Jump to content

மலர்படுக்கை நடுவே-!


Recommended Posts

வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா?

தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா?

பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-!

நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ?

நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் -

கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா!

பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும்

அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால்

அந்த பகுதியையே இழுத்து மூடுவார்!

ஏனடா இப்பிடி-?

எலும்பும் தசையும் மட்டுமா-

மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-!

நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு!

பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து

கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும்

காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ-

எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவு

எல்லாம் இனி பொய்யா - மெய்யா?

உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை

துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!

கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்

தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!

நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு

பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!

பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்

அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-

சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ

தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -

எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு

தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்

நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்

பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-

கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-

நான் - நானாகவே இருந்தேன் -!

உனக்கு எப்படியோ- எனக்கு

மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை

திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

(யாழ்களத்தின் -நிர்வாகம்- மீதான - சின்ன கோவம்- !எடுத்த எடுப்பில் எடுக்கும்- சில முடிவுகளால்-அதனால்- இது-)

Link to comment
Share on other sites

உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை

துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!

கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்

தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!

நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு

பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!

வர்ணன் அழகான வரிகள். உங்கள் கோபத்தை அழகான வரிகளால் கூறிவிட்டீர்கள். பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் சின்ன கோபத்தை கவி வரிகள் மூலம் அழகாக கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.

உதாரணத்துக்கு வலைப்பதிவுகளில் ஒரு சில வலைப்பதிவுகள் அப்பட்டமாக புலிகளை/ விடுதலை போரை கொச்சை படுத்தி எழுதப்படுகிறன. அவற்றுக்கு முன்பு மிக தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் இடப்பட்டதும், அதற்கு கருத்தை எதிர்க்க திரணியற்ற **** வால்கள் அவ்வாறு பின்னூட்டம் இடுவதாக அவ்வலைப்பதிவாளர்கள் பிரச்சாரப்படுத்தியதும் நடந்தது. இதன் மூலம் அவர்கள் காட்ட முயன்றது விடுதலை ஆதரவாளர்கள் தரம்கெட்டவர்கள் என்பதே. இப்படி பிரச்சரப்படுத்துவதற்க்காக தமக்கு தாமே பின்னூட்டம் இட்டார்களா என்று கூட விவாதிக்கப்பட்டது.

அதே போல யாழிலும், ஏற்படக்கூட்டதென்பது எனது தனிப்பட்ட கருத்து.

இக்கருத்து சக உறுப்பினர் எனும் முறையிலேயே வைக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்பாடி-!

உங்க கருத்துக்கு நன்றி-!

உங்களிடம் என் சந்தேகங்களை கேட்காமல் - பொதுவாய் பொறுப்பில் உள்ள அனைவரிடமும் கேட்க நினைக்கிறேன் -

ஒரு பொறுப்பில் உள்ளவரை - நெருக்கடிக்குள் தள்ள கூடாது- மரியாதை செய்யணும் என்ற ரீதியில்-!

பதில் வராது - என்று தெரிந்தும் !

"ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. "

வார்த்தைகள் - தேசியத்துக்கு எதிராய் சிலர் பேசும்போது -தாழ்ந்து போயிருக்கிறதுதான் - இல்லையென்று சொல்லவில்ல-

என் கேள்வி- தேசியத்துக்கு எதிராய் - கருத்து வைத்துப்போக சுதந்திரமாய் - சிலரை உலவ விட்டு இருக்கிறீகளே - அது ஏன் -? எதுக்காக-?

நேற்று வந்த வர்ணன் ஏன் இவ்ளோ துள்ளூறார் எண்டு நீங்க நினைக்கலாம் -

இங்குள்ள பலர் போலவே- நானும் யாழின் நீண்டகால வாசகன் - தமிழினி - குருவிகள் கவி போட்டி துளியிலிருந்து-

மதி என்ற பெரியவர் -துரோகபேச்சுக்கள்- பி.பி.ஸி- மதன் ஆனதிலிருந்து- சோழியன் அண்ணா-இளைஞன் கருத்தாடல்-சின்னப்பு லொள்ளு- அன்பகம் குசும்பு குழப்பல் பேச்சுவரை-மதனா யார் - ஜோதிகா-எங்க -நளாயினி அக்காமுதல்-ஷண்முகி -கருத்தாடல்-மாற்றங்கள் அனைத்தயும் ஒரு வாசகனா ரசிச்சு இருக்கன் -!

அப்போ எல்லாம் -பத்தோடு - பதினொன்றுதான் -இது யாழ்- எண்டு நினைச்சு- வாசிப்பதோட நிறுத்திக்கொண்டன் - கால போக்கில் - மற்றவர்கள் போல் யாழ் இல்ல எண்டுதான் - ரொம்ப நேசிச்சோம்-!

அன்று மதி பெரியவர் பண்ணிய அசிங்கத்தை - எதிர்த்து நின்று கருத்து சொன்ன பலர் இன்றும் களத்திலிருந்தும்- தேசத்துக்கு எதிராய் - பலர் பேச கண்டும் எமக்கு ஏன் வம்பு- வந்தோமா- ஏதோ பொழுதுபோக்கு பகுதில ஏதோ எழுதினோமா - என்று போகிறார்களே- எதனால் ஆச்சு-?

மற்ற வலைப்பதிவுகள் போல் யாழும் ஆக கூடாது என்ற நோக்கம் நல்லது- ஆனா-மற்ற வலைபதிவு நடத்தும் கெட்ட நோக்கம் சார்ந்தவர்கள் தொனியில்- பலர் - ஏளனப்பேச்சு -இங்கு-தொடர எப்படி அனுமதித்தீர்கள்-?

என் கணிப்பில் - எமக்கு எதிராய் செயற்படுபவர்கள்- நண்பர்கள் போல உள் நுளைந்து- பலரோடு -உறவாடி-தம் - கருத்துக்கு வலு சேர்க்க ஒரு குழுவையே - மெதுவாய் உருவாக்கிவிட்டார்கள்- அல்லது - முயற்சி செய்கிறார்கள் என்றே கொள்வேன் -!

நீங்கள் செய்வதெல்லாம்- எமக்கு எதிராய் பிறரை பேசவிட்டு- அதற்க்கு நாம் ஏதும் சொன்னால்- மிரட்டுவது போன்ற குரலில் - எச்சரிக்கை-!

மனசார தாயகத்தை நேசிக்கும் - தல போல உள்ள பல உறுப்பினர்களை - சில -வரட்டு சிந்தனைகொண்டவர்களுக்காக - நோகடிக்கிறீங்க- இனி தேசியம் பற்றிய கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க நினைப்பவர்களுக்கு - உளச்சோர்வை -உண்டு பண்ணுறீங்க-கருத்து ஏதும் சொல்லாமல் - ஏதோ வந்தோமா- போனோமா - என்று இருக்க பண்ணுறீங்க -அவ்ளவே-!! 8)

Link to comment
Share on other sites

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!

பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்

அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-

சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ

தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -

எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு

தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்

நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்

பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-

கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-

நான் - நானாகவே இருந்தேன் -!

உனக்கு எப்படியோ- எனக்கு

மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை

திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

நிதர்சனமான வரிகள்.

Link to comment
Share on other sites

ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.

வார்த்தைகளின் தரம் கெடாமலே பல பதில்கள் எழுதப்பட்டபோதும் அவற்றில் பல அகற்றப்பட்டு அவற்றினை எழுதத்தூண்டிய சில பதிவுகள் இங்கு காணப்படுகின்றனவே :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்போங்க.............இவை மட்டுந்தான் தாயகத்த நேசிக்கிறீங்க............மற்றாக்கள

Link to comment
Share on other sites

அருமையான வரிகள் நிதர்சனமான உணர்வுகள். சில வலிகளை உணர்ந்தால் தான் புரிபடும், உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் வர்ணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்

பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-

கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-

நான் - நானாகவே இருந்தேன் -!

உனக்கு எப்படியோ- எனக்கு

மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை

திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

உண்மையான வரிகள்....கவிதை ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள் வர்ணன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் குரைக்கிறது என்பதற்ாக நாமும் பதிலுக்கு குரைக்க கூடாது. ஆனாலும் குரைக்கும் நாய்கள் கடிக்க வரும்போது நாங்கள் பதிலுக்கு கடிக்கவிட்டாலும் தடியேடுத்து வெருட்டலாம் அல்லவா? (ஓடுவதிலும் பார்க்க இது நல்லம் என்று சொல்ல வந்தன்)

Link to comment
Share on other sites

நாய் குரைக்கிறது என்பதற்ாக நாமும் பதிலுக்கு குரைக்க கூடாது. ஆனாலும் குரைக்கும் நாய்கள் கடிக்க வரும்போது நாங்கள் பதிலுக்கு கடிக்கவிட்டாலும் தடியேடுத்து வெருட்டலாம் அல்லவா? (ஓடுவதிலும் பார்க்க இது நல்லம் என்று சொல்ல வந்தன்)

சகோதரா - இங்கு அதுவல்ல பிரச்சினை -

இங்கு உனக்கும் எனக்கும்தான் கட்டுப்பாடு - எமக்கு எதிராய் பேசுபவர்களுக்கு எதுவும் இல்லை - !

இதை பாருங்க

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=171015#171015

இந்த நபரை என்ன ஜேர்மன்காரன் - லுவ்தான்ஸா ல கொண்டு வந்து எஸ்ஸன் ல இறக்கினானா -?

இருந்தும் பேசுறார் -!

எயர் இஸ்ற் அயன் இடியோற் ! டஸ் வஸ் இஸ் கான் சாகன் -! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.