Jump to content

பூவுக்கும் பெயருண்டு


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!!!!

ஓர் குறுந்தொடர் மூலம் உங்களைத் தொடுகின்றேன் . எமது மூதாதையரது வாழ்வும் , வாழ்வியலும் இப்போது உள்ள இயந்திரத்தனங்கள் இல்லாது இயற்கையுடனேயே ஒட்டி இருந்தது . அதனாலேயே அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனேயும் , அளவற்ற மக்கட் செல்வங்களுடனும் வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணுற்ற பூக்களுக்கு எப்படியெலாம் தெள்ளு தமிழில் பெயர்களைச்சூட்டி எமக்கு விட்டுப் போனார்கள் என்ற தேடலின் பயனாக வந்ததே இந்தக் குறுந்தொடர் . இத்தொடரில் பொருள் மயக்கங்கள் , தவறான புரிதல்களைத் தவிர்க்குமுகமாக , எனது அறிவுக்கு எட்டியவகையில் ஒவ்வொரு பூக்களுடன் அவைபற்றி சிறுகுறிப்புகள் விக்கிபீடியாவின் துணைகொண்டு வருங்காலங்களில் போட்டுவிடுகின்றேன் . உண்மையில் இந்தத் தொடரை , எனது அன்புத் தங்கையும் , கள உறவுமான யாயினியின் முன் அனுமதி பெற்றே தொடருகின்றேன் . இந்தத் தொடரின் பெருமை எல்லாம் யாயினிக்கே போய்ச்சேரும் . நான் இத்தொடரில் இணை இயக்குனர் மட்டுமே . வழமைபோல் உங்கள் விமர்சனங்களையும் , ஆதரவினையும் நாடி நிற்கின்றேன் :) :):) .

நேசமுடன் கோமகன்

01 . காந்தள்

41976333710585632323610.jpg

02 . ஆம்பல்

42480233726093297439510.jpg

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

Link to comment
Share on other sites

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

Link to comment
Share on other sites

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

Link to comment
Share on other sites

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p><p><p>

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

சரி பிழை

தெரிந்தது தெரியாதது இருக்கட்டும் கோ

ஒரு தொகுப்பை ஆரம்பிப்பவரிடமிருந்து இப்படி ஒரு பதில் வரலாமா?

ஒரு விடயத்தில் தெளிவின்மைக்கும் தேசியத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதிலும் இத்தனை கேள்விக்குறிகளுடன்???

இப்படித்தான்

தேசியத்தை நேசிக்கவேண்டுமென்றால் எல்லாம் தெரிந்திருக்கணும்

எல்லாவற்றையும் துறந்திருக்கணும் என்ற எடுதுகோளால்தான் எவனும் இனி எமக்காக போராடப்போவதில்லை என்ற தேக்கநிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி படத்து பாட்டுல வாற ஆம்பல் இதுவா????? :unsure:

http://www.youtube.com/watch?v=csojPBVlQj0&feature=fvwrel

Link to comment
Share on other sites

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் வாழ்துக்களுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

மிக்க நன்றிகள் நிகே உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

Link to comment
Share on other sites

03 அடும்புப் பூ

52327615.jpg

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprae). சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில்.நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்.

04 அவரைப் பூ

19778111.jpg

அவரைக் கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு

56035947.jpg

Link to comment
Share on other sites

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் குசா உங்கள் நேரத்திற்கும் ,வாழ்துக்களுக்கும் . உங்களைக் கண்டதில் அளவற்ற ஆனந்தம் கொண்டேன் . மேலும் எனது கடிதம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

05 அனிச்சம் பூ

88299725.jpg

45455303.jpg

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும்.

06 ஆத்திப் பூ

60985148.jpg

82713673.jpg

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் எங்கும் காணப்படுவதுடன், இலங்கை , சீனா , திமோர் , இந்தியா ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.

54589920.jpg

குறுந்தொகை 24. முல்லை திணை – பரணர் - தலைவி சொன்னது

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து

எழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதலர் அகலக் கல்லென் றவ்வே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-fig-tree/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களின் பட்டியல் மற்றும் விபரங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது...மிகவும் நன்றிகள்...தொடருங்கோ.:)

Link to comment
Share on other sites

<p><p><p>

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . உண்மையிலேயே உங்கள் தகவல்கள் எனக்குப் பெரிதும் உதவுகின்றன . அதேவேளையில் , நான் எனது பாணியில் எழுத்துக்களின் வரிசையில் தரம் பிரித்து அவைக்கான சிறு விளக்கக் குறிப்புகளைக் கொடுக்கின்றேன் . உங்கள் பட்டியலையும் அப்போது நிட்சயம் இணைத்து விடுகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.