Jump to content

ஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்


Recommended Posts

அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.

அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.

நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.

நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.

இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.

முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.

எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Thanks:Dinamalar...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.