Jump to content

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?


Recommended Posts

கறுப்பன்

நன்றி உங்கள் பதிலிற்கு. ஆனால் நான் எதையும் முடிச்சுப் போடவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர்களிடமே தேசியம் பற்றியோ அல்லது நாட்டுப்பற்று பற்றியோ கேட்டுப் பாருங்கள். தேவைகளைப் பொறுத்து பிளந்து கட்டி விடுவார்கள். இதனையே நான் குறிப்பிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

இங்கு அனைவரையும் பொருளாதார அகதிகள் என்று கூறி உண்மையாக அங்கு பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு வந்து அரசியல் அகதிகளாக வாழும் மக்களின் மனங்களை நோகடிக்காது இருப்பது நலம். நீங்கள் பொருளாதார அகதியாக வந்திருக்கலாம். ஆயினும் துன்பங்களை அனுபவித்தவர்களை நீங்கள் கூறும் வார்த்தைகள் காயப்படுத்தலாம். அவர்களின் துன்பங்களில் குருதிகளில் நீங்கள் பெருளாதார அகதிகளாக வந்து அரசியல் தஞ்சம் கோரியிருக்கலாம். உங்களில் சிலரிற்கு அத்தகைய துன்பங்கள் நேராமல் இருந்திருக்கலாம். ஆயினும் அதை அனுபவித்தவர்களிற்கு தெரியும் எப்படி கொடுமையான நிகழ்வுகள் அவை என்று. எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.

மன்னிக்கவேண்டும் அருவி. யாருடைய குருதியில் குளிர்காய்ந்து விட்டு....

எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை விட எனக்கு வயசு குறைவுதான். ஆரம்ப பிரச்சினைகள் எதுவும் எனக்கு தெரியாது. ஏன் சண்டை தொடங்கியது என்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் விடுதலையை விரும்புவன். தேசியத்தை மதிப்பவன். ஆனால் கேள்வி புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி தாயகம் போவர்களா இல்லையா என்றால் அதிகமானோர் போகமாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்து.

இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.

விளக்கம் தேவை. விடுதலைப்போராட்டம் நடக்கின்ற நாட்டில் பிறந்தது என் குற்றமா???

:roll: :roll:

Link to comment
Share on other sites

இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.  

விளக்கம் தேவை.  :roll:

இராணுவ அடக்குமுறைகளில் இருந்து இராணுவத்தால் பலவழிகளிலும் துன்பத்தை அனுபவித்து தம் குருதியைச் சிந்தி நடைப்பிணமாக இருந்த அதிலிருந்து விடுபட வெளியேறிய மக்களைக் குறிக்கவே அவ்வார்ததையைப் பிரயோகித்தோம். அவர்களின் பின்னால் ஏதோ ஒரு காரணததிற்காக வந்தவர்கள் தான் இன்று இவ்வாறு பொருளாதார அகதிகள் எனத் தம்மை விழிப்போர். அவர்கள் எப்படியாக அகதிநிலையை புலம்பெயர் நாடுகளில் கோரினார்கள். அற்றையவர்களிற்கு நடந்தவற்றை தமக்கு நடந்தவையாக காட்டிக்கொண்டனர். அவ்வாறனவர்களிற்காகவே அவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. ஒரு வார்த்தை சொன்னதற்காகவே அப்படி விளக்கம் கேட்கும் நீங்கள் அவர்களின் துன்பங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரம் செய்துவிட அவர்களை கீழே தள்ளும் நிலையில் இன்று இருக்கிறீர்களே.

Link to comment
Share on other sites

அருவியில் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வசம்பு அவர்கள் கூறியமாதிரி சுயநலம் ஒன்றுக்காய் நாம் பல முகமூடிகளை அணிவது வழமை தான். அது நானாக தன்னும் இருக்கலாம். ஆனால் போர் முடிந்ததும் இங்கு இருப்பவர்கள் அங்கு போவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. வேண்டுமென்றால் நாம் அப்படி கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்துக்கு எமது நகரத்தில் இருந்து யாழ் சென்றவர்கள் மீண்டும் இப்படி ஒரு பயணத்தை இனி செய்யப்போவதில்லை என சலித்துக்கொள்கிறார்கள். இவர்களா அங்கு போய் நிரந்தரமாக இருக்கப்போகிறார்கள். நான் இப்படி ஒரு கேள்வியை எமது நகரத்தில் இருக்கும் பல தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் என்னை நையாண்டி செய்வதுபோல் சிரிக்கிறார்கள். முடிவு என்னவென்றால் யாரும் அங்கு போய் வாழ தயாராக இல்லை. சும்மா உதட்டளவில் தான் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். தாயகம் தேசியம் என்று எல்லோரும் கதைக்கலாம் அப்படி உணற்சிவசப்பட்டு கதைப்பவர்களை பார்த்து ஒரு சிறிய கேள்வியை கேட்கிறேன். உங்களுக்கு அப்படி ஒரு தாய் நாட்டு பாசம் இருந்திருந்தால் ஏன் வெளிநாடு வந்தீர்கள் தாயகத்தில் இருந்து போராடி இருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.

-

நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:

Link to comment
Share on other sites

இங்கு கேட்ட கேள்வியே சுதந்திரம் கிடைத்தபின்னர் என்பதுதான். ஒரு சுபீட்ச்சமான நாட்டில் வந்து வசிக்க மாட்டோம் எண்று அதுவும் காணிநிலச்சொந்தக்காறர் சொல்லுவார்கள் என்பது வசம்பு ஊமையால் மட்டும்தான் நிறுவமுடியும்.

இங்கு சொல்வது இப்போதய நிலையில் ஈழத்துக்கு மக்கள் போவார்களா என்பது பற்றி இல்லை. சுபீட்ச்சமான எங்களின் தேசத்தைப் பற்றியது.

கரும்பு தின்னக் கூலி தருவதுபோல ஐரோப்பாபோல ஒருநாடு சொந்த நாடாக கிடைத்தால் அதுவும் எமது மொழி பேசுபவர்களாய் கிடத்தால் கசக்கும் என்பவர்களை என்ன சொல்ல.

எனது நாடு சுபீட்ச்சமாக எல்லா வாய்ப்பும் வசதியும் வளங்களும் உள்ள நாடு, அப்படி சுபீட்சமாகாது எண்று கனவுகாண்பவர்களிற்காக கவலைப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.

-

நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

உணர்வு என்பது மக்களின் மனங்களில் இருப்பது. அது எப்போதும் பொங்கி வருவது கிடையாது தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல. எனது நாட்டின் தலைவிதியை நிர்மானிப்பது வேற்று நாட்டானாய் இருக்கமாட்டான் நாம்தான்.

இங்கு வசம்பு ஊமையினால் சொல்லப்படும் கருத்தின் ஆளம் தெரிந்தா உளறுகிறீர்கள்.?

Link to comment
Share on other sites

இங்கு வசம்பு ஊமை சொல்லும் கருத்தின் ஆளம் எதுவானால்.

(எதிர்கால வாதங்கள் இப்படி இருக்கும்)

*ஆகவே தங்களின் பணங்களை தேசியத்துக்கு வளங்குவது தேவை அற்றது.

*மக்கள் தேசியத்தில் ஆதரவானவர்களாய் நடிக்க தேவை இல்லை. ஆதரவு கொடுக்க வேண்டாம்.!

2. பல தோவைகளுக்கான முகமூடிதான் தேசியம்.

*அதாவது தேசியம் எண்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் தேசிய வாதிகளிடம் புலம் பெயர் மக்கள் அவதானமாக நடவுங்கள். உதவிகள் ஆதரவு வளங்காதீர்.

* தேசியம் பேசுவோர் பலபேர் உண்மையான தேசிய வாதிகள் கிடையாது உங்களின் உதவிகளை அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

இதையும் வந்து நீக்குமாறு வலைஞனை வேண்டுகிறேன். வாய்யா.

Link to comment
Share on other sites

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

Link to comment
Share on other sites

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

நீங்கள் சொல்வதை சொல்வது தவறாகுமா என்ன.? உங்களின் வேசத்தை கலைக்க வேண்டாம். ?

நீரும் பொறுமையாக இரும் ஐரோப்பாவில் உமது பிள்ளைக்கு இங்கு வெள்ளைக்காறன் என்ன பெயர் சொல்கிறான் எண்று அறிவீர் அப்போ வாரும் ஊருக்கு.

Link to comment
Share on other sites

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

அறிந்ததனால் தானே எழுதுகிறோம். :P

Link to comment
Share on other sites

நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??

Link to comment
Share on other sites

நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??

கற்பனையின் எல்லையில் இருக்கிறீர். வேசம் போடுபவர்களை எப்படி போடுகிறார்கள் எண்று குறிப்பிடலாமே. கண்டமானத்துக்கு கல் எறிந்தால் எதாவது விழும் எண்ற நினைப்பா.?

மற்றயோரைச் சாட அவர்கள் எப்படியானவர் எண்று சொல்ல உமது விசேட தகுதி என்ன.?

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உமக்கு சொர்க்கம்தான்.

Link to comment
Share on other sites

அகிலன்

உம்மைப்போல் ஒருமையில் பதிலெழுத எனக்கும் தெரியும். ஆனால் அப்படி எழுதி உமைப்போல் தாழ்ந்து போக நான் விரும்பவில்லை. என்னைக் களத்தில் தெரிந்தவர்களுக்குத் தெரியும் நான் சுவிசில் இந்நாட்டு மக்கள் என்னைக் கேவலமாக அழைக்கும் அளவிற்கு நான் வாழவில்லை. அப்படி ஒருவன் அழைக்க முற்பட்டால் அவனை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்தே தீருவேன். அடுத்தவனைப் பற்றி எழுதும் தங்களைப் போன்றோரே ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாது தரக்குறைவாக எழுதி பின் இது பற்றி எழுதுவது நல்ல நகைச்சுவை. நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.

Link to comment
Share on other sites

வசம்பு என்ன மப்பா.? எங்கு ஒருமையில் எழுதி இருக்கிறது எண்று காட்ட முடியுமா.? முடியவில்லை எண்றால் பொய்யான குற்றச்சாட்டா.??????

நீர் வீரன் தான் ஐயா. :lol::lol::lol::lol:

(லக்கிலுக் சொன்னது. றிப்பீட்டு.)

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் மத்தியில் தாம் புலம் பெயர்ந்து வாழ்வதா அல்லது புலத்தில் வாழ்வதா என்பதில் வேறு வேறு கருத்துக்கள் காணப்படலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் பலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பாகப் பாவித்து எழுதப்பட்ட கருத்துக்களினால் தானே தவிர வேறில்லை. நானே அல்லது வேறு ஒருவரோ புலத்தில் வாழ்வதா அல்லது புலம் பெயர்ந்து வாழ்வதா என்பது எனது தனிப்பட்ட முடிவு. அதனை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக எனது அல்லது இன்னுமொருவரது சூழலை வைத்து அல்லது மன நிலையை வைத்து அப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப்பற்றிய முடிவு பற்றியே என்னால் கூறமுடியும். இன்று பல புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடம் இரு கருத்துக்களும் நிலவுகின்றன.

சிலர் தாயகம் சென்று வாழ ஆவலுடன் இருக்கிறார்கள். சிலர் இல்லை நாம் அங்கு செல்லவில்லை. அதைவிட நாம் தமிழருடன் இணைந்து வாழவே விரும்பவில்லை என்று தமிழர்கள் இல்லாத ஒரு சூழலைப்பார்த்து அங்கு வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி பல காரணங்கள் காணப்படலாம். புலம் பெயர்ந்து பல மாணவர்கள் தாம் தமது சொந்த தாய் மண்ணிற்கு போய் பணியாற்றவேண்டும் என்று விருப்புடன் இருக்கிறார்கள். இப்படியானவர்களையும் உங்கள் கருத்துக்களால் நீங்கள் காயமடைய வைக்கிறீர்கள். ஆதலால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களால் ஒரு சமூகத்தின் வாழ்வை அஸ்தமனமாக்காது தொடர்ந்து வளமான கருத்தாடலைத் தொடர்வது நன்மை பயக்கும்.

Link to comment
Share on other sites

சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?

Link to comment
Share on other sites

அகிலன்

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???

Link to comment
Share on other sites

அகிலன்

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???

மன்னிக்கவேண்டு அது ekalappai செய்த மாயம் m க்கு பக்கத்தில இருந்த n ஐ அழுத்தியதால் வந்த வினை மீண்டுமொரு மன்னிப்புக்கள் எனது எழுத்துப் பிழைக்காய்.

உமக்கு எண்று வந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மற்றது வசம்பு நான் ஓடி வந்து பதுங்கியது இங்கிலாந்தின் லண்டனில் தான் ஆனால் கடந்த 4 மாதமாக யாழ்ப்பாணம் வன்னி எல்லாம் திரிந்த பின் இப்போ எனது வியாபார நடவடிக்கைக்காக இன்னும் ஒரு நாட்டில் இருக்கிறேன். இப்போ காலை வேலை.

Link to comment
Share on other sites

சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?

இன்று பொருளாதாரத்திற்குத்தான் இடம்பெயர்ந்தோம் என்று கூறுபவர்கள் இதற்குப் பதிலளிப்பார்கள் அகிலன்.

சிங்கப்பூர் ஒரு காலத்தில் இலங்கையைப்போல் வரவேண்டும் என்று ஏங்கியது. எம்மவர்கள் பலரும் தம் பொருளாாதாரத்தை மேம்படுத்த அங்கு சென்று வேலை செய்தார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் இங்கு படித்த மாணவர்கள் தமக்கென தகுதியான தொழிலை பெறக்கூடிய சூழ்நிலையில் இங்கிருந்து குளிரில் துன்பப்படுவதைவிட அநேகர் மீண்டும் சென்று வாழ்வார்கள் என்று நம்பலாம்.

அதைவிட இன்றைய சூழ்நிலையிலேயே அங்கு போய் வாழ எனக்கு அறிந்தவர்கள் பலர் தயாராய் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஊரிலே என்னை -

பள்ளன் பறையன் என்றார்கள்.

குறைந்த சாதி - தள்ளிப் போ

நானும் வெளிநாடு வந்தேன்.

இங்கே என்னை கறுப்பன், பாக்கி

என்றார்கள் - நானும்

முடியட்டும் சண்டை - போகிறேன்

ஊருக்கு என்றிருந்தேன்.

சண்டையும் நின்றது -

சமாதானம் என்றார்கள் - நானும்

கட்டினேன் பெட்டியை

ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு

அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்

கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே

எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!

விடுதலை வரி கட்டினீங்களா?

இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை

அங்கே என்ன வேலை? -

கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில

இங்கே என்ன செய்யிற நோக்கம்?

தெரிஞ்ச வேலை உது தானோ?

எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!

நாட்டுக்கு உங்களால என்ன பயன்?

ம்.... கேளாத கேள்விகள்...

கேட்டால் என்ன செய்வேன்?

Link to comment
Share on other sites

ஜதார்த்தமான கவி ஜூட்.

ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?

எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.

Link to comment
Share on other sites

நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.