Jump to content

பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை.


Recommended Posts

இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது...

marsrover7oh.jpg

புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?!

புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும்.

இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது..

சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது...

சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்...

கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ

சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??!

சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது..

அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அதைக் கண்டுவிட்டு

சுதர்சன்: என்ன சங்கர்..தன்னியக்க அவசர மீட்பு தொடங்கிட்டுது.. ரோபோ திலீபன் எங்களை நோக்கி வருகிறது..

சங்கர்: பொறுங்கள்..அது என்ன சொல்லப் போகிறது என்று கவனித்து செயற்படுவோம்..

statacuterobot7kb.jpg

சங்கர், சுதர்சனை நெருங்கிய ரோபோ.. தமிழில்... "புரொவ் சங்கர் உங்களுக்கு ஆபத்து.. உடனடியாக இக்கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்.

உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் இருவரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள்...

ரோபோ திலீபனின் கட்டளைப்படி தலைவர்கள் இருவரும் அதனைப் பின் தொடர்கின்றனர்...

மிகுதி தொடரும்...

(கள உறவுகளே இத்தொடரை குருவிகள் தான் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை... நீங்களும் உங்களுக்குள் தோன்றும் கற்பனையை விஞ்ஞான வடிவத்தோடு கலந்து இங்கு தந்து இத்தொடரை நகர்த்திச் செல்லலாம்..கட்டம் கட்டமா...! இறுதி இலக்கு நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்ல நாமும் உங்களுக்கு உதவுவோம்..! முயற்சிப்போமா...!)

இதற்குள் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!

Link to comment
Share on other sites

tossedsubwaybins018xw.jpg

இதோ இந்தக் குறுக்குவழியூடாக புரொவ் சங்கர் மற்றும் சுதர்சனை அழைத்துச் சென்று கொண்டிருந்த ரோபோ திலீபன் திடீர் என்று செயலிழந்து வீழ்கிறது. இதைக் கண்டு..

சங்கர் : சுதர்சன் என்னாச்சு திலீபனுக்கு..என்னதான் நடக்கிறது இங்கு ஒன்றுமே புரியுதில்லையே..

சுதர்சன் : எனக்கும் தான் சங்கர். பொறுங்கள் மீண்டும் ஒரு தடவை வோங்கி மூலம் தொடர்பு கொண்டு பார்ப்போம்...

பொத்தானை அழுத்தி வோக்கியை இயக்கிய சுதர்சன் நிலத்தில் சுருண்டு விழுகிறார்...

இதைக் கண்டு செய்வதறியாது திகைப்புடன்..

சங்கர் : என்னாச்சு சுதர்சன் என்னாச்சு..என்ன செய்தது..என்ன செய்கிறது.. எனக்கு ஒன்றுமா விளங்குதில்லையே.. மை கோட்..

சுதர்சன் : பதில் சொல்ல முடியாது...அனுங்கிய படி..ஒரு மின்னல் தாக்கம் போன்ற அதிர்ச்சியை உணர்ந்தேன் சங்கர்... தலை சுற்றுது கொஞ்சம் பொறுங்கோ..

சங்கர் : ம்.. நீங்கள் அப்படியே ஓய்வெடுங்கள். பெறப்படும் சிக்னலின் வழிதான் உங்களுக்கும் ரோபோ திலீபனுக்கும் பிரச்சனை வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் ஆய்வகத்தின் சிக்னல் கட்டுப்பாட்டறையை யாரோ அல்லது எதுவோ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

சுதர்சன் : ஆ..அம்மா.. (என்று தலையைப் பிடித்த படி.. நிமிர்ந்திருந்து கொண்டு)... அப்படித்தான் சங்கர் நானும் நினைக்கிறேன்...

சங்கர் : இப்போ எங்களால் எதுவும் செய்ய முடியாது.. மேலதிக உதவியையும் உடன் பெற முடியாது.. அது வரும் வரை இங்கையே இருப்போம்.. அதுதான் பாதுகாப்பும் கூட.

சுதர்சன் : அதோ சங்கர் அங்கே பாருங்கள்..

insectrobot8av.jpg

சங்கர் : ஆமாம்..அவையென்ன.. புதிசா இருக்கு இந்தச் சூழலுக்கு.. ஆ.. அதில் ஒன்று எம்மை நோக்கி வருகிறது போல

சுதர்சன் : ஆமாம்... நீங்கள் அப்பால் ஓடுங்கள் சங்கர்.

திடீர் என்று.. "சங்கர் ஓடாதே நில்லு"...என்று உத்தரவு வருகிறது. சத்தம் வந்த திசை நோக்கி திரும்பி பார்த்த சங்கர் கண்ட காட்சி..அவரை அதிர வைத்தது...

(தொடரும்..)

(படங்கள் - இதர தளங்களில் பெறப்பட்டன.)

(விமர்சனங்களை..மற்றும் இக்கதைக்கு தங்கள் பங்களிப்பை நல்க விரும்புவோரும்.. யாழ் களத்தில் உள்ள குருவிகளின் "வலைப்பூவேட்டுக்கு"ச் சென்று உங்கள் எண்ணங்களைத் தாருங்கள்..! கதைக்குரிய பங்காளிகள்..எமது அனுமதியின்றியே தங்கள் பதிவுகளை இங்கு செய்யலாம்..!)

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.