Jump to content

அவளை பிடிக்கும் என்பதால்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனையை வாழ்க்கை

ஆக்கிவிட்டவள்

அன்புக்கு அர்த்தம் கேட்டால்

காயங்களை மட்டும்

காரணமின்றி தந்தவள்

காதலுக்கு கருத்து

கேட்டால்...

நேற்று வந்த யாரையே

நேசித்தவளுக்கு...

நெடுநாளாய் நேசத்தை மட்டும்

காட்டிய என் உணர்வு

உறைக்காமல் போனது -என்

துரதிஸ்டமே...

கற்பனையில் என் காதல்

கடந்து சென்று விட்டது

களிப்புடன் -அதற்குள்

கனவை கலைத்ததால்

கழிப்பும் காணாமல் போனது

ஆயிரம் சோதனை தாங்கிய

ஆணிவேர்கள் கூட

அழிந்திடும் நிச்சயம்

காதலில் தோற்றிருந்தால்

ஆனாலும்...

இறைவனிடம் கேட்க

எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி

நிறைவேறா ஆசையினை

முடிவுறா பயணமதை

வாழ்வழிக்கும் காதலை- ஏன்

வரவைத்தாய் என் மனதில்?

சத்தியம் செய்து விட்டதால்

சமர்களம் எனை வெறுத்ததால்

கனடா என்னை அழைத்தது..

கல்வியினை அணைக்க நினைத்ததால்

கல்லூரி என் படிப்பிடமாகியது

படிப்பிடத்தில் நீ

படித்ததால் நான்..

நெடுநாளாய் படிக்காத

படிக்க விரும்பாத

காதல் பாடம் படித்தேன்

தேர்ச்சி தான் பெறவில்லை

ஆனாலும்..

தேறிவிட்டென் வாழ்க்கையில்

தேற்ற முடியாத சோகம்

தேடியே நான் பெற்ற

காதலுக்காய் மன்றாடுகின்றேன்

அவளை மறக்க முடியாமல்

மனது ஒன்றாகையால்

மரணத்தை அழைக்கிறது

தலைவன் தந்த உறுதியால்

தளராமல் இருக்கின்றது

அன்றே என் நண்பன்

நன்றாய் சொன்னான்

நாமெல்லாம் காதல் கொண்டால்

நாடு என்ன செய்யுமென்று

நட்பாய் நானும்

நண்பனாய் பழகியபின்

நானறியாமல் நடுவில்

எப்படி பிறந்தது காதல்..?

விடுத்த வினாவுக்கு

விடையுமில்லை.. -காதலில்

வீழ்ந்த என்னுள்ளத்துக்கு

மீட்சியுமில்லை..

மீள துயர் மட்டும்

மீட்டுகின்றது முகாரி...

மறக்காத காதலால்

மறுக்கிறது மற்றவற்றை

மனம் விரும்பி

தினம் படித்த பாடம்

குணம் மாறி...

தடம் புரண்டு போனது..

போற வழிக்கு புண்ணியமாய்

போகட்டும் தந்துவிடு

தத்தெடுத்த இதயத்தை

கெஞ்சிக் கேட்க்கிறது

என் சுவாச நாளம்...

கொடுக்க மறுப்பவளிடம்..

மன்றாடி என்ன பயனம்..

மிரட்டி என்ன பயன்..

காலை தியாகம் செய்ய

புத்தனல்ல நான்..

அவள் மனம் கொன்று

மணம் புரிய..

கிட்லருமல்ல நான்

ஆனால்...

அவள் மனதில் நான்

கிட்லராகவே இருக்கிறேன்.

புத்தனாகவே அவன்..

போட்டி இருவருக்குள்ளுமல்ல

காதலுக்குள்

கவிதை கூட அவளுக்காய் அல்ல

என் உணர்வினை

உரைத்திட..

வெறுமை கொண்டமனம்

வேற்று வழி நாடிடாது

வென்று வர

புது கவிதை எழுதுகிறேன்..

புன்னகைக்கும் என்

முகம் பார்ப்பவர்க்கு..

நீறு பூத்த நெருப்பாய்

அனல் வீசும்..என்

அசல் சொல்ல விளைந்தேன்

கொஞ்சிப்பேசும் காதலில்

கெஞ்சி கெஞ்சியும்

பேசாமல் இருக்கும்

பேதையை எண்ணினேன்

எனக்கே அலுப்பாய் தோன்றியது

ஒரே வார்த்தைகளை

மீண்டும் மீண்டும்

கேட்டதால் என்

காதுகளுக்கு கூட சலிப்பு

என் செய்ய

என் இதயம் மட்டும்

இறுக்க பற்றியவளை

காதல் கொள்கின்றது..

இயலுமானவரை...

இன்னும் இன்னும்

அதிகமாகவே காதல் கொள்கிறது

இன்றும் நான் என்னை

மாற்றுகின்றேன்...

அவளுக்கு என்னை

பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல

எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்...

எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்

Link to comment
Share on other sites

போற வழிக்கு புண்ணியமாய்

போகட்டும் தந்துவிடு

தத்தெடுத்த இதயத்தை

கெஞ்சிக் கேட்க்கிறது

என் சுவாச நாளம்...

கொடுக்க மறுப்பவளிடம்..

மன்றாடி என்ன பயனம்..

மிரட்டி என்ன பயன்..

கதலை தியாகம் செய்ய

புத்தனல்ல நான்..

அவள் மனம் கொன்று

மணம் புரிய..

கிட்லருமல்ல நான்

********************************

நிதர்சன் கவிதை சூப்பர். நீளமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளை நல்லாய் தான் பாடம் பிடித்து காட்டீயிருக்கிறீர்கள். உரியவர் உங்கள் உணர்வுகளை விரைவில் உணர்ந்து கொள்ள எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் நிதர்சன் இடைவெளி விடாமல் தொடர்ந்து

எழுதியிருக்கிறீர்கள். அவற்றை கொஞ்சம் கவனியுங்கள்.

எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றையும் திருத்திவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி இளைஞன், அவற்றை திருத்தியமைக்கு நன்றி மதன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நீளமான கவிதனில் உம் உணர்ச்சிகளை அழகாக கொட்டியுள்ளீர்கள். உங்கள் காதல் கைகூட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இன்னும் இன்னும்

அதிகமாகவே காதல் கொள்கிறது

இன்றும் நான் என்னை

மாற்றுகின்றேன்...

அவளுக்கு என்னை

பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல

எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்..."

மிகவும் உணர்வு பூர்வமான கவிதை நிதர்சன் அண்ணா.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ . . தலை வெடிக்குது . . .

கொஞ்ச நாளைக்கு இதுகள நிப்பாட்டுறீங்களா?

பிளீஸ் . . . . .

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் உணர்வு பூர்வமான கவிதை.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை. உங்கள் உள்ளக்குமுறல்கள் கவிதையில் சிதறிக் கிடக்கின்றன. உங்களை காதலிக்காவிட்டாலும் உங்கள் கவிதையை நேசிப்பார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

நிதர்சன் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு

உங்கள் காதல் கை கூட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவித்து எழுதிய உணர்வு பூர்வமான உங்கள் கவிதை.. என் மனதையும் கனக்க வைத்தது நிதர்ஸன். கவிதை நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். உரியவர் உங்கள் உணர்வுகளை விரைவில் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அழகா இருக்கு நிதர்சன் அண்ணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் நன்றிகள்....

புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களா...? என்பது தானே கேள்வியே....

Link to comment
Share on other sites

ஐயோ . . தலை வெடிக்குது . . .

கொஞ்ச நாளைக்கு இதுகள நிப்பாட்டுறீங்களா?

பிளீஸ் . . . . .

அட சனியனிற்கும் இதே நிலைதானா.

சரி நீங்கள் நலமா இருக்கிறியளா கனநாளாக் காணலயே

Link to comment
Share on other sites

(காதல் பாடம் படித்தேன்

தேர்ச்சி தான் பெறவில்லை

ஆனாலும்..

தேறிவிட்டென் வாழ்க்கையில்) Nitharsan வாழ்க்கை¢ø தேர்ச்சி ¦ÀüÚ Å¢ðË÷¸û «Ð §À¡Ðõ.

Link to comment
Share on other sites

நிதர்சன் தம்பி உள்ளத்திலும் இவ்வளவு காயங்களா? காயங்களுக்கு மருந்தாக ஒருத்தி வருவாள்! நம்பிக்கையுடன் இருங்கள்! கவலை வேண்டாம்!

Link to comment
Share on other sites

நிதர்சன் தம்பி உள்ளத்திலும் இவ்வளவு காயங்களா? காயங்களுக்கு மருந்தாக ஒருத்தி வருவாள்! நம்பிக்கையுடன் இருங்கள்! கவலை வேண்டாம்!

மன்னா என்ன இது அவனவன் காதலியைப்பற்றி கவியெழுத ஒருத்தி வருவாள் என்று சொல்கிறீங்க. :roll:

காதலியுடன் சேருவதற்கு ஏதாவது வழி சொல்லிக்குடுங்க.

Link to comment
Share on other sites

என்ன அருவி எல்லாத்திலும் குற்றம் பிடிக்கிறீர்? ஏதாவது ஆறுதலாக டயலக் சொல்லவேண்டும் போல இருந்தது சொன்னன் அதுவும் தப்பா?

ஏன் அந்த ஒருத்தி காதலியாக இருக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

என்ன அருவி எல்லாத்திலும் குற்றம் பிடிக்கிறீர்? ஏதாவது ஆறுதலாக டயலக் சொல்லவேண்டும் போல இருந்தது சொன்னன் அதுவும் தப்பா?

ஏன் அந்த ஒருத்தி காதலியாக இருக்கலாம் தானே?

ஓ நீங்க அப்படிச் சொன்னீங்களா :(

சரி சரி மன்னிச்சிடுங்க மன்னா :(:(

Link to comment
Share on other sites

நிதர்சன்

நீங்கள் எழுதிய கவிதையை பார்த்தால் நிச்ச௯யம் உங்கள் காதலி உங்களைத்தேடி வருவார் கவலைப்படாதீங்கோ!

Link to comment
Share on other sites

talkingbabyani.gif

வாய் ஆட்டலை பார்த்தால் மன்னிப்பு கேட்ட மாதிரி தெரியவில்லையே? ஏதோ கெட்ட வார்த்தையால் திட்டுவது போல இருக்கே? :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.