Jump to content

யாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி? புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா?


Recommended Posts

இன்று தாயகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏதேனும் ஒரு வழியிலேனும் போராடாமல் தாயகத்தில் உள்ளவர்களால் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை. இன்று இருக்கும் அவல நிலையில் இது உடனடி சாத்தியமில்லை எனிலும், வரும் சந்ததி தனக்கு உகந்த ஒரு போராட்ட முறையை கையில் எடுத்து போராடும் என்று நம்புகின்றேன். (நிச்சயம் அது ஆயுத போராட்டமாக இருக்க கூடாது என்றும் விரும்புகின்றேன்)

அப்படி போராட முற்படும் ஒரு சந்ததி யாரை தன் முன்னோடியாகக் கொள்ளும்?

இறுதி வரைக்கும் தன்னாலான அனைத்து முறைகளிலும் போராடின புலிகளையா அல்லது சிங்கள இராணுவம் கூட செய்யத் தயங்கிய கொடூரங்களை தம் மக்களுக்கு செய்த மாற்று இயக்கங்களையா?

இந்தக் கேள்விக்கு உங்கள் அகநெஞ்சில் வரும் பதில் என்ன?

அந்த பதிலில் இருந்து முடிவு எடுப்போம்.........

நாம் எவர் செய்த தவறுகளை திருத்த யாரின் தவறுகளை சீர்தூக்கி பரிசீலனை செய்ய வேண்டும்?

தவறு நீக்கிய ஒரு போராட்டம் அவசியம் என்றால் அது புளொட்டின் அல்லது ஈபிடிபி யின் போராட்டமா, புலிகளின் போராட்டமா என?

தவறுகளில் இருந்து பாடம் படித்து நல்லவற்றை கற்க வேண்டுமெனில் அந்த நல்லவை எந்த தரப்பிடம் இருக்கு? புலிகளிடமா

அல்லது துணை இராணுவ குழுக்களிடமா?

எவரை விமர்சிக்க வேண்டும்?

எவரது தவறுகளை திறந்த வெளியில் விருப்பு வெறுப்பு அற்று விவாதிக்க வேண்டும்?

எவரது போராட்டம் தவறு நீக்கிய போரட்டமாக அடுத்த சந்ததி நினைவில் கொள்ள வேண்டும்

நேர்மையான விவாதம் தேவை (வெறும் ஒற்றைப் பதில்கள் அல்ல)

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

இன்று தாயகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏதேனும் ஒரு வழியிலேனும் போராடாமல் தாயகத்தில் உள்ளவர்களால் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை. இன்று இருக்கும் அவல நிலையில் இது உடனடி சாத்தியமில்லை எனிலும், வரும் சந்ததி தனக்கு உகந்த ஒரு போராட்ட முறையை கையில் எடுத்து போராடும் என்று நம்புகின்றேன். (நிச்சயம் அது ஆயுத போராட்டமாக இருக்க கூடாது என்றும் விரும்புகின்றேன்)

ஒருமுறை ஓயாத அலைகள் ஒன்று முடிந்து போராளிகள் முகாம்களுக்கு திரும்பிக்கொண்டு இருந்தவேளை மரம் இன்றின் கீழே இளைப்பாறினார்கள். அப்பொழுது அங்கே இருந்த முதியவர்கள் அவர்களுக்கு இளநீரும், உணவும் கொடுத்தனர். போராளிகள் நீங்கள் அந்தக்காலத்தில் சோரம்போகாமல் உரிமைகளை பெற்றிருந்தால் நாம் இவ்வாறு போராடியிருக்கத்தேவையில்லை, வாழ்ந்திருக்கலாம் என்றாகள். (அதிலும் நியாயமுள்ளது)

அதற்கு பதிலளித்த ஒரு முதியவர், 'எங்களுக்கு உங்களுக்கு கிடைத்தது போன்ற ஒரு தன்னலமற்ற தலைவன் கிடைக்கவில்லையே' என்றாராம். (அதிலும் நியாயமுள்ளது)

மேற்கொண்டு இன்றைய காலத்திற்கு வருவோம்.

- நாம் விடுதலைக்கு கொடுத்த விலை பாரியது

- இன்றை உலக ஒழுங்கில் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக உள்ளது

- கூட்டமைப்பு இதுகாலம் வரை தவறுகள் விடாமல் கொள்கையில் உறுதியாக நிற்கின்றது

- புலம்பெயர் மக்கள் பலவேறு பிரிவுகளாக இருந்தாலும் சிங்களத்திற்கு தலையிடியாக உள்ளார்கள்

- மேற்குலகம் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை, அதில் இலங்கையும் அடங்கும்

- இந்தியா இன்றுவரை சிங்களத்திற்கு ஆதரவாக உள்ளது

- மகிந்த ஆட்சி பொதுவாக மக்கள் வெறுப்பை சம்பாதித்த வண்ணம் வளர்கிறது

மாற்றங்கள் என்றும் நிகழலாம். அதற்கு தென்சூடான் இல்லை இலிபியா இல்லை எகிப்து போன்ற நாடுகள் உதாரணம். நாம் எமக்கான ஒரு சூழ்நிலை வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதேவளை எம்மால் முடிந்த வேலைப்பாடுகளை செய்தவண்ணமும் இருக்கவேண்டும். அதில் சர்வதேச பரப்புரை, தாயக மக்களுக்கான பொருளாதார/சமூக மேம்பாடு, தாயக அரசியல் கட்சிகளை பலப்படுத்தல்...

இறுதியாக, அடுத்த தலைமுறைக்கு போராட்டத்தை வைக்காமல் இந்த தலைமுறையே ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அந்த குறிக்கோளுடன் முயற்சிக்கவேண்டும் .

Link to comment
Share on other sites

ஆயுதம் தாங்கிய குழுக்கள் (புலிகள் உடபட) ஏன் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள்? இதற்கான அடிப்படை என்ன? இதற்கான பதிலை ஆராய்ந்தால் இனத்தின் மீதான பாசம் பற்று என்பது வெறும் புறத்தோற்றமே ! உள்ளகமாக அவ்வாறு ஒன்றும் கிடையாது. ஒரு சிறு ஊரை எடுத்துக்கொள்வோம், அங்கே பல சாதிகள் இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று முரண்பட்டு அடிமனதில் பகையுடனே காலகாலம் வாழ்கின்றான். இழிவு படுத்தல் தாழ்த்துதல் சபையில் அவமானப்படுத்தல் தள்ளிவைத்தல் திட்டுதல் வஞ்சித்தல் இப்படி செயலிலும் உளவியலிலும் பெரும் பகை நிரந்தரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கின்றது. ஒரு தாய் தன் பிள்ளை மேல் உள்ள பாசத்தைப்போன்று என் இனம் என்ற பாசத்திற்கு துளியும் உணர்வுரீதியில் சம்மந்தம் இல்லை. உலகின் எந்தச் சமூகத்திலும் காணமுடியாத சிக்கலான சமூகக் கட்டமைப்பு இது. சகட்டுமேனிக்கு மண்டையில் போடுவதற்கான மனநிலை எங்கிருந்து வருகின்றது என்றுதான் யோசிக்கவேண்டும். இவன் என் இனம் , இவனை சுடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். என் இனத்தையே கருவறுப்பதற்கு துணிகையில் மனட்சாட்சி குற்ற உணர்வு வரவேண்டும். அப்படி எதுவும் இருந்ததாக அறிகுறி இல்லை. எப்படி இது ஒரு இனமாக முடியும்?

ஒரு குழந்தையை எப்போதும் அச்சுறுத்தி அடித்து வந்தால், தாழ்த்தி கேவலப்படுத்தி வந்தால் வெகுவிரைவில் அது மனநலம் பாதிக்கப்பட்டுவிடும். இதெல்லாம் எமது சமூகத்தில் இயல்பு. சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் உளவியல் ரீதியில் பெரும் குறைபாடு இருக்கின்றது. இனம் என்ற பொதுக் கருத்தை மையமாக வைத்து போராட புறப்பட்டிருந்தாலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்ததின் விழைவை அனுபவிக்கநேர்ந்தது. இவற்றை இயக்கவாரியாக பிரிப்பதில் எந்தப்பலனையும் காணமுடியும் என்று நம்பவில்லை.

ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்.

புலிகள் உட்பட்ட எந்த ஒரு போராட்ட குழுவும் அதன் தலமைகளும் அவைகள் தமக்குள் மோதிக்கொண்டதும் தமது இன மக்கள் மீது எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும் ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம்.

Link to comment
Share on other sites

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மென்முறைப் போராட்டம் மூலம் தமிழினத்திற்கு விடுதலை கிடைக்கும் என ஆழமாக எண்ணுபவர்கள் விடுதலைப்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்து போரிட்ட ஆயுதப் போராட்டம் தொடர்பாக பிரேத பரிசோதனை செய்ய முயல்வது எந்தவொரு பயனை'யும் தரப்போவதில்லை.

மென்முறைப் போராட்டம்தான் எமது அடுத்த போராட்ட வழி என எண்ணுபவர்கள் அவ்வகையான எமது கடந்த கால போராட்ட வரலாறுகளை பிரேத பரிசோதனை செய்வதன் மூலமே ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு வரமுடியும்.

1948 தொடக்கம் 1975 வரையான காலப்பகுதியிலான எமது போராட்டங்கள் பற்றி ஆராய்வது பொருத்தப்பாடாகவிருக்கும். அதைவிடுத்து எவ்வகையான போராட்டம் பொருத்தமற்றது என வாதிடுபவர்கள் அதன் கடந்தகாலம் பற்றி ஆராய்வது வெறும் வம்பலப்பாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விடுதலைப் போராளிகள் என்று யாரையாவது அழைப்பதென்றால் அது புலிகள் எனும் விடுதலை இராணுவத்துக்கு மட்டுமே பொருந்தும். இ.பி.டி.பி அல்லது புளொட் அல்லது வேறெந்த ஆயுதக் குழுவாகட்டும் அவை அனைத்துமே ஒன்றில் இந்தியாவினதோ அல்லது இலங்கை அரசினதோ கூலிப்படைகளாகவோ அல்லது தேச விரோதக் குழுக்களாகவோதான் இருந்திருக்கின்றன அல்லது தொடர்ந்தும் இருந்து வருகின்றன.

புலிகளின் போராட்டம் நியாயமானது. சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் அவர்கள் தமது நோக்கத்திலிருந்து ஒருபோதுமே தவறியதில்லை. மற்றைய ஆயுதக்குழுக்களுக்கு நோக்கமென்று எதுவுமேயிருக்கவில்லை. இந்திய சிங்கள அரசுகளின் நோக்கங்களுக்கு அமைவாகச் செயற்பட்டனவேயன்றி ஒருபோதுமே அவைகள் மக்களின் நோக்கத்திற்காகப் போரிட்டதில்லை.

ஆனால், முடிவில் மக்களுக்காகப் போரிட்டவர்கள் அழிந்துபோக, கூலிப்படைகளாக மாறியவர்கள் இன்றும் கூலிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக இந்த கேள்விக்கு பதில் எழுதுவதற்கு புலத்தில் இருக்கும் எமக்கு தகுதி இல்லை என்பது எனது கருத்து...

தவறுகளில் இருந்து பாடம் படித்து நல்லவற்றை கற்க வேண்டுமெனில் அந்த நல்லவை எந்த தரப்பிடம் இருக்கு? புலிகளிடமா

அல்லது துணை இராணுவ குழுக்களிடமா?

இந்த கேள்வி புலிகளையும் துணை இராணுவக்குழுவையும் சம தட்டில் வையுங்கோ என்ற மாதிரி இருக்கு....அரச துணைஇராணுவக்குழுவிடம் அப்படி என்ன போராட்ட வடிவம் இருந்தது இருக்கு என நீங்கள் நினைக்கிறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை விமசனம் செய்ய என்ன தகுதி இந்த வாய்வாளருக்கு இருக்கிறது?

உடனே தமிழருக்கு சமூக கட்டமைப்பு பாடம் வேறு!

புலி ஆயுதம் ஏந்தி இருக்கவிட்டால் இங்கே ஒருத்தருக்கும் அகதி உரிமை கிடைத்திருக்காது.

மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் வாழ்வோர் ஆயுத வன்முறை பற்றி பேசும்போது சிரிப்பு வரும்.

உலகத்தில் மிக பெரிய ஆயுத தயாரிப்பு நாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது யார்..?!

female-sri-lankan-liberation-tigers.jpg

// தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள்.//

ஈழ விடுதலைப் போராட்ட காலம் தந்தை செல்வா காலத்துக்கு முன், பின் என்று பிரிக்கப்பட்டு நோக்கப்படுவது அவசியம்.

தந்தை செல்வா காலம் வரை அகிம்சைப் போராட்டங்களே (சத்தியாக்கிரகங்கள்.. பேரணிகள்.. பேச்சு வார்த்தைகள்.. ஒப்பந்தங்கள்) தமிழர்களின் அரசியல் உரிமைக்கான முக்கிய போராட்ட வடிவங்களாக இருந்தன. இருந்தாலும் அவற்றின் தோல்வியும்.. அவை சிங்கள அரசுகளின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தவறியமையே ஈழத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சியுரிமையுள்ள தமிழீழத்திற்கான தேவையையும் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையையும் உருவாக்கியது.

ஆனால்.. இன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளின் 33 ஆண்டு கால ஆயுதம் போராட்டத்தால் தான் தமிழீழம் என்பது கனவானது.. இத்தனை பேரழிவுகளும் நிகழ்ந்தன என்பது போலவும்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே ஆயுத போராட்டத்தின் சூத்திரதாரி.. போர் பிரியன்.. தமிழீழ விடுதலையை ஆயுதப் போராட்டத்தால் சாத்தியப்படுதலாம் என்று நம்பிய ஒரே ஒருவர் என்பது போலவும் ஒரு போலித் தோற்றத்தை சில தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மற்றும் இந்திய வல்லாதிக்க எடுபிடிகளாக இருந்து கொண்டு காட்ட முனைகின்றனர்.

உண்மையில்.. தமிழ் இளைஞர்களை (பிரபாகரன் உட்பட) ஆயுதம் ஏந்தத் தூண்டியோர் யார் என்பதை இனங்காட்ட இப்பதிவை இடுகின்றோம்..!

சிங்கள அரசுத் தலைமைகளின் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக தமிழர் தரப்பில் தமிழ் இளைஞர்களிடம் தமிழீழம் என்ற கருத்தையும் ஆயுதப் போராட்ட சிந்தனைகளையும் விதைத்தவர்கள் யார் என்பதை காண்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

ஏனெனில் கடந்த காலங்களில் ஈழத்து அரசியலில் தவறுகள் பலவற்றை பலரும் செய்துள்ளனர். ஆனால் இன்று எல்லாத் தவறுகளும் பிரபாகரனின் மேல் சுமத்தப்பட்டு அவரே பாவப்பட்டவராக இனங்காட்டப்படுவதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

பிரபாகரனை போர் வெறியன்.. பயங்கரவாதி என்று உச்சரிக்க விரும்பும் இந்தியா போன்ற அந்நிய சக்திகளும் தமக்கு வேண்டப்பட்ட ஈழத்து தமிழ் தலைவர்கள், தலைமைகள் விட்ட தவறுகளை மறைத்து பிரபாகரனை விடுதலைப்புலிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமது பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக சிங்கள அரசோடு இணைந்து ஈழத்தமிழர்களின் மீது மேற்கொண்ட யுத்த வெறியாட்டத்தினை நியாயப்படுத்த விளைகின்றன.

இவற்றின் உண்மை முகத்தினை உலகும்.. நம் தமிழ் உறவுகளும் அறிய இப்பதிவை அளிக்கின்றோம்..!

1976..

1976 இல் வட்டுக்கோட்டைப் பிரகடனம் மூலம் எழுச்சியூட்டப்பட்ட தமிழீழக் கோரிக்கை..!

The first National Convention of the Tamil United Liberation Front meeting at Pannakam (Vaddukoddai Constituency) on the 14th day of May, 1976, hereby declares that the Tamils of Ceylon by virtue of their great language, their religions, their separate culture and heritage, their history of independent existence as a separate state over a distinct territory for several centuries till they were conquered by the armed might of the European invaders and above all by their will to exist as a separate entity ruling themselves in their own territory, are a nation distinct and apart from Sinhalese and this Convention announces to the world that the Republican Constitution of 1972 has made the Tamils a slave nation ruled by the new colonial masters, the Sinhalese ,who are using the power they have wrongly usurped to deprive the Tamil Nation of its territory, language citizenship, economic life, opportunities of employment and education, thereby destroying all the attributes of nationhood of the Tamil people.

And, while taking note of the reservations in relation to its commitment to the setting up of a separated state of TAMIL EELAM expressed by the Ceylon Workers Congress as a Trade Union of the Plantation Workers, the majority of whom live and work outside the Northern and Eastern areas,

This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of TAMIL EELAM, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

ஆதாரத் தொடுப்பு...

----------------

1981...

1981 இல் யாழ்ப்பாண எம் பியாக இருந்த யோகேஸ்வரனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற கருத்து நியுயோர்க் ரைம்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட போது. ஆயுதப் போராட்டம் மூலமே தமிழீழத்தை அடையலாம் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாக விளங்கிய அமிர்தலிங்கத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

Within the Tamil front, Mr.Yogeswaran is a hard-liner who accepts the inevitability of violence. ‘Eelam cannot be won by other than violent means, the majority will never simply accommodate us’, he said. When asked whether fighting a vastly larger group was not equally hopeless, the lawyer responded with anger. ‘The Sri Lanka army is just rabble’, he said. ‘They are a drunken, indisciplined force. Just 5,000 young Tamils if they had arms could beat them easily’.

Yogeswaran’s (Former Jaffna MP) interview to Michael Kaufman of ‘New York Times’ in Sept.1981.

[source: ‘Harassed Sri Lanka Minority Hears Call to Arms’, by Michael T.Kaufman, New York Times, Sept.11, 1981.]

ஆதாரத் தொடுப்பு..

---------------

காலத்துக்குக் காலம் தமிழீழம்.. பற்றிய நம்பிக்கையை ஊட்டிய அரசியல்வாதிகளின் மற்றும் தமிழீழம் பற்றிய கருத்துக்களை வெளியிட்ட சர்வதேச அமைப்புக்களின் கருத்துக்களின் தொகுப்பு..! இதில் 1973 இல் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.

1. The 1973 Statement by S.Kathiravetpillai, M.P. for Kopay from 'Coexistence not Confrontation' - A Statement on Eelam,

"Pancha Seela or Coexistence is the only solution to the problem of the two nations in Ceylon. It recognises not merely facts of two thousand five hundred years of Sinhala and Tamil history but also the fundamental right of the Tamil people to self determination; of Tamil Eelam to separate statehood. It unshackles the two nations and sets them free" -

2. The historic statement by S.J.V.Chelvanayakam Q.C. M.P., (affectionately known to the Tamil people as Thanthai Chelva) at his election victory in January 1975, when he won a mandate for Tamil Eelam,

"Throughout the ages the Sinhalese and Tamils in the country lived as distinct sovereign people till they were brought under foreign domination...It is a regrettable fact that successive Sinhalese governments have used the power that flows from independence to deny us our fundamental rights and reduce us to the position of a subject people. These governments have been able to do so only by using against the Tamils the sovereignty common to the Sinhalese and the Tamils. I wish to announce to my people and to the country that I consider the verdict at this election as a mandate that the Tamil Eelam nation should exercise the sovereignty already vested in the Tamil people and become free."

3. Text of the Vaddukodai Resolution at the First National Convention of the Tamil United Liberation Front, May 1976,

"..The first National Convention of the Tamil United Liberation Front meeting at Pannakam (Vaddukoddai Constituency) on the 14th day of May, 1976 hereby declares that the Tamils of Ceylon by virtue of their great language, their religions, their separate culture and heritage, their history of independent existence as a separate state over a distinct territory for several centuries till they were conquered by the armed might of the European invaders and above all by their will to exist as a separate entity ruling themselves in their own territory, are a nation distinct and apart from Sinhalese.."

4. Tamil United Liberation Front - Tamil Eelam Manifesto which was endorsed by the Tamil people at the General Elections in July 1977,

"..What is the alternative now left to the Nation that has lost its rights to its language, rights to its citizenship, rights to its religions and continues day by day to lose its traditional homeland to Sinhalese colonisation ? What is the alternative now left to a Nation that has lost its opportunities to higher education through standardisation and its equality in opportunities in the sphere of employment ? What is the alternative to a Nation that lies helpless as it is being assaulted, looted and killed by hooligans instigated by the ruling race and by the security forces of the State? Where else is an alternative to the Tamil Nation that gropes in the dark for its identity and finds itself driven to the brink of devastation?

There is only one alternative and that is to proclaim with the stamp of finality and fortitude that "we alone shall rule over our land that our fore fathers ruled. Sinhalese imperialism shall quit our Homeland". The Tamil United Liberation Front regards the general election of 1977 as a means of proclaiming to the Sinhalese Government this resolve of the Tamil Nation. And every vote that you cast for the Front would go to show that the Tamil Nation is determined to liberate itself from Sinhalese domination."

5. Statement of the Political Committee of the Liberation Tigers written by Anton Balasingham, 1983

"...The concept of self-determination needs a precise and clear definition. Such a clarification is vital to our national question, since some of the so-called Leninists in Sri Lanka are confused on this basic concept. The most ridiculous misrepresentation and misconceptualisation of this concept arises from a position in which the right of the Tamil nation to self-determination is given recognition while opposing secession..."

5. Statement by Nadesan Satyendra at the Thimpu Talks, 1985

"...The Tamil delegation here at Thimpu asserts a proposition founded on common sense and justice - and in the ultimate analysis all sound law is common sense and justice. It is a very uncomplicated business, this question of international law. It is simple. And the simple proposition is this: 'A people who are subjugated by an alien people have the inherent right to free themselves from such alien subjugation'. And it is this right which is the right of self determination - a right which has today, become a peremptory norm of general international law..."

6. Justice Satchi Ponnambalam, on the Tamil Eelam demand in international law, July 1991

"...(The) perceived solution of self-determination has evolved and taken shape by the compulsions of more than three decades of political struggles of the Tamil people and their political leaders which ended in the ignominious failure to arrive at any just solution by the process of negotiation between the two parties. There lay in ruins the scrap-heap of broken pacts and dishonoured agreements as to proposals for Regional Councils, District Councils, Provincial Councils, Provincial/Regional Councils, District/Provincial Councils - all tentative concepts and toothless bodies with no genuine devolved powers of decentralization..."

7. Visuvanathan Rudrakumaran on the Tamil Eelam demand in international law, 1991

"...a social group characterized by distinct objective elements such as a common language and a common struggle, acquire subjective elements such as a sense of solidarity, of sameness or oneness and has a relationship to a defined territory," such a group clearly constitutes a "people" and-is entitled to self-determination... the Tamils of Sri Lanka, who are united on the basis of such objective factors as a distinct language etc., and by such subjective factors as a passionate yearning for freedom, and who have a long-established relationship to the Northern and Eastern provinces constitute a people, and are therefore entitled to self-determination in the form of secession, in the face of denial of effective representation in Sri Lanka's existing constitutional and political situation...."

8. Statement by the Political Committee of the Liberation Tigers, in March 1991

"The birth and growth of the armed resistance movement should be analysed within the historical development of the Tamil struggle for self-determination. The Tamil struggle for self-determination has an evolutionary history of nearly a half of century. It is a history characterised by state repression and resistance by the Tamils."

9. Written Statement by International Educational Development submitted to the United Nations Commission on Human Rights in April 1998

"..In the words of President John F. Kennedy, "those who make peaceful revolution impossible will make violent revolution inevitable." It is also interesting to note the observation made by Antonio Cassese that states normally characterize the use of force by liberation movements as an act of terrorism. The Liberation Tigers of Tamil Eelam (the "LTTE) is a national liberation movement, which is presently involved in armed conflict with the government of Sri Lanka in order to realize the right of the Tamils of Sri Lanka for self-determination on the island of Sri Lanka. The formation of the Tamil armed resistance movement was in response to the repression and violence of the Sinhala-dominated Sri Lankan government."

10. Nadesan Satyendra on Why Division, in 1998

"It is sometimes said that to accord international recognition to these separate national formations will lead to instability in the world order. The argument is not dissimilar to that which was urged a hundred years ago against granting universal franchise. It was said that to empower every citizen with a vote was to threaten the stability of existing state structures and the ruling establishment. But the truth was that it was the refusal to grant universal franchise which threatened stability ... Self determination is not a de stabilising concept. Self determination and democracy go hand in hand. If democracy means the rule of the people, by the people, for the people, then the principle of self determination secures that no one people may rule another - and herein lies its enduring appeal."

11. External Self Determination, Internal De-Colonisation by Dr.S.Sathananthan in 1999

"The experience of the national liberation movement in Tamil Eelam demonstrates the relevance of the right to external self-determination. The Tamil people are victims of ethnocide, of the denial of linguistic and cultural rights; they are subject to demographic manipulation and military aggression of genocidal proportions at the hands of the Sri Lankan State, controlled by the dominant Sinhalese people.It would be ill conceived, for example, to offer the Tamil people effective implementation of internal self-determination by the Sinhalese-controlled State. It is in effect a promise to reform the oppressor. History does not vindicate such a utopian scenario."

12. Eelam & the Right to Secession by Professor M.Sornarajah, June 2000

"When the British gave independence to Ceylon in pursuance of the right of colonial self-determination, they should have ensured at the least, there was adequate protection of the rights of the Tamils if not a restoration of the status quo which existed before their conquest of Ceylon. At the time of their conquest, the Tamil homeland was administered separately and prior to European colonisation, there was a separate kingdom in the Tamil homelands. Self-determination imposed a duty to restore the status quo."

13. Statements at the United Nations Commission of Human Rights recognising the right of the people of Tamil Eelam to self determination

and other related documents.

ஆதாரத் தொடுப்பு..

---------------

The Tamil Eelam liberation struggle

ஆதாரத் தொடுப்பு..

--------------

EElam Tamil Armed Resistance & the Law

ஆதாரத் தொடுப்பு..

--------------

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் எட்டப்படும் தீர்வே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் கூடியது என்று 2004 இல் கூறி விடுதலைப்புலிகளின் அரசியல் அணுகுமுறைகளை அங்கீகரித்த ஆனந்தசங்கரி இன்று புலியெதிர்ப்பு அரசியல் செய்து சிங்களத்தின் காலை நக்கிக் கிடக்கிறார்.

2004...

Talk only to LTTE -Anandasangaree tells Sri Lanka President

Mr. V. Anandasangaree, the President of the Tamil United Liberation Front met President Chandrika Kumaratunga Friday evening and impressed upon her that the Sri Lankan government should talk only to the Liberation Tigers and not simultaneously with any other Tamil group, according to a press note issued by the controversial Jaffna MP Saturday. “My view that ‘what is acceptable to the LTTE will be acceptable to the Tamils also’ seems to have impressed the President who had seen the reasonableness in my suggestions”, Mr. Anandasangaree said.

ஆதாரத் தொடுப்பு..

http://kundumani.blogspot.com/2009/07/blog-post_16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மேற்படி கட்டுரையில் இனங்காட்டப்பட்டுள்ள அடிப்படையில் இருந்து நோக்கினும்.. இன்றைய முன்னைய வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் நோக்கினும்.... எமது விடுதலைப் போராட்டம் திசைமாறி காட்டிக் கொடுப்புகளாலும் சுயநல அரசியல் குறுநோக்கங்களாலும் சிதைக்கப்பட்டது என்பதில் விடுதலைப்புலிகளைக் காட்டிலும் மற்றவர்களால் தான் அதிகம் என்பது வெளிப்படையான உண்மை..! அதுவே எம்மக்களை அரசியல் உரிமைகளற்ற அடிமைகளாக எமது மண்ணில் வாழ விட்டுள்ளது.

இதனை அப்படியே எனியும் எனியும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு.. சர்வதேச அங்கீராத்தையும் தேடிக் கொள்ளக் கூடிய வகையில்... நாம் தொடர்ந்து எமது மக்களுக்கான உரிமைகள் வெல்லப்படும் வரை பல முனை நகர்வுகளை செய்தாக வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

இதில்.. இவர் இப்படித்தான் இன்ன வடிவில் தான் அணுக வேண்டும் என்ற அணுகு முறைக்கு இடமளிக்காமல்.. அவர்கள் அப்படிச் செய்வதை நமக்கு எப்படி அனுகூலமாக்குவது என்பது குறித்து நாம் ஆராய்ந்து செயற்பட்டால் நிச்சயம்.. மற்றவர்களினது வெளிப்படை பங்களிப்பு இல்லாமலே அவர்களின் செயல்களாலும் நன்மைகளை எமதாக்கிக் கொண்டு பிரதான எமது இலக்கான தாயக மக்களின் அரசியல் வாழ்வுரிமையை மீட்பது என்பதை சாத்தியப்படுத்த முடியும்.

அதற்கு அடிப்படையில்.. மாற்றுக்கருத்து என்ற போர்வையில் இன்னும் பழிவாங்கல் உணர்வோடு உள்ளவர்களை அப்படியே மக்களும் சமூகமும் உலகமும் நிராகரிக்க வேண்டியதோடு.. அவர்களின் அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணரவும் செய்ய வேண்டும்..!

மேலும் தமிழ் மக்களுக்கான தனியான சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகள் இருப்பதோடு.. எமது கொள்கைகளுக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை புலம்பெயர் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி உலகத் தமிழினத்தின் குரலை.. தேவைகளை உலகை நோக்கி பலமாகவும் ஒற்றுமையாகவும் வெளிப்படுத்த வேண்டும். இதில் தமிழக.. தாயக.. புலம்பெயர் மக்களினதும் இதர தமிழ் மக்களினதும் பங்களிப்பு கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்..!

தமிழர்களின் ஒன்றிணைந்த பலமும் புத்திகூர்மையுள்ள அணுகுமுறைகளுமே தமிழர்களின் தாகங்களை இவ்வுலகில் தீர்த்து வைக்க முடியும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவதாக இந்த கேள்விக்கு பதில் எழுதுவதற்கு புலத்தில் இருக்கும் எமக்கு தகுதி இல்லை என்பது எனது கருத்து...

இந்த கேள்வி புலிகளையும் துணை இராணுவக்குழுவையும் சம தட்டில் வையுங்கோ என்ற மாதிரி இருக்கு....அரச துணைஇராணுவக்குழுவிடம் அப்படி என்ன போராட்ட வடிவம் இருந்தது இருக்கு என நீங்கள் நினைக்கிறீங்கள்

அண்ணா,  ஈழப் போர் நான்கின் போது புலிகள் பழிக்கு பழி தாக்குதலாக இரு நூறு சிங்களவரை கொன்றதற்கு இங்கு பதறுகிறார்கள்.   ஆனால் எப்படியோ இலட்சம் பேரை கொண்ட ஸ்ரீ லங்கா,  பத்தாயிரம் பேரை கொண்ட ஸ்ரீ நேரு குடும்பம் பற்றி இந்த சிந்தனையாளர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டுவிடும்.

ஸ்ரீ கொன்கிரசிடம் கிளஸ்டர் குண்டு தயாரிப்பை நிறுத்தும் படியும்,  ஸ்Lanka  ஜெனோசைட் கூட்டத்தை பொதுமக்கள் பகுதியில் இருந்து வெளியேறும்படியும் கூவமாட்டோம்.

செத்து போன புலிக்கு மயிரை மழிச்சு பின் அதில் தேடி புடுங்கி கட்டுரை போடுவோம்.

அண்ணா, எனக்கு மண்டை காயுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கேள்விக்கான பதில் மிகவும் சிறியது

இந்தக்கேள்வி ஏன் வருகிறது என்றால் போராட்டம் தோற்றதனால்

அப்படியாயின் ஏன் தோற்றோம் என்பதற்கான தெளிவு கிடைத்தால் இந்தக்கேள்வியும் எழாது.

புலிகளின் பிழைகளால்தான் தோற்றோம் என்ற முடிவுக்கு வந்தவர்களின் கேள்வியே இது.

நிழலி ஒரு இடத்தில் எழுதியதாக ஞாபகம். சமரசம் அவசியம் என்று.

அதன்படி பார்த்தால் புலிகள் சில விடயங்களில் சமரசம் செய்திருக்கவேண்டும் என்று பொருள்.

சமரசம் என்பதென்ன?

எதை விட்டுக்கொடுப்பது என்பது எதைப்பெறுவதில் இருக்கிறது.

புலிகள் எதை விட.டுக்கொடுக்கக மறுத்தார்கள்? ஏன அதை விட்டுக்கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் டக்லசாகவோ ஆனந்த சங்கரியாகவோ மாற விரும்பவில்லை என்ற பதில் கிடைக்கும் இப்படி அழிந்ததைவிட மாறியிருக்கலாம் என்பதாயின் இன்று முரளிதரனையும் டக்லசையும் எந்த இடத்தில் தாயகமக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.

பேச்சுவார்த்தை இடங்களில் எதைவிட்டுக்கொடுக்கும்படி கேட்கப்பட்டது எதைவிட்டுக்கொடுக்க புலிகள் மறுத்தார்கள் ஏன் மறுத்தார்கள் என்பதை யாரும் வந்து எமக்கு சொல்லவேண்டியதில்லை. அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணித்தோம். அப்போது அதுதான் சரியாக எமக்குப்பட்டது. அதுதான் தமிழரின் நிலையும். உதாரணமாக ஆயுதத்தைவிடுங்கள் என்பதன் பொருள் என்ன என்பதை நான் இங்கு எழுதித்தான் புரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் எவரும் இல்லை.அதை விடடுக்கொடுத்திருந்தாலும் கைதும் வழக்குமாக புலிகளினதும் தமிழர்களினதும் நிலை இதைவிடக்கேவலமானதுதான். அதேநேரம் மிகச்சாதாரணமாக எந்தவித ஆதாரங்களோ இன்றைய போர்க்குற்றமோ அற்று லட்சக்கணக்கிலான அழிவுகளைத்தமிழினம் சந்தித்திருக்கும் சந்தித்தபடி இருக்கும்.

முடிவாக நித்திரை செய்பவனை எழுப்பலாம். நடிப்பவனை எப்படி எழுப்புவது என்பதே இந்தத்திரிக்கான எனது பதிலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தோற்கவில்லை.   எம்மில் பன்னிரண்டாயிரத்தை கொடுத்து  எதிரியில் அறுபதாயிரத்தை தூக்கினோம்.

உலக இராணுவ தளபதிகள் நேரே வந்து எப்படி இருபதாயிரம்  புலிகள் ஐந்து இலட்சம் Sin'k'ala கூலிகளை மூன்று வருடங்கள் போட்டு வாங்கினார்கள் என்று பார்த்து சென்றார்கள்.

ஸ்ரீLanka வானரங்கள் போருக்கு வாங்கின கடனுக்கு  வட்டி கட்டும்போது தெரியும் யார் வெண்டதென்று.

Link to comment
Share on other sites

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டே ஓடிவந்தவனிடமும்,தனது இனத்தின் விடுதலையையே மூன்றாவது ஆளாக நின்று எட்டிப்பார்த்தவனிடமும்,போரின் வலியும்,அழிவும் அதன் கொடூரங்களையும் உணராதவனிடம் இப்பிடியான கேள்விகளை கேட்பதே தவறு.

முன்னால் போராளிகளுக்கு மாத்திரம் என்று இந்த கேள்விகளை வைத்து அவர்களின் பதில் மூலமே ஒரு ஆக்கபூர்வமான முடிவிற்கு வரலாம் .

Link to comment
Share on other sites

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டே ஓடிவந்தவனிடமும்,தனது இனத்தின் விடுதலையையே மூன்றாவது ஆளாக நின்று எட்டிப்பார்த்தவனிடமும்,போரின் வலியும்,அழிவும் அதன் கொடூரங்களையும் உணராதவனிடம் இப்பிடியான கேள்விகளை கேட்பதே தவறு.

முன்னால் போராளிகளுக்கு மாத்திரம் என்று இந்த கேள்விகளை வைத்து அவர்களின் பதில் மூலமே ஒரு ஆக்கபூர்வமான முடிவிற்கு வரலாம் .

அதற்கு தடுப்பில் இருக்கும் அல்லது விடுவிக்கப்பட்ட அல்லது வெளிநாட்டில் வந்து இறங்கிய புலிப் போராளிகளைத்தான் கேட்க வேணும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு தடுப்பில் இருக்கும் அல்லது விடுவிக்கப்பட்ட அல்லது வெளிநாட்டில் வந்து இறங்கிய புலிப் போராளிகளைத்தான் கேட்க வேணும்..! :rolleyes:

அவர் என்ன சொல்லவாறார் என்றால்.. தங்களைப் போல சோத்துப் பார்சல் போராட்டம் பண்ணினவையும் போராளிகள் தானாம். ஆனால் என்ன அவைக்கு சோத்துப் பாசலா அவிச்சுப் போட்ட மக்கள்.. நிஜமா போராட்டத்தில பங்கெடுத்த மக்கள்.. சொந்தம்.. பந்தம்.. சொத்து.. சுகம்.. நிலம்.. புலம் இழந்த மக்கள்.. தமிழீழத்துக்கு வாக்குப் போட்ட மக்கள்.. வாயும் திறக்கக் கூடாதாம். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

அவர் என்ன சொல்லவாறார் என்றால்.. தங்களைப் போல சோத்துப் பார்சல் போராட்டம் பண்ணினவையும் போராளிகள் தானாம். ஆனால் என்ன அவைக்கு சோத்துப் பாசலா அவிச்சுப் போட்ட மக்கள்.. நிஜமா போராட்டத்தில பங்கெடுத்த மக்கள்.. சொந்தம்.. பந்தம்.. சொத்து.. சுகம்.. நிலம்.. புலம் இழந்த மக்கள் வாயும் திறக்கக் கூடாதாம். :lol::D:icon_idea:

ஓ.. அப்பிடியா சங்கதி.. எதுக்கும் அர்ஜுன் அண்ணாவிடமே கேட்பம்.. :D

அன்பின் அர்ஜுன் அண்ணாவுக்கு, :wub:

யாவரும் நலம்.. நீங்கள் நலமா? உங்களைப் போன்றவர்களிடமும் யாரை விமர்சனம் செய்யவேண்டும் என்கிற கேள்வி கேட்கப்பட வேண்டுமா? :rolleyes:

இங்ஙனம்,

உங்கள் அன்பின்,

இசைக்கலைஞன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

பிரபாகரன் தப்பானவர்

ஆனால் அவரது வளர்ப்பு மகன் சாத்திரி சரியானவர்

நல்ல தீர்ப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் என்றால் என்ன? வியாக்கியானம் என்றால் என்ன?

தவறு செய்தவர்களிடமிருந்து நாம் படிப்பதற்கு ஏராளம் உண்டு.

அதாவது விட்ட தவறுகளை அப்படியே விட்டுவிடாமல்

அதையும் கடந்து அவர்கள் செய்த நல்ல விடயங்களையும்

அதனுடன் சேர்த்து அலசுவது விமர்சனம்

அவர்கள் செய்த மக்களுக்கு தேவையான நல்ல செயல்களை

நாம் கண்டும் காணாமலும் விட்டுவிட்டு அவர்கள் செய்த

பிழைகளையே முன்னிறுத்தி அவர்களைத் தவறானவர்கள்

என முன்னிறுத்துவது வியாக்கியானம்

எப்போதிலிருந்து சாத்திரியார் அர்ஜுன் அண்ணாவின் பேச்சாளராக

உள்ளார். உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதா?:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

சாத்திரியிடம் கேளுங்கள்

எதை வைத்து அண்ணா சாஸ்திரி மட்டும் கதைக்கலாம் மற்றவர்கள் கதைக்கக் கூடாது என சொல்கிறீர்கள்?...அவர் என்ன கடைசி வரைக்கும் முள்ளி வாய்க்காலில் இருந்தாரா?...கொஞ்சக் காலம் இயக்கத்தில் இருந்தாப் போல அவர் மட்டும் தான் இயக்கத்தையும்,நடந்ததையும் விமர்சிக்கலாம் என சொல்வது கொஞ்சமும் நல்லாயில்லை
Link to comment
Share on other sites

இதோடா சவுண்டு சுந்தரி வந்திட்டா..........எங்கள் எல்லாரையும் விட போராட்டத்தை பத்தி கதைக்கிற உரிமை அவருக்க தான் இருக்கு.........

Link to comment
Share on other sites

இலங்கையில் பல்வேறு புலனாய்வுக்குழுக்கள் இருந்தன. ஒரு பிரிவு மேற்கொள்ளும் கடத்தல் மற்றும் கொலை நவடிக்கை மற்றய பிரிவிற்குத் தெரியாது. ஆனால் இவையாவற்றையும் ஒருங்கிணைத்த பாதுகாப்பு செயலர், மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு அனைத்து செயற்பாடுகளும் தெரிந்திருக்கும். இவ்வாறு செயற்படும் பிரிவுகளில் குறைந்தது துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த 3 உறுப்பினர்களாவது இருப்பார்கள். இவர்கள் தமிழர்களாக இருப்பார்கள். இவர்கள் முன்னாள் விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களாகவோ அல்லது முன்னாள் விடுதலை இயக்கங்களில் இருந்து கொண்டு அவற்றின் தலைமைகளுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த ஈனச் செயலைச் செய்பவர்களாகவோ அல்லது தலைமைகளுக்கு தெரிந்தும் அதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தார்கள்.

கடத்தல் மற்றும் கொலைகளைச் செய்ய முனையும் போது அவை அம்பலப்படுமாயின் அவற்றுக்கு காரண கர்த்தாக்களாக மாற்று இயக்கங்களைச் சுட்டி விட்டு அரசு தப்பித்துக் கொள்வதற்காகவே இந்தத் தமிழ்க் கொலைகாரர்களை அரசு கடத்தல் கொலைக் களங்களில் முன்னரங்கங்களில் வைத்திருந்தது. இதனை அறிந்தும் மாற்று இயக்கங்கள் அரசுடன் இணைந்தே இருந்தன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தாங்கிய குழுக்கள் (புலிகள் உடபட) ஏன் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள்? இதற்கான அடிப்படை என்ன? இதற்கான பதிலை ஆராய்ந்தால் இனத்தின் மீதான பாசம் பற்று என்பது வெறும் புறத்தோற்றமே ! உள்ளகமாக அவ்வாறு ஒன்றும் கிடையாது. ஒரு சிறு ஊரை எடுத்துக்கொள்வோம், அங்கே பல சாதிகள் இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று முரண்பட்டு அடிமனதில் பகையுடனே காலகாலம் வாழ்கின்றான். இழிவு படுத்தல் தாழ்த்துதல் சபையில் அவமானப்படுத்தல் தள்ளிவைத்தல் திட்டுதல் வஞ்சித்தல் இப்படி செயலிலும் உளவியலிலும் பெரும் பகை நிரந்தரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கின்றது. ஒரு தாய் தன் பிள்ளை மேல் உள்ள பாசத்தைப்போன்று என் இனம் என்ற பாசத்திற்கு துளியும் உணர்வுரீதியில் சம்மந்தம் இல்லை. உலகின் எந்தச் சமூகத்திலும் காணமுடியாத சிக்கலான சமூகக் கட்டமைப்பு இது.

ஒரு குழந்தையை எப்போதும் அச்சுறுத்தி அடித்து வந்தால், தாழ்த்தி கேவலப்படுத்தி வந்தால் வெகுவிரைவில் அது மனநலம் பாதிக்கப்பட்டுவிடும். இதெல்லாம் எமது சமூகத்தில் இயல்பு. சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் உளவியல் ரீதியில் பெரும் குறைபாடு இருக்கின்றது. இனம் என்ற பொதுக் கருத்தை மையமாக வைத்து போராட புறப்பட்டிருந்தாலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்ததின் விழைவை அனுபவிக்கநேர்ந்தது. இவற்றை இயக்கவாரியாக பிரிப்பதில் எந்தப்பலனையும் காணமுடியும் என்று நம்பவில்லை.

ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்.

புலிகள் உட்பட்ட எந்த ஒரு போராட்ட குழுவும் அதன் தலமைகளும் அவைகள் தமக்குள் மோதிக்கொண்டதும் தமது இன மக்கள் மீது எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும் ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம்.

sukan..! realy great..!

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் யாரை விமர்சனம் செய்ய..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

Link to comment
Share on other sites

எமது இயக்கங்கள் யாரையாவது முன்னோடியாக வைத்தா போராட்டம் தொடங்கினார்கள்? இல்லையே. அப்போ இனி வரும் தலைமுறையால் அடுத்து ஒரு போராட்டம் தொடங்குவதேன்றால் ஏன் அதற்கு முன்னூடிகள் தேவை.

அடுத்து வரும் போராட்டம் ஆயுதபோரட்டமாக இருக்க கூடாது என விரும்புகின்றேன் என பதிந்து விட்டு ஆயுத போராட்டம் நடாத்திய எந்த இயக்கம் முன்னோடி ஆக இருக்க வேண்டும் எனக்கேட்கின்றீர்கள்.

சுதந்திரத்திற்கு முன்பே தமிழன் தமக்கான உரிமை போராட்டம் தொடங்கி விட்டிருந்தான்.ஆனால் அன்று வரை அவனால் சிங்களத்தை வெல்ல முடியவில்லை.

எனக்கு தெரிந்த காரணங்கள்,

தமிழர்களுக்கேன்று ஒரு பொதுவான கட்டமைப்பு இல்லை,சிங்கள கட்சி எது ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை கட்டுப்படுத்த பவுத்த சங்கங்கள் உண்டு.இவர்கள் மிக பலம் மிக்க அமைப்புகள்.பதவிக்கு வரும் எந்த கட்சியும் தான் நினைத்த விரும்பிய முடிவை இவர்களை தாண்டி எடுத்துவிட முடியாது.இது இலங்கைக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட ஆட்சிக்கு வருபவர்கள் தாம் விரும்பியதை செய்துவிட முடியாது.தமது நாட்டு நலனில் மட்டும் அக்கறை கொண்ட அமைப்புகளால் இந்த கட்சிகள் கட்டுப்படுத்தபடுகின்றன.

இரண்டாவது நாம் சிறுபான்மை இனமாக இருப்பதால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவன் நாம் ஒன்று சேர்ந்து செயற்பட வெளிக்கிடும் போது எம்மை உடைப்பதிலும், பிரிப்பதிலும், விலை போக வைப்பதிலும் தொடர்ந்து வெற்றி காண்கின்றான்.எவர் எப்போ எப்படி விலை போவார்கள் என்பது இன்றும் வரை புரியாத மர்மம்.பணம்,பதவி இரண்டிற்கும் எம்மவர் விலை போய்க்கொண்டே இருக்கின்றார்கள்.

மிக முக்கியமானது எம்மிடம் இருக்கும் எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு. இனம்,மதம்,மொழி என்னும் வெறும் வார்த்தை ஜாலத்தால் பிழையான சக்திகள் இன்றுவரை எம்மை உணர்சிவசப்படுத்தி தலைமையிலும் பதவியிலும் இருந்து வருகின்றன.யதார்த்தமாக மக்களின் உண்மையான அபிலாசைகளை பிரதிபலிப்பவர்கள் தொடர்ந்தும் இந்த விஷம் கக்குபவர்களை வெல்லமுடியாமல் இருப்பதும் பெரிய காரணம்.

எம்மில் நாமே நம்பிக்கை வைக்காமல் பிறரில் சார்ந்திருப்பதும், நாமே போராடாமல் யாரையும் தள்ளிவிடும் மனப்பான்மையிலும் இருந்தும் நாம் விடுபடமட்டும் இரண்டாந்தர பிரஜையாகவே காலம் காலமாக தமிழன் வாழுவான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.