Jump to content

யாரிவர்?


Recommended Posts

16 வயசில் பல ஆசை வருமே-

இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி

வெடிகுண்டை தன் மடியில் - காவி

வீணே தன்னை கொல்ல நினைக்குமா?

எப்படி ஆச்சு?

ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை

ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- !

இப்படி நினைத்தாரே ஒருவர் -!

உன்னால்-என்னால்-எவரால் எண்ணி

பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே!

இப்படி இப்படி -பாருங்களேன்!

எவர் நினைத்திருப்பார் - இந்த

இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?

ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்-

மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-!

பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர்

அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ?

எப்படி எப்படி - உம் பாட்டன்

வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர்

எப்படி எப்படி?

மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து

பிராணவாயு தந்த கரிகாலரே!

எங்கள் தேசத்து பிரவாகமே

பிரபாகரனே-தலைவா-!!

பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால்

என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்!

எதுவும் வேணாம் - இனமே வேண்டும் --

இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை

பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள?

கொஞ்சம் - சக்தி வந்தாலே -

அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்!

எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும்

இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே!

புரிய முடியவில்லை -!

உதாரணம் உமக்கு நிகர்

யாரும் உலகில் இருந்தால்தானே

ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்!

வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்-

இந்த வேதனையில் கிடந்து உழலும்

ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை வர்னன். தலைவரின் உறுதியையும் அவர் கொள்ளைக் பற்றையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

தலைவரினைப்பற்றி நிதர்சனமான கவிதையை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வர்ணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக உள்ளது வர்ணன். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கவிதை நன்று வர்ணண். தலைவரின் மகத்துவத்தை இனிமையாய் கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி

வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே

ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய

ஆண்மைக் குமரனடா - பெரும்

ஆபத்தையே பனியாக மதித்திடும்

ஆதித்ய சோதியடா

சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய

சிந்தனையாளனடா - எங்கள்

செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற

செல்வக் குமரனடா

இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட

எங்கள் தலைவனடா - தமிழ்

விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்

விதியை மறுத்தவன் டா

செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்

செதுக்கிய சிற்பியடா - ரத்தம்

சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்

சீறிடும் வேங்கையடா.

குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து

குதறிட வைத்தவன் டா - அட

எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்

ஈழத்தலைமகன் டா

துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட

துயரை ஒழித்தவன் டா - நாம்

பட்டது போதுமென்றார்த்து எதிரியில்

பாய்ந்த புலியவன் டா

ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து

அணிநடை செய்தவன் டா - உயிர்

மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்

மறவர் தலைவனடா

பேய்களுலாவிடு காடதுவாக்கிய

பேரின வாதிகளின்-தலை

சாய எம் மண்ணினில் வீர பராக்ரம

சாகசம் செய்பவன் டா

எத்தனை கோடி துயர் வந்தபோதும்

இடிந்து விடாதவன் டா - தன்னை

மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு

மூச்சிற் கலைப்பவன் டா

இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்

ஈடிணையற்றவன் டா - எங்கள்

சொத்தென தாயக ஈழமண் தன்னிற்

சுதந்திரம் கேட்பவன் டா

சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ் பெருந்

தீமையழியுமடா - அவர்

வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ்

மாண்பு சிறந்ததடா

ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)

ஆர்க்கும் புலிகளினால் - துயர்

போயின போயின என்று தமிழ் மகள்

துள்ளி நிமிர்வாளடா

யுகசாரதியின் கவிதைகளிலிருந்து

Link to comment
Share on other sites

வர்ணன் தலைவரைப்பற்றிய கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரை பற்றி எழுதிய கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் வர்ணன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.