Jump to content

பூவுக்கும் பெயருண்டு


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!!!!

ஓர் குறுந்தொடர் மூலம் உங்களைத் தொடுகின்றேன் . எமது மூதாதையரது வாழ்வும் , வாழ்வியலும் இப்போது உள்ள இயந்திரத்தனங்கள் இல்லாது இயற்கையுடனேயே ஒட்டி இருந்தது . அதனாலேயே அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனேயும் , அளவற்ற மக்கட் செல்வங்களுடனும் வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணுற்ற பூக்களுக்கு எப்படியெலாம் தெள்ளு தமிழில் பெயர்களைச்சூட்டி எமக்கு விட்டுப் போனார்கள் என்ற தேடலின் பயனாக வந்ததே இந்தக் குறுந்தொடர் . இத்தொடரில் பொருள் மயக்கங்கள் , தவறான புரிதல்களைத் தவிர்க்குமுகமாக , எனது அறிவுக்கு எட்டியவகையில் ஒவ்வொரு பூக்களுடன் அவைபற்றி சிறுகுறிப்புகள் விக்கிபீடியாவின் துணைகொண்டு வருங்காலங்களில் போட்டுவிடுகின்றேன் . உண்மையில் இந்தத் தொடரை , எனது அன்புத் தங்கையும் , கள உறவுமான யாயினியின் முன் அனுமதி பெற்றே தொடருகின்றேன் . இந்தத் தொடரின் பெருமை எல்லாம் யாயினிக்கே போய்ச்சேரும் . நான் இத்தொடரில் இணை இயக்குனர் மட்டுமே . வழமைபோல் உங்கள் விமர்சனங்களையும் , ஆதரவினையும் நாடி நிற்கின்றேன் :) :):) .

நேசமுடன் கோமகன்

01 . காந்தள்

41976333710585632323610.jpg

02 . ஆம்பல்

42480233726093297439510.jpg

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

Link to comment
Share on other sites

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

Link to comment
Share on other sites

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

Link to comment
Share on other sites

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p><p><p>

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

சரி பிழை

தெரிந்தது தெரியாதது இருக்கட்டும் கோ

ஒரு தொகுப்பை ஆரம்பிப்பவரிடமிருந்து இப்படி ஒரு பதில் வரலாமா?

ஒரு விடயத்தில் தெளிவின்மைக்கும் தேசியத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதிலும் இத்தனை கேள்விக்குறிகளுடன்???

இப்படித்தான்

தேசியத்தை நேசிக்கவேண்டுமென்றால் எல்லாம் தெரிந்திருக்கணும்

எல்லாவற்றையும் துறந்திருக்கணும் என்ற எடுதுகோளால்தான் எவனும் இனி எமக்காக போராடப்போவதில்லை என்ற தேக்கநிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி படத்து பாட்டுல வாற ஆம்பல் இதுவா????? :unsure:

http://www.youtube.com/watch?v=csojPBVlQj0&feature=fvwrel

Link to comment
Share on other sites

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் வாழ்துக்களுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

மிக்க நன்றிகள் நிகே உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

Link to comment
Share on other sites

03 அடும்புப் பூ

52327615.jpg

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprae). சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில்.நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்.

04 அவரைப் பூ

19778111.jpg

அவரைக் கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு

56035947.jpg

Link to comment
Share on other sites

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் குசா உங்கள் நேரத்திற்கும் ,வாழ்துக்களுக்கும் . உங்களைக் கண்டதில் அளவற்ற ஆனந்தம் கொண்டேன் . மேலும் எனது கடிதம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

05 அனிச்சம் பூ

88299725.jpg

45455303.jpg

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும்.

06 ஆத்திப் பூ

60985148.jpg

82713673.jpg

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் எங்கும் காணப்படுவதுடன், இலங்கை , சீனா , திமோர் , இந்தியா ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.

54589920.jpg

குறுந்தொகை 24. முல்லை திணை – பரணர் - தலைவி சொன்னது

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து

எழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதலர் அகலக் கல்லென் றவ்வே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-fig-tree/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களின் பட்டியல் மற்றும் விபரங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது...மிகவும் நன்றிகள்...தொடருங்கோ.:)

Link to comment
Share on other sites

<p><p><p>

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

Link to comment
Share on other sites

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . உண்மையிலேயே உங்கள் தகவல்கள் எனக்குப் பெரிதும் உதவுகின்றன . அதேவேளையில் , நான் எனது பாணியில் எழுத்துக்களின் வரிசையில் தரம் பிரித்து அவைக்கான சிறு விளக்கக் குறிப்புகளைக் கொடுக்கின்றேன் . உங்கள் பட்டியலையும் அப்போது நிட்சயம் இணைத்து விடுகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.