ளை அதில போவோம் அம்மாவால் நடக்க முடியுதில்லை ....

அண்ணே ஆட்டோ வருமோ மூலைக்கடைக்கு ....

ஓம் ... வாங்கோ கவனமாக ஏறுங்கோ, வடிவாக பிடிச்சுக்கொண்டு இருங்கோ

6458622011_62af8b26c8_o.jpg

(ஆட்டோவில் ஒலித்த பாடல் இவளின் மனதை சற்று ஆறுதல் படுத்துவதாக இருந்தது )

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை

அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்

இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்

எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடைபெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்

தீராமல் இங்கே வாழுவோம்

அம்மா இந்த பாடலின் வரிகள் எவ்வளவு மனதிற்கு சுகமளிக்கின்றது ......

நீ யார் பிள்ளை ..... ஒரு கதாசிரியரின் மகள் தானே ....

அப்படியா அம்மா (என்று கூறி மனதுக்குள் பூரித்து கொள்கின்றாள் )

sunset-27.jpg

சூரியன் சற்று ஓய்வு எடுப்பதற்காக தென் மேற்கு திசையில் செல்லும் வேளையில் அங்கே புகழும் தினாவும் வாய்விட்டு சொல்ல முடியாத சூழ் நிலையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தகரத்தால் சுற்றி அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் பூச்சி புழுக்களின் மத்தியில் சோறு தண்ணீர் இன்றி இருவரும் பேசிக்கொள்கின்றார்கள் ......

(ரகசியமாக) இப்படிதானே மூன்று வருடங்களுக்கு முன் எம் இனத்தை கொன்றிருப்பாங்கள் இந்த கொடியவங்கள்.

புகழ் ....... இப்போது இரவா? பகலா? என்ன நேரம் என்று கூட தெரியவில்லை, இதென்ன வாழ்க்கை மச்சான் எதாவு வழி தெரிகின்றதா......?

இந்த இடம்பற்றி அறிந்ததை விட அதை நாங்கள் அனுபவிக்கும் போதுதான் ஆதன் வலிகளும் ரணங்களும் புரிகின்றது ...... ம்,......

''காத்திரு ..... மச்சான் ...... காத்திரு, காலமும் கடவுளும் வெகுவிரைவில் எம் பக்கம் மாறும், அப்போது சரித்திரம் வெல்லும்''

தினா, .....என்ன ஆகிற்று ....? ஏதாவது தலையில் அடிகிடி விழுந்து விட்டதோ ?(கிண்டலாக)

திடீரென தத்துவம் பேசுகின்றீர்கள்.

இல்லை ..... மச்சான், (சலிப்புடன்) ஒரு வேளை எங்களுக்கு ஏதாவது நடந்தாலும் கடைசியாக ஒரு பாடல் வரிகளை படிக்கவேண்டும் போல் தோன்றுகின்றது .....

ம் ..... எங்கிருக்கின்ராரோ? எப்போது வருவாரோ!

படியட ..... மச்சான் ..... படி ..... இந்த பாடலாவது ரணத்தை ஆற்ருதோ என பார்ப்போம். ஐயோ......, என்ன வலி வலிக்குது .....

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

(யாரோ வரும் சத்தம் கேட்கின்றது)

hand_gun.jpg

அடே .... என்ன சத்தங் ..... மொனுவதே கத்தாக்கரண்ட ....

முடிஞ்சுதட ..... மச்சான் ..... கதை, இண்டைக்குத்தான் கடைசியோ ?

இனியாவின் தவிப்பு தொடரும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி யாயினி

தொடர்ந்து இணைப்பதற்கு கேட்டுள்ளேன் முடிந்தால் கோப்பாக இணைப்பார்கள்.

தனித்தனியாக இணைக்கும் போது வாசகர் அதிகமாக வாசிக்கின்றார்கள்.

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

கோமகன் நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

நன்றி புரட்சி

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

நன்றிகள் கவிதை

Link to comment
Share on other sites

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

நன்றிகள் கல்கி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது...:)

Link to comment
Share on other sites

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 13)

northern_sri-lanka_lands.jpg

அடே ...... வரங் ....... இங்கின வரங் ...... இதிங் உங்கட உடுப்பி போறாங்,

ஆ .... சரி சரி,

ஏறுங்கட வானுல .....

நாங்கள் கண்கள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றப்பட்டோம், பின்னர் வான் வேகமாக செல்வதை எங்களால் உணரமுடிந்தது இரண்டு மூன்று மணிநேரத்தின் பின் கைகட்டு அவிழ்க்கப்பட்டு நிலையில் வான் சற்று வேகம் குறைந்த பொழுது இருவரையும் வீதியில் தள்ளி விட்டாங்கள் .......

ஐயோ ...... அம்மா என்ன கொடுமையடா ...... ? இது எந்த இடம் ?

புகழ் மச்சான் பாரடா ...... ரெண்டு பேரின் சூட்கேசும் இருக்கு மச்சான்

இதைத்தன்னும் விட்டு வச்சாங்களே பாவியள் (சூட்கேசில் கைத்தொலைபேசியை தேடி எடுத்து

உடனே வீட்டுக்கு அழைப்பை மேற்கொண்டார்.

ஹலோ ..... யாரப்பு கதைக்கின்றீர்கள் .............?

அது ..... நான் ...... தினா ..... அப்பா

தினாவோ இப்போது எங்கு இருக்கின்றீர்கள் ..........?

உங்களை விட்டு விட்டாங்களோ ?

ஓம், அப்பா நானும் புகழும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்,

எங்கு இருக்கின்றீர்கள் ?

இது முற்றிலும் சிங்களவர்கள் உள்ள இடம் இங்கு யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை ....... அப்பா ,

அது சரி அம்மா....... தங்கச்சி எப்படி இருக்கின்றார்கள் ?

அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள், தினா எப்படி இந்த இரவு நேரம் வருவீர்கள் ?

எவ்வளவோ பிரச்சனைகளை தாங்கி விட்டோம் இது சின்ன பிரச்சனை,

அப்பா போனில் சாஜ் குறைந்து போகின்றது புகழின் வீட்டாருக்கு சொல்லி விடுங்கோ (என்று சொல்லி முடியும் போது போனில் சாஜ் முற்றிலுமாக போய்விட்டது)

என்ன புகழ் எதோ யோசிக்கின்றீர்கள் ? என்ன அப்படி ......?

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

அது சரிமச்சான் இனியாவுடன் கதைத்தீர்களா ? எப்படி இருக்கின்றார்கள் ? அவள் பாவம் கற்பனையில் இருந்திருப்பாள்..

ஏய் ..... புகழ் எப்போதிருந்து இந்த பாசம், என்னும் தாலி கட்டவில்லை ஞாபகம் இருக்குத்தானே ? உங்களுக்கு இனியா மென்மையான மனம் படைத்தவள் பண்பும் பாசமும் கேக்காமலேயே அள்ளி வீசுவாள் யாருடைய மனசையும் புண்படுத்த மாட்டாள் அப்படி பட்ட என் பாசக்கார தங்கை உங்களுக்கு மனைவியாக கிடைக்க கொடுவைத்திருக்கவேண்டும்.

ம் ....... புகழ்ந்தது போதும் இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.

என்ன நேரம் என்றுகூட தெரியவில்லை எல்லாவற்றையும் உருவிபோட்டு விட்டுவிட்டாங்கள் இதை நினைக்கும் போதுதான் எமக்கென்றொரு நாடு இருந்தால் இந்தமாதிரியான பிரச்சனை இருந்திருக்காது !

மாச்சான் ஒரு பஸ் வருகின்றது போட்டைப்பார்த்து மறி மச்சான்

4284942831_0d1d932b6b_b.jpg

பருத்தித்துறை என்ற போட்டுடன் வருகின்றது .....

மறி ...... மச்சான் மறி இதைதான் சொல்வார்களோ கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி என்று !

(பஸ் நிற்கின்றது)

கொய்தென்ன மல்லி ?

அண்ணை நாங்கள் ........

என்ன தம்பியவை இந்த இடத்தில .... வாங்கோ எங்கே போகவேணும்

அதொரு பெரிய கதை அதை விடுங்கோ பருத்திதுறைக்குதான் போகவேண்டும்,

அந்த சீற்றில் இருங்கோ ........ அண்ணை பஸ்சை எடுங்கோ .....

இதமான இரவு வேளையில் மனசை தொட்ட அந்த பாடல் வரிகள் ............

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

மச்சான் சூப்பர் பாட்டுமச்சான்

எனக்கு இந்தப்பாட்டை கேக்கும் போது

என்னவோ செய்கின்றது .........

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே, ஓடோடி வா…

moonlitUnightUsky.jpg

இனியா ....... இனியா இங்கே வாம்மா

ஓம், அப்பா என்ர நாய்க்குட்டியளுக்கு சாப்பாடு வைத்துவிட்டு வருகின்றேன் உடனே வருகின்றேன்

சரியம்மா கெதியில் வா பிள்ளை

ஏன் ..... அப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா ?

ஓம் ஓம் காலை பெரும்பாலும் வந்து விடுவினமாம்

என்ன இனியா காலை தம்பிதினா வந்துவிடுவாரோ ?

ஓம், அம்மா .....

(இனியா சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்பாக இருக்கின்றாள்)

பிள்ளை ...... இனியா ....... சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்.

அப்பா, நானும் அம்மாவும் பக்கத்தில்தான் இருப்போம்.

புகழ் ....... ஏதோ சத்தம் கேட்கின்றது என்ன என்று பாருங்கோ....

என்ன ..... மச்சான் திரும்பவும் செக்கிங்கோ ?

கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம்.

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

நன்றி நிலாமதி,

எழுத்துப்பிழைகளை நான் நினைக்கின்றேன் திருத்தம் செய்து விட்டேன் என்று என்னும் தவறு இருந்தால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது... :)

நன்றி யாயினி,

13 வது பாகம் பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

நன்றி காதல்,

பாகம் 13 ஐ பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி ரதி,

Link to comment
Share on other sites

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

அப்பா சாச் குறைந்து போகின்றது

சாஜ் என்று வர வேண்டும்.

(என்று சொல்லி முயும் போது போணும் சாச் முற்றிலுமாக போய்விட்டது)

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள் ...... இனியா ....... சில வேளை அண்ணா நாளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சன் பொறுங்கோ பார்ப்போம்.

கொஞ்சம் என்று வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

Link to comment
Share on other sites

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 14)

lotus-flower.jpg

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,

கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........

பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!

நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !

கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

அது அண்ணா ....... உங்களுக்கு எங்களின் நிலை தெரியாது !

இல்லை .... தம்பி எங்களுக்கும் எல்லாம் தெரியும், எங்களின் சூழ்நிலை என்ன நடந்தாலும் தெரியாததுபோல் வாழ்வதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம் !

அண்ணா எங்களை தப்பாக நினைக்கவேண்டாம்

அதெல்லாம் ஒன்றும்மில்லை ........

இடம் வந்துவிட்டது இறங்குங்கோ ......

மச்சான் ஒரு கார் பிடிப்போம் வீட்டுக்கு போவதற்கு

(இருவரும் காரில் எரிச்செல்கின்றனர் )

சரி புகழ், என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு

நீங்கள் போங்கோ

என்வீடுதாண்டித்தானே உங்கள் வீடு மதியம் எல்லோரும் ஒன்றாக வீட்டில் சந்திப்போம்.

சரி மச்சான் சந்திப்போம் வாறன்.

அஹ ..... அப்பா கார் சத்தம் கேட்கிறது ஒருவேளை அண்ணாவாக இருக்குமோ !

எங்க ...... பிள்ள ஒருக்கா பார்ப்போம்

இன்செரிங்கோ ..... இன்சபாருங்கோ,

பிள்ள தினா வந்திட்டான், அஹ வாப்பு .....

தினா, ..... என்ர அய்யா வந்துவிட்டியோ! வா ...... வாப்பு (என்றவாறே கட்டிதளுவினார்கள் இருவரும்)

வாங்கோ அண்ணா ..... வாங்கோ (என்றவாறே அண்ணாவை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்)

அம்மா ... புகழும் அவர்களின் அம்மா அப்பாவும் மதியம் வீட்டுக்கு வருவதாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு சாப்பாட்டு ஒழுங்கு செய்யவேணும் .....

சரி ..... இந்த காப்பியை குடித்துவிட்டு குளித்துவிட்டு வா ராசா, எங்க, ஏதாவது உடம்பில காயம் இருக்கோ ஒருக்கா பார்ப்போம்,

அப்படி ஒன்றும் இல்லை அம்மா நிறைய அழுக்காக இருக்கு, குளித்துவிட்டு வாறன் தொடாதீர்கள் அம்மா,

நீங்கள் போய் ஒரு இடத்தில் இருங்கோ .......

சரி .... அப்பு கெதியில வாங்கோ தங்கச்சி உங்களுக்கு விருப்பமான கருவாட்டு பொரியலும் அரிசிமா புட்டும் செய்து வைத்திருக்கின்றார்,

DSC00974-orig1-569x484.jpgkuzhalputtu.jpg

கருவாட்டு பொரியலோ ......? ம் ...... யம்மா ஒரு பிடிக்கலாம்.

இனியா வீட்டு வேலை எல்லாவற்றை செய்து முடித்தபின்பு வீட்டு வாசலை வழிமேல் விழிவைத்து புகழின் வருகைக்காக மலர்ந்த செந்தாமரைபோல் காத்துகொண்டு இருக்கின்றாள்

(ரேடியோவில்) ........

அறிவுப்பாளர் ........

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

இதோ .... பாடலை கேட்டுப்பாருங்கள் ..........

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய்

சிலையாய் வளர்ந்தேன்

உயிரை ஏன் கொடுத்தாய் ......

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய் .....

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும் .....

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

இனியா ..... இனியாக்குட்டி,

ஓம் ...... இதோ ...... வருகிறேன்.

என்ன எல்லாம் அசத்தலாக இருக்கு,

அண்ணா ..... உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்,

இனியா .... இன்னொரு விஷயம்,

என்ன ... அண்ணா .....

ஒன்றுமில்லை ....... என்ன, எல்லாம் புகழைப்பற்ரியதுதான் ...... அழகுக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லை ...... அதில இருக்கும் மன்குண்டான் மாதிரி (என்று கிண்டலாக சொன்னார்)

அது ...... பரவாயில்லை, அவர் மனசு எனக்கு பிடிச்சிருக்கு (கிண்டலாக சிரித்தாள் )

நான் சும்மாதான் சொன்னேன் தங்கச்சி, புகழ் பார்க்க அழகான தோற்றம் நல்ல அறிவு நல்ல பழக்கவழக்கம் உங்களின் குணத்திற்கு ஏற்றவர்.

அண்ணா உங்களுக்கு பிடித்தமாதிரி மீன் வகையில் அசத்தி விடுகிறேன்.

panamafishmarket1.jpg

இனியா ..... அண்ணாவுக்கு உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் ஆனால் வரப்போகும் மாமா மாமிக்கு பிடிக்கவேணுமே !

அண்ணா யோசிக்காதேங்கோ மனசு ஒத்து போனால் உணவும் ஒத்து போகும் கொஞ்சம் பொறுத்துதான் பாருங்கோவேன்.

அதுசரி ......

எங்கே அம்மா அப்பா ?

அம்மாவும், அப்பாவும் அன்றில் பறவைபோல் இணைபிரியாமல் எங்காவது இருப்பினம் வாங்கோ பார்ப்போம்

அண்ணா இங்கே பாருங்கோ என்ன ....... பாட்டு பார்க்கினம் என்று ......... நான் சொன்னது சரிதானே ?

தொலைக்காட்சியில் .........

http://youtu.be/aHR0BfPNF7U

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

சாஜ் என்று வர வேண்டும்.

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சம் என்று வர வேண்டும்.

நன்றி காதல்,

நான் விட்ட தவறுகளை சுட்டிகாட்டியதினால் இப்போது அந்த தவறுகளை கருத்தில் கொண்டு புதிய பாகத்தை எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைதாருங்கள்.

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

நன்றி யாயினி,

தொடந்தும் உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.