Jump to content

அகதியா குடியேறியா என்ன நினைக்கிறீர்கள்?


Recommended Posts

என்ன நினைக்கிறீர்கள்?

நான் பெயர் இங்கு குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் ஒருவர் அனுப்பிய தனிமடல் வாசகங்களை பாருங்கள்:

அண்ணா நானுங்க ஸ்பொன்சருலதான் வந்தேனுங்க. என்னை அகதிகள் பட்டியலில் சேர்காதையுங்கோ ஏனெனில் நான் ******** நாட்டுக்கு விமானம் ஏறும் போது *******குரிய வதிவிட அனுமதியுடன் தான் ஏறினேன். நான் ஒன்றும் உங்களை மாதிரி திருட்டு தனமாக எல்லைகளுக்காலேயோ அல்லது விமான நிலையத்தினூடாகவோ இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கவில்லை

இவ்வாறு பெரிய கெளரவபட்டுக்கொள்கிறார் - தன்னோட புலம்பெயர்வு வாழ்வு பற்றி-!

எனக்கு அவர்கிட்ட கேக்கணும் போல இருந்தது என்னன்னா - என்னதான் ஸ்பொன்சரில வந்தேன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தினாலும்- அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள் எப்படி நுழைந்தார்கள் - அந்த நாட்டினுள்ளே என்பதுதான் -! 8)

இக்கருத்து பற்றி - நீங்க ஏதும் நினைக்கிறீகளா-? 8)

Link to comment
Share on other sites

நீங்கள் கேட்க நினைத்த கேள்வியை தான் நானும் கேட்கின்றேன். அவரை ஸ்பொன்சர் பண்ணியவர் எப்படி வந்தவர் என்று?

ஆமா அகதிகள் தான் வந்தோம் என்று சொல்வதில் என்ன தயக்கம்? நாம் அப்படி வந்தபடியால் தான் தாயகத்தில் பெரும்பலான உறவுகள் பட்டினி இன்றி இருக்கின்றனார். அந்த அகதி நிலை வழங்க படமாலேயே எவ்வளவு உறவுகள் காசை செலவழித்து வந்து திரும்பி தாயகத்திற்கு உடைந்த மனதுடன் சென்று இருக்கின்றார்கள்.

அகதியாக வந்தாலும் பிறந்த நாட்டினினதும் இருக்கும் நாட்டின் இறையமையையும் போற்றி பாதுகாக்கின்றோம். நமக்கு அதுவே சந்தோசமான விடயம்.

அகதிகளாக வந்தவர்களை பார்க்க அப்படி என்ன இளக்காராம் அவருக்கு? அகதிகளாக வந்த உறவுகள் தான் தமது குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து வேலையுண்டு தம் உண்டு என்று இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு பணக்கஸ்டம் இருக்காது ஆகவே தன்னுடைய தேவைக்கு என்றாலும் உழைக்க வேண்டும் என்றா கவலை இல்லை. வீதிகளில் திரிந்து பிரச்சனைகளை உருவாக்குபவர்களும் இவர்கள் தான்.

Link to comment
Share on other sites

இக்கருத்து பற்றி - நீங்க ஏதும் நினைக்கிறீகளா-? 8)

யாராவது உறவுக்காறன் ஐரோப்பா வெள்ளைக்காறனாக இருக்கணும். ( அப்பா.! :roll: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:

Link to comment
Share on other sites

இப்படி ஒருவர் எனக்கும் நேரடியாகக் கூறியிருந்தார். அவர் என்னுடன் ஒரே பாடசாலையில் படித்தவர். அவரிற்கும் இப்படியான விளக்கம் தான் கொடுத்திருந்தேன்.

ஆனால் அவர் எனக்குக் கூறியது, "என்னை ஸ்பொன்சர் பண்ணினது என்னுடைய அக்கா, அக்கா ஸ்பொன்சரில வந்தவர்". அப்பொழுது அக்காவை யார் ஸ்பொன்சர் பண்ணியது என்று கேட்டபோது அவரின் துணைவர் ஸ்பொன்சர் பண்ணினாராம். அவர் எப்படி கனடா வந்தவர் என்றால் அதற்கு ஆள் மூச்சு விடவில்லை. அந் நிகழ்வின் பின் அவர் என்னுடன் கதைப்பதை குறைத்துக்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:

அப்படி இல்லை என்று சொல்ல வாறீர்களா.

ம் அனைவரும் அப்படி இல்லைத்தான். ஆயினும் அப்படியானவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை மண்ணிலும் அகதியடா

அன்னியன் மண்ணிலும் அகதியடா

ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்

அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு

அணைவருமே அகதிதாண்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை மண்ணிலும் அகதியடா

அன்னியன் மண்ணிலும் அகதியடா

ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்

அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு

அணைவருமே அகதிதாண்டா.

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அனுராஜ்....

Link to comment
Share on other sites

ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:

நான் எல்லோரையும் சொல்லவில்லை ஐிவா. பெரும்பாலனோர் அப்படித்தான் என்று தான் சொல்ல வந்தேன்.

அது சரி அதை சொல்லிட்டு நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள் :roll:

Link to comment
Share on other sites

அன்னை மண்ணிலும் அகதியடா

அன்னியன் மண்ணிலும் அகதியடா

ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்

அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு

அணைவருமே அகதிதாண்டா.

இதனை சிலர் உணர மறுக்கின்றனரே

Link to comment
Share on other sites

-1- படிப்பு தொழில்ரீதியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வந்தவர்கள்.

-2- நாட்டின் நெருக்கடி நிலமையால் வேறு வழிகள் இல்லாமல் பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டு மாற்றுவழிகளில் வந்தவர்கள்.

-3- ஏற்கனவே மேற்கூறிய ஏதே ஒரு வழியில் வந்தவர்களின் பொன்சர் உதவியில் வந்தவர்கள் மூன்றாம் தரப்பு.

புலம் பெயர்ந்த சமூகத்தில் 1 ஆவது முறையில் வந்தவர்கள் இல்லை என்ற எண்ணவேட்டத்தில் கதைப்பது தவறு. முக்கியமாக பிரத்தானியா அவுஸ்ரேலியா நியுசிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இந்த முறையில் பலர் சென்றிருக்கிறார்கள்.

2 ஆம் தரப்பில் உள்ளவர்களை தவறாக விமர்சிப்பவர்கள் கீழ்தரமாக பார்ப்பவர்கள் தங்களது அறிவியல் வரட்டுத்தனத்தை காட்டிக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பலர் உயர்கல்வி மற்றும் தொழில்ரீதியில் மேற்குலகத்திற்கு வரவதற்குரிய வசதி உள்ளவர்கள், உரிய வழியில் முயற்சி செய்து நிராகரிக்கப்பட்ட பின்னர் மாற்று வழிகளின் மூலம் வந்திருக்கிறார்கள்.

திருமணம் முடித்து பொன்சரில் வர சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் மாற்றுவழிகளை தேர்ந்தெடுத்தவர்களையும் அறிவேன். எனவே பொன்சரில் வந்தவர்களில் பலர் அந்த சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?

1 ஆவது முறையில் வந்தவர் பெருமைப்பட்டால் அவரது சொந்த கல்வி தொழில் சார்ந்த திறமையில் வந்தவர் என்றரீதியில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 3 ஆம் முறையில் வந்தவர்களள் கொக்கரிப்பது தான் மிகவும் நகைப்புக்கிடமானது.

Link to comment
Share on other sites

டம்பீமார் நமக்கு ஸ்பொன்சர் பண்ணியவர் இந்த நாட்டு ஐனாதிபதி

ஓய் வேலையைப் பாருங்கப்பாாாாா

:P :P :P :P :P :P :P :P

3612111ua.gif

Link to comment
Share on other sites

சின்னப்பு சின்னதா ஒரு டவுட்டு, உங்கடை நாட்டிலை சனாதிபதி ஆட்சியோ பிரதமமந்திர ஆட்சியோ நடக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சாதி முறை இருந்தது (தற்போது அழிந்துகொண்டு போகின்றது). இங்கு புதிய சாதி முறைகளை அறிமுகப் படுத்திவிட்டால் போயிற்று.

1. ஸ்ருடன்ற் விசாக்காறர்

2. ஸ்பொன்சர்காறர்

3. அகதிக்காறர்

அ) நிரந்தர வதிவுடமை பெற்றோர்

ஆ) இன்னும் அகதியாக இருப்போர்

இ) நிராகரிக்கப்பட்டோர்

தரப்பட்ட வரிசையின்படி இறங்குவரிசைப் படுத்திக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இதிலை பகிடி என்னவென்றால்.. படிக்கவெண்டு ஸ்பொன்சரிலை வந்த 83க்கு முன் லண்டன் வந்தாக்காள்...அகதியாவந்தவனுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொருத்த மட்டில் அகதி என்று சொல்பவன் மட்டுமே தாய் நாட்டை பற்றி யோசக்கிறான் :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

சின்னப்பு சின்னதா ஒரு டவுட்டு, உங்கடை நாட்டிலை சனாதிபதி ஆட்சியோ பிரதமமந்திர ஆட்சியோ நடக்குது?

ஓய் உமக்கு 1000 டவுட்டு வரும் இருக்கட்டும் சுவிசில நடக்கிறது 7 அமைச்சர்களின் ஆட்சி ராஐா அதாவது

Bundesrat

http://www.admin.ch

ஆணால் குறுக்கு மக்களை கேக்காமல் ம்கூம் ஒரு விடயமும் செய்யமாட்டினம் ஒரு சின்ன குச்சி ஒழுங்கை போடுறது எண்டாலும் ஒரு தேர்தல் வச்சுத்தான் போடுவினம் ராசா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.