Jump to content

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12)

749084937_BHyMQ-L.jpg

ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ....

இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு ....

சொல்லுங்கோ மச்சாள்.

வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு.

ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,

அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்காதேங்கோ, இனியா நீங்கள் வேறு நாங்கள் வேறு அல்ல நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் இதைக்கூட நாங்கள் செய்யாவிட்டால் உடன்பிறந்த சகோதரம் சொந்தம் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர்களாகி விடுவோம், இப்போது அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வளவு காசுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் மச்சாள் ? கொஞ்சம் பொறுங்கோ,.......

மச்சாள் நானும் அண்ணாக்களிடம் கதைத்துவிட்டு சொல்கின்றேன்.

சரி இனியா ..... நான் திரும்ப கூப்பிடுகின்றேன்.

சரி மச்சாள்.

என்னம்மாச்சி ஏதாவது பிரச்சனையோ ......? யார் போணில் ? உன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது !

என்ன நடந்தது ?

ஒன்றும் இல்லை .... வாங்கோ வீட்டுக்கு போவோம்.

ஏன் விசாரிக்காமல் வீட்டுக்கு போவோம் என்று சொல்கின்றாய் .....

எல்லாவற்றையும் வீட்டுக்கு போய் அப்பாவுடனும் கலந்து கதைப்பம் யோசிக்காதேங்கோ அம்மா நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள் எங்களை கைவிடாது .....

ஏன் பிள்ளை எனக்கு சொல்லிபோட்டு அப்பாவுக்கு சொல்லலாம்தானே,.....

அப்படி நீங்கள் யோசிக்கின்றமாதிரி ஒன்றுமில்லை .....

ம் ...... ஒரு ஆட்டோவை கூப்பிடு பிள்ளை அதில போவோம் அம்மாவால் நடக்க முடியுதில்லை ....

அண்ணே ஆட்டோ வருமோ மூலைக்கடைக்கு ....

ஓம் ... வாங்கோ கவனமாக ஏறுங்கோ, வடிவாக பிடிச்சுக்கொண்டு இருங்கோ

6458622011_62af8b26c8_o.jpg

(ஆட்டோவில் ஒலித்த பாடல் இவளின் மனதை சற்று ஆறுதல் படுத்துவதாக இருந்தது )

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை

அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்

இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்

எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடைபெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்

தீராமல் இங்கே வாழுவோம்

அம்மா இந்த பாடலின் வரிகள் எவ்வளவு மனதிற்கு சுகமளிக்கின்றது ......

நீ யார் பிள்ளை ..... ஒரு கதாசிரியரின் மகள் தானே ....

அப்படியா அம்மா (என்று கூறி மனதுக்குள் பூரித்து கொள்கின்றாள் )

sunset-27.jpg

சூரியன் சற்று ஓய்வு எடுப்பதற்காக தென் மேற்கு திசையில் செல்லும் வேளையில் அங்கே புகழும் தினாவும் வாய்விட்டு சொல்ல முடியாத சூழ் நிலையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தகரத்தால் சுற்றி அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் பூச்சி புழுக்களின் மத்தியில் சோறு தண்ணீர் இன்றி இருவரும் பேசிக்கொள்கின்றார்கள் ......

(ரகசியமாக) இப்படிதானே மூன்று வருடங்களுக்கு முன் எம் இனத்தை கொன்றிருப்பாங்கள் இந்த கொடியவங்கள்.

புகழ் ....... இப்போது இரவா? பகலா? என்ன நேரம் என்று கூட தெரியவில்லை, இதென்ன வாழ்க்கை மச்சான் எதாவு வழி தெரிகின்றதா......?

இந்த இடம்பற்றி அறிந்ததை விட அதை நாங்கள் அனுபவிக்கும் போதுதான் ஆதன் வலிகளும் ரணங்களும் புரிகின்றது ...... ம்,......

''காத்திரு ..... மச்சான் ...... காத்திரு, காலமும் கடவுளும் வெகுவிரைவில் எம் பக்கம் மாறும், அப்போது சரித்திரம் வெல்லும்''

தினா, .....என்ன ஆகிற்று ....? ஏதாவது தலையில் அடிகிடி விழுந்து விட்டதோ ?(கிண்டலாக)

திடீரென தத்துவம் பேசுகின்றீர்கள்.

இல்லை ..... மச்சான், (சலிப்புடன்) ஒரு வேளை எங்களுக்கு ஏதாவது நடந்தாலும் கடைசியாக ஒரு பாடல் வரிகளை படிக்கவேண்டும் போல் தோன்றுகின்றது .....

ம் ..... எங்கிருக்கின்ராரோ? எப்போது வருவாரோ!

படியட ..... மச்சான் ..... படி ..... இந்த பாடலாவது ரணத்தை ஆற்ருதோ என பார்ப்போம். ஐயோ......, என்ன வலி வலிக்குது .....

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

(யாரோ வரும் சத்தம் கேட்கின்றது)

hand_gun.jpg

அடே .... என்ன சத்தங் ..... மொனுவதே கத்தாக்கரண்ட ....

முடிஞ்சுதட ..... மச்சான் ..... கதை, இண்டைக்குத்தான் கடைசியோ ?

இனியாவின் தவிப்பு தொடரும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி யாயினி

தொடர்ந்து இணைப்பதற்கு கேட்டுள்ளேன் முடிந்தால் கோப்பாக இணைப்பார்கள்.

தனித்தனியாக இணைக்கும் போது வாசகர் அதிகமாக வாசிக்கின்றார்கள்.

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

கோமகன் நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

நன்றி புரட்சி

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

நன்றிகள் கவிதை

Link to comment
Share on other sites

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

நன்றிகள் கல்கி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது...:)

Link to comment
Share on other sites

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 13)

northern_sri-lanka_lands.jpg

அடே ...... வரங் ....... இங்கின வரங் ...... இதிங் உங்கட உடுப்பி போறாங்,

ஆ .... சரி சரி,

ஏறுங்கட வானுல .....

நாங்கள் கண்கள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றப்பட்டோம், பின்னர் வான் வேகமாக செல்வதை எங்களால் உணரமுடிந்தது இரண்டு மூன்று மணிநேரத்தின் பின் கைகட்டு அவிழ்க்கப்பட்டு நிலையில் வான் சற்று வேகம் குறைந்த பொழுது இருவரையும் வீதியில் தள்ளி விட்டாங்கள் .......

ஐயோ ...... அம்மா என்ன கொடுமையடா ...... ? இது எந்த இடம் ?

புகழ் மச்சான் பாரடா ...... ரெண்டு பேரின் சூட்கேசும் இருக்கு மச்சான்

இதைத்தன்னும் விட்டு வச்சாங்களே பாவியள் (சூட்கேசில் கைத்தொலைபேசியை தேடி எடுத்து

உடனே வீட்டுக்கு அழைப்பை மேற்கொண்டார்.

ஹலோ ..... யாரப்பு கதைக்கின்றீர்கள் .............?

அது ..... நான் ...... தினா ..... அப்பா

தினாவோ இப்போது எங்கு இருக்கின்றீர்கள் ..........?

உங்களை விட்டு விட்டாங்களோ ?

ஓம், அப்பா நானும் புகழும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்,

எங்கு இருக்கின்றீர்கள் ?

இது முற்றிலும் சிங்களவர்கள் உள்ள இடம் இங்கு யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை ....... அப்பா ,

அது சரி அம்மா....... தங்கச்சி எப்படி இருக்கின்றார்கள் ?

அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள், தினா எப்படி இந்த இரவு நேரம் வருவீர்கள் ?

எவ்வளவோ பிரச்சனைகளை தாங்கி விட்டோம் இது சின்ன பிரச்சனை,

அப்பா போனில் சாஜ் குறைந்து போகின்றது புகழின் வீட்டாருக்கு சொல்லி விடுங்கோ (என்று சொல்லி முடியும் போது போனில் சாஜ் முற்றிலுமாக போய்விட்டது)

என்ன புகழ் எதோ யோசிக்கின்றீர்கள் ? என்ன அப்படி ......?

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

அது சரிமச்சான் இனியாவுடன் கதைத்தீர்களா ? எப்படி இருக்கின்றார்கள் ? அவள் பாவம் கற்பனையில் இருந்திருப்பாள்..

ஏய் ..... புகழ் எப்போதிருந்து இந்த பாசம், என்னும் தாலி கட்டவில்லை ஞாபகம் இருக்குத்தானே ? உங்களுக்கு இனியா மென்மையான மனம் படைத்தவள் பண்பும் பாசமும் கேக்காமலேயே அள்ளி வீசுவாள் யாருடைய மனசையும் புண்படுத்த மாட்டாள் அப்படி பட்ட என் பாசக்கார தங்கை உங்களுக்கு மனைவியாக கிடைக்க கொடுவைத்திருக்கவேண்டும்.

ம் ....... புகழ்ந்தது போதும் இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.

என்ன நேரம் என்றுகூட தெரியவில்லை எல்லாவற்றையும் உருவிபோட்டு விட்டுவிட்டாங்கள் இதை நினைக்கும் போதுதான் எமக்கென்றொரு நாடு இருந்தால் இந்தமாதிரியான பிரச்சனை இருந்திருக்காது !

மாச்சான் ஒரு பஸ் வருகின்றது போட்டைப்பார்த்து மறி மச்சான்

4284942831_0d1d932b6b_b.jpg

பருத்தித்துறை என்ற போட்டுடன் வருகின்றது .....

மறி ...... மச்சான் மறி இதைதான் சொல்வார்களோ கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி என்று !

(பஸ் நிற்கின்றது)

கொய்தென்ன மல்லி ?

அண்ணை நாங்கள் ........

என்ன தம்பியவை இந்த இடத்தில .... வாங்கோ எங்கே போகவேணும்

அதொரு பெரிய கதை அதை விடுங்கோ பருத்திதுறைக்குதான் போகவேண்டும்,

அந்த சீற்றில் இருங்கோ ........ அண்ணை பஸ்சை எடுங்கோ .....

இதமான இரவு வேளையில் மனசை தொட்ட அந்த பாடல் வரிகள் ............

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

மச்சான் சூப்பர் பாட்டுமச்சான்

எனக்கு இந்தப்பாட்டை கேக்கும் போது

என்னவோ செய்கின்றது .........

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே, ஓடோடி வா…

moonlitUnightUsky.jpg

இனியா ....... இனியா இங்கே வாம்மா

ஓம், அப்பா என்ர நாய்க்குட்டியளுக்கு சாப்பாடு வைத்துவிட்டு வருகின்றேன் உடனே வருகின்றேன்

சரியம்மா கெதியில் வா பிள்ளை

ஏன் ..... அப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா ?

ஓம் ஓம் காலை பெரும்பாலும் வந்து விடுவினமாம்

என்ன இனியா காலை தம்பிதினா வந்துவிடுவாரோ ?

ஓம், அம்மா .....

(இனியா சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்பாக இருக்கின்றாள்)

பிள்ளை ...... இனியா ....... சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்.

அப்பா, நானும் அம்மாவும் பக்கத்தில்தான் இருப்போம்.

புகழ் ....... ஏதோ சத்தம் கேட்கின்றது என்ன என்று பாருங்கோ....

என்ன ..... மச்சான் திரும்பவும் செக்கிங்கோ ?

கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம்.

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

நன்றி நிலாமதி,

எழுத்துப்பிழைகளை நான் நினைக்கின்றேன் திருத்தம் செய்து விட்டேன் என்று என்னும் தவறு இருந்தால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது... :)

நன்றி யாயினி,

13 வது பாகம் பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

நன்றி காதல்,

பாகம் 13 ஐ பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி ரதி,

Link to comment
Share on other sites

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

அப்பா சாச் குறைந்து போகின்றது

சாஜ் என்று வர வேண்டும்.

(என்று சொல்லி முயும் போது போணும் சாச் முற்றிலுமாக போய்விட்டது)

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள் ...... இனியா ....... சில வேளை அண்ணா நாளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சன் பொறுங்கோ பார்ப்போம்.

கொஞ்சம் என்று வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

Link to comment
Share on other sites

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 14)

lotus-flower.jpg

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,

கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........

பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!

நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !

கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

அது அண்ணா ....... உங்களுக்கு எங்களின் நிலை தெரியாது !

இல்லை .... தம்பி எங்களுக்கும் எல்லாம் தெரியும், எங்களின் சூழ்நிலை என்ன நடந்தாலும் தெரியாததுபோல் வாழ்வதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம் !

அண்ணா எங்களை தப்பாக நினைக்கவேண்டாம்

அதெல்லாம் ஒன்றும்மில்லை ........

இடம் வந்துவிட்டது இறங்குங்கோ ......

மச்சான் ஒரு கார் பிடிப்போம் வீட்டுக்கு போவதற்கு

(இருவரும் காரில் எரிச்செல்கின்றனர் )

சரி புகழ், என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு

நீங்கள் போங்கோ

என்வீடுதாண்டித்தானே உங்கள் வீடு மதியம் எல்லோரும் ஒன்றாக வீட்டில் சந்திப்போம்.

சரி மச்சான் சந்திப்போம் வாறன்.

அஹ ..... அப்பா கார் சத்தம் கேட்கிறது ஒருவேளை அண்ணாவாக இருக்குமோ !

எங்க ...... பிள்ள ஒருக்கா பார்ப்போம்

இன்செரிங்கோ ..... இன்சபாருங்கோ,

பிள்ள தினா வந்திட்டான், அஹ வாப்பு .....

தினா, ..... என்ர அய்யா வந்துவிட்டியோ! வா ...... வாப்பு (என்றவாறே கட்டிதளுவினார்கள் இருவரும்)

வாங்கோ அண்ணா ..... வாங்கோ (என்றவாறே அண்ணாவை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்)

அம்மா ... புகழும் அவர்களின் அம்மா அப்பாவும் மதியம் வீட்டுக்கு வருவதாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு சாப்பாட்டு ஒழுங்கு செய்யவேணும் .....

சரி ..... இந்த காப்பியை குடித்துவிட்டு குளித்துவிட்டு வா ராசா, எங்க, ஏதாவது உடம்பில காயம் இருக்கோ ஒருக்கா பார்ப்போம்,

அப்படி ஒன்றும் இல்லை அம்மா நிறைய அழுக்காக இருக்கு, குளித்துவிட்டு வாறன் தொடாதீர்கள் அம்மா,

நீங்கள் போய் ஒரு இடத்தில் இருங்கோ .......

சரி .... அப்பு கெதியில வாங்கோ தங்கச்சி உங்களுக்கு விருப்பமான கருவாட்டு பொரியலும் அரிசிமா புட்டும் செய்து வைத்திருக்கின்றார்,

DSC00974-orig1-569x484.jpgkuzhalputtu.jpg

கருவாட்டு பொரியலோ ......? ம் ...... யம்மா ஒரு பிடிக்கலாம்.

இனியா வீட்டு வேலை எல்லாவற்றை செய்து முடித்தபின்பு வீட்டு வாசலை வழிமேல் விழிவைத்து புகழின் வருகைக்காக மலர்ந்த செந்தாமரைபோல் காத்துகொண்டு இருக்கின்றாள்

(ரேடியோவில்) ........

அறிவுப்பாளர் ........

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

இதோ .... பாடலை கேட்டுப்பாருங்கள் ..........

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய்

சிலையாய் வளர்ந்தேன்

உயிரை ஏன் கொடுத்தாய் ......

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய் .....

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும் .....

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

இனியா ..... இனியாக்குட்டி,

ஓம் ...... இதோ ...... வருகிறேன்.

என்ன எல்லாம் அசத்தலாக இருக்கு,

அண்ணா ..... உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்,

இனியா .... இன்னொரு விஷயம்,

என்ன ... அண்ணா .....

ஒன்றுமில்லை ....... என்ன, எல்லாம் புகழைப்பற்ரியதுதான் ...... அழகுக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லை ...... அதில இருக்கும் மன்குண்டான் மாதிரி (என்று கிண்டலாக சொன்னார்)

அது ...... பரவாயில்லை, அவர் மனசு எனக்கு பிடிச்சிருக்கு (கிண்டலாக சிரித்தாள் )

நான் சும்மாதான் சொன்னேன் தங்கச்சி, புகழ் பார்க்க அழகான தோற்றம் நல்ல அறிவு நல்ல பழக்கவழக்கம் உங்களின் குணத்திற்கு ஏற்றவர்.

அண்ணா உங்களுக்கு பிடித்தமாதிரி மீன் வகையில் அசத்தி விடுகிறேன்.

panamafishmarket1.jpg

இனியா ..... அண்ணாவுக்கு உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் ஆனால் வரப்போகும் மாமா மாமிக்கு பிடிக்கவேணுமே !

அண்ணா யோசிக்காதேங்கோ மனசு ஒத்து போனால் உணவும் ஒத்து போகும் கொஞ்சம் பொறுத்துதான் பாருங்கோவேன்.

அதுசரி ......

எங்கே அம்மா அப்பா ?

அம்மாவும், அப்பாவும் அன்றில் பறவைபோல் இணைபிரியாமல் எங்காவது இருப்பினம் வாங்கோ பார்ப்போம்

அண்ணா இங்கே பாருங்கோ என்ன ....... பாட்டு பார்க்கினம் என்று ......... நான் சொன்னது சரிதானே ?

தொலைக்காட்சியில் .........

http://youtu.be/aHR0BfPNF7U

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

சாஜ் என்று வர வேண்டும்.

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சம் என்று வர வேண்டும்.

நன்றி காதல்,

நான் விட்ட தவறுகளை சுட்டிகாட்டியதினால் இப்போது அந்த தவறுகளை கருத்தில் கொண்டு புதிய பாகத்தை எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைதாருங்கள்.

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

நன்றி யாயினி,

தொடந்தும் உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.